Skip to main content

Posts

Showing posts from July, 2006

திருப்பதி

திருப்பதிக்கு போக வேண்டும் என்று மனைவி சொன்ன போது அஜித் படம் என்று நினனத்துக்கொண்டு "அதுக்கு என்ன போயிட்டு வந்தால் போச்சு" என்றேன். "கீழ் திருப்பதியிலிருந்து மேலே நடந்து போகணும்" என்றதும், எனக்கு அடிவயிறு கலங்கியது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் "நான் நடந்துடுவேன் உன்னால் நடக்க முடியுமான்னு பார்த்துக்கோ" அந்த பிரசித்திபெற்ற பயணம் இரண்டு வாரத்துக்கு முன் நடந்தது. பெங்களூரிலிருந்து KSRTC volvo பேருந்தில் இரவு 11:00 மணிக்கு குடும்பத்துடன் கிளம்பினோம். நாலுமணிக்கு நல்லா தூங்கும் போது "கோவிந்தா கோவிந்தா" என்று பின் சீட்டில் இருந்தவர் பக்தி பரவசத்தால் சத்தம் போட திருப்பதி வந்து சேர்ந்தோம். திருப்பதிக்கு வரும் கூட்டம் ஒரு நாளைக்கு 100,000 மேல் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரோம், ஜெருசலம், மெக்கா விட இது அதிகம். நாங்கள் சென்ற தினம் எங்களையும் சேர்ந்து 100,002.5  இருந்திருப்பார்கள் (குழந்தைக்கு அரை டிக்கேட்)  [%image(20060730-top_view_gopuram.jpg|150|112|Top view)%] பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு மேல் திருப்பதிக்கு

‘THEENE.eot’ உமர் மறைவு

இன்று தமிழ் தளங்களில் 90% மேலாக THEENE.eot என்ற எழுத்துரு தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. நான் என் 'வீட்டுப்பக்கத்திற்கு' இதை இலவசமாக உபயோகபடுத்தும் முன் அனுமதி கேட்டு உமர் அவர்களுக்கு ஒரு மின்ஞ்சல் அனுப்பினேன். சில நாட்களில் எனக்கு ஒரு பதில் போட்டிருந்தார். கூடவே நான் கேட்ட அச்சுபிச்சு கேள்விகளுக்கு அடக்கத்துடன் பதிலும் எழுதியிருந்தார். நேற்று மாலை அவரின் சொந்த ஊரான அதிராம்பட்டனத்தில் இறைவனடி சேர்ந்ததாக சில வலைப்பதிவுகளில் பார்த்தேன். என் தந்தை இறந்ததற்கு பின் இன்று தான் அழுகை வந்தது. இத்தனைக்கும் நான் அவரை பார்த்ததில்லை. இவர் இன்று நம்முடன் இல்லை ஆனால் அவரின் Theene.eot நம்முடன் இருக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். உமர் பற்றி மற்றவர்கள்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவ http://vettippechu.blogspot.com/2006/07/blog-post_13.html திரு. உமர் மரணம் http://www4.brinkster.com/shankarkrupa/blog/  யுனிகோட் உமர் தம்பி மரணம். http://abumuhai.blogspot.com/2006/07/blog-post_115273113453333253.html  உமருக்கு அஞ்சலி http://manimalar.blogspot.com/200

உயிர் நண்பன்

ராஜாராமனுக்கு 'அந்த' நினைவு திரும்பவும் வந்த போது சன் நியூஸ் சிறப்பு பார்வை ஓடிக்கொண்டிருந்தது. 'அந்த' நினைவு அடிக்கடி வருகிறது. இந்த ரகசியத்தை தவிர எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார் - ஸ்கூல் பஸ்ஸில்  ஒண்ணுக்கை அடக்க முடியாமல் ஜட்டியிலேயே போனது, சிகரெட் குடித்தது, கல்யாணி பீர் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.  இப்போது அவர் மகன் காலேஜில் படிக்கிறான், இன்னும் அவர் மனைவியிடம் சொல்லவில்லை. சன் நியூஸ் சிறப்பு பார்வையின் போது 'அந்த' நினைவுடன் ராஜாராமனுக்கு ஓர் அவஸ்தையும் ஏற்பட்டது. ராஜாராமனுக்கு முன் டாக்டர் தோன்றி "என்னப்பா ஆச்சு?" என்று கேட்டால், அவருக்கு அதை விவரிக்க முடியாது. "கொஞ்சம் uneasy" என்று தான் சொல்லமுடியும். அஜீரணமா, நெஞ்செரிச்சலா, வாய்வு தொல்லையா என்று சொல்ல தெரியாத ஒர் அவஸ்தை. தண்ணீர் குடித்தார். அமிர்தாஞ்சனத்தை தடவிக்கொண்டார். மூச்சை நன்றாக இழுத்து விட்டார். கொஞ்சம் ஜெலுசில் குடித்தார். மத்தியானம் என்ன சாப்பிட்டேன்னு  என்று நினைவு படுத்தி பார்த்துக்கொண்டார். கோலங்கள், செல்வி தொடர்களுடன் அவஸ்தையும் தொ