Skip to main content

Posts

Showing posts from July, 2021

கோயிலுக்கு வெளியே பிச்சைகாரர்கள்

 கோயிலுக்கு வெளியே பிச்சைகாரர்கள் இரண்டு வருடங்களுக்கு பின் இந்த வாரம் சென்னை வாசம்.  சில நாள் முன் ஸ்ரீ உ.வே மதுரை பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன்.  இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அரங்கராஜன் ஸ்வாமிகளை ஒரு மாலை சந்தித்த போது அவர் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை காலட்சேபம் செய்துகொண்டு இருந்தார். ஒரு மணி நேரம் கேட்டது இனிய அனுபவம்.  காலட்சேபத்தின் போது ’சாது ராமானுஜசாரியார் ஜீயர்’ பற்றி சொன்ன கருத்துக்கள் மிக அற்புதமானவை.  ஜீயர் அவர்கள் கள்ளழகர் கோயிலில் துவாரபாலகர் அருகே திரிதண்டத்தை வைத்துவிட்டுத் தான் பெருமாள் சேவிப்பார் என்றார். சன்யாசம் எல்லாம் பெருமாளிடம் போகும் போது தடையாக இருக்கக் கூடாது என்று நினைப்பாராம்.  ஜீயர் ஒரு சமயம் கோயிலில் அரங்கராஜன் ஸ்வாமியிடம் “பெருமாள் யாருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார் தெரியுமா ?” என்று கேள்வி கேட்டுவிட்டு “உனக்கும், எனக்கும் இல்லை..ரயில்வே நிலையத்தில் மூட்டை முடுச்சுடன்,  பெட்டியை தலையில் தூக்கிக்கொண்டு பெருமாளைச் சேவிக்க வரும் பக்தர்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்” என்பாராம்.  இதை அவர் சொன்ன ப

எது சரி ?

 எது சரி ?  ஸ்ரீவைஷ்ணவத்தில் சில  சமயம் நமக்கு எது சரி என்ற குழப்பம் வருவதுண்டு. கருத்தும், குழப்பமும்  ‘ஈகோ’வுடன் சேர்ந்தால் வேறு வினையே வேண்டாம். அடிதடி கோர்ட் கேஸ் என்று ஆட்டுவிக்கும்.    இந்திய அரசியலமைப்பு சட்டம் வருவதற்கு முன்பே ஸ்ரீவைஷ்ணவம் இருந்திருக்கு அதனால் சட்டத்தில் தீர்வு கிடைக்காது. அப்படி கிடைக்கும் தீர்வு ஸ்ரீவைஷ்ணவத்தை ஒட்டிய தீர்வாக இருக்காது. நம் ஆசாரியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் ஆராய்ந்தால் பளிச் என்று பதில் கிடைத்துவிடும்.  சமீபத்தில் எனக்கு மிகத் தெரிந்தவர் ஒருவர் சொன்ன சம்பவம் இது. எந்த ஊர், எந்த ஆசாரியன் என்று எல்லாம் கவலைப்படாமல், என்ன நடந்தது என்பதை மட்டும் சொல்கிறேன்.  பல வருடங்களுக்கு முன், அந்த திவ்ய தேசத்தில் கும்பாபிஷேகம். யாகம் போன்ற ஏற்பாடுகள் பலமாக நடந்துகொண்டு இருக்கிறது. கோயிலில் அருளிச்செயல் கோஷ்டி திருவாய்மொழி பாசுரங்கள் சேவித்துகொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கே ஓர் ஜீயர் ஸ்வாமி எழுந்தருளுகிறார். அருளிச் செயல் கோஷ்டியில் யாரும் எழுந்துகொள்ளவில்லை. ஜீயர் ஸ்வாமி கைக்கூப்பிவிட்டு சென்றுவிடுகிறார்.  கோஷ்டி முடிந்த பிறகு ஒரு விசாரம

