29. பாவை குறள் - குற்றேவல் சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா; எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்; மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய். மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்! பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது. நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்; மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும். திருவள்ளுவர் மைலாப்பூர் காரர் என்று பல காலமாகப் படித்துக்கொண்டு இருக்கிறோம். வள்ளுவ நாடு என்று மலை நாட்டில் ஒரு பகுதி இருப்பதால் வள்ளுவர் அந்த நாட்டுக்காரர் என்பர் சிலர். இந்த ஆராய்ச்சியில