Skip to main content

Posts

Showing posts from January, 2021

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் என் அம்மா திருமழிசையாழ்வாரைத் தான் கடைசியாகச் சேவித்தார்.  அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது “உங்க அம்மாவிற்கு மருந்து இல்லை, சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று டாக்டர் சொன்னது  ”அம்மா... உயிருடன் இன்னும் எவ்வளவு நாள் ?” என்ற கேள்வி என் மனதில் ஓடத் தொடங்கியது.  அம்மா என்ன ஆசைப்பட்டார் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது...  “திருமழிசை இங்கேயே இருக்கு ஆனா போனதில்லை” என்று அம்மா என்றோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மறுநாள் காலை அம்மாவை அழைத்துக்கொண்டு திருமழிசைக்குச் சென்றேன்.  ”மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவற்றையும்” மாலையாகத் தொடுத்தால் போதும் என்கிறாள் ஆண்டாள்.  மாமாயன் என்றால் மாயனுக்கு எல்லாம் மாயன் என்று சொல்லலாம்.  மாயனை define செய்ய திருமழிசை ஆழ்வார் பாடல் ஒன்று போது.  ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே? கஜேந்திரனைக் காத்த நீ குவலயாபீடம் என்ற இன்னொரு யானையைக் கொன்றாய். பசுக்

30. பாவை குறள் - சேயிழையார்

 30. பாவை குறள் - சேயிழையார்  வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார்  சென்று இறைஞ்சி அங்கப் பறை கொண்ட-ஆற்றை  அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப் இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள் செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனான கேசவனை சந்திரன் போல் முகமுடைய பெண்கள் சென்று யாசித்து விரும்பியதைப் பெற்ற வரலாற்றை(பாவை நோன்பு), அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலை அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளால் அருளிச் செய்த திருப்பாவை முப்பது பாடல்களையும் தவறாமல் பாடுபவர்கள் நான்கு தோள்களையும், செங்கண்களையும் பெற்ற திருமால் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள். நம்பெருமாள் நெஞ்சில் சந்தனம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பார்க்கவில்லை என்றால் இந்தப் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள்.  இந்தச் சந்தனத்தைப் பார்க்கும் போது ரைதாஸ் என்ற பக்தர் பெருமாளைக் குறித்துப் பாடியது நினைவுக்கு வரும்.  பெருமாளே ந

29. பாவை குறள் - குற்றேவல்

29. பாவை குறள் - குற்றேவல் சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து,  உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம்  மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து  நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா; எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்  உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்; மற்றை நம் காமங்கள் மாற்று  ஏலோர் எம்பாவாய். மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்! பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது. நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்; மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும். திருவள்ளுவர் மைலாப்பூர் காரர் என்று பல காலமாகப் படித்துக்கொண்டு இருக்கிறோம். வள்ளுவ நாடு என்று மலை நாட்டில் ஒரு பகுதி இருப்பதால் வள்ளுவர் அந்த நாட்டுக்காரர் என்பர் சிலர். இந்த ஆராய்ச்சியில

28. பாவை குறள் - சிறுபேர்

28. பாவை குறள் - சிறுபேர்  கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம், அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து  உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா  உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; அறியாத பிள்ளைகளோம் அன்பினால்  உன் தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய். பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்போம். அறிவொன்றும் இல்லாத மாடுமேய்க்கும் குலத்தில் பிறந்த நாங்கள் உன்னை எங்களுடைய குலத்தவனாகப் பாவிக்கும் புண்ணியத்தைச் செய்துள்ளோம் எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா! நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது அறிவற்ற சிறு பிள்ளைகள் நாங்கள், அன்பால் அழைத்ததை பொறுத்துக் கோபம் கொள்ளாமல் எங்களுக்கு வேண்டியதை நீதான் கொடுக்க வேண்டும். இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் ‘சிறுபேர்’ என்று கூறுவதைப் புரிந்துகொள்ள நாம் கோகுலத்துக்குச் செல்லலாம்.  கோகுலத்தில் கண்ணன் குறும்பு செய்ய, அங்கே இருக்கும் சிறுமிகளுக்கு கண்ணனுடன் அடிக்கடி சண்டை வரும். சிறுமிகள் கண்ணனைத் திட்ட அவன் அதற்குச் சிரிக்க, இவர்களுக்