26. இராமானுசன் அடிப் பூமன்னவே - உய்ய செய்பவனை தேடு

 26. இராமானுசன் அடிப் பூமன்னவே - உய்ய செய்பவனை தேடு  வானம் மப்பும் மந்தாரமுமாக சூரியன் மேகங்களுக்குள் ஒளிந்துகொண்டது.  மரங்கள் அசையாமல் இருந்தது. அந்த அமைதியான நேரத்தில் எங்கோ ஒரு பறவை ஒலி அந்த நிசப்தத்தைக் குலைத்தது.  ஆளவந்தார் திருவரங்க மாநகரை நோக்கி பயணத்தில், அவர் மனம் சஞ்சலம் அடைந்திருந்தது. காரணம் என்ன என்று அறியமுடியாமல், அவர் மனம் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் மணக்கால் நம்பியிடம் இருந்தது. மனதின் வேகத்துக்குக் கால்கள் ஈடுகொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு வேகமாக நடக்க தொடங்கி,  சிஷ்யர்களை நோக்கி “சற்று வேகமாக நடக்கலாம்” என்றார்.   ஆளவந்தாரும் அவருடைய சிஷ்யர்களும் நடந்து சென்ற காட்சி, உயர்ந்த ஜாதிக் குதிரைகள் கம்பீரமாக நடந்துசென்றது போல் காட்சியளித்தது.  மாலை யசோதை  ’காப்பிட வாராய்’ என்று அழைத்த கண்ணன் வசிக்கும் இடமான திருவெள்ளறை வந்தடைந்தார்கள்.  திசை எல்லாம் கமழும் குருக்கத்தி மலர்கள் வாசனையைக் காற்றுடன் கலந்து வீதிகள் எங்கும் நறுமணம் சுமந்தது. நல்லோர்கள் வாழும் திருவெள்ளறையில் அன்றைய இரவு அங்கே ஒரு மண்டபத்தில் படுத்துக்கொண்டார்கள்.  அவர்கள் படுத்துக்கொண்ட அதே சமயம், ச

ஆசாரியன்

ஆசாரியன்  நமக்கு நல்வழி காட்டுபவர்கள், ஞானத்தை அளிப்பவர்களை ஆசாரியர்கள் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் ஆசாரியர் என்னும் சொல் மிக ஆழமான பொருளைக் குறிக்கும்.  ஆசாரியனுக்கான முதல் தகுதி அரும்பாடுபட்டு அருமறைகளையும், சாஸ்திரங்களையும் கற்று அவற்றின் நுணுக்கங்களில் தெளிவு பெற்று, ‘ஊருக்கு உபதேசம்’ என்று இல்லாமல், தான் அடைந்த ஞானத்தை அனுஷ்டாத்தினால் ஸ்திரப்படுத்தி, . இதைத் தகுதியுடையோருக்கு உபதேசித்து, பலருக்கு ஒளி தரும் கைவிளக்காக இருக்க வேண்டும்.  மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் “ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!” என்று சாதித்தார்.  இவை அனைத்தும் அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் வாழ்க்கையைப் பார்த்தால் அப்படியே பொருந்தும்.  ஓர் நவராத்திரி தினம். சேலையூர் அஹோபில மடத்தில் இருந்தேன். இரவு கிட்டதட்ட 9.45 இருக்கும். அடியேனுடைய ஆசாரியன் அனைவருக்கு நல்லாசி அருளி, அட்சதை, பிரசாதம் தந்துவிட்டு சயனத்துக்குச் சென்றுவிட்டார்.  ”அடடா சேவிக்க முடியாமல் போய்விட்டதே… “ என்று அங்கே இருந்தவர்களிடம் கேட்டேன்.  “ஆசாரியன் சயனத்துக்கு ( தூங்க ) சென்றிர

மாறனேர் நம்பியும், பெரிய நம்பியும் !

மாறனேர் நம்பியும், பெரிய நம்பியும் !  ஆளவந்தார் சிஷ்யர்களில் ஒருவர் மாறனேரி நம்பி. அவருக்கு ஏன் மாறனேரி நம்பி என்று பெயர் வந்தது ?  மாறனேரி நம்பியின் தொழில் உழுவது. ஒரு நாள் இவர் உழுதுகொண்டு இருக்கும் போது இவருக்குப் பசித்தது. கீழே இருந்த வயல் மண்ணை எடுத்து அதை நீரில் அலசி அலசி அம்மண்ணை உண்டார். அந்த வழியே வந்த ஆளவந்தார் இவருடைய இந்தச் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன் சிஷ்யர்களுடன் அவரிடம் சென்று “ஐயா நீங்கள் செய்யும் செயல் எங்களுக்குப் புரியவில்லையே! சேற்றில் நின்று கொண்டு சேற்றை உண்ணுகிறீர்களே!” என்றார். மாறனேரி நம்பி  “சாமி ! மண்ணுக்கு மண்ணை இடுகிறேன்!” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட ஆளவந்தார் இவருடைய ஞானத்தை வியந்து  “இவர் நம் மாறன் குருகூர் நம்பிக்கு ( சடகோபன் ) நிகரானவர்!” என்று இவருக்கு மாறனுக்கு நிகரான நம்பி ( மாறனேர் நம்பி ) என்று பெயர் சூட்டி  “நீர் என்னுடன் வாரும்!” என்றார்.  மாறனேரி நம்பி “தான் தாழ்ந்த குலம், ஒரு சண்டாளன்!” என்றார். அதற்கு ஆளவந்தார் “பெருமாள் நினைப்பில் இருக்கும் உன்னைப் போல ஒருவனுக்கு குல பேதம் எதுவும் கிடையாது!” என்று அழைத்தார்.  உடனே மாறனேரி

