Skip to main content

Posts

Showing posts from 2021

2021 திரும்பி பார்க்கிறேன் !

2021 திரும்பி பார்க்கிறேன் ! 2021 மற்ற வருடங்கள்போல இப்ப தான் ஆரம்பித்தது அதற்குள் முடிந்துவிட்டது.  சில நினைவுகள்.  உருப்படியான விஷயம் : பதம் பிரித்த பிரபந்தம் புத்தகம் வெளியிட்டது .  மணக்கால் நம்பி திருநட்சத்திரம் அன்று அறிவிப்பு செய்து, பங்குனி உத்திரம் அன்று அச்சுக்குச் சென்று, உடையவர் திருநட்சத்திரம் அன்று வெளியிடப்பட்டது. 1300 புத்தகம் முழுவதும் தீர்ந்து, கொரோனா இரண்டாம் அலையின்போது அனுப்பப்பட்டப் புத்தகம் மொத்தம் 1008(!). பெற்றுக்கொண்டவர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். அடுத்த வருடம்(2022) அதன் இரண்டாம் பதிப்பு கொண்டு வரப் பெருமாள் அருள் புரிய வேண்டும். வேலைகள் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறது.  எழுத்துப் படிப்பு :  கல்கி கடைசிப் பக்கம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பல கடைசிப் பக்கம் இரவு 12 மணிக்கு டெட்லைனுக்குள் கடைசியாக அனுப்புகிறேன்.  தினம் ஒரு பாசுரம் எழுதத் தொடங்கி, கூட்ஸ் வண்டிபோல நடுநடுவே நிறுத்திவிட்டுத் தொடர்கிறேன்.  எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படிக்க வில்லை. ஏ.கே.செட்டியார் முழுத் தொகுப்பு, கல்கி ஆசிரியர் அன்புடன் கொடுத்த முகம்

பாகவத திருப்பாவை - 13 (கிள்ளிக் களைந்தானைக)

பாகவத திருப்பாவை - 13 (கிள்ளிக் களைந்தானைக)  புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை* கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்* பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்* வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று** புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!* குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே* பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்* கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய் 486/13 பறவை உருவப் பகாசுரனின் வாயைக் கிழித்த கண்ணன் பொல்லாத இராவணனின் தலையைக் கிள்ளிய ராமரின்  புகழைப் பாடிக் கொண்டு எல்லோரும்  நோன்பு நோற்கும் இடத்தை அடைந்து விட்டார்கள்! சுக்கிரன் (வெள்ளிக் கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்து விட்டது. பறவைகள் கூவுகின்றன. பூபோன்ற மானின் கண்களை உடையவளே! குளிர நீராடாமல் படுத்துக் கிடக்கிறாயோ? நீ உன்னுடைய கபடத்தை விட்டுவிட்டு  எங்களுடன் வந்து கலந்துவிடு. பறவையாக வந்த பகாசுரனை முதல் வரியில் முடித்துவிட்டு, அடுத்த வரியிலேயே ராவணனை முடித்துவிடுகிறாள் ஆண்டாள்.  இப்படி அடுத்து அடுத்து அவள் கூறுவதற்கு என்ன காரணமாக இருக்கலாம் ?  பறவை உருவம் கொண்ட பகாசுரனைப் பிளந்த கதையை(10.11.44-59) ப

பாகவத திருப்பாவை - 12 ( நற் செல்வன் )

 பாகவத திருப்பாவை - 12 ( நற் செல்வன் )  கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி* நினைத்து முலை வழியே நின்று பால் சோர* நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!* பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி** சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற* மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்* இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!* அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் 485/12 எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி  இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்க,  இதனால் வீடு முழுவதும் சேறாகியிருக்கும்  நற் செல்வனின் தங்கையே! பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள்  உன் வீட்டு வாசலில் நிற்கிறோம். இராவணனை வென்ற மனதுக்கு இனியனான  இராமனைப் புகழ்ந்து பாடுகிறோம்  நீ வாய் திறவாமல் தூங்குவதை எல்லோர் வீட்டினரும் அறிந்து விட்டார்கள் ! ஆண்டாள் ‘நற்செல்வனுடைய தங்கை’  என்கிறாள் ஆண்டாள். யார் இந்த நற்செல்வன் ?  கண்ணனுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்க்கும் முன் முதல் இரண்டு வரிகளை நாம் அனுபவிக்கலாம்  கன்றைப் பிரிந்த எருமை, தன் கன்றை நினைத்துக் கனைத்து அந்த நினைப்பால் தனது காம்புகளிலிரு

பாகவத திருப்பாவை - 11 ( செற்றார் )