27. பாவை குறள் - கூடி இருந்து

27. பாவை குறள் - கூடி இருந்து கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!  உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே, பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா ! உன்னைப் பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில் அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி) தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள் நாங்கள் அணிவோம். அதன் பின்னே முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உள்ளம் குளிர இருப்போம். ஆண்டாள் பாசுரத்தில் பல விஷயங்கள் மறைந்து இருக்கும். மாடுகள் போல மெதுவாக அசைப்போட்டால் நமக்கு அவை புலப்படும். உதாரணமாக சென்ற பாசுரத்தில் ’மாலே’ என்று ஆரம்பித்து ’ஆலின் இலையாய்’ என்று முடித்ததில் ‘ சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷஇஷ்யாமி மாசுசஹ’ என்ற கீதையின் சரம ஸ்லோகம் அடங்கியிருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவீ

26. பாவை குறள் - மேலையார்

26. பாவை குறள் - மேலையார்  மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்; ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே, சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே; ஆலின் இலையாய்! அருள் — ஏலோர் எம்பாவாய். திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில் உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம் போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும், பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும், கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே, இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.  இங்கே ஆண்டாள் ‘மேலையார் செய்வனகள்’ என்ற வார்த்தையைப் பார்க்கலாம். மேலையார் என்பது பெரியவர்கள், முன்னோர்கள் என்று கொள்ளலாம்.  பெரியாழ்வார் கூறியதைப் போல ‘எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்’ என்று கூறியபடி வழி வழியாக அவர்கள் கூறியதை வேதவாக்காக ஏற்று அதன் ப

25. பாவை குறள் - மகனாய் !

 25. பாவை குறள் - மகனாய் !   ஒருத்தி மகனாய்ப் பிறந்து,  ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!  உன்னை அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில், திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய். தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில் யசோதைக்கு மகனாய் ஒளித்து வளர்ந்துவர, அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்! எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால் லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும் உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோம். இந்தப் பாசுரம் முழுவதும் சுவை மிகுந்தது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கட்டுரை எழுதலாம் என்றாலும்  சில வார்த்தைகளை மட்டும் இங்கே பார்க்காலாம்.  பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைப் பிள்ளை, மகன், குமரன் என்று அழைப்பதுண்டு. ஆனால் மகன் என்பதற்கு ஒரு ஸ்பெஷல் அர்த்தம் உண்டு. பெற்றோர் சொல்லைத் தட்டாமல் கேட்பவனைத் தான் ’மகன்’ என்று அழைப்பார்கள்.

24. பாவை குறள் - கழல் போற்றி !

 24. பாவை குறள் - கழல் போற்றி ! அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி! சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி! பொன்றக் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி! கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி! குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி! வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி! என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய். மகாபலி காலத்தில் இவ்வுலகங்களை அளந்த உன் திருவடிகளைப் போற்றுகிறோம்! தென் இலங்கையைச் சென்று இராவணனை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமையைப் போற்றுகிறோம்! சகடா சுரனைக் கட்டுக்குலைய உதைத்தாய்! உன் புகழைப் போற்றுகிறோம் கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை எரி கருவியாகக் கொன்றாய்! உன் கழலைப் போற்றுகிறோம்! கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோகுலத்தைக் காத்தவனே! உன் குணத்தைப் போற்றுகிறோம்! பகைவர்களை அழிக்கும் உன் கையிலுள்ள வேலைப் போற்றுகிறோம் இவ்வாறு எப்பொழுதும் உன் வீரத்தைப் பாடி, எங்கள் விருப்பங்கள நிறைவேற்றிக்கொள்ள இங்கு வந்துள்ளோம், நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும். சென்ற பாசுரத்தில் ஆண்டாளும் அவள் தோழிகளும் சில அடி  நடந்து வந்து

23. பாவை குறள் - சீரிய சிங்கம்

23. பாவை குறள் - சீரிய சிங்கம் மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!  உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி,  கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்து,  யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும் வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது நெருப்பு போலச் சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து உடம்பை நான்கு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக் கர்ஜனை செய்து வெளியில் வருவது போல காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே, நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிங்காசனத்தில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும் என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.  கோயிலுக்குச் சென்று சேவிப்பது போன்றது திருப்பாவை என்று முன்பு கூறியிருந்தேன். அது போலத் திருப்பாவையைக் கொண்டு பெருமாளுக்கு முழுத் திருவாராதனமும் செய்துவிடலாம்.  திருவாராதனத்தில் பெருமாளை எழுப்ப வேண்டும்( துயிலெழாய் ),

