Skip to main content

Posts

Showing posts with the label இராமானுசன் அடி பூமன்னவே

28-இராமானுசன் அடிப் பூம்மன்னவே - அனந்தபுரம்

28-இராமானுசன் அடிப் பூம்மன்னவே - அனந்தபுரம் திருவரங்கத்தில் மாலை சூரியன் அன்று வேகமாக கீழே இறங்கியது. ஆளவந்தார் உறக்கம் கலைந்து எழுந்துகொள்வது போலப் பரபரப்பாக காணப்பட்டார். காரணம் பெருமாள் புறப்பாட்டுக்கு நேரமாகிவிட்டது.  “அடடா! காலட்சேபத்தில் நேரம் போனதே தெரியவில்லை நமக்காக அழகியமணவாளன் காத்துக்கொண்டு இருக்க மாட்டானே!” என்று ஆளவந்தார் அவசரமாக நடக்க தொடங்கினார்.  வீதியில் எதிர்கொண்டு வந்தவர் ஒருவர் அவரை சேவித்துவிட்டு  “பெருமாள் வீதி புறப்பட்டை ஆரம்பித்துவிட்டார்!” என்று கூற நடை ஓட்டமாக மாறியது.  சிலர் ”அழகியமணவாளன் சாத்துப்படி காண கண் கோடி வேண்டும்!” என்று அரங்கனை காண ஓடினார்கள்.  மாடமாளிகை வீதியில் வாசலில் பெண்கள் வெள்ளை அரிசி  மாவில் கோலமிட்டு காத்துக்கொண்டு இருந்தார்கள். சிறுவர்கள் தத்தம் தந்தையின் தோள் மீது ஏறிக்கொண்டு நம்பெருமாளைத் தரிசிக்க ஆவலுடன்  காத்துக்கொண்டு இருந்தார்கள். வயதானவர்கள் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள். எல்லோர் வீட்டிலும் வெள்ளித் தட்டில் வெற்றிலையுடன், வாசனையான மல்லிகை, திருத்துழாயுடன், தோட்டத்துப் பழங்களை நம்பெருமாள...

27. இராமானுசன் அடிப் பூமன்னவே - அழகிய ரத்தினம்

 27. இராமானுசன் அடிப் பூமன்னவே - அழகிய ரத்தினம்  திருவரங்க மாநகரில் ஆளவந்தார் ஆசிரமத்தில் வீற்றிருக்க,  சிஷ்யர்களும், அடியார்கள் புடைசூழ அந்த இடம் திருவிழா போல் காட்சி அளித்தது. கூட்டத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. கன்றுக்குப் பாலை ஆசையும் அன்பும் நிறைந்து கொடுப்பது போல ஆளவந்தார் பிறருக்கு ஓர் உபகாரம் என்று நினையாமல், தன்பேறாக நினைத்து ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ரசத்தைப் பலர் பருகிச் சுவைக்க அதை அளித்துக்கொண்டு இருந்தார்.  அங்கே என்ன நடைபெறுகிறது என்று காண நேயர்களை அழைக்கிறோம். கணீரென்ற குரலில் ”....நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானிடம் உள்ளே செல்லுவதற்கு அனுமதி வேண்டி நின்றனர். இவர்களுக்கு கண்ணபிரான் நாயகனேயன்றி கோயில் காப்பவனோ, நந்தகோபனோ நாயகன் அல்லவே! அப்படியிருக்க இவர்களை நாயகன் என்று கூறியது எதனால் ? சாத்திரங்கள், கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்ற எவையும் திருவரங்கனை அடைவதற்குச் சாதனம் இல்லை. எம்பெருமானை அடைவதற்குச் சாதனம் அவனுடைய அடியார்களை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுவதே!(1) உள்ளே சயனத்தில் இருப்பவன் சாதாரணமானவனா  ?  (...