பாகவத திருப்பாவை - 11 ( செற்றார் )  கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து* செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்* குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற்கொடியே!* புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்** சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து* நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட* சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி!* நீ எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய் 484/11 இளம் பசுக்கூட்டங்கள் பலவற்றைக் கறப்பவர்களும்,  பகைவர்களின் இருப்பிடத்துக்கே சென்று  அவர்களுடைய செருக்கு அழியும்படி போர் புரிபவர்களுமான  குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக் கொடி போன்ற பெண்ணே! படம் எடுக்கும் பாம்பு போன்ற இடுப்பு சிறுத்தவளே ! மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா! உறவினரான தோழிகள் அனைவரும் உன் வீட்டு முற்றத்தில்  முகில் வண்ணன் திருநாமங்களைப் பாடுகிறோம் எங்களுக்கு எல்லாம் செல்வமாக இருக்கும் பெண்ணே!  அசையாமல் பேசாமல் நீ உறங்குவது எதற்காக ?  காரணத்தை நாங்கள் அறியோம்! ’செற்றார்’ என்றால் என்ன ? பொதுவாக ஆழ்வார் பாசுரங்களில் ஒரு வார்த்தை புரியவில்லை என்றால் உடனே அகராதியைத் தேடிக்கொண்டு ஓடாமல் இதே வார்த்தை மற்ற ஆழ

பாகவத திருப்பாவை - 10 ( நாற்றத் துழாய்முடி )

 பாகவத திருப்பாவை - 10 ( நாற்றத் துழாய்முடி )  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!* மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?* நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்* போற்றப் பறை தரும் புண்ணியனால்** பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்* தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?* ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!* தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய் 483/10 நோன்பு நோற்று சுகம் அனுபவிக்கும் அம்மா! வாசல் கதவைத் திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள்? நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன், நம்மால் போற்றப்பட்டு நமக்கு அருள் புரிபவன் முன்பு யமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடம் தோல்வியடைந்து  தனது பேருறக்கத்தை உனக்குப் பரிசாகத் தந்தானோ? எல்லையற்ற உறக்கத்தை உடையவளே!  சிறந்தவளே!  தெளிந்து வந்து கதவைத் திறப்பாயாக! 2017 மார்கழியில்  ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். பெரிய பெருமாளைச் சேவிக்கப் பெரிய வரிசை. அப்போது பெருமாளைச் சேவித்துவிட்டு வெளியே வந்தவர் நெற்றி கோபி சந்தனம் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்றது. முகத்தில் பூரிப்பு. பூரிப்புக்குக் காரணம் கையில் இருந்த  துளசி மாலை பிரசாதம

பாகவத திருப்பாவை - 9 ( மாமாயன் )

 பாகவத திருப்பாவை - 9 ( மாமாயன் )  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்* தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்* மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்* மாமீர்! அவளை எழுப்பீரோ?** உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?* ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?* மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று* நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் 482/9 தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில்  எங்கும் விளக்குகள் எரிய, வாசனைப் புகை வீசப்  படுக்கையில் தூங்கும் மாமன் மகளே! கதவைத் திறந்துவிடு. மாமியே!  உன் பெண்ணை எழுப்புங்கள். அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ? அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ? மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று அவன் திருநாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது. சீக்கிரம் உன் மகளை எழுப்புங்கள்! ’மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ என்று (திரு.5) கூறிய ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் மாமாயன் என்று அழைக்கிறாள்.  இந்த ’மாமாயன்’ என்ற சொல்லைப் புரிந்துகொள்ள பாகவதத்தில் ஒரு முக்கியமான பகுதி இருக்கிறது.  அது கண்ணன் கோபிகைகள் குளிக்கும்போது அவர்களுடைய துணிகளைக் கவர்ந்தது. பெரும்பாலும்

பாகவத திருப்பாவை - 8 ( போவான் போகின்றாரை )

 பாகவத திருப்பாவை - 8 ( போவான் போகின்றாரை )  கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு* மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்* போவான் போகின்றாரைப் போகாமல்காத்து*உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்** கோதுகலம் உடைய பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு* மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய* தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்* ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் 481/8 கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது எருமைகள்  பனிப்புல் மேயச் செல்கின்றன  போகின்ற பெண்களைத் தடுத்து நிறுத்தி  உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல  உன் வாசலில் வந்து காத்திருக்கிறோம். குதூகலமுடைய பெண்ணே!  கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்ள எழுந்திரு!  குதிரையாக வந்த கேசி அசுரனின் வாயைக் கிழித்து,  மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவனை சென்று நாம் சேவித்தால்  நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான் ! ’போவான் போகின்றாரை’ என்ற இந்தச் சொற்றொடரை நாம் கூர்ந்து கவனித்திருக்க மாட்டோம்.    ’போவான் போகின்றாரை’ என்பது போகிற அனுபவத்துக்காகவே போகிறவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.   சுலபமாக புரிந்துகொள்ளத் திருமலை யாத்த

