Skip to main content

Posts

Showing posts from April, 2017

மண் சொல்லும் கதை

சம்பிரதாயத்தில் ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். ஆனால் சீர்காழிக்கு அருகிலிருக்கும் திருவாலி திருநகரியில் அப்படி இல்லை. அவர்களுக்கு ஆழ்வார் என்றால் அவர் திருமங்கை மன்னன் தான். ‘திவ்யம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘divine’ என்று அர்த்தம் கொள்ளலாம். தமிழில் தெய்வத்தன்மை. ஆழ்வார்களை நாம் திவ்யசூரிகள் என்று அழைக்கிறோம். அவர்கள் பாடிய பாசுரங்களை ‘திவ்ய’ பிரபந்தம் என்கிறோம். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஸ்தலங்களை திவ்ய தேசம் என்கிறோம். நன்றாக கவனித்தால் ஆழ்வார்கள் சம்பந்தம் இருந்தால் மட்டுமே அது திவ்யமாகிறது!. ஆழ்வார்களில் திவ்யமான ஆழ்வார் யார் என்றால் அது திருமங்கை ஆழ்வார் தான். மிகப் பல திவ்ய தேசங்களுக்கும் நேரில் சென்று சேவித்து அர்ச்சாரூபமாக இருக்கும் எம்பெருமானைப் பாடிய நம் மங்கை மன்னனின் அர்ச்சாரூபத்தை திருவாலி திருநகரியில் பார்க்கும்போது  அது நிஜ ஆழ்வாராகவே “உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று கேட்கத் தோன்றும். சில மாதங்கள் முன்பு ஸ்ரீ.உ.வே. எம்பார் ராமானுஜன் ஸ்வாமி அவர்கள் முகநூல் வழியாக “திவ்யமான திருமங்கை ஆழ்வார் வாழும் திவ்யதேசமான எங்கள் ஊர

நினைவு அலைகள் – ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்

திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன், TSS Rajan (1880–1953). வடகலை ஐயங்கார். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து, சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பிறகு பணி நிமித்தம் ரங்கூனுக்குச் சென்று கஷ்டப்பட்டு, மேல்படிப்புக்காக லண்டன். இந்தியா வந்த பிறகு ஏழைகளுக்கு மருத்துவம், ராஜாஜியுடன் நட்பு, காந்தியுடன் பழக்கம். உப்பு சத்தியாகிரம் - 18 மாதம் சிறை, மந்திரிப் பதவி, விவசாயம் என்று அவர் வாழ்க்கைப் பயணம் முழுக்க புஃபே சாப்பாடு மாதிரி வரலாற்றுக் குறிப்புகள் பரவிக் கிடக்கின்றன. “Autobiography is probably the most respectable form of lying” என்பார்கள். பழைய சுயசரிதை என்றால் அதன்  ‘இங்ரெடியண்ட்ஸ்’ என்று நாம் நினைப்பது - கொஞ்சம் பொய், நிறைய சலிப்பு, புரியாத தமிழ். ஆனால் ராஜன் அவர்களின் சுயசரிதை அப்படி இல்லை. இன்று வந்த தினத்தந்தி மாதிரி எல்லோரும் படிக்கக் கூடிய தமிழில் எளிமையாக இருக்கிறது. பொய் கலக்காத அக்மார்க் சுயசரிதை. டைரிக் குறிப்பு போல இல்லாமல்,  ‘நினைவு அலைகளாக’ அவர் அனுபவத்தைக் கொண்டு பல  ‘ஸ்ரீரங்கத்து தேவதைகளை’ உருவாக்க முடியும்! இதுதான் இந்தப் புத்தகத்தின் Unique Selling Point. வெள

அடியேன் ராமானுஜ தாஸன் !

திருநகரிக்கு வந்த அன்று துவாதசி. திருமங்கை அழகனை சேவிக்க சென்றேன். அர்ச்சகர் ஸ்வாமி வர கொஞ்சம் நேரம் ஆகும் என்றார்கள். கோயிலைச் சுற்றி வந்தேன். கோயில் உள்ள கிணற்றில் ஒரு வயதான பெண்மணி தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தார். தண்ணீரை குடித்துப் பார்க்கலாம் என்று “பாட்டி குடிக்க கொஞ்சம் தண்ணீர் ” என்றேன். என்னைப் பார்த்த பாட்டி பத்து அடி ஒதுங்கி “சாமி எவ்வளவு வேணுமுனாலும் எடுத்துக்கோங்க” என்றாள். தண்ணீர் கல்கண்டு. இது மாதிரி தண்ணீர் குடித்ததே இல்லை. விசாரித்ததில் இந்தத் தண்ணீர் தான் மடப்பள்ளியிலும், சன்னதி தெரு முழுக்க தளிகைக்கு உபயோகிப்பார்கள் என்று தெரிந்துக்கொண்டேன். அடுத்த முறை சென்றால் நிச்சயம் பருகிவிடுங்கள். “பாட்டி ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன்” என்றவுடன் பாட்டி தன் இரு கையால் முகத்தை வெட்கத்துடன் மூடிக்கொண்டாள். பிறகு சன்னதிக்கு சென்ற போது துளசி கொடுத்தார்கள். பாட்டி கொடுத்த தண்ணீரும் பெருமாள் அருளிய துளசியும் ’துவாதசி பாராயணம்’ ஆயிற்று. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை பெற்றார்கள் என்றும

