Skip to main content

Posts

Showing posts from January, 2009

புத்தகக் காட்சி 2009 ( Book Fair 2009 )

வீடு மாற்ற சரியான தருணம் எது? 1. வீட்டில் பாத்ரூம் சரியில்லை 2. பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை 3. அடுத்த மாதம் புத்தகக் கண்காட்சி விடை - 3. போன வருட இறுதியில் கொஞ்சம் பெரிய வீட்டுக்குப் போனால் நன்றாக இருக்குமே என்று எண்ணி, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் 100 அடி தள்ளி வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். புது வீட்டுக்குப் போவது என்பது கிட்னிக்கு டயாலிசிஸ் மாதிரி. வீட்டில் இருக்கும் குப்பைகள் எல்லாம் ஒழிந்தன. என்றோ காணாமல் போன வஸ்துக்கள் புதையலாகக் கிடைத்தன. “அட நான் ஸ்கூல் படிக்கும் போது உபயோகித்த பேனா, ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்”. சில பொருட்கள் புதையலாக மறைந்து போகும். “என் காது தோடோட திருகை எங்கே போட்டீங்க, எங்க அம்மா கல்யாணத்துக்கு வாங்கித் தந்தது”. ”புது வீட்டுக்கும் எல்லா புத்தகங்களையும் அள்ளிக்கட்டிண்டு வந்தீங்கன்னா..” என்ற சின்ன எச்சரிக்கையே சப்வே ”எதை எடுத்தாலும் பத்து ரூபா” பிளாஸ்டிக் சாமான் விற்கும் வியாபாரி போல ஆக்கியது. எல்லாப் புத்தகங்களயும் பரப்பிப் பார்த்த போது எனக்கே மலைப்பாக இருந்தது. எவ்வளவு புத்தகங்கள் படிக்காமல் அப்படியே இருக்கின்றன என்று. பல புத்தகங்கள் நான்

திருப்பாவை

நான்கு வருடங்களுக்கு முன்பு மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் திருப்பாவைக்கு (தமிழிலும், ஆங்கிலத்திலும் ) ஒரு படத்துடன் எளிய விளக்கமும் தந்தது நினைவிருக்கலாம். 2007 வருடம் திருப்பாவையில் வரும் உவமைகள் சில வற்றை எழுதினேன். 7 பாடல்களுடன் நின்றுவிட்டது, இந்த வாரம் இரண்டு பாடலுக்காவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன். திருப்பாவை பதிவுகளை முன்பு பார்க்காதவர்கள், வலது பக்கம் உள்ள கிருஷ்ணர் படத்தை கிளிக் செய்து படிக்கலாம். 

சாக்லெட் கடவுள் வந்திருந்தார்

சுஜாதா மறைவிற்குப் பிறகு முதன்முறையாக டிசம்பர் இறுதியில் சென்னை சென்றிருந்தேன். சென்னை பனகல் பார்க், கோடம்பாக்கத்தில் ஸ்கூல் சறுக்கு மரம் போல் மேம்பாலங்கள் முளைத்திருக்கின்றன. போத்தீஸ் பக்கம் பத்து நிமிடம் நின்று பார்த்தபோது, 2 பஸ், 5 ஆட்டோ சில பைக்குகள் போயின. மேம்பாலத்துக்குக் கீழே வழக்கம்போல் அதே கூட்டம். இரண்டு நாடகங்களுக்குப் போக முடிந்தது. கிரேஸி மோகனின்,-"சாக்லேட் கிருஷ்ணா", பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் (பூர்ணம் குருகுலம்)  பூர்ணம், சுஜாதா நினைவாக - "கடவுள் வந்திருந்தார்." [%image(20090102-crazy_mohan.jpg|227|176|null)%] சாக்லெட் கிருஷ்ணாவிற்கு என் மகளை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அவளுக்கு இது முதல் நாடகம் அனுபவம். போன சமயம் கிரேஸி மோகன் மேக்கப் இல்லாமல் "வாங்க தேசிகன்," என்று வரவேற்று கெஸ்ட் டிக்கேட் கொடுத்து உட்கார வைத்தார். ( கிரேஸி இதை 119 வது தடவை போடுகிறார் ) கதை ரொம்ப சிம்பிள். மாதுவிற்கு பல பிரச்சினைகள் (தங்கை கல்யாணம், பிரமோஷன், அப்பாவிற்கு கச்சேரி சான்ஸ்...). "கிருஷ்ணா ஒரு வழி சொல்லேன்" என்று வேண்ட, கிருஷ்ணா கிரேஸியாக மூக்கு கண