Skip to main content

Posts

Showing posts with the label சனாதனம்

பசுக்களின் வாத்சல்யம்

பசுக்களின் வாத்சல்யம்  வாத்சல்யம் என்ற சொல்லுக்குக் கூகுள் கூறும் பதில் இது - “வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது” ஆங்கிலத்தில் “Parental Love” என்று சொல்லலாம். இவை எல்லாம் கஷ்டம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள படத்தைப் பார்க்கலாம். அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் கன்றுக்குட்டியுடன் ‘வாத்சல்யத்துடன்’  இருக்கும் காட்சி. இதே போலக் கன்றுக்குட்டியுடன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் படம் ஒன்றும், ஸ்ரீமத் பறவாக்கோட்டை ஆண்டவன் ,  ஸ்ரீமத் பவுண்டரிகபுரம் ஆண்டவன் ஸ்வாமிகளுடன்  படங்களையும் பார்த்திருப்பீர்கள்.  இன்று நம் பாரதப் பிரதமர் மோதி  இல்லத்தில் உள்ள புதிதாக ஈன்ற கன்றுகுட்டிக்கு அவர்  'தீப்ஜோதி' என்று பெயர் வைத்து...