சென்னை நவக்கிரக ஷேத்திரங்கள்

நவக்கிரகங்களை திருச்சி கோர்ட் பிள்ளையார் கோயிலில் பார்த்திருக்கிறேன். சிகப்பு, மஞ்சள், வெள்ளை நிற துணிகளை உடுத்தி, வெவ்வேறு திசைகளில் பார்த்துக்கொண்டு எப்போது யாராவது விளக்கு ஏற்றிக்கொண்டோ அல்லது சுற்றிக்கொண்டோ இருப்பார்கள். சனிக்கிழமை என்றால் கூட நான்கு பேர் சுற்றுவார்கள். வருடப் பிறப்பு பெயர்ச்சி பலன்கள் அல்லது அன்மை ஜோசியர் விஜயம் காரணமாக இருக்கலாம். அதிக ’நிதி’ முதலீடு செய்தவர்கள், எழுத்தாளர்கள் குறிப்பாகச் சினிமாவிற்கு எழுதுபவர்கள், அல்லது சினிமா சம்பந்தப்பட்டவர்கள், ராசி மோதிரம், கலர் துண்டை நம்புகிறவர்கள், சந்தன பொட்டுடன் குங்கும பொட்டு வைத்திருப்பர்கள் முக்கால்வாசி பேர் நவக்கிரகங்களை நம்புவார்கள். நான் நவக்கிரங்களை சுற்றியதில்லை. ஆனால் கடந்த ஞாயிறு அன்று டாக்டர் சித்ரா மாதவன் அவர்கள் மைலாப்பூர் ஆர்.கே அரங்கில் நவக்கிரங்களை பற்றிய சொற்பொழிவைக் கேட்ட போது இத்தினை நாள் சுற்றாத எல்லா நவக்கிரங்களையும் சுற்று வந்த ஃபிலீங். சொற்பொழிவு முழுக்க சென்னையை சுற்றி இருக்கும் நவக்கிரக ஷேத்திரங்களை பற்றியது. சூரியனைச் சுற்றினால் என்ன பலன் என்பது போல இல்லாமல், அந்தக் கோயிலை சுற்றி

ஊசியின் நிழல்

”ரெண்டு துணியை ஜாயின் பண்ணி ஒரு க்ளிப் போடுங்கோ ... ” என்று நண்பர் ரிஷபன் எழுதியதைப் படித்த போது எனக்கு “ஆண்டாள் ஞாபகம் தான் வருகிறது !” என்றேன். ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களுக்கு இந்த அர்த்தம் உடனே புரிந்துவிடும். இது ஒரு விதமான ‘code word’. பெருமாளுக்கு அலங்காரம் செய்யும் போது இரண்டு துணிகளை ஒன்றாக ஊசி நூலைக்கொண்டு சேர்த்து தைக்கும் போது அர்ச்சக ஸ்வாமிகள் ‘ஊசியைக் கொண்டு வாரும்’ என்று சொல்லாமல். ‘ஆண்டாளைக் கொண்டு வாரும்’ என்று தான் சொல்லுவார்கள். பரமாத்மாவுடன் ஜீவாத்மாவைச் சேர்ந்து தைக்கும் கருவியாக ஆண்டாளின் திருப்பாவை இருக்கிறது என்பதானால் இருக்கலாம். ஊசி என்ற வார்த்தை சிலப்பதிகாரம், புறநானூறு போன்றவற்றில் இருக்கிறது ஆனால் ஆழ்வார்கள் அந்த வார்த்தையை உபயோகிக்கவே இல்லை ( என்று நினைக்கிறேன் ). ஸ்ரீராமானுஜர், நம்பிள்ளை காலத்தில் ஊசி என்ற வார்த்தை இருந்திருக்கிறது. அதன் ’பின்’னாடி ஓர் ஐதிஹ்யம் இருக்கிறது. ஸ்ரீஎம்பார் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். எம்பாருக்கும் ஊசிக்கு என்ன சம்பந்தம் ? எம்பாருக்கு தாம்பத்திய வாழ்வில் அவ்வளவு நாட்டம் இல்லை. உடையவர் அவரைக் கூப்பிட்டு ‘இருட்டு