Skip to main content

Posts

Showing posts from 2016

2016ல் என்ன செய்தேன்

2016 பெரிசாக ஒன்றும் செய்யவில்லை என்பதே பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ’பெரிய’ என்ற வார்த்தைக்கு ஏற்றார் போல் சொல்ல வேண்டும் என்றால், வருட ஆரம்பத்தில் பெரிய நம்பிகள் திருநட்சத்திரத்திரத்துக்கு பெரிய நம்பிகள் திருமாளிகையில் இருந்தேன். வருடக் கடைசியில் அதே பெரிய நம்பிகள் திருநட்சத்திரத்திரம், அதே திருமாளிகையில் நிறைவாக நிறைவு செய்தேன். சித்திரை மாதம், ஸ்ரீஉடையவர் திருநட்சத்திரத்துக்கு ஒரு நாள் முழுக்க ஸ்ரீபெரும்பூத்தூரில் இருந்தேன். ஸ்ரீராமானுஜர் பக்கம் இருந்த கூட்டம் அதிகமாக இருக்க என்னையும் உள்ளே வைத்து கதவைச் சாத்திவிட்டார்கள். குழந்தையைத் தூக்கி கொஞ்சம் தூரத்தில் உடையவருடன் அடியேன் இருந்தது பெரும் பேறு. காஞ்சிபுரத்திலிருந்து சில மைல் தொலைவில் சாலைக் கிணற்றுக்கு சென்ற போது அதை நிர்வகிப்பவரைக் கண்டு நாம் என்ன பெரிய சாதனைச் சாதித்துவிட்டோம் என்று கூனி குறுகினேன். வருடக் கடைசியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவரசுக்கு சென்று சில மணி நேரம் உலாவினேன். மாடுகள் சாலையில் அடிப்பட்டால் அதைக் கருணையுடன் பார்க்காமல், எவ்வளவு கிலோ என்று பார்க்கும் சமூகத்தில் நண்பர் வீரராகவன் போன்ற நல்ல உள்ள

முடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை

சில மாதங்களுக்கு முன் ’கொம்பன்’  படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு வசனம் “மீசைய முறுக்கிட்டு திரியற இவிங்கள போல நீயும் உருப்படாம போவ” எனக்கு மீசை இல்லை, அதனால் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தேன். படத்தில் நடிப்பவர்கள் எல்லோர் முகத்திலும் புசுபுசுவென்று முடியும், சண்டைக்குச் சட்டையை கழட்டினால் நெஞ்சிலே அதே புசுபுசு. ”நீ என்ன பெரிய கொம்பனா?  அல்லது உன் தலையில் என்ன பெரிய கொம்பா மொளச்சிருக்கு” என்று பேசுகிறோம்.  மீசைக்கும் கொம்புக்கும் என்ன சம்பந்தம். இருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். சினிமாவில் ஒருவனுக்குத் தலை நிறைய முடி இருந்தா அவன் நகரத்துப் பொறுக்கி; மூஞ்சி முழுக்க இருந்தா கிராமத்து ரவுடி; கிராப் வெட்டியிருந்தால் போலீஸ்; பங்க் என்றால் தாதா என்ற அடையாளங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெய் சங்கர் படங்களில் எக்ஸ்டராவாக கண்ணத்தில் ஒரு மச்சம் இருக்கும். சிலருக்கு மச்சத்தின் நடுவில் ஒரு முடி வளரும். ஏன் என்று தெரியாது. தேவர் மகனில் சிவாஜி சாருக்கு அடுத்ததாகக் கமல் சார் வாரிசாக மாறும் போது தலையில் ’பங்க்’கை எடுத்துவிட்டு அப்பா மாதிரி மீசை வைத்துக்கொண்டு முடி திருத்திக்கொண்டு வருவா

கல்கியில் தொடர் - நெருங்காதே நீரிழிவே !

