Skip to main content

Posts

Showing posts from February, 2024

ரோஜாவுடன் பார்த்தசாரதி

ரோஜாவுடன் பார்த்தசாரதி பல வருடங்களுக்கு முன் புகுந்த வீட்டுக்குள் காலடி வைக்கும் புதுமணப்பெண் போல் முகநூலில் நுழைந்த சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பன்னீர் ரோஜாவுடன் பிரமாதமாகக் காட்சி அளித்தார். யாரோ ஓர் அன்பர் அந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார். படத்தை ஆராய்ந்ததில் ஓரத்தில் ’Vishnumayam’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. படத்தை யார் எடுத்தார் என்று விசாரித்தேன். யார் என்று தெரியவில்லை. பிறகு சில வருடங்கள் கழித்து ’Vishnumayam’ முகநூல் பதிவரிடம் “உங்கள் படங்கள் அருமை” என்று மெசேஜ் அனுப்பினேன். பதிலுக்கு “மிக்க நன்றி. உங்கள் எழுத்தை நான் விரும்பிப் படிப்பேன் என்றார்” பிறகு அவர் பகிரும் படங்களை ரசித்து “படங்கள் அருமை” என்று இரண்டு வார்த்தைப் பாராட்டுவேன். ஒரு நாள் இருவரும் தொலைப்பேசியில் பேசினோம். அப்போது அவரிடம் அந்த ரோஜா பார்த்தசாரதி படங்களைக் குறித்துச் சொன்னேன். அதைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்து அறையில் மாட்டிக்கொள்ள ஆசை என்றேன். சந்தோஷமாகக் கேட்டுக்கொண்டார். பிறகு பல வருடங்கள் அவ்வப்போது அவர் படங்களை ’லைக்’ செய்து அவருடைய தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டேன். சென்ற வருட

ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி

  ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதனும் இந்தப் புத்தகப் பொக்கிஷமும் சேர்ந்து இன்று கிடைத்தது. ஸ்ரீமத் ஆசாரியன் என்றால் அது நம் வேதாந்த தேசிகனே. சப்தசதி குழம்ப வேண்டாம் - எழு நூறு (சப்த ஸ்வரங்கள் ; சதம் அடித்தார்) சமூக ஊடக சத்ருக்கள் நிறைந்த இந்த அவசர உலகில் நமக்கு இது போன்ற புத்தகங்களைப் படிக்க நேரமும், கவனமும் இருப்பதில்லை. சமஸ்கிருதத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவை இரண்டு தலைமுறைக்கு முன்பே ‘extinct’ ரகங்களில் சேர்ந்துவிட்டது. ஸ்வாமி தேசிகனின் வாழ்கை வரலாற்றைச் சுமார் 700+ ஸ்லோகங்களில் ‘ஆர்யா சந்தஸ்.’ என்று சமஸ்கிருதக் கவிதைகளில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சந்தஸ் எழுதப்பட்டது. தமிழில் வெண்பா போன்று மன்னார்குடி ஸ்ரீ உவே.கோபாலசாரியார் 118 வருடங்களுக்கு முன் எழுதியுள்ளார். இந்த 700 ஸ்லோகங்களுக்கும் எளிய ஆங்கிலத்தில் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே வே.கண்ணன் ஸ்வாமியும், முனைவர் உ.வே. ஆர். திருநாராயணன் அவர்களும் எழுதியுள்ளார்கள். முதல் ஸ்லோகத்தைப் படித்தேன். I worship Sri-Rama, (i) who is of black-complexion like a fresh water- bearing cloud, (ii

விஜய் அரசியல் பிரவேசம்

விஜய் அரசியல் பிரவேசம் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற குங்குமப் பொட்டு வைத்த மூன்று பக்க அறிக்கையில் பலர் ‘க்’ ‘ப்’ ‘த்’ என்று மெய்யெழுத்து ஆணியைப் பிடுங்கிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துச் சொல்லி சில விஷயங்களைப் பார்க்கலாம். குமுதத்தில் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற ரீதியில் வந்த சினிமா விமர்சனம் நினைவுக்கு வருகிறது. அதிலிருந்து விஜய் எட்டியிருக்கும் உயரம் மிக அதிகம். சமீபத்தில் நல்ல பாரு நான் தான் கழுகு என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார். பருந்து காக்கை ஆகாது என்ற பழமொழியை மாற்றினார். பல காலம் hibernation இருந்துவிட்டு, படம் வெளியாகும் தறுவாயில் கலக்‌ஷன் அரசியல் பேசாமல், விஜய் களத்தில் செய்துகொண்டு இருந்த செயல்களில் 100% அரசியல் இருந்தது. அவர் அரசியலில் காலடி வைக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். ஆனால் தன் மார்க்கெட் உயரத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் இனி முழு நேர அரசியல் என்று வந்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. சரியான முடிவோ இல்லையே ஆனால் நிச்சயம் துணிச்சலான முடிவு. கறுப்பு, கருப்பு எது சரியான சொல் என்ற