Skip to main content

Posts

🎨 புத்தகத்தில் ஏன் வண்ண எழுத்துக்கள்?

  📚 புத்தகங்கள் வாசகர்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளன. ஆரம்பகாலக் கருத்துகள் அனைத்தும் மிகவும் பாசிட்டிவாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளன. அவற்றில் சில… 💬 Received the books today. The copies are very beautiful. My eight-year-old son is trying to read it on his own. 😀 His second language is not Tamil. In spite of that, he is able to read it slowly. 🙏 💬 Received the book today. It was beautiful, and a lot of thought and effort had been put into it. My daughter loved it. 💬 We got the book just a minute before we left home for the railway station. We unpacked it on the train, and it will be a wonderful companion throughout our journey. My daughter started to read it and loved it. She was so happy to see the emojis after the words. Thanks. 💬 Layout, print — all look impressive. 💬 Received the book today. Superb presentation and scripting. Thank you. Hare Krishna. 💬 Just received. Great! Very, very carefully packed. No damage to the corners. Thanks. 💬 ....ஆதாரம், அடையாளம் மற்...

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 1. இந்தப் புத்தகம் எதைப் பற்றியது? ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப்படும் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தை’ அடிப்படையாகக் கொண்டு, குட்டிக் குழந்தைகள் படித்து மகிழும் வகையில் குட்டிக் குட்டிக் கதைகளாக எழுதப்பட்டவை. 2. அது என்ன திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்? எங்களுக்குச் சொல்லக் கூடாதா? பொதுவாக நீதிக் கதைகள் என்றாலே ‘முயலும் ஆமையும்’, ‘விறகுவெட்டியும் தேவதையும்’ போன்ற கதைகள்தான் நம் நினைவுக்கு வரும். இவை முற்றுப்புள்ளிகளைத் தாராளமாக உபயோகித்து, ஒரு பக்கத்திற்கு மிகாமல் அழகிய படங்களுடன், எழுத்துக் கூட்டிப் படிக்கும் குழந்தைகளுக்கு வியர்க்காமல் சுலபமாகப் படிக்கும்படி அமைந்தவை. ஆனால், இவை பெரும்பாலும் இறக்குமதிச் சரக்கு. நம்மூரில் அப்படி ஏதும் இருக்கிறதா? இருக்கிறது! பலரும் அறியாத 'திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்' என்ற ஒரு பொக்கிஷம். ஸ்ரீராமானுஜருக்கும் 'திருக்கோளூர் பெண்பிள்ளை' என்ற ஒரு சிறுமிக்கும் இடையே நடந்த உரையாடலில் 81 அற்புதமான கதைகள் ஒளிந்துள்ளன. 3. எதை அடிப்படையாகக் கொண்ட கதைகள் இவை? இவை ரா...

தேநீர் என்ற சாய்

தேநீர் என்ற சாய் தேநீர் என்றால் ஏதோ தேன் போன்ற இனிய நீர் கிடையாது, தேயிலை+நீர் - தேநீர். ’வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பது தேநீருக்குக் கச்சிதமாகப் பொருந்தும். தமிழக (அல்லது தமிழ்நாட்டு) மக்கள் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்திருந்தாலும் சுவைக்காக டீயைக் குடிக்காமல் காலையில் கக்கா மருந்தாக மட்டும் டீ குடித்துப் பழகி, நல்ல தேநீரை சோழர் காலத்திலிருந்து ருசித்ததே இல்லை நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு வர இருக்கும் செப்பேடுகளில் எழுதியிருப்பதாக சொல்லுகிறார்கள். திருச்சி ’கோர்ட்’ அருகில் ‘மும்தாஜ்’ ஹோட்டலை ஷாஜகான் போல் ஒட்டிக்கொண்டு இருக்கும் டீ ஸ்டாலில், சிறுகாலையிலேயே பளபளப்பான பாய்லரின் பொந்தில் தாத்தாவின் கோவண வடிகட்டியில் டீ தண்ணீரை கிளாஸில் ஒழுகவிட்டு, பேசினிலிருந்து சீனியை அள்ளி இறைத்து, கைக்குழந்தைக்குப் பாலாடையில் பாலை ஊட்டுவது போலக் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி, காது வைத்த டம்ளரில் இரண்டு ஆற்று ஆத்தி அதற்கு மேல் மீண்டும் அதே கோவண எசன்ஸை டாப்பிங்காக தெளித்துக் கொடுப்பார்கள். ஒரு நாள் பாட்டியிடம் டீக்கு பைசா கேட்ட போது "மும்தாஜ்ல முட்டை போண்டா விற்கிறார்க...

