2. ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கதை - கனவில் தோன்றிய பாலகன் தொண்டை நாடு கரும்பு விளைச்சலுக்குப் பெயர் போனது. கரும்பு போன்ற சுவைமிக்க பொய்கை ஆழ்வார், ராமானுஜர்,திருக்கச்சி நம்பிகள், எம்பார், அப்புள்ளார் மற்றும் நம் தேசிகனை பெற்றுத் தந்த நாடு. தொண்டை நாட்டின் தலைநகர் கச்சி நகர் என்ற காஞ்சிபுரம். முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று. அங்கே திருத்தண்கா (தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை) திவ்ய தேசத்தில் தீபப்ரகாசர் சந்நிதி உள்ளது. அழகிய தமிழில் விளக்கொளிப் பெருமாள் ! விளக்கொளி பெருமாள் சந்நிதி அருகில் உள்ள அக்ரஹாரத்தின் பெயர் ‘தூப்புல்’(1) இங்கே ஸ்ரீராமானுஜர் நியமித்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான அனந்த ஸோமாஜியார் வாழ்ந்துவந்தார். அவருடைய குமாரர் புண்டரீகாஷதீக்ஷிதர். அவருக்கு குமாரர் அனந்தசூரி ஒரு வேதவிற்பன்னர். பகவத் கைங்கரியபரராய் விளக்கொளி பெருமாளுக்கு கைங்கரியம் செய்துவந்தார். விவாகப் பருவத்தை எட்டியதும், மிகச் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஞானியான அப்புள்ளாரின்(2) தங்கையான தோதாரம்பாவை விவாகம் செய்துகொடுக்க வேண்டினார். அப்புள்ளாரும் மனம் உகந்து பேரருளாளன் ஆசீர்வாதத்துடன் தச