Skip to main content

Posts

ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம்.

ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம். ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ‘ராமாயணத்தில் ரகசியங்கள்’ (Secrets of Ramayana) என்று தொடர் சொற்பொழிவை பெங்களூருவில் பல பகுதிகளில் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். நேற்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் அன்று கடைசி சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தேன். ராமாயணத்தில் சரணாகதி என்ற தலைப்பில் சரணாகதிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு சென்ற போது பத்துக்கு மேல் எண்ணுவதை விட்டுவிட்டு கடைசியில் விபீஷண சரணாகதியில் முடித்தார். வைணவத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பு உள்ளது. அதைப் படிப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர் ஆன/ஆகப் போகிறவர்கள். இன்றைய 'பைத்தான்’ இளைஞர்கள், பரமாத்மா பக்கம் வருவார்களா என்ற சந்தேகம் (கலந்த கவலை ) என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கலாம். ஆனால் நேற்று துஷ்யந்த அவர்களின் உபயனாசத்தை கேட்ட போது அவரை சுற்றி கல்லூரி படிக்கும் இளைஞர் பட்டாளம் கையில் பேப்பரும் பேனாவுமாக அவரை சுற்றிக் குழுமியிருந்தது, உற்சாகமாக ரசித்துக் கேட்டு நோட்ஸ் எடுத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் சோர்வில்லாமல் அனுபவித்தார்கள். நிச்சயம் நம் இளைய சமுதாயம் வருவார்கள் என்று நம்பிக்கை துள...

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்!

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்! உற்சவத்தின் போது நாயந்தே என்று சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். அது என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டு. அதை கடைசியில் சொல்லுகிறேன். இப்போது பெரியாழ்வாரை சேவிக்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லலாம். ஆழ்வார் பெரிய ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றால், கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சியளிக்கிறார். பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எது? பல்லாண்டு, ஆண்டாளின் தகப்பனார், விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல். இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம். ஒரு அன்பர், “சரணாகதியில் பெரிய பெருமாள் திருவடிகளைப் பற்றுகிற மாதிரி திருவேங்கடமுடையான் திருவடிகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். உண்மைதான். “அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்று திருவேங்கடமுடையான் திருவடிகளைத்தான் ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரே சொல்லியிருக்கிறார். அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி...

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம்

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம் சென்ற வருடம் ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கவலைப் படாதீர்கள். இந்தக் கட்டுரை அதைப் பற்றியது இல்லை. மொழிபெயர்த்த சமயம்  ‘பிபேக் டெப்ராய்’ (Bibek Debroy) என்ற பெயர் அடிபட்டது. (விவேக் டெப்ராய் என்றும் பாடம்). அவரைக் குறித்துத் தேடிய போது, கிட்டத்தட்ட எல்லா இதிகாசப் புராணங்களையும் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். இவரை வியந்துகொண்டு இருந்த சமயத்திலேயே இந்தப் பூவுலகை விட்டு(நவம்பர் 2024) சென்றுவிட்டார். இவர் எழுதிய புத்தகங்களை வரிசையாகப் பார்த்த போது  ’Manmatha nath dutt - translator extraordinaire ’ ( மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர்) என்ற புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. கீழடியில் தோண்டி எடுத்த அழுக்கு புத்தகம் ஒன்றை அமேசான் அனுப்பியது. திருப்பி அனுப்பினேன். மேலும் ஆழமாகத் தோண்டி எடுத்த வேறொரு புத்தகத்தை அனுப்பினார்கள். திருப்பி அனுப்பும் விளையாட்டை நிறுத்துவிட்டு, புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.  இந்தப் புத்தகம் சீரியஸ் ரீடிங் வகையைச் சார்ந்தது. நி...

குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர்

குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர் பொதுவாக வெப் சீரீஸ் வகையராக்களில் அளவுக்கு அதிகமான வன்முறை, கெட்ட வார்த்தை, கெட்ட காட்சிகள் மலிந்து கிடக்கும். சமீபத்தில் ’சோனி லிவ்’ல் குல்லக் ( உண்டியல் ) என்ற தொடரைப் பார்க்க நேரிட்டது. இதற்கு முன் இப்படி ஒரு நல்ல தொடரைப் பார்த்த நினைவில்லை. கதை என்று எதுவும் இல்லை. அது தான் இதன் USP. வெற்றி. ஓர் உண்டியலில் எப்படி சிறுகச் சிறுக சேமிப்போமோ அது போல அன்றாடம் நடக்கும் சிறு சந்தோஷமோ, பிரச்சனையோ, வருத்தமோ அதைச் சேமிக்கிறது இந்தத் தொடர். ஒரு சராசரி இந்திய மத்தியமர் குடும்பத்தின் அன்றாட வாழ்வை மிக யதார்த்தமாகவும், மனதை நக்காமல் ஜெஸ்ட் தொட்டு விட்டுப் போகும் காட்சிகளைக் கொண்ட தொடர். ஓர் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி என்று நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட மிஷ்ரா குடும்பத்தில் நாமும் இணைந்துவிடுகிறோம். இந்தக் குடும்பத்தில் நிகழும் உரையாடல்கள், சண்டைகள், கேலிகள் என அனைத்தும் நம் வீடுகளில் நடப்பதைப் போலவே இருப்பதால், ஒரு புன்னகையுடன் கூடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது ஹிந்தியில் வந்திருந்தாலும், தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். டப்பிங் என்று தெரியாத வண்ணம் மிக ...

108 திவ்ய தேசங்கள் புத்தக அனுபவம்.

108 திவ்ய தேசங்கள் புத்தக அனுபவம். திருச்சியில் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு உத்தியோகத்துக்கு சென்னைக்கு வந்த போது என் அப்பா ’சென்னையை சுற்றி நிறைய திவ்ய தேசங்கள் இருக்கிறது, வாரயிறுதியில் முடிந்தால் செல்’ என்று கைச்செலவுக்குக் கொஞ்சம் பணமும், லிப்கோ 108 திவ்ய தேசங்கள் என்ற புத்தகம் ஒன்றையும் எனக்குக் கொடுத்தனுப்பினார். திருவல்லிக்கேணியில் ஒண்டியாக இருந்த போது பைக்கில் பல திவ்ய தேசங்களுக்குச் சென்று அதைக் குறித்து எழுதினேன். என் முதல் எழுத்து இப்படித் தான் ஆரம்பித்தது என்று கூடச் சொல்லலாம். என்றாவது ஒரு நாள் எல்லா திவ்ய தேசம் குறித்து எழுதி படங்களுடன் தொகுக்கலாம் என்ற எண்ணத்தில் திவ்ய தேசப் பெருமாள் படங்களையும், புத்தகங்களையும் சேகரிக்கத் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு பிரபல வார இதழில் 108 திவ்ய தேசம் என்ற தொடர் வந்தது, அதில் ஆச்சரியமான திவ்ய தேசப் படங்கள் வந்துகொண்டு இருந்தது. இது போன்ற படங்கள் அவர்களுக்கு எங்கேயிருந்து கிடைக்கிறது என்று வியப்பாக இருந்தது. ஒரு வாரம் அந்தப் படத்துடன் ஓரத்தில் வாட்டர் மார்க் ஒன்று தெரிந்தது. ‘தஞ்சை மூர்த்தி’ என்று பிரபலப் புகைப்படக்காரர் திர...

பேயாழ்வார் பிறந்த இடம்

பேயாழ்வார் பிறந்த இடம் திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று - பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி என் மகன் ஐந்தாவது படிக்கும் போது அவனுக்கு ஆழ்வார் கதைகளைச் சொல்லி வைத்தேன். ஒரு நாள் அவன் புத்தகப் பையைப் பார்த்த போது அதில் ஏகப்பட்ட காகிதங்களில் ’ஆழ்வார் கதைகள்’ என்ற தலைப்பில் முதலாழ்வார்கள் கதை காமிஸ்க் வடிவில் வரைந்திருந்தது கண்ணில் பட்டது. ( ஒரு பக்கத்தைத் தந்துள்ளேன்). சமீபத்தில் தோளுக்கு மேல் வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில் அவனுடன் ஒரு விடியற்காலை சென்னையைச் சுற்றி நடந்த போது, முன்பு அவன் வரைந்த காமிக்ஸ் வரைபடத்தைப் பற்றி பேச்சு வந்தது. என் கைப்பேசியில் அவன் வரைந்த அப்படத்தைக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு அவன் கேட்ட கேள்வி “பேயாழ்வார் மைலாப்பூரில் தான் பிறந்தாரா?. பிறந்த இடம் இன்னும் இருக்கிறதா?’ ‘இருக்கிறது’ என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன். ‘இப்போது போய் பார்க்கலாமா?’ உடனே ஓர் ஆட்டோவை பிடித்து மைலாப்பூர் சென்றோம். பேயாழ்வார் திருமஞ்சனக் கட்டியத்தின் போத...

