Skip to main content

Posts

பகுதி - 14 - துதிக்கப்பெறுகை

  14. துதிக்கப்பெறுகை ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை பெற்ற நாதமுனிகள் சடகோபன் திருவடிகளை விட்டுப் பிரியாமல் திருக்குருகூரில் நிரந்தர நித்திய வாசம் செய்துகொண்டு இருந்தார் என்று நேயர்களுக்குச் சிறிது நினைவுபடுத்திவிட்டு, கதையில் மேலும் பயணிக்கலாம். சூரியன் மறைந்து, எல்லாத் திக்கிலும் இருள் சூழ்ந்த ஓர் இரவில் நாதமுனிகளுக்குக் கனவு ஒன்று வந்தது. முந்தைய அத்தியாயங்களில் சந்தித்து, பிறகு நாம் மறந்தே போன, நமக்கும் மிகவும் பரிச்சயமான வீரநாராயணப் பெருமாள் தான் அவர்! “நாதமுனிகளே! இவ்வளவு காலம் எம்மைப் பிரிந்து வாழ்வது உமக்குத் தகுமோ? இந்தத் தமிழ் பிரபந்தங்கள் அனைத்தும் உம் இசையில் கேட்க விருப்பம்; விரைவில் வீரநாராயணபுரம் வந்து சேரும்!” என்றார். “அடியேனை ஆட்கொண்ட ஒப்பற்ற வீரநாராயணபுரத்து எம்பெருமானே!” என்று நாதமுனிகள் கண்விழித்துப் பார்த்த போது, எங்கும் நிசப்தமாக மெல்லிய காற்று வீசிக்கொண்டு இருந்தது. சந்திரன் மேகக் கடலில் மறைய, சூரியன் மெதுவே தலைகாட்டிய அந்தக் காலைப் பொழுதில், நாதமுனிகள் ஆழ்வாரையும், பொலிந்து நின்ற பிரானையும் வணங்கி நின்றார். கோயில் அர்ச்சகர், “நாதமுனிகளே! நீ...

பகுதி - 13 - விளைநிலம்

  13. விளைநிலம் சென்ற அத்தியாயத்தில் நம்மாழ்வார் முன் நாதமுனிகள் ’பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’ என்ற வரிகளை அழுத்திப் பாடி, வருங்கால ஆசாரியனின் உருவத்தை சர்வ அவயவ பூர்ணமாக[1] காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்த சம்பவம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்குப் பிறகு குருகூர் சடகோபன் சிந்தனையில் ஆழ்ந்தார். நம்மாழ்வார் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின், நாதமுனிகளைப் பார்த்து, “உமக்கு இன்று இரவு சொப்பனத்தில் (கனவில்) நாமே அதைப் பாவனையாகக் (உருவகித்துக்) காட்டியருளுகிறேன்” என்றார். அன்று இரவு நாதமுனிகளின் கனவில் ஆழ்வாரே தோன்றி, “நாதமுனிகளே! நம் குலத்தில் அவதரித்து[2], இப்பூவுலகம் முழுக்க வாழ்ச்சி அடையப் போகும் அவதாரத்தைக் காணுங்கள்! நாமே வருங்கால ஆசாரியனை உமக்குக் காட்டியருளுகிறேன்!” என்று நம்மாழ்வாரே வருங்கால ஆசாரியனாக நாதமுனிகளுக்குக் காட்சியளித்தார். பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் மீது, பால சூரியனின் ஒளிபட்டவுடன் எப்படிப் பிரகாசிக்குமோ, அது போல அந்த ஒப்பற்ற திருமேனி ஒளிர்ந்தது. அந்த வடிவழகு காட்சியைக் கண்ட நாதமுனிகளின் உடல் ஆனந்தத்தில் பூர...

பகுதி - 12 - பக்தாம்ருதம்

12. பக்தாம்ருதம் பசிக்கு உணவைத் தேடிக்கொண்டு அலைந்தவனுக்கு விருந்தே கிடைத்தாற் போல, திருவாய்மொழியைத் தேடிக்கொண்டு அலைந்த நாதமுனிகளுக்கு, பொய்கை, பூதன், பேயார், பொன்மழிசைக் கோன் மாறன் செய்ய மதுரகவி, சேரர்பிரான், வையகமெண் பட்டர் பிரான், கோதை, தொண்டர் பாதப்பொடி பாணன், கட்டவிழ்தார் வாட்கலியன்[1] என எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களும் பக்தாம்ருதமாக [2]கிடைத்து, இன்பத்தில் திளைத்துக் குருகூர் சடகோபனை மார்வெழுத்தாக்கி கொண்டார்.[3] சடகோபன் உகப்புடன் தன் திருவாக்கினால் திருவாய்மொழியை நாதமுனிகளுக்கு உபதேசிக்க ஆயத்தமானார். கடும் தாகத்தில் சிறிது தண்ணீர் அருந்தியவன், தண்ணீரின் இனிமையை உணர்ந்து தாகம் அடங்காது, “தண்ணீர் தண்ணீர்” என்று தவிப்பது போல, நாதமுனிகளின் தவிப்பு இருந்தது. நாதமுனிகளின் தவிப்பைப் போலவே, நம்மாழ்வாரின் தேனினும் இனிய பாசுரங்களை மீண்டும் அருந்த, எல்லாத் தேசத்து எம்பெருமான்களும் நாதமுனிகளின் நெஞ்சில் உவந்து குடிகொண்டு காத்திருந்தனர். அரிய அமிர்தம் கிடைக்கப்போகும் ஆசையில், அதை முழுவதையும் பருக வேண்டும் என்ற பேருவகையால் நாதமுனிகள் உடல் முழுவதும் பூரிப்பு தெரிந்தது. நம்மாழ்வாரை வணங்கி, “...

