28. பாவை குறள் - சிறுபேர் கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம், அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய். பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்போம். அறிவொன்றும் இல்லாத மாடுமேய்க்கும் குலத்தில் பிறந்த நாங்கள் உன்னை எங்களுடைய குலத்தவனாகப் பாவிக்கும் புண்ணியத்தைச் செய்துள்ளோம் எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா! நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது அறிவற்ற சிறு பிள்ளைகள் நாங்கள், அன்பால் அழைத்ததை பொறுத்துக் கோபம் கொள்ளாமல் எங்களுக்கு வேண்டியதை நீதான் கொடுக்க வேண்டும். இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் ‘சிறுபேர்’ என்று கூறுவதைப் புரிந்துகொள்ள நாம் கோகுலத்துக்குச் செல்லலாம். கோகுலத்தில் கண்ணன் குறும்பு செய்ய, அங்கே இருக்கும் சிறுமிகளுக்கு கண்ணனுடன் அடிக்கடி சண்டை வரும். சிறுமிகள் கண்ணனைத் திட்ட அவன் அதற்குச் சிரிக்க, இவர்களுக்