22. பாவை குறள் - பங்கமாய்

22. பாவை குறள் - பங்கமாய் அங்கண் மா ஞாலத்து அரசர்  அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய். அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல நாங்களும் நெருங்கி வந்துள்ளோம். சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி உன் கண்கள் சிறிது சிறிதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ ? சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால் எங்கள் பாவங்கள் தொலைந்து விடும். ’ஏற்ற கலங்கள் ‘ என்ற நேற்றைய பாசுரமும் ‘அங்கண் மா ஞாலத்து’ என்ற இன்றைய பாசுரமும் ஒன்றாகச் சேர்த்து அனுபவிக்க வேண்டும். எம்பெருமானுடைய அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான் இந்த இரண்டு பாசுரத்தின் சாரமும்.  நேற்றைய பாசுரத்தில் ‘வலி தொலைய வேண்டும்’ என்கிறாள். வலி என்பது நம் வலிமையைக் குறிக்கும். அந்த

21. பாவை குறள் - மகனே !

21. பாவை குறள் - மகனே ! ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்  மகனே ! அறிவுறாய்; ஊற்றம் உடையாய்! பெரியாய்!  உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய். கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழியத் தங்கு தடையில்லாமல் பாலை கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் மகனே விழித்துக்கொள்! சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில் அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு. எதிரிகள் உன்னிடம் வலிமை இழந்து உன் வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்! இந்தக் காலத்தில் கோயிலுக்குப் போக முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். திருப்பாவை முப்பது பாசுரங்களையும் சேவித்தால் ஒரு கோயிலுக்குச் செல்லும் உணர்வு நமக்குக் கிடைக்கிறது.  கோயிலுக்குச் செல்லும் போது நாம் அடியவர்களை அழைத்துக்கொண்டு அவர்களுடன் ஆசாரியர்கள், ஆழ்வார்களை வணங்கி, தாயாரைச

20. பாவை குறள் - உக்கமும் தட்டொளியும்

 20. பாவை குறள் - உக்கமும் தட்டொளியும் முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீர் ஆட்டு — ஏலோர் எம்பாவாய். முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும்முன்பே சென்று அவர்களின் நடுக்கத்தைப் போக்கும் வீரனே எழுந்திரு! கருணையுள்ளவனே, வல்லமையானவனே, பகைவருக்குப் பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு தங்கக் கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை உடைய நப்பின்னையே!, திருமகளே! எழுந்திரு விசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் எங்களுக்குக் கொடுத்து இப்போதே எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.  சாகாத தேவர்களை எதிரிகள் கொல்ல முயன்றாலும் அவர்களுக்குத் துன்பம் வரும் முன்பே சென்று பகைவரின் ஆணவத்தை அடக்கி நடுக்கத்தை போக்குவதை தன் கடைமையாகக் கொண்ட பெருமாள் என்று அவனுடைய குணத்தைக் கூறுகிறாள் ஆண்டாள். ஒரு தலைவன்

19. பாவை குறள் - குத்துவிளக்கு

19. பாவை குறள் - குத்துவிளக்கு  குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக் கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்; மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண், எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்; தத்துவம் அன்று தகவு — ஏலோர் எம்பாவாய். நிலை விளக்குகள் ஒளிவீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில் மெத்தென்ற பஞ்சு படுக்கை மீது கொத்துதாக மலர்ந்திருக்கும் பூக்களைச் சூட்டிய கூந்தலுடைய நப்பின்னையின் மார்பில் தலையை வைத்துக் கொள்பவனே வாய்திறந்து பேசு! மைக் கண்ணுடைய நப்பின்னையே! நீ உன் கணவனைச் சிறுபொழுதும் படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை. கணமாகிலும், நீ அவன் பிரிவைச் சகிக்க மாட்டாய் ஆ! நீ இப்படி (எதிராக)இருப்பது நியாயமும் ஆகாது குணமும் ஆகாது. ஆழ்வார் பாசுரங்களில் பல விளக்குகள் இருக்கிறது. திருப்பாவையில் ‘அணிவிளக்கு’, ’தூமணி மாடத்து விளக்கு’, ‘குல விளக்கு’, ‘கோல விளக்கே’ மற்றும் இந்தப் பாசுரத்தில் வேறு எந்த ஆழ்வாரும் கூறாத ’குத்து விளக்கை’ ஆண்டாள் கூறுகிறாள்.  ஐந்து திரிகள் கொண்ட குத