Skip to main content

Posts

Showing posts with the label பிரபந்தம்

சேவடி சில குறிப்புகள்

சேவடி சில குறிப்புகள் திருப்புல்லாணி ஸ்வாமி சந்தமிகு தமிழ்மறை என்ற புத்தகத்தின் சில பகுதிகளைச்  சில நாட்கள் முன் பகிர்ந்தார். அதில் திருப்பல்லாண்டு தொடக்கத்தில் ‘செவ்வடி’ என்று அச்சடித்துள்ளதுக்கு அருகில் ‘சேவடி’ என்று பால்பாயிண்ட் பேனாவில் எழுதிய குறிப்பைப் பார்த்தேன்.  இதைப்  பாடபேதம் என்பார்கள். ஸ்ரீ.உ.வே AV ரங்காசாரியார் பாடபேதங்களுக்கு 600 பக்கங்களில் தனிப் புத்தகமே போட்டுள்ளார்.  வியாக்கியானத்தில் செவ்வடி என்றும், சேவடி பாடாந்தரம் (சேவிக்கும் போது உபயோகப்படுத்துவது) என்று குறிப்பு உள்ளது.  செவ்வடி - செவ்விய + அடி அதாவது சிவந்த அடி என்பது உரைகளில் உள்ளது. செவ்விய என்றால் செம்மையான, செம்மை என்ற பொருளிலும் வரும் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.  சேவடி - செ + அடி - செ என்ற ஒற்றைச் சொல் சிவப்பு என்ற பொருள் தரும் என்று நன்னூல், போன்ற இலக்கண நூல்கள் கூறியிருக்கிறது.  ‘சேவடி’ என்ற சொல் ஆழ்வார்கள் எங்கெல்லாம் உபயோகித்துள்ளார்கள் என்று சொல்லடைவு புத்தகத்தைப் பார்த்த போது 26 இடங்களில் வருகிறது.  சேவடி (26) :1/4, 47/1, 419/3, 469/2, 583/2, 660/4, 661/...

நம்மாழ்வாரின் திருவாசிரியம் - திருஆச்சரியம் !

 நம்மாழ்வாரின் திருவாசிரியம் - திருஆச்சரியம் ! 3D திரைப்படம் பார்க்க ஒரு கண்ணாடி தேவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கண்ணாடி இல்லாமல் பார்த்தால் படம் மங்கலாகத் தெரியும். கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்தால் படம் உங்கள் கண்முன்னே வந்து விளையாடும். நாம் தினமும் இந்த உலகத்தை 3Dல் தான் பார்க்கிறோம். கண்களை மாறி மாறி மூடி மூடித் திறந்து பாருங்கள் ஒரே பொருள் வேறு வேறு கோணத்தில் தெரியும் ஆனால் திரைப்படத்தில் பார்க்கும் 3D போலப் பரவசம் ஏற்படுவதில்லை. அதுவும் முதன் முதலாக 3டி படம் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. 3D கண்ணாடி எப்படி வேலை செய்கிறது ? ஆனந்த விகடனில் முன்பு கண்ணாடியுடன் ஒரு 3D படம் ஒன்றைக் கொடுப்பார்கள். நீல, சிகப்பு வண்ணம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அச்சு அடித்திருக்கும். கண்ணாடி உதவியுடன் பார்த்தால் கிட்டத்தட்ட 3D மாதிரி தெரியும். விஷயம் இது தான். நீல நிறத்தில் இருக்கும் படம் நீல கண்ணாடி வழியாகவும், சிகப்பு நிறத்தில் இருக்கும் படம் சிகப்பு கண்ணாடி வழியாக உங்கள் கண்கள் வழியாக மூளைக்கு சென்று முப்பரிமாணமாக மாற்றிக் காட்டி வித்தையைச் செய்கின்றன. இன்று திரைப்பட...