Skip to main content

Posts

Showing posts from February, 2013

அந்த படம் - ஒரு மறக்கமுடியாத தருணம்

நண்பர் நாணா எனக்கு அனுப்பிய கடிதம்.   அன்பு நண்பருக்கு....  திருமயம் பக்கத்தில் இராங்கியம் எனும் சிறுகிராமத்தில், என்னுடைய பள்ளி நாட்களில் - தினமணிக்கதிரில் வெளிவந்த 'சொர்க்கத் தீவு' தொடர்கதை மூலம் 'சுஜாதா' என்ற பெயருடன் ஒரு 'அமானுஷ்ய' ஈர்ப்பு ஆரம்பமானது. அது டெவலப் ஆகி..கல்லூரி நாட்களில் விகடனின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' சமயத்தில் அவருடைய தாக்கம் கொஞ்சம் ஓவராகி..லெண்டிங் லைப்ரரியை ஆரம்பிச்சு...( அப்புறம் அதை நடத்தமுடியாமல் நொந்ந்ந்து நூலானது - ஒரு கிளைக் கதை) பிறகு, அந்த சலவைக்காரி, கணேஷ்-வசந்த்..போன்ற வார்த்தைகளால் எல்லாருக்கும் என்ன பாதிப்பு வந்ததோ..அதே மாதிரி பாதிப்புடன்...அவருடன் கதைகளில் இணைந்து மிரட்டிய ஜெயராஜின் 'லோ ஹிப்'களில் மனதைப் பறிகொடுத்து..அப்படியே ஆர்ட்டடிஸ்ட் ஆனவன்..நான்.. மேற்படி அனுபவங்கள் கொண்ட எனக்கு அவரது நேரடி அருகாமை கிடைத்தது ஒரு அற்புதம். அவரது ஓலைப் பட்டாசு, நைலான் கயிறு.போன்ற புத்தகங்களின் மறுபதிப்புகளுக்கு அட்டை வடிவமைப்பு பற்றிய - என் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரிடம் பாராட்டையும் பெற்றுத் தொடர்ந்த

புத்தகமாக லைட்ஸ் ஆன்

ரா.கி.ரங்கராஜனை ஒரு மழை நாளில் சந்தித்த போது குமுதத்தில் தான் எழுதிய 'லைட்ஸ் ஆன்' தொகுப்பு புத்தகமாக வர வேண்டும் என்று விருப்பட்டார். "உங்களுக்கு தெரிந்த பதிப்பகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்" என்றார் கிட்டதட்ட ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதற்கு பிறகு அவருடன் நடந்த சம்பாஷனை என்னை மேலும் சங்கடப்படுத்தியது. "நானே போடுகிறேன்" என்று ஒரு வீராப்பில் அவர் வைத்திருந்த 'லைட்ஸ்-ஆன்' பத்திரிக்கை தொகுப்பை பெங்களூருக்கு எடுத்து வந்தேன். 6 மாதம் கழித்து முடியாமல் திருப்பி அனுப்பினேன். போன வருஷம் எழுத்தாளர் 'சுபா' போடுவதாக தகவல் தெரிந்து சந்தோஷப்பட்டேன். ஆனால் புத்தகம் வரும் போது திரு.ரா.கி.ர நம்முடன் இல்லை. போன வாரம் எழுத்தாளர் சுபா அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார். லேசான புத்தகம், உள்ளே லைட்டான விஷயம்...  ஆனால் குற்ற உணர்ச்சியால் மனசு கனத்தது. லைட்ஸ் ஆன்' வினோத் ( ரா.கி.ரங்கராஜன் ) தங்கத் தாமரைப் பதிப்பகம், 37 கால்வாய்க் கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை 600020 போன்:24414441. பக்கம்: 160 விலை:ரூ 70. மற