Skip to main content

Posts

Showing posts from July, 2017

மன்னிக்கும் ஆவி

பட்டப்பகலில் ரகு ரம்யாவை கொலை செய்ததை யாரும் பார்க்கவில்லை. ரம்யா ரகுவின் மனைவி. ரகு விபத்து என்று சொன்னதை எல்லோரும் நம்பினார்கள். பிச்சாவரத்துக்கு சுற்றுலா சென்ற ரகுவும் ரம்யாவும் தனியாக படகு சவாரி... மன்னிக்கவும், கூட மோமோ என்ற நாயுடன் சென்ற போது அந்த சம்பவம் நடந்தது. மனைவி தண்ணீரில் மூழ்கிவிட்டாள் காணவில்லை என்று ரகு சத்தம் போட்ட போது தான் சற்று தொலைவில் இருந்தவர்கள் கவனித்தார்கள். உடனே சில படகுகளில் நீச்சல் தெரிந்தவர்கள் ரகு சொன்ன இடத்தில் குதித்தார்கள் ஆனால் ரம்யாவை கானவில்லை.

மலச்சிக்கல்

“எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்” - சுஜாதா, தனது எழுபது வயது கட்டுரையில். மலமோ, மாநிலமோ எது பந்த் செய்தாலும் கஷ்டம்தான். சாப்பிட்டபின் என்ன ஆகிறது என்று அறிந்துகொண்டாலே மலச்சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும் என்பது என் Gut Feeling! ஹைவேயில் 130கிமீ வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு போகும்போது நடுவில் சுங்கச்சாவடி வரிசை. பிரேக் போட்டு நின்றுவிடுகிறீர்கள். முன்பு இருக்கும் வண்டிக்கு ஏதோ பிரச்சினை. ஸ்டார்ட் ஆகாமல் நிற்க, பின்னாலே பெரிய வரிசை. முன் பின் நகர முடியாமல் இருக்கும் கார் போல சிக்கலில் மலம் மாட்டிக்கொண்டால்? மலச்சிக்கல்! வாய் முதல் ஆசனவாய் சுமார் இருபத்தெட்டு அடி நீளமுள்ள ஒரு வழிப் பாதை (குழாய்). இந்த ஹைவேயில் சாப்பாட்டுடன் பயணம் மேற்கொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன். பயண நேரம் பதினெட்டு முதல் இருபத்தி நான்கு மணி நேரம். பயணத்தின்போது ஏதாவது (மல)சிக்கல் ஏற்படாமல் இருக்க இயற்கைக் கடவுளை வேண்டிக்கொண்டு பிடித்த உணவை வாயில் போட்டுக்கொண்டு புறப்படுங்கள். முதலில் கண். கண்ணுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். இருக்கிறது.

திருக்கண்ணமங்கை ஆண்டான்

திருக்கண்ணமங்கை ஆண்டான் திருக்கண்ணமங்கை ஆண்டான் - திருக்கண்ணமங்கை ஒரு பக்தரின் கதையுடன் ஆரம்பிக்கிறேன். அவர் ஒரு பக்தர். சாதாரணமாக கோயிலுக்கு சென்று சேவித்து வேண்டிக்கொள்ளும் பக்தர் இல்லை.  தனக்காக என்று முயல்வதை எல்லாம் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் கால்களாக்கிக் கொண்டு விலங்கு போலே நாலுகால்களாலே சஞ்சரிப்பவர். தினமும் காலை ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் பசுவை போல நீராடிவிட்டு  வஸ்திரம் எதுவும் இல்லாமல், பிராணியைப் போல நடப்பவராய் (அல்லது ஊர்ந்து ) கோயிலுக்கு வந்து, பெருமாளை சேவித்துவிட்டு ஒர் மகிழ மரத்தடியில் கோயிலில் பெருமாளின் பிரசாதங்கள் கிடைத்தால் சாப்பிட்டுவிட்டு, மரத்தடியில் அசையாது மௌனமாக வாழ்ந்து வந்தார். இவர் எப்போதும் இப்படி இல்லை. திடீர் என்று தான் இப்படி ஆகிவிட்டது. ஏன் என்று பிறகு சொல்கிறேன். நன்றாக வாழ்ந்தவர் திடீர் என்று இப்படி ஆகிவிட்டார் என்றால் ஊர் மக்கள் சும்மா இருப்பார்களா ? பலவாறு பேசத் தொடங்கினார்கள். “இவர் செய்த பாவ கர்மத்தாலே இப்படி இருக்கிறார்”   ”பாவ கர்மத்தை யாராலும் கடக்க முடியாது.. ஈஸ்வரனாலும் ஒன்றும் செய்ய முடியாது”   “நல்ல பக்திமான்.