பகுதி - 11 - தமிழாழ்ந்தவர்கள்

  11. தமிழாழ்ந்தவர்கள் மதுரகவிகள் சம்பந்தத்தாலும், குருகூர் சடகோபன் விசேஷ முறையில் தோன்றிய அவதாரத்தாலும், திருவாய்மொழி முதலிய ஆழ்வார் அருளிச்செயல்களை ‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே’ என்ற வாக்கியத்துக்கு ஏற்றவாறு, தன் திருவாய் மூலம் ‘திருவாய்மொழியாகப்’ பிரசாதித்து குருகூர் சடகோபன் நாதமுனிகளுக்கு ஆசாரியரானார். சடகோபன் நாதமுனிகளை அருள்கூர்ந்து, “வண்டுகள் மொய்க்கக்கூடிய தேன் நிறைந்த திருத்துழாய் மாலை அணிந்த பரமன், உலகில் உள்ள உயிர்கள் பலவும், பற்பல பிறவி எடுத்தபோதிலும், திருமாலோடு மாறுபட்டு, உறவு முறை பாராட்டாது விரோதம் பாராட்டுகிறார்கள் என்று மனம் வருந்தி, ‘என்ன செய்வது?’ என்று ஆராய்ந்தார். பழகிய மானைக் காட்டிப் பழகாத மானைப் பிடிப்பது போல, உலகத்தாரை வாழ வைப்பதற்காக, மானிட சரீரத்தை உடையவர்களாய், விஷ்ணு பக்தியில் ஆழ்ந்து மூழ்கி திளைத்த ஆழ்வார்களை மண்ணுலகில் தோற்றுவித்தார். உலகில் கூறப்படும் பொருள்களுக்கு எல்லாம் குறிக்கோளாய் நிற்பது பரம பதத்தின் முடிவில்லாத இன்பம். அதனை அடைய தடையாக இருக்கும் பற்பல பிறமதங்களாகிய கடல்களை எல்லாம் வரண்டு போகும்படியாக அழித்து, திக்கெட்டும் நாராயணனி...

பகுதி - 10 - சடகோபன் அருள்

10. சடகோபன் அருள் காலைக் கதிரவன் புறப்படும் சமயத்தை அருணோதயம் என்பார்கள். பிறகு சூரியோதயம் ஏற்பட்டு எங்கும் வெளிச்சம் பரவுகிறது. சில சமயம் இருண்ட மேகங்கள் அந்த வெளிச்சத்தை மறைக்க, பலமான காற்று வீசத் தொடங்கியவுடன் அம்மேகங்கள் விலகிச் செல்ல மீண்டும் வெளிச்சம் நமக்குக் கிடைக்கிறது. ஆழ்வார்கள் காலத்துக்கு முன் அருணோதயமாக இருந்த இப்பூவுலகம், அவர்கள் அவதரித்தபின் சூரியோதயமாக விளங்கியது. சூரியனை மேகங்கள் மறைப்பது போல, ஆழ்வார்களின் அருளிச்செயல்களும் ஒருசில காலம் மறைந்திருந்தன. நாதமுனிகள் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' பிரபந்தத்தை ஏகசந்தையாகப்[1] பன்னீராயிரம் முறை இசைத்தார். அது, பலமான பன்னிரண்டு துவாதச நாமக் காற்றாக உருவெடுத்தது. மறைத்த மேகங்களை விலக்கி, திருப்பள்ளியெழுச்சியாக ஒலித்து, ஞானசூரியனான அரங்கனை எழுப்பிப் பக்தி ஒளியைப் பரவச் செய்தது. இந்த ஒளி நூறு குளிக்கு நிற்குமா போலே இருந்தது.[2] பெருமாளின் எண்ணற்ற திருநாமங்களை ஆயிரம் திருநாமங்களாகப் பீஷ்மர் விஷ்ணு சகஸ்ர நாமமாக ஜபித்தார். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரண்டு திருநாமங்கள்[3] முக்கியமாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டு திருமண் காப்ப...

ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமியும் நானும்

சென்ற ஞாயிறு ஸ்ரீ உ.வே. அரங்கராஜன் ஸ்வாமியின் 90-ஆம் ஆண்டு விழாவில் அடியேனையும் பேச அழைத்திருந்தார்கள். நேரம் குறைவாக இருந்ததால் ஐந்து நிமிடத்திற்கு வாய்க்கு வந்ததை உளறிவிட்டு வந்தேன். நான் பேச நினைத்து, எழுதி எடுத்துக்கொண்டு சென்ற உரை வடிவம் இது. ./சுஜாதா தேசிகன் ------o0o-o0o-o0o------ ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமியும் நானும் அடியேனுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் என் ஆசாரியர், 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடிகளை வணங்கி, இந்த ஆன்றோர் சபையில் குழுமியிருக்கும் ஆசாரியர்கள், பெரியோர்களை வணங்கி, என்னையும் புவியில் ஒரு பொருளாக்கி இன்று இங்கு பேச அழைத்ததற்கு நன்றி கூறி, மதுரைப் பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமியுடனான என் அனுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆங்கிலத்தில் ‘Odd man out’ என்பார்கள். இன்று அந்த ‘Odd man’ நான் தான்! என் முகத்தைப் பார்த்தாலே அது உங்களுக்குத் தெரிந்துவிடும். நெற்றியில் இருக்கும் திருமண்ணைச் சொல்லவில்லை—இங்கே இருக்கும் சபையில் எல்லோரும் நூல்களை நன்கு படித்தவர்கள்; நானோ முகநூல் (Facebook) படிக்கும் ஆசாமி! பொதுவாக, கடைசியில் பேச வருபவர்கள், "நான் ...