26. இராமானுசன் அடிப் பூமன்னவே - உய்ய செய்பவனை தேடு

 26. இராமானுசன் அடிப் பூமன்னவே - உய்ய செய்பவனை தேடு  வானம் மப்பும் மந்தாரமுமாக சூரியன் மேகங்களுக்குள் ஒளிந்துகொண்டது.  மரங்கள் அசையாமல் இருந்தது. அந்த அமைதியான நேரத்தில் எங்கோ ஒரு பறவை ஒலி அந்த நிசப்தத்தைக் குலைத்தது.  ஆளவந்தார் திருவரங்க மாநகரை நோக்கி பயணத்தில், அவர் மனம் சஞ்சலம் அடைந்திருந்தது. காரணம் என்ன என்று அறியமுடியாமல், அவர் மனம் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் மணக்கால் நம்பியிடம் இருந்தது. மனதின் வேகத்துக்குக் கால்கள் ஈடுகொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு வேகமாக நடக்க தொடங்கி,  சிஷ்யர்களை நோக்கி “சற்று வேகமாக நடக்கலாம்” என்றார்.   ஆளவந்தாரும் அவருடைய சிஷ்யர்களும் நடந்து சென்ற காட்சி, உயர்ந்த ஜாதிக் குதிரைகள் கம்பீரமாக நடந்துசென்றது போல் காட்சியளித்தது.  மாலை யசோதை  ’காப்பிட வாராய்’ என்று அழைத்த கண்ணன் வசிக்கும் இடமான திருவெள்ளறை வந்தடைந்தார்கள்.  திசை எல்லாம் கமழும் குருக்கத்தி மலர்கள் வாசனையைக் காற்றுடன் கலந்து வீதிகள் எங்கும் நறுமணம் சுமந்தது. நல்லோர்கள் வாழும் திருவெள்ளறையில் அன்றைய இரவு அங்கே ஒரு மண்டபத்தில் படுத்துக்...

25. இராமானுசன் அடிப் பூமன்னவே - யோக ரகசியம்

25. இராமானுசன் அடிப் பூமன்னவே - யோக ரகசியம்  மணக்கால் நம்பி “ஆளவந்தாரே ! உம் பாட்டனார் நாதமுனிகள் என் ஆசாரியனுக்கு ஒரு ரகசியத்தைக் கூறியுள்ளார் அதையும் உமக்குச் சொல்லுகிறேன்!” என்றார் நம்பி என்ன கூறப் போகிறார் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தார் ஆளவந்தார்.   ”ஆளவந்தாரே! இப்போது நாம் கூறப் போகிற விஷயங்கள் பல காலமாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீரும் அதை பாதுகாப்பீர்!” என்று நாதமுனிகளுக்கு ஆழ்வார்திருநகரியில் சொப்பனத்தில் நம்மாழ்வார் கூறிய விஷயங்கள் அனைத்தையும்  விரிவாக கூறி, “நம் தரிசனத்தை நெடுங்காலம் திருவரங்கத்தில் பலருக்குச் சென்றடையுமாறு செய்வீராக” என்று ஆசி வழங்கினார்.  ஆளவந்தார் “நம்பியே! இந்த மஹா அனுபவத்தை என்னவென்று கூறுவது! அன்று மடுக்கரையிலே கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றிய பெருமாள் போல் எம்மை இந்த அற்பமான ராஜபோக வாழ்க்கையிலிருந்து இன்று காத்தீர்!“ என்றார்.  மணக்கால் நம்பி தன்னை சந்தித்து தூதுவளை கீரையை கொடுத்த நாள் முதல் திருவரங்கம் வரை அழைத்து வந்து திருவரங்கனைக் காட்டிக் கொடுத்து, நாதமுனிகள் அவருக்குக் கூறிய சொப்பன விஷயங்கள் யா...

24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு

24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு  மணக்கால் நம்பி காட்டு மன்னார் முன்பு கைகூப்பி நின்றார். தன் ஆசாரியர்களின் ஆசை நிறைவேறப் போகிறது என்று அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க, அவர் திருவாக்கில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாடக பாசுரம்  உலகம் ஏத்தும் தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்! குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்!  பின் ஆனார் வணங்கும் சோதி! திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே! உதிர்ந்து காட்டுமன்னார் திருவடியில் விழுந்தது.(1) குருவை சீடன் தேடி அடையவேண்டியதே உலக நியதி. ஆனால் உலகம் நல்வாழ்வு பெறுவதற்கு சீடனைத் தேடி குருவும் செல்லலாம் என்று அந்த நியதியை மாற்றி மணக்கால் நம்பி நாள்தோறும் ஆளவந்தாரது அரண்மனைக்குச் சென்று அன்று இடைப் பிள்ளையான மாயக் கண்ணன் அர்ஜுனனுக்கு தேர்த்தட்டிலிருந்து அன்புடன் அருளிய பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதையின் செம்மைப் பொருளை கண்ணபிரான் சொன்னபடியே ஆளவந்தாருக்குத் தெளிந்த ஆர்வம் உண்டாகுமாறு பதினெட்டு நாள் உரைத்தார்.  ஒரு நாள் மணக்கால் நம்பி கீதையின் சரம ஸ்லோகமான “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ...

