ஸ்ரீமத் ஆதிவண் சடகோபனின் சங்கல்பம் நரசிம்ம அவதாரம் தனித்துவமானது. ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாசுரத்தில் “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று குறிப்பிடுவதற்கு ஏற்றால் போல், ஒரே சமயத்தில் தன் கண்கள் மூலம் பிரகலாதனிடம் கருணையையும் ஹிரண்யகசிபுவிடம் சீற்றத்தையும் காண்பித்தார். நரசிம்ம அவதாரத்தின் இப்பகுதியை ஸ்வாமி தேசிகன் கொண்டாடுகிறார். அதுமட்டும் இல்லாமல், ஸ்வாமி தேசிகன் ஒரு படி மேலே சென்று நரசிம்மர் மற்ற மூன்று உலகங்களிலும், உண்மையான பக்தன் கூப்பிடும் போது வெளிவரத் தயாராக இன்றும் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். இந்த நரசிம்மரை நாம் அஹோபிலத்தில் ஒன்பது விதமாகத் தரிசிக்கலாம். ஸ்ரீராமானுஜருக்கு பிறகு பல ஆசாரியர்கள் ஸ்ரீ வைஷ்ணவத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். அவர்களில் ஸ்ரீ வேந்தாந்த தேசிகனுக்குத் தனி இடம் உண்டு. அவருக்குப் பின் அவர் திரு குமாரர் வரதாச்சார்யார் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்கச் சரியான தலைமை அமையவில்லை. அஹோபிலத்தின் முதல் ஜீயர் 1379ல் கிடாம்பு கேசவாச்சார்யர் திருக்குமாரராக அவதரித்த ஸ்ரீநிவாச்சார்யார் என்பவர் ஸ்ரீ நாராயணன் மீது அளவு