சடகோபன் அருள்

சடகோபன் அருள் மதுரகவி ‘கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ மூன்று இடங்களில் சடகோபன் என்ற சொல்லை உபயோகிக்கிறார். சடகோபன் நம்பி என்று இரண்டு இடத்திலும் ஒரு இடத்தில் ‘சடகோபன் அருளையே’ என்கிறார். ‘சடகோபன் அருள்’ என்றால் என்ன ? நாதமுனிகளுக்குச் சடகோபன் அருளியதால் தான் இன்று நமக்கு நாலாயிரமும் கிடைத்தது. தற்காலத்தில் திரு.உ.வே.சா தமிழ் ஓலைகளைச் சுவடிகளைத் தேடிக்கொண்டு ஆழ்வார்திருநகரியில் மனம் உருகி ஆழ்வாரை வேண்டிக்கொண்டதால் அவருக்கு வேண்டியது கிடைத்தது ( இதைப் பற்றித் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன் ). அதே போல் யோகா ஆசான் திரு கிருஷ்ணமாச்சாரியார் ஆழ்வார்திருநகரியில் சம்பந்தத்தால் அவருக்கு யோக ரகசியம் கிடைத்தது. ( இதைப் பற்றியும் அடியேன் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்). பல வருடங்கள் முன் லிப்கோ ஸ்தாபகத்தார் நாதமுனிகள்போலப் பல ஆயிரம் முறை கண்ணி நுண்சிறுத்தாம்பு அனுசந்திக்க முடிவு செய்து ஒரு குழுவாக அதைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சேவித்துக்கொண்டு இருக்கும் இடத்துக்கு. அருகில் ஒரு கல்யாண மண்டபம். விழாக்கோலமாக இருக்கக் கோயில் மாலை பிரசாதமாக வருகிறது. ஏதோ காரணம் கல்யாணம் நின்றுவிட்டது. கோயில் ம...

அவுட்லைன்

அவுட்லைன்  ஒரு வண்ண ஓவியம் தீட்டும் போது அதற்கு அவுட்லைன் மிக முக்கியம். அது சரியாக வந்தால் தான் அதற்கு மேல் வாட்டர், ஆயில், ஏன் பென்சில் என்று எதைக் கொண்டு வண்ணம் தீட்டினாலும் அது அழகாக அமையும். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவுட்லைன் சரியில்லை என்றால் எந்த மாதிரி உயர்ந்த வண்ணத்தைக் கொண்டு தீட்டினாலும் அது எடுபடாது. ’எல்லாம் நல்லா இருக்கு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ என்ற விமர்சனத்தை நான் எதிர்கொண்டுள்ளேன். பள்ளியில் படிக்கும் போது ஓர் ஓவியரைச் சந்தித்து, என்னிடம் உள்ள விலை உயர்ந்த வாட்டர் கலர் வண்ணங்களைக் காண்பித்து, இது எல்லாம் என்னிடம் இருக்கிறது, எனக்கு வாட்டர் கலர் அடிக்கச் சொல்லிக் கொடுங்கள் என்றேன். அவர் குழந்தைகள் வைத்திருக்கும் பல்லாங்குழி போன்ற பத்து ரூபாய் சமாசாரத்தை வாங்கி வரச் சொன்னார். அதை வைத்துக் கொண்டு ஒரு மிக அருமையான ரோஜா பூ படத்தை வரைந்து முடித்தார். அவர் என்னிடம் சொன்னது, விலை உயர்ந்த கலர் முக்கியம் இல்லை, படத்தின் அவுட்லைன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது தான். நான் வரைந்த சில படங்களை அவரிடம் காண்பித்த போது மூக்குக்குக் கீழே ஒரு கோடோ...