23. இராமானுசன் அடிப் பூமன்னவே - தூதுவளை

     பல மாதங்களாக இராமானுசன் அடிப் பூமன்னவே தொடரை வேறு பல வேலைகள் காரணமாக எழுத முடியவில்லை. இராமானுசரின் 1004 திருநட்சத்திரம் அன்று மீண்டும் இராமானுசருடன் நம் பயணத்தை தொடங்கலாம். பலருக்கு இதற்கு முன் பகுதி மறந்திருக்காலாம். அதை இங்கே படித்துவிட்டு இதை தொடங்கலாம்...  வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்த மணக்கால் நம்பி பெருமாள் முன் நின்ற போது ஆளவந்தார் யானையின் மீது செல்லும் காட்சி மனதில் ஓடியது.  நடுக்காட்டில் ஒருவனுக்குக் கண்ணைக் கட்டிவிட்டு, அவனிடம் இருக்கும் செல்வத்தைத் திருடர்கள் வந்து பறித்துச் செல்ல, முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில், எங்கும் காட்டு விலங்குகள் இருக்க ‘ஐயோ எனக்கு நல்ல பாதையைக் காட்டுபவர் யாரும் இல்லையா ?’ என்று தவிப்பவனைப் போல ஆளவந்தார் இருக்கிறார்.   முள்ளும், கல்லும் நிறைந்த சம்சாரம் என்ற காட்டில், மோகம் என்ற திருடர்கள் ஞானம் என்ற செல்வத்தை அபகரித்துச் செல்ல,  பாதை தெரியாமல் ஆளவந்தார் யானையின் மீது செல்கிறார். தவிப்பவனுக்குக் கண்கட்டைத் திறந்துவிட்டு நல்வழியைக் காட்டுபவன் தானே குரு.  ஆனால் இனி ஆளவந்தாரை நேரில் சந்திக்...

22. இராமானுசன் அடிப் பூமன்னவே - கிழிந்த ஓலை

 22. இராமானுசன் அடிப் பூமன்னவே - கிழிந்த ஓலை  ஒப்பற்ற பெருமைப் பொருந்திய நாதமுனிகளின் திருக்குமாரரது புதல்வனைக் காணவேண்டும் என மணக்கால் நம்பி காட்டுமன்னார் கோயில்  நோக்கிப் புறப்பட்ட அதே சமயம் வீர நாராயணபுரம் ஏரிக்கரையில் அழகிய தோட்டத்துடன் அமைந்த ஒரு குடிசையின் திண்ணையில் இருந்த பீடத்தில் மஹாபாஷ்ய பட்டர்  விசேஷச் சாஸ்திரங்களை அவருடைய மாணவர்களுக்கு உபதேசிக்க, அவற்றை எல்லாம்  உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்த மாணவர்கள் குரு சொல்லுவதை வேகமாக எழுத்தாணிக் கொண்டு ஓலையில் எழுதிக்கொண்டு இருந்தார்கள். அதில் ஒரு மாணவன் எதையும் எழுதாமல் கேட்டுக்கொண்டு இருந்தான். அந்த மாணவன் வேறு யாரும் இல்லை நாதமுனிகளின் பேரனான யமுனைத்துறைவர் தான்.  குரு பாடம் சொல்லுவதை நிறுத்திவிட்டு ஒரு கேள்வி கேட்டார். மாணவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து விடை தெரியாமல் முழிக்க, யமுனைத்துறைவர் மின்னல் வேகத்தில் பதிலைக் கூறினார்.  மஹாபாஷ்ய பட்டர் உள்ளம் மகிழ்ந்து “யமுனைத் துறைவா! உன் பதில்களைக் கேட்டால் நீ ஒரு தனிப் பிரகிருதி என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது! உம் பாட்டனாரும் உம் தந்தைய...

