Skip to main content

Posts

Showing posts from August, 2020

உத்தமன்

உத்தமன் ஓணம் பண்டிகை. கேரளாவில் கோலாகலமாகவும், தமிழர்கள் வாட்ஸ்-ஆப்பில் நுனி இலை சாப்பாட்டு படங்கள் பகிர்ந்து  கொண்டாடுகிறார்கள்.   பலர் ஆண்டாளின் வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து “ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று இன்று பல்லாண்டு பாடினார்கள்.  ‘அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான்’  என்றும் ஆண்டாள் போற்றியிருக்கும் அந்த மூன்றாவது அடியைப் பெருமாள் மாதிரி என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார்கள்.  தமிழ்நாட்டில் பொங்கல் போல, கேரளாவில் ஓணம்  உழவர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  பெரியாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்.  மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ பெரியாழ்வாரின் இந்தப் பிள்ளைத் தமிழ் பிள்ளைகளுக்குக் கூடப் புரியும் தமிழில் எழுதியிருக்கிறார். ஆழ்வார் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம். பெரும் புகழ் படைத்த மாவலி வேள்வியில் நீ யாசித்தபோது சுக்கிராச்சாரியார் இவனுக்குப் பூமிதானம் செய்யக் கூடாது என்று தடுத்தான்.

ஓட்டையின் உள் ஓர் ஓட்டை

ஓட்டையின் உள் ஓர் ஓட்டை சமீபத்தில் ’சகுந்தலா தேவி’ என்கிற  திரைப்படத்தைப் பார்த்தபோது அதில் ஒரு காட்சியில் சகுந்தலா தேவி, 689 என்ற எண்ணைத் தலைகீழாகத் திருப்பினாலும் அதே எண்தான் வரும் என்பார். இதில் பெரிய அதிசயம் எதுவும் இல்லை. ஆனால் அவருடைய இரட்டை ஜடைப் பின்னலில் சின்ன ரிப்பன் கட்டியிருப்பார்.அந்த ரிப்பன் ஒரு சுவாரசியமான பொருள்.  ரிப்பனில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நினைக்கலாம்.  ஒரு நீண்ட ரிப்பனை ஒரு திருகு திருகி அதன் முனையோடு இணைத்தால் அல்லது ஒட்ட வைத்தால் கணித இயலில் மிகச் சிக்கலான பொருளாகிறது.   இந்தக் கட்டுரையை மேற்கொண்டு படிப்பதற்குமுன் இந்தச்  சோதனையை நீங்கள் செய்துபார்க்கச் சிபாரிசு செய்கிறேன். கட்டுரை படித்துப் புரிந்துகொள்ள உதவும். இதற்குத் தேவையான பொருட்கள் – ரிப்பன் போன்ற ஒரு துண்டுக் காகிதம். செலோ டேப்,  ஒரு கத்தரிக்கோல். பேப்பர் துண்டை ஒரு திருகு திருகி ஒட்டவைத்து, அதன் முதுகுப் பகுதியின் குறுக்கே வெட்டிக்கொண்டே போனால் ? இரண்டு வளையம் கிடக்கும் என்று நீங்கள் நினைக்கும்போது, சட்டென்று ஒரு முழு வளையமாகிவிடும்.   இதற்கு Möbius Strip மோபியஸ் ஸ்டிரிப் என்று பெயர். இதை

6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன்

 6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன் நாதமுனிகள் பராங்குசதாச பிள்ளையிடம் “என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்! என் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது! அப்படி என்றால் அமுதத் தமிழில் உள்ள அந்த ஆயிரம் பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா?” என்று வியப்புடன் கேட்டார்.  “ஸ்வாமி, எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் எனப் பரம்பரையாக நாதமுனிகள் என்ற திருநாமம் எங்களுக்குப் பரிட்சயம். இந்தப் திருநாமத்தைக் கொண்ட யோகி ஒருநாள் எங்கள் குருகூர் சடகோபன் அருளிய பாசுரத்தை மீட்டெடுக்க வரப் போகிறார் என்று  எங்கள் குலமே பல ஆயிரம் வருடங்களாகக் காத்து இருந்தார்கள். எங்கள் முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை! இன்று  தாங்கள் அந்தப் பாசுரங்களைப் பற்றிக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்த நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன்! ஆயிரத்தில் ஒன்றும் நாங்கள் கற்றறிந்ததில்லை. அந்த ஓலைச் சுவடிகளும் நாங்கள் கண்டறியோம்” என்றார்  இந்த அதிசயத்தை ஜீரணிக்க முடியாத நாதமுனிகள் புளங்காகிதம் அடைந்து  “நீங்கள் கூறிய அந்த நாதமுனிகள் அடியேனா என்று நான் அறியேன். ஆனால் அந்தப் பாசுரங்களை அடையும் மார்க்கத்தை தாங்கள் கூறினால் அதை உடனே நிறைவேற்றச

