குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் – புத்தக வெளியீட்டு அறிவிப்பு எல்லோருக்கும் இனிய ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி நல்வாழ்த்துகள்! இந்த நன்னாளில், ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை சார்பாக, 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தை' அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட "குட்டிப் பெண்ணின் குட்டி கதைகள்" என்ற நூல் முடியும் தருவாயில் உள்ளது என்பதையும், விரைவில் அச்சுப் பணிகள் தொடங்க உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஏன் இந்த புத்தகம்? "குழந்தைகளுக்கு எழுதுவது சுலபம் என்று சிலர் நினைக்கலாம்; ஆனால் குழந்தைகளுக்கு எழுதுவதுதான் கஷ்டம்" - இதை சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி! இன்றைய 'ஏ.ஐ' (AI) 'ரோபோடிக்ஸ்' உலகில், அறிவு அசுர வேகத்தில் வளர்ந்தாலும், அன்பும், பண்பும் எங்கோ தொலைந்துவிட்டது. ஒழுக்கமில்லாத அறிவு ஆபத்தானது! நிலத்தை கிண்டிவிட்டால் விளைச்சல் நன்றாக இருக்கும். குழந்தைகளின் மனமெனும் விளைநிலத்தை இப்போதே பக்குவப்படுத்தினால், எதிர்கால விளைச்சல் நன்மையாக இருக்கும். இந்தப் புத்தகத்தின் கதைகள் பக்தியையும், மனிதப் பண்புகளையும் குழந்தைகளு...