பாகவத திருப்பாவை - 7 ( மத்தினால் ஒசை )

 பாகவத திருப்பாவை - 7 ( மத்தினால் ஒசை ) கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்* கலந்து பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே* காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து* வாச நறுங்குழல் ஆய்ச்சியர்** மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?* நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி* கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?* தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய் 480/7 கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி கூவிய கூச்சல் ஒலி கேட்கவில்லையா? பேதைப் பெண்ணே! காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க  வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்  கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ  பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை கேசவனை பாடுகிறோம்.   அதை கேட்டும் படுத்துக் கிடக்கிறாயோ? பிரகாசமானவளே! கதவைத் திறப்பாயாக! பால், தயிர், வெண்ணெய் என்றால் உடனே நமக்குக் கண்ணன் நினைவு வந்து, கண்ணனை உரலில் கட்டுண்டது நினைவுக்கு வரும். எல்லா ஆழ்வார்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். ஆண்டாள் ‘தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை’ என்று ஐந்தாம் பாசுரத்தில் குறிப்பிடுகிறாள்.  கண்ணன் கீதையை உபதேசித்திரு

பாகவத திருப்பாவை - 6 ( முனிவர்கள் )

 பாகவத திருப்பாவை - 6 ( முனிவர்கள் )  புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்* வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?* பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு* கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி** வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்* மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்* உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் 479/6 பறவைகளும் கூவி விட்டன.  பறவைகளின் தலைவனான கருடனுக்கு ஸ்வாமியான விஷ்ணுவின் கோயிலில்  வெண்சங்கம் பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா? இளம் பெண்ணே! எழுந்திரு. பூதனையின் நச்சு முலையை உறிஞ்சி, வண்டி உருவில் வந்த வஞ்சகனான சகடாசுரனை  கட்டுக் குலையும்படி காலால் உதைத்து,  பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை  உள்ளத்தில் கொண்டுள்ள முனிவர்களும் யோகிகளும், "ஹரி ஹரி" என்ற பேரொலி  எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.  பக்தி திரைப்படங்களில்  ஸ்ரீ நாரதரை ஒரு நகைச்சுவை பாத்திரமாக எப்போதும் சித்தரித்து, நாரதர் யார் என்று யாரைக் கேட்டாலும் அவர் கலகம் செய்பவர் என்பதைத் தாண்டி வேறு ஒன்றும

பாகவத திருப்பாவை - 5 ( மனத்தினால் சிந்திக்க)

பாகவத திருப்பாவை - 5 ( மனத்தினால் சிந்திக்க)  # மாயனை மன்னு வட மதுரை மைந்தனை* தூய பெருநீர் யமுனைத் துறைவனை* ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கை* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை** தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது* வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க* போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசாகும்; செப்பு ஏலோர் எம்பாவாய் 478/5 மாயன்! வடமதுரை  தலைவன்,  தூய யமுனை கரையில் விளையாடுபவன்,  இடையர் குலவிளக்காக அவதரித்து  யசோதைக்குப் பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை,  தூய்மையாக அணுகி, மலர்களைத் தூவி வணங்கி  வாயாரப் பாடி, மனத்தினால் தியானித்தால்  முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும்  தீயில் இட்ட பஞ்சு போல   உருத் தெரியாமல் பொசுங்கிப் போகும். அவன் நாமங்களைச் சொல்லுங்கள் !  சில நாட்கள் முன் பக்தியின் புதல்வர்களான ஞானமும் வைராக்கியமும் கிழவர்களாக இருந்தார்கள்  அவர்களுக்கு நாரதர் ஸ்ரீமத் பாகவத புராணத்தின் மேன்மையைக் கூற அவர்களுக்கு இளமை திரும்பியது என்று பார்த்தோம். பாகவதத்தின் பெருமைகளைக் கேட்டதற்கே இளமை திரும்பியது என்றால் பாகவதப் புராணத்தைக் கேட்டால் எப்ப

பாகவத திருப்பாவை - 4 ( கண்ணா ! )