தமில் வாழ்க!

  தமில் வாழ்க! ‘மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்!’ என்ற புதுக்கவிதை வரிகள் ‘சுஜாதா’வால் பிரபலமாகி, பின்னாளில் புத்தகத் தலைப்பாகவே மாறியது. ஆங்கில மொழிக்குக் கிடைக்காத ஒரு பெருமை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது – தமிழ் ஒரு ‘பெண்’. அதனாலோ என்னவோ, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையே இதற்கும் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அவியல் செய்யப் போதுமான தலைப்புகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் கையில் முதலில் எடுப்பது தமிழைத்தான். தமிழுக்கு புடவை கட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ சர்ச்சை, சுடிதார் போட்டு இந்து எதிர்ப்பு அல்லது மும்மொழிக் கொள்கை என எதையாவது உளறிவிட்டு, கடைசியில் ‘தமில் வாழ்க’ என்று முடித்தால் போதும் – திராவிட சித்தாந்தவாதி என்று சுலபமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்! இப்படிப் பல காலமாக அரசியல்வாதிகளின் வெறும் வாய்க்கு அவலாக இருந்துகொண்டிருக்கிறாள். சொல்ல மறந்துவிட்டேனே, அவ்வப்போது திடீரென்று கருப்பு பெயிண்ட் டப்பாவைத் தூக்கிக்கொண்டு தமிழ் அல்லாத எழுத்துக்களை அழிக்கும் 'அரும்பணி' இருக்கவே இருக்கிறது. இவற்றையெல்லாம் செய்து, தமிழகத்தில் தமிழ் வளர்ந்துவிட்டதா? தமிழகத்தில் தமிழ் வளரவே...

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அப்டேட்

  குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அப்டேட் சென்ற மாதம் ‘குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்’ முன்பதிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டேன். தற்சமயம் புத்தகத்தின் கடைசிக்கட்ட பிழைத்திருத்தப் பணிகள் (Proofreading) நடைபெற்று வருகின்றன. சென்ற வாரம் ‘பொருளடக்கம்’ பகுதியைச் சரிபார்த்தபோது: 1.அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே 2.அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே 3.தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே 4.தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே 5.பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே 6.பிணவிருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போலே 7.தாய்க்கோலம் செய்தேனோ அநுசூயைப் போலே 8.தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே -என்று வரிசையாக 81 வாக்கியங்களும் இருந்தன. இவற்றை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் இன்னும் சுவாரசியமாக எப்படி மாற்றலாம் என்று யோசித்தபோது ஒரு புதிய எண்ணம் தோன்றியது (பார்க்க: படம்). இதில் இரண்டு ‘போஸ்ட் இட்’ (Post-it) குறிப்புகள் இருக்கும்படி வடிவமைத்துள்ளேன். மேலே ஒரு சிறிய போஸ்ட் இட், அதற்குப் பின்னால் பெரியதாக மற்றொன்று என இருவேறு வண்ணங்களில் இவை அமையும். மேலே இருப்பது: ‘ஆதாரங்கள்’ (S...

2. மெமரி உனக்கு... மூளை எனக்கு!

