Skip to main content

Posts

Showing posts from 2026

ஆண்டாளும் தோழிகளும் - சிற்றஞ் சிறுகாலே - (பாசுரம் 29)

ஆண்டாளும் தோழிகளும் - சிற்றஞ் சிறுகாலே - (பாசுரம் 29) (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் 'பறை' என்று பலமுறை குறிப்பிட்டு அதைக் கண்ணனிடம் வேண்டினார்கள். ஊருக்காக நோன்பு நோற்கப் பறை வேண்டும் என்று முதலில் கேட்டாலும், இப்போது தாங்கள் வேண்டிய பறையின் உண்மையான உட்பொருள் என்ன என்பதையும், தங்களின் உண்மையான நோக்கம் கண்ணனுக்குத் தொண்டு செய்வதே என்பதையும் கூறி, ஒட்டுமொத்த திருப்பாவையின் கருத்தையும் இங்கே நிறைவு செய்கிறார்கள்.) [சிற்றஞ் சிறுகாலே] கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! இந்த மார்கழி குளிரில், அதுவும் மிக அதிகாலையில்... உங்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ‘சிற்றஞ்சிறுகாலையிலே’... பொதுவாகச் சிறுபெண்கள் விடியற்காலையில் எழுந்திருக்கத் தயங்குவார்களே, நீங்கள் மட்டும் எப்படி இத்தனை சீக்கிரம் வந்தீர்கள்?" (வெட்டவெளிச்சம்' என்பது போல, 'சிற்றஞ்சிறுகாலை' என்பது எதார்த்தமான, அழகான இடைக்குலப் பேச்சு வழக்கு) ஆண்டாள்: "கோவிந்தா! வேறு என்ன... உன்னை அடைய வேண்டும் என்கிற வேகம் தான் எங்களை இங்கே இழுத்து வந்தது." புல்லகலிகா: "ஆமாம் கண்ணா! நாங்கள் நினைத்த மாத்திரத்தில் மார்கழ...

ஆண்டாளும் தோழிகளும் - கறவைகள் பின் சென்று - (பாசுரம் 28)

ஆண்டாளும் தோழிகளும் - கறவைகள் பின் சென்று - (பாசுரம் 28) (சூழல்: ஊராருக்கு 'நோன்பு' என்ற பெயரில் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்கள் ஆண்டாளும் தோழிகளும். ஆனால், உண்மையில் தங்களுக்கு 'பறை' என்பது ஒரு கருவி மட்டுமே; எங்களின் உண்மையான 'பறை' என்ற இலக்கு வேறு, அது உன் திருவடிகளில் செய்யும் நித்தியக் கைங்கரியமே (தொண்டு) என்பதை இப்போது அவர்கள் கண்ணனிடம் வெளிப்படுத்துகிறார்கள்.) ஆண்டாள்: "கோவிந்தா! நாங்கள் இதுவரை ஊராருக்காக 'நோன்பு' என்ற பெயரில் பறை மற்றும் வேறு சில உபகரணங்களைக் கேட்டு உன்னிடம் வந்தோம். ஆனால் எங்களுக்கு வேண்டிய உண்மையான, உயர்ந்த பறை வேறு!" (கண்ணன், இவர்கள் கேட்கப்போகும் அந்தப் பறை என்ன என்பதை ஊகித்து, அவர்களைச் சோதிப்பதற்காக மேற்கொண்டு பேசுகிறான்.) கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! ஊராருக்காகப் பறை வாங்கினீர்கள், உங்களுக்காகப் பல ஆபரணங்களையும் கேட்டீர்கள். இப்போது நீங்கள் விரும்பும் அந்த 'உயர்ந்த பறையை' அடைய உங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? அதற்காக ஏதாவது சாதனைகளைச் செய்தீர்களா? எதுவும் செய்யாமல் பலனை மட்டும் எதிர்பார்ப்பது முறையா? ...