எம்.எஸ்.சுப்புலஷ்மி - 100

எம்.எஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது ”குறையொன்றுமில்லை”, ”வேங்கடேச சுப்ரபாதம்”, ”அன்னமாச்சாரியா கீர்த்தனைகள்”, ”மீரா பஜன்” என்று சொல்லிக்கொண்டே போகலாம். மற்றவர்களிடம் ( எல்லோரையும் சொல்லவில்லை) இந்த மாதிரி உருப்படியான உருப்படி எதுவும் இல்லை. திருமணம் ஆன புதிதில் என் மனைவி எனக்கு அவர் பாடிய ”சூர்தாஸ் பஜன்களை” அறிமுகம் செய்து வைத்தார். இன்று வரை இதற்கு இணையாக நான் எதையும் கேட்டதில்லை. ( உதாரணத்துக்கு இதைக் கேட்டுப்பாருங்கள் https://mio.to/album/MS.+Subbulakshmi/Surdas+Bhajans  ) சங்கீதம் ரசிக்க முதலில் சாரீரம் நன்றாக இருக்க வேண்டும். உச்சரிப்பு ஒழுங்காக, குரல் பிசிறு தட்டாமல் தேவை இல்லாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் எவரஸ்டை தொட்ட எடுமண்டு இல்லரியுடன் எல்லாம் போட்டி போடக் கூடாது.  திறமை காட்டுகிறோம் பேர்வழி என்று வேர்த்துக்கொட்டிக்கொண்டு ஸ்வரங்களுடன் ஜிம்னாஸ்டிக் வேலைக் கூடாது. இவை எல்லாம் செய்தால் பாவம் என்ற முக்கியமான விஷயம் காணாமல் போய்விடும். இன்று பாடும் பல கலைஞர்கள் ( சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை ) பாவம் என்ற ஒன்று மிஸ்ஸிங். அப்படியே இருந்தாலும் செயற்கையாக இருக்கிறது அல்லது சில

பாவம் போக்கும் பாலம்

எங்கும் ராமர் கலர் “உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவேன் பார்த்துக்க” என்ற மெரட்டலுக்கு அடிபணியாத சினிமா கதாநாயகன் மாற்றப்படும் இடமான இராமநாதபுரத்துக்கு தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புல்லாணி திவ்யதேசம். எந்த கல்லுரியிலும் தமிழில் முனைவர் பட்டம் வாங்காத ஆண்டாள் “ஓத மாகடல் வண்ணா உன் மண     வாட்டி மாரோடு சூழறும் சேதுபந்தம் திருத்தினா யெங்கள்     சிற்றில் வந்து சிதையேலே - 520 என்று எந்த எஞ்சினியரிங் காலேஜிலும் பட்டம் வாங்காத ஸ்ரீராமருக்கு உதவ வந்த வானர சேனையினால் கட்டப் பட்ட சேது என்று மங்களாசாசனம் செய்கிறார். ‘ஸேது’ என்றால் வடமொழியில் “அணை” என்று பொருள். “ஆஸேது ஹிமாசலம்” என்று பழங்கால வழக்கு 400கிமீ தள்ளி, தற்போது “இமயம் முதல் குமரி வரை” என்று மாறிவிட்டது. “திருஅணை காண அருவினை இல்லை” என்ற பழமொழிக்கு சுலபமான அர்த்தம் - இராமர் கட்டிய இத் திருஅணையை பார்த்தால் நம் பாவங்கள் போகும். பார்த்தாலே பாவங்கள் போகும் என்கிறார்கள். நான் பார்த்து, குளித்துவிட்டு என்னுடைய பாவ கவுண்டரை ரிசெட் செய்துவிட்டு திரும்பினேன். கோடியில் இருக்கும் தனுஷ்கோடி திருப்புல்லாணிக்கு

