Skip to main content

Posts

Showing posts from February, 2010

காதலாவது கத்தரிக்காயாவது

“எங்க காதலைக் கத்தரிக்காதீங்க!” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா?’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்! காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம். நன்றி :  flickr இந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளா

ரங்கராஜனும் ரங்கநாதனும்!

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தில்.... குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; - ஆண்டாள் அருளிய திருப்பாவை( 28 ) இந்த வரிகளுக்கு எளிய விளக்கம்: "எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா; நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது." சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது "இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்" என்பார். அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார். " ஏம்ப்பா வெயில்ல போற?" என்று கேட்டால், "யாருக்குத் தெரியும்?  இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?" என்பார். அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதி

பூவா தலையா

மேலே பார்க்கும் இந்த ஃபிளக்ஸ் பேனர் (தமிழ் பெயர் டிஜிட்டல் பேனர்), 3 பாஸ் முறையில், பத்துக்கு பத்து என்ற அளவில், கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் செலவில் அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், வட்டம் என்ற நீண்ட பட்டியலினால் கொஞ்சம் கனமாகவே இருந்தது. ஏழைகளின் காவலன் என்ற வாசகத்துக்கு கீழே, தலைவர் இரு கரம்கூப்பி வணக்கம் சொல்லும் படத்தில் பவழ மோதிரம் பளிச் என்று தெரிந்தது. வட்டங்களின் படங்கள் சதுரமாக ஸ்டாம்ப் சைஸுக்கு கீழே அடுக்கியிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு பட்டி. வெயில் வழக்கதை விட அதிகமாக அடிக்கும் ஒரு நாள். மெயின் ரோட்டிலிருந்து பிரியும் அந்த ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் போனால், “மங்கலம் காலனி வருக! வருக!” என்று வரவேற்கும். அதைத் தாண்டிப் போனால் மங்கலம் காலனி எக்ஸ்டென்ஷன். தபால்காரரைத் தவிர்த்து வேறு யாரைக் கேட்டாலும் “எக்ஸ்டன்ஷனா ? என்று வானத்தைப் பார்த்துவிட்டு “அங்கே சிவா மெடிக்கல்ஸுல கேளுங்க” என்பார்கள். பிரசித்தி பெற்ற சிவா மெடிக்கல்ஸ் பக்கத்தில் குப்பைத் தொட்டி மறைத்திருக்கும் மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த கல்லில் எழுதியிருக்கும் “மூன்றாவது மெயினை”க் கடந்த