ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம் சென்ற மாதம் அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் பெங்களூர் விஜயத்தின் போது அவரைச் சேவித்து ஆசீர்வாதம் பெற்றேன். கிளம்பும் முன் மீண்டும் அவரைச் சேவித்து “இன்னும் இரண்டு வாரத்தில் பிரபந்தம் புத்தகம் இரண்டாம் பதிப்பு வருகிறது. உங்கள் ஆசிரிவாதம் வேண்டும்” என்றேன். “நன்றாக வரும். இது போல மேன்மேலும் செய்யுங்கள்” என்று ஆசிவர்வாதம் செய்தார். அப்போது கையில் இருந்த முதல் பதிப்பை அவரிடம் சமர்பித்தேன். “இந்தப் புத்தகம் நினைவு இருக்கிறது” என்று இரண்டாம் பதிப்பின் விவரங்களை கேட்டறிந்தார். வீட்டுக்கு திரும்ப, காரை ஸ்டார்ட் செய்யும் போது ஓர் எண்ணம் தோன்றியது. ஆசாரியன் இருக்கும் அறைக் கதவை தட்டி உள்ளே சென்று அவரிடம் “இரண்டாம் பதிப்புக்கு ஸ்ரீமுகம் அருளவேண்டும்” என்றேன். “மெலிதான புன்னகையுடன். ஸ்ரீ காரியம் ஊரில் இல்லை. வந்தவுடன் ஏற்பாடு செய்கிறேன்” என்று அருளினார். வாகனத்துக்கு வந்த போது புத்தகம் அச்சுக்கு செல்லும் நாள் நினைவுக்கு வந்தது. மீண்டும் கதவை தட்டிக்கொண்டு உள்ளே சென்றேன். “புத்தகம் ஒரு வாரத்தில் அச்சுக்கு செல்கிறது....அத