2. மெமரி உனக்கு... மூளை எனக்கு! 1987ல் சுஜாதா எழுதியது: ……நான் கலிபோர்னியாவில் இருக்கும்போது பல இளம் கணிப்பொறி இயலாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் தான் தைரியமாக எதிர்கால டெக்னாலஜி பற்றிப் பேசுகிறார்கள். அனைவரும் முப்பது வயதுக்குட்பட்ட வர்கள் அவர்களில் ஒரு பில்கேட்ஸ் உருவாகலாம். புதிய கம்பெனிகளின் சொந்தக்காரர்கள். அவர்களைக் கேட்டபோது, சிலர் 'இன்டர்நெட்' என்பது புத்திசாலித்தனமான இணைப்புகளாக பெரிதாக வளரும் என்றார்கள். சிலர், பயன்படுத்து பவரைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு செயல்படக் கூடிய அந்தரங்க கணிப்பொறிகள் உருவாகும் என்றனர். சிலர் குரல் அடையாளம் மிகவும் முன்னேற்றம் அடைந்து குரல் ஆணைகள் மூலமே அகில உலகமும் இயங்கும் என்றனர். சிலர் கணிப்பொறியே காணாமற் போய்விடும். இன்று பொம்மைகளுக்குள் இருக்கும் மோட்டார்களை யாரும் கவனிப்பதில்லை. அதுபோல் கணிப்பொறிகள் வாழ்வின் எல்லாச் செயல்களிலும் மறைந்திருக்கும் என்கிறார்கள்…… சுமார் 40 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த பகுதி இன்று கிட்டதட்ட நிஜமாகிவிட்டது. அறிவு, நுண்ணறிவு என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் போகிற போக்கில் க...

கூகுள் ஆண்டவரும் ஏ.ஐ ஆசாரியனும்!

கம்ப்யூட்டர் வயதுக்கு வந்துவிட்டதா ? - 1. கூகுள் ஆண்டவரும் ஏ.ஐ ஆசாரியனும்! இன்றைய நாளிதழ்களைப் புரட்டினால், தினசரி தங்க நிலவரத்துக்கு அடுத்து அதிகம் அடிபடும் வார்த்தையாக 'ஏ.ஐ' (A.I) வந்துவிட்டது. 'செயற்கை நுண்ணறிவு' என்கிற தமிழ்ச் சொல் இருந்தாலும், பீட்சா, பர்கர் மாதிரி ஏ.ஐ என்பது நம் அன்றாட வார்த்தையாகி வீட்டில் புழங்க ஆரம்பித்துவிட்டது. எல்லாவற்றுக்கும் 'கூகுள் ஆண்டவரை'க் கேட்டுக்கொண்டிருந்த காலம் மெல்ல மலையேறி, இப்போது 'ஏ.ஐ ஆசாரியன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம். தினமும் செய்திதாளில், அலுவலகத்தில், நண்பர்களுடன் ஏ.ஐ குறித்து படிப்பது, பேசுவதை அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். சாதாரண பாமரனுக்கு புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே என் எண்ணம்.  நான் கல்லூரியில் படிக்கும் போது, ‘வங்கிகளில் நீங்கள் போடும் கையெழுத்தை ஒரு ஸ்கேனர் கருவி மூலம் பழைய கையெழுத்தோடு ஒப்பிட்டு, அது நிஜமா, போலியா என்று கம்ப்யூட்டரே சொல்லிவிடும்’ என்று ஒரு கட்டுரை எழுதிப் பலத்த கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன். இன்றைக்குப் பார்த்தால் அது எவ்வளவு ‘சில்லரைத்தனமான’ விஷயம் என்று எனக்...

புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு

கற்போரைக் கைப்பிடித்துச் செல்லும் புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு (1) ஒரு சிறுவனின் கதை: நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒரு சிறுவன், தன் வீட்டுத் தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டான். அப்பா எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்குத்தான் விற்றிருந்தான் என்றாலும், சொல்லாமல் செய்ததால் கோபமடைந்த தந்தை அவனை அடித்து விரட்டினார். வெள்ளாற்றின் மறுகரையில் இருந்த கீரப்பாளையம் கிராமத்திற்கு ஓடிப்போன அந்தச் சிறுவன், அங்கே வசித்த தன் பெரியப்பா வீட்டுக்கு சென்று தஞ்சம் புகுந்தான். பெரியப்பா சிறந்த வைணவ அறிஞர். ஸ்ரீமத் அழகிய மணவாள ராமானுஜ ஏகாங்கி சுவாமிகள் என்பது அவர் திருநாமம். அங்கேயே தங்கி, தன் பெரியப்பாவிடமே தமிழ் இலக்கியத்தையும் வைணவத்தையும் கற்கத் தொடங்கினான். பெற்றோர் எவ்வளவோ அழைத்தும் அந்தச் சிறுவன் மீண்டும் வீட்டிற்குச் செல்லவில்லை. (2) என் சொந்தக் கதை: முப்பது வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில், எழுத்தாளர் சுஜாதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை ஆழ்வார் பாடல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் திரு. புருஷோத்தம நாய...

