2. மெமரி உனக்கு... மூளை எனக்கு! 1987ல் சுஜாதா எழுதியது: ……நான் கலிபோர்னியாவில் இருக்கும்போது பல இளம் கணிப்பொறி இயலாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் தான் தைரியமாக எதிர்கால டெக்னாலஜி பற்றிப் பேசுகிறார்கள். அனைவரும் முப்பது வயதுக்குட்பட்ட வர்கள் அவர்களில் ஒரு பில்கேட்ஸ் உருவாகலாம். புதிய கம்பெனிகளின் சொந்தக்காரர்கள். அவர்களைக் கேட்டபோது, சிலர் 'இன்டர்நெட்' என்பது புத்திசாலித்தனமான இணைப்புகளாக பெரிதாக வளரும் என்றார்கள். சிலர், பயன்படுத்து பவரைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு செயல்படக் கூடிய அந்தரங்க கணிப்பொறிகள் உருவாகும் என்றனர். சிலர் குரல் அடையாளம் மிகவும் முன்னேற்றம் அடைந்து குரல் ஆணைகள் மூலமே அகில உலகமும் இயங்கும் என்றனர். சிலர் கணிப்பொறியே காணாமற் போய்விடும். இன்று பொம்மைகளுக்குள் இருக்கும் மோட்டார்களை யாரும் கவனிப்பதில்லை. அதுபோல் கணிப்பொறிகள் வாழ்வின் எல்லாச் செயல்களிலும் மறைந்திருக்கும் என்கிறார்கள்…… சுமார் 40 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த பகுதி இன்று கிட்டதட்ட நிஜமாகிவிட்டது. அறிவு, நுண்ணறிவு என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் போகிற போக்கில் க...