Skip to main content

Posts

Showing posts from November, 2022

காந்தாராவும் காப்பியும்

 காந்தாராவும் காப்பியும்  பல வருடங்கள் முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த பத்தாவது நாள் கொரியாவிற்கு அனுப்பினார்கள். போகும் போது என் பாஸ் பெரிய நிறுவனம் புதிதாக ஒன்றைத் தயாரிக்க போகிறார்கள். அதன் விவரக்குறிப்புகளை ஒழுங்காக எழுதிக்கொண்டு வா என்று அறிவுரையுடன் பெட்டிப் படுக்கையுடன் கிளம்பினேன். கொ(பெ)ரிய மேலதிகாரியைச் சந்தித்தேன். ”உங்களுடைய தயாரிப்பு எப்படி வேண்டும் அதைக் குறித்து சொல்லுங்கள்” என்று குறிப்பை எழுத புத்தகத்தை திறந்தேன். அவர் என் கையில் டேபிள் மீது இருந்த ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து, இதே மாதிரி ’ஈயடிச்சான் காப்பி’ செய்து கொடுங்கள் என்று ஐந்து நிமிடத்தில் மீட்டிங்கை முடித்துக்கொண்டார். அவர் கொடுத்தப் புத்தகம் பெரிய அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்பு.  ”இதை அப்படியே கா.அடித்தால் பிரச்சனைகள் வராதா ?” போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன். நீங்கள் செய்து கொடுங்கள் பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். செய்து கொடுத்தோம். அதில் அவர்கள் சிற்சில மாற்றங்கள் செய்து சில புதிய அம்சங்கள் சேர்த்து புதிய தயாரிப்பு

யாதவாப்யுதயம் - தமிழில்

யாதவாப்யுதயம் - தமிழில்  இன்றைய 'கூல்’ ப்ரோ குழந்தைகள் தமிழ் மொழியைப் படிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதில் சமஸ்கிருதம் எல்லாம் ’டூ- மச்’ . சமீபத்தில் ’தாங்கள் பதிப்பித்த பதம்  திவ்யப்  பிரித்த பிரபந்தம் ஆங்கிலத்தில் கிடைக்குமா ?’ என்று ஓர் அன்பர் கேட்டார். நிலைமை இப்படி இருக்க ஸ்வாமி தேசிகன் அருளிய சமஸ்கிருதப் பொக்கிஷங்கள் என் தாத்தா காலத்தோடு போய்விட்டது.  ஆண்டவன் ஆசிரமம், அல்லது அஹோபில மடத்தில் ஸ்பான்சர்களின்  உபயத்தால் அதைப் பதிப்பிக்கிறார்கள். ஆனால் அதை வாங்கி படிக்க வேண்டிய நம் குழந்தைகள் அமெரிக்கா சென்றுவிட்டார்கள். என்னைப் போன்றவர்கள் அந்த மாதிரி புத்தகங்களை  திருப்பிப் பார்த்து எல்லாம் சமஸ்கிருதம் என்று கீழே வைத்துவிடுவேன். இன்று சமஸ்கிருதப் பொக்கிஷங்களுக்கு ’சப்-டைட்டில்’ தேவைப்படுகிறது. யாரையும் குறை சொல்ல முடியாது, ஆனால் இது தான் இன்றைய நிலைமை. கோதா ஸ்துதி, பாதுகா  சஹஸ்ரம்  போன்ற பிரபலமானவை தமிழ் விளக்கத்துடன் கிடைக்கிறது. அதைத் தவிர உபன்யாசம்  போன்றவைகலால்  பலரிடம் சென்று சேருகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் பாகவதம் தொடர்பாக படித்துக்கொண்டு இருந்த போது ஸ்வாமி தேசிகனின்

இடைகழி மெய் விளக்கு

 இடைகழி மெய் விளக்கு   முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்களின் திருவந்தாதிகள் முதல்/இரண்டாம்/மூன்றாம் திருவந்தாதி என்ற வரிசையில் இயற்பாவில் வருகிறது. 'ஞான தமிழ் புரிந்த நான்' என்று சொல்லும் ஆழ்வார்களுக்கு ஸ்வாமி தேசிகனின் இந்தப் பாசுரத்தை தமிழில் அருளியிருக்கிறார்  பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால் மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால் நாட்டுக்கு இருள் செக நான்மறை யந்தாதி நடை விளங்க வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே மருளற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையம் எல்லாம் இருள் அற்று இறைவன் இணை யடிப் பூண்டு உய எண்ணுதலால் தெருள் உற்ற செந்தொழில் செல்வம் பெருகிச் சிறந்தவர் பால் அருள் அற்ற சிந்தையினால் அழியா விளக்கினரே முதலாழ்வார்களின் வைபவத்தை அதன் மேன்மையையும் இப்படி ரத்தான சுருக்கமாகச் சொல்ல ஸ்வாமி தேசிகனாலேயே முடியும். என்ன பொருள் என்று பார்க்கலாம்  முதல் பாசுரத்தில்  - முதலாழ்வார்கள் மூவர் எழுதும் பாடல்களே பாடல்.  முன்பு ஒரு காலத்தில் அதிகமாக நெருங்கியதால் திருக்கோவலூரில் ஒரு வீட்டின் இடைகழியிலேயே வேதாந்த மார்க்கம் பிரகாச