நோ நான்சென்ஸ் டாக்டர்

இரண்டு வருஷம் முன்வேலை நிமித்தமாக, சென்னைக்கு வந்தவுடன் தொண்டை கட்டிக் கொண்டு, ஜுரம் வந்தது. தி.நகரில் பதினைந்து வருஷத்துக்கு முன் எனக்குப் பழக்கப்பட்ட டாக்டர் விஜயராகவனிடம் சென்றேன். கிளினிக் பெரிதாக மாறவில்லை, காத்துக்கொண்டு இருந்தபோது, பலகையில் இரண்டு வரி எழுதியிருந்ததைப் படித்து ஆச்சர்யப்பட்டேன். ‘Sulphonylurea போன்ற டயபட்டீஸ் மருந்துகளைக் கொண்டு வரும் மெடிக்கல் ரெப்களுக்கு இங்கே அனுமதி இல்லை.’ அடுத்த வரி இன்னும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. உங்களுக்கு டயபட்டீஸ் இருக்கா அதை ரிவர்ஸ் செய்யலாம்!” டாக்டரிடம் விசாரித்தேன். ஞாயிற்றுக்கிழமை இதைப்பற்றிப் பேசுவேன். வந்து கேளுங்களேன்” என்றார். ஞாயிறு அவர் பேச்சைக் கேட்டபோது தெளிவு பிறந்தது. வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கூற்றை முழுவதும் நிராகரித்தார். மேலும் – தினமும் காலை பிரட் சாப்பிடுங்கள், இரவு சப்பாத்தி சாப்பிடுங்கள், நிறையப் பழங்கள் எடுத்துக்கோங்க, வாக்கிங் போங்க, தினமும் ஆறு வேளை சாப்பிடுங்கள் போன்ற எல்லாவற்றையும் நிராகரித்தார். அவருடைய இரண்டு மணி நேரம் பேச்சின் சாராம்சம் இதுதான். மனிதன் நூறு வயது வா

ஆசார டயட்

ஆசாரமாக இருந்தாலே பல வியாதிகள் நம்மை அண்டாது. ஆசாரம் இருப்பது ஏதோ ஐயர், ஐயங்கார் சமாச்சாரம் என்று ஒதுக்கிவிடுகிறோம். கல்கி கட்டுரையைப் படித்துவிட்டு பலர் ”என்ன டயட் சார்?”  என்று கேட்கிறார்கள். டயட் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முடிந்தவரை ஆசாரமாக இருப்பதும். ஆசாரமாக இருந்தால் உடல், மனம் அழுக்காகாமல் இருக்கும். ஏகாதசி அன்று முக்கியமான கோயிலின் முக்கியமான அர்ச்சகர் வெஜிடபுள் பிரியாணி பச்சை வெங்காய பச்சடியுடன்சாப்பிடுவதை பார்த்தேன். அதே போல யாத்திரையில் குடுமி வைத்த வைதீகர் முட்டை ஆம்லட் போடும் கடையில் காலில் செருப்புடன் டீ போட்டுக்கொண்டு இருந்தவருடன் டீ வாங்கிக் குடித்தார்,  தன் மடியான வெள்ளி டம்பிளரில் !

காஞ்சிபுரத்து அணில்கள்

காஞ்சிபுரம்  குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித் தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன் ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட குரங்குகள் அணை போடக் கல்லைத் தூக்கிப் போகின்றன. அதைப் பார்த்த அணில்கள் மலையைத் தூக்க இயலாத அணில் கூட்டம் கடலில் உள்ளே சென்று தங்கள் உடலை ஈரமாக்கிப் பின் அந்த ஈர உடலில் மண்ணைப் புரட்டிக்கொண்டு ஓடிச் சென்று மண்ணை உதறி அணைகட்ட உதவுகின்றன. நான் அந்த அணில் போல் நான் இல்லையே என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலையில் வருத்தப்படுகிறார். சிலரைப் பார்க்கும் போது நமக்கு அந்த எண்ணம் ஏற்படுகிறது. அடியேனுக்கு இந்த மாதிரி ஓர் அனுபவம் காஞ்சிபுரத்தில் ஏற்பட்டது. அதைச் சொல்லும் முன் என் பயணக் குறிப்பு சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன். விமானம், புஷ்கரணி ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சிபுரம். ஆழ்வார்களைத் தவிர, வேதாந்த தேசிகன் ( திராமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ), கூரத்தாழ்வான் (வரதராஜ ஸ்தவம்), ஸ்ரீமணவாள மாமுனிகள் (ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம்) என்று பாடியுள்ள

கண்களை திறக்கும் மூடிகள் !