எளிய உரை - அமலனாதிபிரான்(7)

எளிய உரை - அமலனாதிபிரான்(7)   கையின் ஆர்* சுரி சங்கு அனலாழியர்* நீள் வரை போல் மெய்யனார்* துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார்** அணி அரங்கனார்*அரவின் அணைமிசை மேய மாயனார்* செய்ய வாய், +ஐயோ!* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே! (933/7) வலம்புரிச் சங்கையும், தீபோன்ற சக்கரத்தையும் பொருந்தின திருக்கையையும், நீண்ட மலை போன்ற திருமேனியையும், துளசி பரிமளம் கமழும் திருமுடியும் உடைய திருவரங்கத்துக்கு ஆபரணமாய் விளங்கும் அரங்கன் இனிய ஆதிசேஷ படுக்கையில் மன்னியிருக்கும் மாயனின் சிவந்த திருவாய்… ஐயோ என்ன அழகு என்ன அழகு ! என் நெஞ்சைப் பறித்துக் கொண்டது +ஐயோ - என்று ஆழ்வார் இங்கே ஆச்சரியத்தில் கூறுகிறார். ஆழ்வார்களின் சிந்தை முழுவதும்  எம்பெருமான் இருக்க அவர்கள் என்ன வார்த்தையைக் கூறினாலும் அது நாம சங்கீர்த்தனம் தான். ஐயோ என்பதும் நாம சங்கீர்த்தனம்! கொசுறு: ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் தான். அதில் சங்கும் சக்கரமும் கிடையாது அப்படி இருக்க,  திருப்பாணாழ்வாரோ திருக்கைகளில் சங்கு சக்கரம் இருக்கிறது என்று பாடியுள்ளாரே ? அது எப்படிப் பொருந்தும் ? ஒரு முறை திருக்கோட்டியூரில் பட்டர் இருந்த சமயம்

அத்தி வரதனுக்கு ஒரு சின்ன மாலை

அத்தி வரதனுக்கு ஒரு சின்ன மாலை  சில வாரமாகவே அத்தி வரதர் பற்றிப் பல செய்திகள், படங்கள் எல்லாம் ஊடகங்களில் வரத் தொடங்கி. சக்தி, பக்தி, ஆன்மீகம் என்று கவர் ஸ்டோரிலில் வரதன் இடம்பிடித்துவிட்டார்.  விஷயம் தெரிந்தவர்கள், கல்வெட்டு, பழைய புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டி பெருமாள் திருமேனியைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லுகிறார்கள். பக்தி விஞ்ஞானிகள் அத்தி மரத்தின் தன்மை பற்றியும் அது நீரில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது பற்றிப் பேசுகிறார்கள்.   சிலர் கல்வெட்டு என்ன சொல்லுகிறது ? கல்வெட்டில் இல்லை  என்றால் நம்ப மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள்.   இந்த மாதிரி எல்லாம் நாம், அதாவது ஸ்ரீவைஷ்ணவகள் பேசக் கூடாது என்பதற்காகத் தான் இந்தக் கட்டுரை.  தொடர்ந்து நாம் செய்தித்தாள்களில் ’சிலை திருட்டு’ அதன் மதிப்பு பல கோடி என்று தொடர்ந்து படிப்பதால் நம் மூளை பெருமாளைச் சிலையாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.    எம்பெருமான் திருக்கோயில்களில் இருக்கும் நிலை அர்ச்சை. ஆழ்வார்கள் பக்தியுடன் சேவித்ததால் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாசுரம் பாட முடிந்தது. நாம் ‘சிலை’யாகப் பார்த்தால் பக்தி எப்படி வரும்