ஆண்டாளும் தோழிகளும் - கூடாரை வெல்லும் - (பாசுரம் 27)

ஆண்டாளும் தோழிகளும் - கூடாரை வெல்லும் - (பாசுரம் 27) (சூழல்: ஆலிலையில் துயின்ற உனக்கு முடியாதது எதுவுமில்லை என்று இடைச்சிறுமியர் வேண்டியதைக் கேட்டவுடன், கண்ணன் சங்குகள், பறைகள், விளக்கு, விதானம் என்று அவர்களுக்குத் தேவையான ஒவ்வொன்றாக வழங்கத் தொடங்கினான். இவை அனைத்தையும் பெற்றுக்கொண்ட சிறுமியரிடம், "இவ்வளவுதானே உங்களுக்கு வேண்டியது?" என்று கண்ணன் கேட்கிறான். அதற்கு அவர்கள், "கண்ணா! இதுவரை நாங்கள் கேட்டவை எல்லாம் நோன்பு செய்யப் போவதற்குத் தேவையான உபகரணங்கள் மட்டுமே. ஆனால், நோன்பு முடிந்த பிறகு உன்னிடம் சில பரிசுகளைப் பெறப்போகிறோம்" என்கிறார்கள்.) கண்ணன்: "பெண்களே! என்னிடம் இருக்கும் உடமைகளை எல்லாம் கேட்டீர்கள். அதை எல்லாம் உங்களுக்குத் தந்துவிட்டேன். அதுமட்டுமா, 'ஆற்றாது உன் அடிபணிய வந்தோம்' என்று சொல்லி, என்னையே உங்களிடம் தோற்கச் செய்துவிட்டீர்களே! எல்லா உலகங்களையும் ஆட்சி செய்யும் அரசன் இப்படி உங்கள் முன் தோற்றுப்போய் நிற்கிறேன்!" ஆண்டாள்: "கண்ணா! இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? உனது இயல்பே அதுதானே!" கண்ணன்: "என்ன சொல்லுகிறாய் கோத...

ஆண்டாளும் தோழிகளும் - மாலே! மணிவண்ணா! - (பாசுரம் 26)

ஆண்டாளும் தோழிகளும் - மாலே! மணிவண்ணா! - (பாசுரம் 26) (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் பறை வேண்டும் என்று சொல்லுகிறார்கள்; அதே சமயம் உன்னையே வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் விரும்புவது என்ன? எதற்காகத் தன்னை விட்டுவிட்டு வேறொரு பொருளைக் கேட்க வேண்டும் என்று கண்ணன் குழம்பிப் போயிருக்கிறான்.) கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! என்னைப் போற்றிப் பாடிய நீங்கள், 'உன் பள்ளிக்கட்டிலிருந்து இறங்கி வரச் சொன்னீர்கள்'. உங்கள் அன்பிற்கு அடிபணிந்து நானும் நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்துவிட்டேன். இப்போது 'உன்னையே வேண்டுகிறோம்' என்று ஒருபுறம் கூறிவிட்டு, இன்னொருபுறம் 'பறை தருதியாகில்' என்று வேறு ஏதோ ஒரு சம்பந்தமே இல்லாத பொருளைக் கேட்கிறீர்களே? உங்கள் எண்ணம் தான் என்ன?" (கண்ணனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது. அந்தப் புன்னகையையும், தாமரை போன்ற கண்களையும் கண்ட துரியோதனனே திகைத்துப் போய் அவனை "புண்டரீகாட்சன்" என்று அழைத்தான் என்றால், ஆண்டாள் என்ன செய்வாள்? அவள் உள்ளம் உருகி அவனை அழைக்கிறாள்.) [மாலே! மணிவண்ணா!] ஆண்டாள்: "மாலே! மணிவண்ணா!" கண்ணன்...

ஆண்டாளும் தோழிகளும் - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - (பாசுரம் 25)

ஆண்டாளும் தோழிகளும் - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - (பாசுரம் 25) (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நப்பின்னையை முன்னிட்டுக்கொண்டு கண்ணனிடம் 'உன் நடை அழகைக் காண வேண்டும், நீ சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் அழகை ரசிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்கள். கண்ணனும் அப்படியே செய்ய, ஆண்டாள் கோஷ்டி அவனுக்குப் பல்லாண்டு பாடினார்கள். ஆனால், தாங்கள் வந்த காரியத்தைச் சொல்லாமல் இப்படி இழுத்தடிக்கிறார்களே என்று எண்ணிய கண்ணன், "உங்களுக்கு என்னதான் வேண்டும்?" என்று கேட்கிறான்.) கண்ணன்: "ஆயர்ச் சிறுமியர்களே! இதுவரை என் நலத்திற்காகக் கவலைப்பட்டு எனக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்று பயந்து எனக்கு 'போற்றி' பாடினீர்கள். ஆனால், இப்போது திடீரென்று 'பறை' வேண்டும் என்று ஒரு பலனை எதிர்பார்க்கிறீர்களே? பிரதிபலன் எதிர்பாராமல் மங்களாசாசனம் செய்பவர்கள், இப்போது இப்படிப் பலன் எதிர்பார்ப்பது முரணாக இருக்கிறதே!?" ஆண்டாள்: "கண்ணா! நாங்கள் கேட்கும் 'பறை' என்பது ஒரு சாக்கு (வியாஜம்) தான்! கண்ணன்: "அது என்ன வியாஜமோ! அது இருக்கட்டும், உங்களுக்கு நான் உதவ நினைத்தாலும், அத...