தினமும் கொஞ்சம் தேசிகன் - 9

தினமும் கொஞ்சம் தேசிகன் - 9 பிரபந்தப் புத்தகத்தில் தனியன் என்று பாசுரம் ஆரம்பிக்கும் முன் சமஸ்காரத்திலும், தமிழிலும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் தனியன் என்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம். அருளியவர்களின் யார் என்று சில புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் சிலவற்றில் அவை இருக்காது. இதனால் சில தனியன்கள் யார் அருளினார்கள் என்ற தகவல் இருப்பதில்லை.  தன் ஆசாரியனை அல்லது அவரது நூலைப் போற்றி புகழ்ந்து அதன் சாரத்தை தனியன்கள் கூறும். இது அந்த நூலுடன் சேராமல் தனித்து நிற்கும் செய்யுள் அல்லது ஸ்லோகம். ஒரே நூலுக்குப் பல ஆசாரியர்கள் அருளிய தனியன்கள் அந்த நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.  இதைத் தொடங்கி வைத்தது நாதமுனிகள் தான். சில தனியன்கள் பொதுவாக எந்த நூலுக்கும் சேராமல் பொதுத்தனியன் என்ற பெயருடன் இருக்கும்.  ஆசாரிய தனியன் என்பது அவரது சீடர்கள் தம் ஆசாரியனை வணங்குவதற்கு நாள்தோறும் சேவிப்பதற்கு அருளியது.  இன்று ’அவா’ தனியன்,  ’இந்தத் தனியன் சொல்லும் வழக்கம் எங்களுக்கு இல்லை’ என்று பல பாகுபாடுகளுடன் தனியன்கள் தனிமைப்படுத்தி அச்சாகும் பிரபந்த புத்தகங்களில் இதைக் காணலாம். இதைப்

அழகிய கோபுர சிங்கர்

அழகிய கோபுர சிங்கர் ஆவணி ஹஸ்தம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக்கியமான நாள். இரண்டு காரணம். ஒன்று ‘ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரம்’ என்ற தனியன் அவதார நாள். இன்னொன்று ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கர் என்று அன்புடன் நாம் அழைக்கும் 44ஆம் பட்டம் அழகிய சிங்கர் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்ததேசிக யதீந்திரமஹாதேசிகன் திருநட்சத்திரம். இதை ஒரு பாமரனுக்குச் சொன்னால் ”யார் சாமி அவர் ?” என்பார்.  ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டிய ஜீயர் - 'கோபுர ஜீயர்’ என்றால் ’அட அவரா!” என்று உடனே எல்லோருக்கும் கோபுரத்தின் மீது விளக்காக எல்லோருக்கும் தெரிந்தவராகிவிடுவார்.  1987 ஆம் ஆண்டு 44ஆம் பட்டம் அழகியசிங்கர் ராயகோபுரத்தை பதின்மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரமாகக் கட்டிமுடித்தார்.  85 வயதில் கோபுரத்தைக் கட்ட தொடங்கி, தன் 92வது வயதில் இதைக் கட்டி முடித்தார். ராஜகோபுரத்தைவிட இது எனக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. இந்த அழகியசிங்கர் செய்யாறு நதிதீரத்தில் உள்ள முக்கூர் என்ற அக்ரஹாரத்தில் ஸ்ரீ.உ.வே வித்வான் ரங்காசார்யர் ஸ்வாமிக்கு 1895ல் அவதரித்தார். இதுவரையில் அஹோபில மட சரித்திரத்தில் ‘வேதாந்த தேசிகன்’ என்ற திருநாமம் கொண்ட ஒரே அழகி

5. இராமானுசன் அடி பூமன்னவே - வைத்தமாநிதி

 5. இராமானுசன் அடி பூமன்னவே - வைத்தமாநிதி நாதமுனிகள் திருக்குருகூர்   கதிரவன் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தார். முன் இரவின் புயலுடன் கூடிய மழையின் சுவடுகள் எங்கும் காணப்பட்டது. வழி நெடுகிலும் சேறும், சின்ன வாய்க்கால் மாதிரி தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. காய்ந்த சுள்ளிகளும் இலைகளும் தண்ணீரில் மிதந்துகொண்டு சென்றன. சிறு குன்றுகள் குளித்தது போல மாட மாளிகைகள் காட்சி அளித்தன.  மரங்களின் கிளைகள் ஈரத்தின் எடை காரணமாகத் தொங்கிக்கொண்டு அதில் இருக்கும் பழங்களைச் சிறுவர்கள் பறிக்கும் வண்ணம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தன. வாழை மரங்களும்,  நெற்பயிர்களும் தங்கள் தலையைக் குனிந்துகொண்டு நாதமுனிகளை வணங்குவது போலக் காட்சி அளித்தன.   மூங்கில் இலைகளின் நுனியில் நீர்த்துளியின் மீது இளஞ்சூரியனின் ஒளிபட்டு அவை வைரங்கள் பூத்துக் குலுங்கும் மரம்போலக் காட்சி அளித்தது. மின்னிய அந்தக்  காட்சியை ஏற்றம் இறைத்த பெண்ணொருத்தி மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே என்று பாடினாள். அவள் பாடியதைக் கேட்டு வியந்தார் நாதமுனிகள். அந்தச் சமயம் பறவைகள் அம்மரத்தின் மீது கூட்டமாக வந்து