 பாகவத திருப்பாவை - 4 ( கண்ணா ! )  ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்* ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்தேறி* ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து* பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்** ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து* தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்* வாழ உலகினில் பெய்திடாய்!* நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் 477/4 வருண தேவனே சிறிதும் ஒளிக்காமல்  கடலில் புகுந்து நீரை மொண்டு இடி இடித்து ஆகாயத்தில் ஏறி, திருமாலின் திருமேனிபோல் கருப்பாகி, அழகான தோளுடைய பத்மநாபன் கையில்  உள்ளச் சக்கரம்போல் மின்னி,  அவனுடைய சங்கம்போல் அதிர்ந்து முழங்க,  அவனுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய அம்புகள் மழைபோலப் பெய்து  உலகம் அனைத்தும் வாழ, நாங்களும்  மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம் இன்று ஒரு பாகவதக் கதையுடன்(10.29.1-17) ஆரம்பிக்கலாம்.  அன்று கார்த்திகை மாதம் வளர்பிறையில் கைசிக ஏகாதசி. கண்ணனின் தந்தையான நந்தகோபர்  உபவாசமிருந்து இரவு முழுவதும் ஸ்ரீமந் நாராயணனை ஆராதித்து துவாதசி தொடங்கிய போது, நீராடுவதற்கு சூர்யோதயத்துக்கு முன் யமுனைக்குச் சென்று நீரில் இறங்கினார். 

பாகவத திருப்பாவை - 3 ( செல்வம் )

பாகவத திருப்பாவை - 3 ( செல்வம் )  # ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்* தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகள** பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்* தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் 476/3 மூன்று உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திருவிக்ரமனின்  நாமங்களைப் பாடி நாம் பாவை நோற்று நீராடினால்; நாடெல்லாம் தீமை இல்லாமல் மாதம் மும்மாரி மழை பொழியும். (அதனால்) ஓங்கி வளரும் செந்நெல் பயிர்களின் நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய குவளை பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க, அசையாமல் நின்று  வள்ளல்களைப் போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க, குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும். ’ஓங்கி உலகு அளந்த’ என்றவுடன் நமக்கு வாமன அவதாரம் நினைவுக்கு வந்து  இந்திரனுக்காகக் குள்ள வடிவம் எடுத்துக் கூனிக்குறுகி தானம் வாங்கச் சென்று, ’மூவடி மண் தா’ என்று கேட்டு ஓரடிய

பாகவத திருப்பாவை - 2 ( வையத்து )

பாகவத திருப்பாவை - 2 ( வையத்து )  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு * செய்யும் கிரிசைகள் கேளீரோ! * பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி, * நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி ** மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம் * செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம் * ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி * உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் பூமியில் வாழ்பவர்களே!, நம்முடைய பாவை நோன்புக்குச்  செய்ய வேண்டிய செயல்களைக் கேளுங்கள்! பாற்கடலில் துயிலும் எம்பெருமானின் திருவடிகளைப் பாடுவோம். நெய், பால் போன்ற ருசியான பண்டங்களைத் தேடி ஓடமாட்டோம்; விடியற்காலை நீராடுவோம்;  கண்ணுக்கு மை, கூந்தலுக்கு மலர் போன்ற உடல் அலங்காரங்களை ஒதுக்குவோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்;  கோள் சொல்ல மாட்டோம். முடிந்த வரை தான தர்மம் செய்வோம்.  உய்வதற்கான வழியை எண்ணி மகிழ்ச்சியுடன் இந்த நோன்பில் ஈடுபடுவோம்! ஆண்டாள் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாலும், இந்தப் பாசுரத்தைப் பாண்டிய தேசத்தவர்களே என்றோ, பாரதத் தேசத்தவர்களே என்றோ கூறாமல் பூமியில் வாழ்பவர்களை!’ (’வையத்து

பாகவத திருப்பாவை - 1 - நாராயணனே !

பாகவத திருப்பாவை - 1 - நாராயணனே  # மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்* நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!* கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்** ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்* நாராயணனே நமக்கே பறை தருவான்!* பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் 474/1 மார்கழி மாதம்; பூரண சந்திரனுடன் கூடிய பௌர்ணமி நன்னாள்! அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே! வளம் நிறைந்த திருவாய்ப்பாடி சிறுமிகளே வாருங்கள் ! நீராட விருப்பமுடையவர்களே! வாருங்கள்!  கூரிய வேலை ஏந்தி கண்ணனைக் காக்கும் நந்தகோபனின் திருமகன் கண்ணழகி யசோதையின் சிங்கக் குட்டி ! கறுத்த மேகம் நிறத்தன்;   சூரிய சந்திரனை ஒத்த திருமுகச் செந்தாமரைக் கண்ணனான நாராயணனே நம் விருப்பத்தை நிறைவேற்றி அருள்பவன்! உலகத்தவர்கள் புகழ்ந்து கொண்டாடும்படி பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்! ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ( 10.22.1 - 22.6 ) காத்யாயனி விரதம் இப்படி வர்ணிக்கப்படுகிறது ஹேமந்தருது (தனுர்)  முதல் மாதமான மார்கழியில் நந்த கோகுலத்துக் கன்னிகைகள் நைவேத