21 - இராமானுசன் அடிப் பூமன்னவே - தாமரை

 21 - இராமானுசன் அடிப் பூமன்னவே -  தாமரை ’பரமபதத்துப் படிக்கட்டுகள் தெரிகிறது’ என்று உய்யக்கொண்டார் கூறியதைக் கேட்ட மணக்கால் நம்பி மிகவும் விசனப்பட்டு எதுவும் செய்யமுடியாமல் தவித்தார். மற்ற சீடர்களும் மிகவும் வருந்திய சமயம் மணக்கால் நம்பி “எந்தையே! தேவரீர் திருநாட்டுக்கு எழுந்தருளி விட்டால் பின்பு உயர்ந்த நம் சம்பிரதாயத்தை ஊற்றத்துடன் நடத்த வல்லவர்கள் யார் ?” என்று வேதனை நெஞ்சத்தினைச் சுட மனமழிந்து அழுதுக்கொண்டு கேட்டார் மணக்கால் நம்பி.  உய்யக்கொண்டார் கருணை மிகுந்த பார்வையுடன் மணக்கால் நம்பியை நோக்கி “நம்பியே! ’பருத்தி பட்ட பன்னிரண்டு படல்’(1) என்பது போல, பருத்தி கொட்டை வாங்கி, பன்னி, சுருட்டி, நூலாக்கி, பாவோடி, நெய்து, மடித்து விற்றுப் பொகடும்படியும், தோய்த்து உலர்த்தி, உடுத்து, கிழித்து விடும்படியும் மனிதருக்கு உரியதாக்குவர்.  அப்பருத்தியைப் போல் நீர் எமக்குப் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாது சகல ஆசாரிய தொண்டு புரிந்தீர். நீரே நம் சம்பிரதாயத்துக்கு தலைமை ஏற்று ஆசாரிய பீடத்தை அலங்கரிக்கக் கடவீர்! நம்மிடத்தில் வந்து சேர்ந்த சீடர்கள் எல்லோரையும் ஒற்றுமையாய் விளங்கச் செ...

20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்

20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம் நாதமுனிகளின் பிரபாவத்தையும், திருமொழி, திருவாய்மொழி திருநாள் அரையர்கள் குறித்து எத்தினை முறை கேட்டாலும் அமுதம் போல இனிக்கும். நாதமுனிகளுடைய அபிமானச் சீடரான  உய்யக்கொண்டார் கூறக் கேட்க அந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களுடைய கற்பனைக்கு விட்டுவிடுகிறோம்.  மறுநாள் மணக்கால் நம்பியும் மற்ற சிஷ்யர்களும் கம்பரின் இராமாயண அரங்கேற்ற நிகழ்வைக் கேட்கக் கோயில் மண்டபத்தில் ஆவலாகக் காத்துக்கொண்டு இருந்தார்கள்.  உய்யக்கொண்டார் வந்து அமர்ந்த போது அவருடைய திருவடியில் விழுந்து வணங்கிய சிஷ்யர்களில் ஒருவர் “நேற்று அரையர் சேவைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தீர்கள். பெருமாளின் நாமங்களை ஏன் ஆடிப் பாடிக் கொண்டு சொல்ல வேண்டும் ?” என்றார்  உய்யக்கொண்டார் புன்னகையுடன் “மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ’அமுது ஊறும் என் நாவுக்கே’ என்று அதன் சுவையை உணர்ந்து  ’பாவின் இன்னிசை  பாடித் திரிவனே’ என்று எல்லா இடங்களுக்கும் அவருடைய பாசுரங்களைப் பாடிக்கொண்டு திரிந்தார்.   நம்மாழ்வார் தலை காலை தட்ட, கால்கள் தலையைத் தட்...

19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள்

 19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள் உய்யக்கொண்டார் சற்று நேர மௌனத்துக்குப் பின் “மணக்கால் நம்பியே ! அந்த மஹாநுபாவரின் சம்பந்தம் கிடைத்தால் நிச்சயம் உம் ஆசை ஈடேறும்” என்றார்.  இதைக் கேட்ட மணக்கால் நம்பி “நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் சம்பந்தமும், உங்களுக்கு நாதமுனிகளின் சம்பந்தமும், அடியேனுக்குத் தேவரீர் சம்பந்தம்  கிடைத்திருக்கிறது! அதனால் அந்த மஹாநுபாவரின் சம்பந்தம் நிச்சயம் சித்திக்கும் என்று நம்புகிறேன்!” என்று உய்யக்கொண்டாரின் திருவடியில் விழுந்து வணங்கினார்.  உய்யக்கொண்டார் ”நாதமுனிகளால் நமக்கு ஆழ்வார்களின் சம்பந்தமும் கிடைத்திருக்கிறது! அவர் திருவரங்கத்தில் நிகழ்த்திய அறியச் செயல்களை கூறுகிறேன்” என்று கூற ஆரம்பிக்கச் சிஷ்யர்கள் ஆர்வமாகக் கேட்க ஆயத்தமானார்கள். நம் நேயர்களையும் உய்யக்கொண்டார் கூறிவதை கேட்க அழைக்கிறோம்.  ”ஆழ்வார்களில் கடைக் குட்டியானவர் திருமங்கை மன்னன். ஆடல்மா என்ற குதிரையில் சென்று எல்லா திவ்ய தேச பெருமாளையும் மங்களாசாசனம் செய்துவிட்டு, தம்முடைய கடைசிப் பிரபந்தமான திருநெடுந்தாண்டகத்தைப் பாடத் தொடங்கினார். அதன் முடிவில் “புனல் அரங்...