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.  கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நான் சென்னை பு.காட்சிக்குச் செல்கிறேன். தொடர்ச்சியாகப் பல விஷயங்கள் மாறிவிட்டன. மேலட்டை மாறி, அரங்குகள் கூடி, எழுத்தாளர்கள் அதிகரித்து.. வாசகர்கள்?  “எப்படிப்பா இவ்வளவு பெரிய புக் படிக்க உனக்கு டைம் இருக்கு?”  கடந்த ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்த போதே கூட்டம் வேகமாக உள்ளே சென்று கொண்டு இருந்தது. நானும் வேகமாக உள்ளே சென்றேன்.  நுழைவாயிலில், ’வெரேலி ஆர்ட்’ படங்களுடன் ஜூட் பைகள் கீழே பரப்பி கூவிக் கூவி விற்க ஆரம்பிக்க, அருகில் ‘சார் இலவசப் பைபிள்’ வாங்கிக்கோங்க என்று கூடாரத்தில் கூவிக்கொண்டு இருந்தார்கள். அனுமதிச் சீட்டு இல்லை. உள்ளே நுழைந்த போது, ’சார் அந்த கேட் வழியா போங்க’ என்றார்கள். முதல் வரிசையில் நுழைந்த ஏழாவது நிமிடம் ஒரு 6-7வது படிக்கும் சிறுவன் தன் அப்பாவின் கையைப் பிடித்து இழுத்து… கண்ணீருடன் கண்ணில் பட்டான். அப்பாவிடம் புத்தகம் வாங்கித்தர அடம் பிடிக்கிறான் என்று நினைத்து அவன் அருகில் சென்றேன். “அப்பா இப்பவே வீட்டுக்கு போகலாம். போர் அடிக்குது” “இப்பத்தானேடா உள்ளே நுழைந்திருக்கிறோம்...

ஆண்டாளும் தோழிகளும் - ஒரு நாடகப் பார்வை

 ஆண்டாளும் தோழிகளும் - ஒரு நாடகப் பார்வை சென்ற ஆண்டு கார்த்திகை கடைசி நாள் அடியேனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஆண்டாளின் திருப்பாவைக்குப் பெரியவாச்சான் பிள்ளையின் 'மூவாயிரப்படி' வியாக்கியானத்தை வரிக்கு வரி எடுத்துக்கொண்டு, திருப்பாவையை ஒரு நாடகம் போல எழுத வேண்டும் என்பதுதான் அது. ஆண்டாள் தன் திருப்பாவைக்கு இட்ட பெயர் கோதையின் ’சங்கத் தமிழ் மாலை’. முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று பாடபுத்தகத்தில் படித்திருக்கிறோம். அந்த மூன்றும் திருப்பாவையில் பொதிந்துள்ளன. இயல் மற்றும் இசையை நாம் படித்தும் கேட்டும் ரசித்திருக்கிறோம்; ஆனால் அதில் 'நாடகம்' ஒளிந்துகொண்டிருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது தான் அடியேனின் நோக்கம். ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்ற பொக்கிஷத்தைக் கட்டிக்காத்தது நம் முன்னோர்களின் வியாக்கியானங்கள். இந்த வியாக்கியானங்கள் இல்லையென்றால், ஆழ்வார் பாசுரங்களை நாம் வெறும் பாடல்களாக மட்டுமே ஓதிக்கொண்டிருந்திருப்போம். சில 'கோனார் நோட்ஸ்' போன்ற உரைகளைப் படித்தால் கொட்டாவிதான் வரும்; சுவைத்து ரசித்திருக்க முடியாது. அதிலிருந்து முழுவதும் மாறுபடுகிறது...