Skip to main content

Posts

Showing posts from October, 2022

திருப்பாவைப் பிரியனின் தீபாவளி

 திருப்பாவைப் பிரியனின் தீபாவளி  ’ஆறு வித்தியாசம்’ படம் போல இருக்கும் முதல் படத்தில் சட்டென்று உங்கள் கண்களுக்கு ஒரு வித்தியாசம் புலப்பட்டால் தொடர்ந்து படிக்கலாம்.   சமீபத்தில் அடியேன் யாத்திரை சென்று வந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். ஒரு வாரத்துக்கு முன் "பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி"  என்று ஆண்டாள் கூறுவது போல் நிஜமாகவே பனி சொட்ட பீகார் மாநிலத்தில் ‘சீதாமர்ஹி’ என்ற இடத்துக்குச் சென்றேன்.  அயோத்தியா ராம ஜென்ம பூமி என்றால் ‘சீதாமர்ஹி’ சீதை ஜென்ம பூமி! ஆம் சிதை அவதார ஸ்தலம்.   இவ்வளவு ராம பக்தர்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்று இளைஞர்களும், சின்ன பசங்களும் பைக்கில் பல இடங்களில் அலைந்து திரிந்து  பால் வாங்கி க்யூவில் நின்ற எங்கள் எல்லோருக்கும் ‘சாய்’  கொடுத்து உபசரித்தார்கள்.  எங்கள் ஊர் பெருமாளை சேவிக்க இவ்வளவு கூட்டமா என்று பூரிப்பில் இருந்ததை கண்கூட பார்க்க முடிந்தது.  ஒருவர் என்னிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க ‘அயோத்தியா’ என்றேன். அதற்கு அவர் ராம ஜென்மப் பூமியிலிருந்து சீதையின் ஜென்மப் பூமிக்கு வந்துள்ளீர்கள். உங்களைத் தரிசிப்பதே எங்கள் பாக்கியம

தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்டிரும்!

 தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்டிரும்! வருடம் - 1273 . காஞ்சிபுரம். ஸ்ரீ வரதராஜர் கோயில். காலை.  நடாதூர் அம்மாள் என்ற வைணவ பெரியவர் மரப் பலகை மீது அமர்ந்து காலக்ஷேபம் செய்துகொண்டு இருந்தார். அவரை சுற்றி, வடக்கு திருவீதிப் பிள்ளை, சுரதபிரகாசிக பட்டர் போன்ற பெரியவர்கள் கூர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சமயம் பளிச் என்ற திருமண்ணுடன் குட்டி ராமானுஜர் போல ஐந்து வயதுக் குழந்தை, தன் மாமாவான கிடாம்பி அப்புள்ளார் கையை பிடித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் உள்ளே வர, எல்லோரும் அந்தக் குழந்தையை வியந்து, ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். நடாதூர் அம்மாள் மெய்மறந்து “அடடா ! என்ன முகப்பொலிவு! நம் ராமானுஜரே குழந்தையாக நடந்து வருவது போல இருக்கிறதே!” என்று தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் “கிடாம்பி அப்புள்ளாரே! இந்தக் குழந்தை யார் ? ” என்று கேட்க, அப்புள்ளார் “என் சகோதரியின் மகன். என் மருமான். பெயர் ’திருவேங்கட நாதன்’ ” என்றார். உடனே அந்தக் குழந்தை நடாதூர் அம்மளை விழுந்து சேவித்தது. அம்மாள் குழந்தையை கையில் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் தன் காலக்ஷ