யானை வாகனத்துடன் திரு சுந்தரராஜன் Recycle' என்ற வார்த்தைக்கு நச்சென்ற ஒரு தமிழ் வார்த்தை இல்லை.மறுசுழற்சி, மறுபயன்பாடு என்ற வார்த்தைகள் இருந்தாலும், அவை உபயோகித்தால் உடனே நம் மனதுக்குச் சட்டென்று அதன் பொருள் உறைப்பதில்லை. ’கபாலிடா’ போன்ற ஒரு வார்த்தையை நேற்று காஞ்சிபுரத்தில் இதற்கு கண்டுபிடித்தேன். அந்த வார்த்தை ‘’சுந்தரராஜன்’ அவர் வீட்டுக்குச் சென்று உட்கார்ந்த போது மாடிப்படியின் மேல் காஞ்சி தேவ பெருமாளும் தாயாரும் காட்சி தந்தார்கள். அடியேனின் பக்தி பெருமாள் தாயாருடன் காட்சி தரும் அளவிற்கு பிரமாதம் இல்லையே எப்படி என்று நினைத்து அவரிடம் ”மேலே பெருமாள்... “ “மூலவர் தான் மேலே போய் பாருங்க” தேவராஜ பெருமாள் படிக்கட்டு மாதிரியே ஏறிக் கிட்ட சென்ற போது பல ஆச்சரியங்கள் கத்துக்கொண்டு இருந்தது. தாயார் முகம் ஏதோ பழைய தண்ணி மக். பெருமாள் கீரிடம் ஏதோ பழைய பிளாஸ்டிக் கூடை, கை ஏதோ பழைய பைப் ( இனி நான் சொல்ல போகும் எல்லாவற்றிலும்‘பழைய’ என்ற வார்த்தையை சேர்த்துப் படிக்கவும் ). கண்களுக்கு மூடிகள், துணிகள், துணி உலர்த்தும் கம்பி, அட்டைப் பெட்டி என்று ஒரு மினி வேஸ்ட்’ பேப்பர் கடையே

பனை மரம்

குணசீலத்தில் நுங்கு  பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் இருக்கிறதா என்று தேட வேண்டும். ரயில், பேருந்து பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை இலை வாசனையுடன் முன்பு எல்லாம் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது எல்லாம் கேரி பேக் தான். ஆனால் இந்த வருடம் குணசீலத்தில் ஒரு தாத்தா பனை ஓலையில் எங்களுக்கு நுங்கு கட்டித்தந்தார். பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களிலும், ஆழ்வார் பாடல்களிலும் இருக்கிறது ரயில், பேருந்து பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை இலை வாசனையுடன் முன்பு எல்லாம் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது எல்லாம் கேரி பேக் தான். ஆனால் இந்த வருடம் குணசீலத்தில் ஒரு தாத்தா பனை ஓலையில் எங்களுக்கு நுங்கு கட்டித்தந்தார். மடல் இலக்கியத்தில் மடல் ஏறுவோர் பனைஓலையைப் பயன்படுத்துவர் என்று இருக்கிறது.  பனை மரத்தின் கிளையின் இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்து அதன் ம

மாப்பிளையை வரவேற்ற மாமனார் !

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு ஆழ்வார்கள் அறிமுகமானார்கள். அந்த வயதில், திருப்பாவை முதல் இரண்டு பாடலும், கடைசி இரண்டு பாடலும் மனனம். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார். கல்லூரி காலத்தில் ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் என் கூடவே பயனித்தார்கள். ஆழ்வார்கள் கோஷ்டி ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை (25 வருடம் முன்) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களையும் வரிசையாகப் பார்த்த போது அதுபோலவே வீட்டிலும் சின்னதாக மாடல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதே மாதிரி மாடல் செய்ய, கூகிள் இல்லாத காலத்தில், ஆழ்வார்கள் அவதார ஸ்தலத்தில் உள்ள உற்சவர் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். கிட்டதட்ட 16 வருடங்கள் முன்பிருந்தே ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்தில் உள்ளது போலவே சின்னதாக யார் செய்து கொடுப்பார்கள் என்று தேடத் தொடங்கினேன். பல இடங்களில் விசாரி