சௌரிராஜனும் யதிராஜனும்

சௌரிராஜனும் யதிராஜனும் ஒரு முறை ஸ்ரீராமானுஜர் தன் குரு யாதவ பிரகாசருக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாகத் தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கண்கள் தாமரை போன்றது. அந்தக் கமலம் குரங்கின் பின்பகுதியைப் போலச் சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார். இதைக் கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், "இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்" என்றார். பதிலைக் கேட்ட யாதவபிரகாசர் ‘ஆஸம்’ என்று கூறாமல், ராமானுஜர் மீது கோபம் கொண்டு, கொல்லவும் துணிந்தார் என்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ம...

சௌந்தர்ய ராஜன் - சௌந்தர்ய எதிராஜன்

சௌந்தர்ய ராஜன் - சௌந்தர்ய எதிராஜன்  திருநாகை என்னும் நாகப்பட்டினம் என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான் சௌந்தர்ய ராஜன். நம்பெருமாள், வடிவழகிய நம்பி, செல்லப் பிள்ளை என்று ஸ்ரீராமானுஜருக்கும் அந்த எம்பெருமான்களுக்கும் பல குறிப்புகள் உள்ளன ஆனால் யதிராஜனுக்கும் சௌந்தர்ய ராஜனுக்கும் அப்படி எதுவும் இல்லை. உடையவர் தன் திக்விஜயத்தின் போது இந்தப் பெருமாளை தரிசித்தார் என்ற ஒரு வரி குறிப்பு மட்டுமே உள்ளது. அதனால் சௌந்தர்ய ராஜன், எதிராஜன்  இருவருக்கும் சில குறிப்புகளைக் கொடுக்கிறேன். தவறாக இருந்தால் பொருத்தருள்க.  திருமங்கை ஆழ்வார் திருநாகை சௌந்தர்ய ராஜனிடம் மையல் கொண்டு இப்படிப் பாடுகிறார்.  பொன் இவர் மேனி மரகதத்தின்  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம் மின்  இவர் வாயில் நல் வேதம் ஓதும்  வேதியர் வானவர் ஆவர் தோழீ  என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி  ஏந்து இளங் கொங்கையும் நோக்குகின்றார்  அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்  அச்சோ ஒருவர் அழகியவா ’அச்சோ’ என்று தமிழில் வார்த்தை கிடையாது. ஆனால் ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சம் போது ‘அச்சச்ச...

செல்லப் பிள்ளையும், செல்லமான பிள்ளையும்

செல்லப் பிள்ளையும், செல்லமான பிள்ளையும்  தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் இருக்கும் திசையை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஸ்ரீரங்கத்திலேயே இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? கர்நாடகா இருக்கும் திக்கை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்கவேண்டும். காரணம் திரு நாராயணபுரம் என்ற மேல்கோட்டை.  ஸ்ரீரங்கம் பெருமாளை ’நம்’ பெருமாள் என்று செல்லமாக அழைக்கிறோம். ஆனால் மேல்கோட்டை பெருமாளே ‘செல்ல’ப் பிள்ளை! இங்கே இருக்கும் பெருமாள் ’யதிராஜ’ சம்பத் குமாரன்.  இந்தப் பெயர்க் காரணத்தைச் சுருக்கமாகத் தருகிறேன்.  ஸ்ரீரங்கத்தில் உடையவருக்கு கிருமிக்கண்ட சோழனால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து தப்பி மேல்கோட்டை அடைந்தார். அங்கு வசித்த காலத்தில், ஒரு நாள் தம்மிடம் இருந்த திருமண் முழுவதும் செலவழிந்துவிட்டது.  வருத்தத்தில் இருந்த உடையவரின் கனவில் தோன்றிய பெருமாள், கல்யாணி புஷ்கரிணி அருகே ஒரு செண்பக மரத்தடியில், மரம் போல இருக்கும் பெரிய துளசிச் செடிக்கு அருகில் உள்ள புற்றுக்குள் தான் இருப்பதாகக் கூறி திருமண் கிடைக்கும் இடத்தையும் தெரிவித்தார். மறுநாள் காலை...