தொடை நடுங்கி - 2

தொடை நடுங்கி - 2  ஆழ்வார் ‘தொடை கிளவியுள்’ என்ற ஒரு பதத்தை உபயோகிக்கிறார் ’தொடை கிளவியுள்’ என்றால் பொருத்தமுடைய சொற்களைச் சேர்த்து என்று சொல்லலாம். அதுபோல் இன்னொரு தொடை நடுங்கிய சம்பவத்தைச் சேர்த்துச் சொல்கிறேன். ”கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினையை களைந்துவிடலாம்” என்று ஆழ்வார் பாடிய கங்கை ஓடும் காசியில் நடந்தது. 2017ல் வாரணாசிக்கு யாத்திரையாகச் சென்றேன். காசியில் தெருக்கள் ஏடாகோடமான சிக்கல் நிறைந்து வழிகளை உடையது. ஆங்கிலத்தில் அதை ‘maze’ என்பார்கள். பல சந்து பொந்து வழியாகப் புகுந்து சென்று காலையில் கங்கையில் சூரியன் உதிக்கும்போது நீராடிப் பாவங்களை எல்லாம் கழுவி, ஊர் சுற்றிவிட்டு இரவு நாங்கள் தங்கிய விடுதிக்கு வந்தபோது மின்சாரம் தடைப்பட ஒரே புழுக்கமாக இருந்தது. ”வாங்க வெளியே சென்றுவிட்டு வரலாம்” அறையிலிருந்த நண்பர் அழைத்தார். “மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டதே ?” என்று ஜகாவாங்கினேன். “தெருவில் லைட் எல்லாம் ஜகஜோதியா இருக்கு...இந்தப் புழுக்கத்தில் எப்படித் தூங்க முடியும் ?. .” “நான் கிளம்புகிறேன்… வரதுன்னா வாங்க “ என்று கிளம்பினார். “சரி நானும் வருகிறேன்…” கிளம்பினேன். கிளம்பியபோது ந

தொடை நடுங்கி - 1

 தொடை நடுங்கி - 1 ‘சரியான தொடை நடுங்கி’ என்ற சொல்லை நிச்சயம் நாம் எல்லோரும் கேட்டிருப்போம். தொடை நிஜமாக நடுங்குமா ? அல்லது ’தலை கால் புரியவில்லை’ என்பது போல இதுவும் ஒரு சொற்றொடரா ? தொடை நடுங்கும். எனக்கு நடுங்கியிருக்கிறது. எப்படி என்று சொல்லுகிறேன். பதினைந்து வருடம் முன், பெங்களூர் வந்த புதிது. புது கார் வாங்கினேன். பொன்வண்டு போலப் பளப்பாக இருந்தது. ஓட்டுநர் உரிமம் +12 லீவில் ஒரு அம்பாசிடர் கார் ஓட்டிக் காண்பித்தபோது ’பிழைத்துப் போ’ என்று கொடுத்தது. ”நீங்களே வீட்டுல டிராப் செய்துவிடுங்கள்” என்று கார் வீட்டுக்கு வந்தது. ஒரு வாரம் ஸ்டார்ட் செய்து விடியற்காலை யாரும் இல்லாத சமயம் அடுக்குமாடிக்குடியிருப்பை ஒரு வட்டம் அடித்துவிட்டு பார்க் செய்துவிடுவேன். ஒரு நாள் கொஞ்சம் தைரியம் வந்து அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றேன். ஒரு வாரத்துக்குப் பிறகு பெங்களூர் சாலைகள், சிக்னல், எஃப் எம் வானொலியில் ‘Sakkath Hot Magaa’ எல்லாம் பழக்கப்பட்டது. எல்லாம் நன்றாகச் சென்று கொண்டு இருந்த சமயம். அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அன்று மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பியபோது தூறல். காரை மழையில் ஓட்டிப் பார்க்கலாம்