ஆண்டாளும் தோழிகளும் - அன்று இவ்வுலகம் அளந்தாய் - (பாசுரம் 24)

ஆண்டாளும் தோழிகளும் - அன்று இவ்வுலகம் அளந்தாய் - (பாசுரம் 24) (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கண்ணன் தன் பள்ளியறையிலிருந்து சிங்கம் போல் கம்பீரமாக நான்கு வகை நடைகளையும் நடந்து வந்து, நப்பின்னையுடன் அந்தச் சீரிய சிங்காசனத்தில் அமர்கிறான். கண்ணன் சிங்காசனத்தில் ஒரு காலை மடக்கியும், ஒரு காலைத் தொங்கப் போட்டும் அமர்ந்திருக்கும் அந்த அழகைக் கண்டு ஆண்டாளும் தோழிகளும் மெய்மறந்து நிற்கிறார்கள்.) ஆண்டாள்: "கண்ணா! இந்த ஆயர் சிறுமியர்கள் கேட்டார்கள் என்று நீ நடந்து வந்தாயே!" கண்ணன்: "அன்று பாரதப் போரில், இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டு போய் நிறுத்து என்று அர்ஜுனன் ஒருவன் சொன்ன போது நான் நிறுத்தினேன். இன்று, அன்புமிக்க ஐந்து லட்சம் ஆயர் சிறுமியர்கள் இவ்வளவு தூரம் வந்து அன்பாகக் கேட்கும்போது, நான் எப்படித் தட்ட முடியும்?" (ஆண்டாளும், தோழிகளும் ஒவ்வொருவராகச் சென்று கண்ணன் திருவடிகளைத் தொட்டு வணங்குகிறார்கள். பெரியாழ்வார் பெற்றெடுத்த ஆண்டாள், தோழிகளை எல்லாம் முன்னே அனுப்பிவிட்டு, தான் கடைசியாகப் போகிறாள். கண்ணன் திருவடியைத் தொட்டுச் சேவித்துவிட்டுப் பார...

ஆண்டாளும் தோழிகளும் - மாரி மலை முழைஞ்சில் - பாசுரம் 23

ஆண்டாளும் தோழிகளும் - மாரி மலை முழைஞ்சில் - பாசுரம் 23 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நப்பின்னையை முன்னிட்டுக்கொண்டு கண்ணனிடம் சரணடைந்தார்கள். 'நாங்கள் உனக்கே கைங்கரியம் செய்ய வந்தோம். உன் கடைக்கண் பார்வையே எங்கள் துக்கத்தைப் போக்கும்' என்றார்கள். கண்ணன் இன்னும் படுத்துக்கொண்டே இருக்கிறான். நப்பின்னைப் பிராட்டி கண்ணன் அருகில் செல்ல, கண்ணன் அவள் மார்பில் சாய்ந்து கொள்ள, நப்பின்னை கண்ணனிடம் ஆண்டாளும் தோழிகளும் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறாள்.) (கண்ணன் நப்பின்னையின் பேச்சைக் கேட்டு மனம் நெகிழ்ந்து பேசுகிறான்) கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! நீங்கள் எல்லோரும் பனியிலும், குளிரிலும் வீடு வீடாகச் சென்று எல்லோரையும் எழுப்பி, வாசல் காப்பவன், நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என்று அனைவரையும் முன்னிட்டு என்னிடம் வந்துள்ளீர்கள். நீங்கள் எல்லாம் நப்பின்னையின் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! உங்களை எல்லாம் இப்படிப் படாத பாடு படுத்திவிட்டேன் என்று நினைக்கும் போது எனக்கே வருத்தமாக இருக்கிறது. உண்மையில் நான் அல்லவா உங்கள் இருப்பிடம் தேடி...