படக் கதை

 படக் கதை ”காமிக்”(’comic ) என்ற சொல்லுக்குத் தமிழில் ’படக் கதை’ என்று சொல்லுவார்கள். படத்துடன் கூடிய கதை. காமிக் என்ற வார்த்தையிலிருந்து காமெடி என்ற வார்த்தை வந்திருக்கலாம். ‘என்ன வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலெயே' என்று வசனத்துக்குப் பிறகு இது தமிழ் வார்த்தையாகிவிட்டது. இந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் ’சரியான காமெடி பீஸ்’ என்று என்னை நானே சொல்லிக்கொள்வேன். படத்துக்குப் பின் ஒரு கதை இருக்கிறது என்ற உங்கள் யூகத்துக்கு மதிப்பளித்து அந்தக் கதையை உங்களுக்கு ’படக் கதையாக’ சொல்லப் போகிறேன். இரண்டு வருடம் முன் பத்ரி யாத்திரை சென்றிருந்தேன். ”மந்திருக்கு முன் படம் எடுத்துக்கொள்ளுங்கள். இன்ஸ்டண்ட் பிரிண்ட் 100 ரூபாய்” என்று பல புகைப்படக்காரர்கள் அந்தக் குளிரில் குல்லாவுடன் அலைந்துகொண்டு இருப்பார்கள். இன்றைய ‘செல்ஃபி’ யுகத்தில் அவர்கள் கூவுவதை யாரும் சட்டை செய்வதில்லை. ஒரு சிலர் படம் எடுத்துக்கொண்டார்கள். படம் எடுத்தபின் பின் நீங்கள் பெருமாள் சேவித்துவிட்டு வரும்போது உங்கள் படம் ரெடியாகப் பிரசாதம் போலக் கிடைக்கும். ஒரு நாள் மத்தியம் நாங்கள் எல்லோரும் ஊர்வலமாக ஸ்ரீராமானுஜரைப் பல்லக்கி

நீலகண்ட மலை

பனிபடர்ந்த நீலகண்டமலை.  ஊர்வசி பர்வதம். நாராயண பர்வதம்  நர பர்வதம் என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கிறது பத்ரிகாசரமம்.  முதல்முதலாக நீலகண்ட மலையை ஒரு நாள் காலைப் பார்த்தபோது ’நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’. அப்படி ஒரு அழகு. மயங்கினேன். மயங்கியதற்குக் காரணம் அது இந்திய வரைபடம் போன்ற வடிவத்திலிருந்தது. அதன் மீது பனி வெள்ளி போல ஜொலித்தது.  இந்த மலையைச் சூர்யோதயத்தின்போது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கூட இருந்தவர்களிடம் இதைச் சொன்னபோது “பேசாம போர்த்திக்கொண்டு படுங்கள்” என்றார்கள்.  மறுநாள் காலைக் கேமராவும் கையுமாகத் தனியாகக் கிளம்பினேன். இருட்டு, குளிர். கூட்டமாகக் கருப்பு நாய்கள். பார்க்க ஓநாய் மாதிரி இருந்தது. என் அட்ரினல் சுரப்பிகள் வேலை செய்து குளிருடன் நடுங்கினேன். இருந்தாலும் அந்த அழகிற்கு அடிமையாகி சென்றேன். நாய்களும் வழிவிட்டன.  கேமராவை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டு இருந்தேன். என் வாழ்கையில் மறக்க முடியாத அந்தக் காட்சி வர ஆரம்பித்தது இருபதே நிமிடங்களில் முடிந்தது.  முதலில் மலை உச்சி தங்கம் போல மின்னியது. பிறகு மெதுவாகச் சூரியன் மலை முழுவதையும் ஆக்கிரமித்து முழு மலையும

தினமும் கொஞ்சம் தேசிகன் - 8

பெரிய திருமொழியில் நீண்ட வரிகளைக் கொண்ட பாசுரம் இது.  பதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்,  சில வார்த்தைகள் சுலபமாகப் புரியும், தைரியமாகப் படிக்கலாம்.  தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து, தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் -தன்னை கோங்கு அரும்பு, சுரபுன்னை, குரவு ஆர் சோலைக் குழாம் வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே.  கடைசியில் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்பதால் திருக்கோவலூர் பெருமாளைப் பற்றிய பாசுரம் என்று புரிந்திருக்கும். பாசுரத்தின் சுருக்கமான பொருள் கீழே  ஒருவராலும் பொறுக்க முடியாத கொடிய யுத்தம் புரியவல்ல மாலி என்ற அரக்கனைக் கருடன் மீது வந்து உலகோர் குறையைப் போக்கிய பெருமாள், அடியவர்களுக்கு அன்பு மிக்க அமுதம் போல இருந்தான். கொங்கு, சுரபுன்னை, குரவு மலர்கள் சூழ்ந்த சோலையில் கூட்டம் கூட்டமாகக் கூடிய வரி வண்டுகள் இசைபாட அந்த இசையைக் கேட்டு இளம் கரும்புகளின் ஒரு கணு மேல் எழுந்து நிற்கும் அத்தகைய வயல்கள் சூழ்ந்த திருக்கோவலூ