Skip to main content

Posts

Showing posts from 2005

மூக்குப்பொடி

கல்லூரி நாட்களில் நடந்த அந்தச் சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் செந்தில் வேலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தானாக வேண்டும். செந்தில் வேலன் என் காலேஜ் ; என் வகுப்பு. காலேஜுக்கு ஜீப்பில் தான் வருவான் - மேல்கூரை இல்லாத 'ஓபன்' ஜீப். அவன் அப்பா ஏதோ ஒரு திராவிடக் கட்சியில் மாவட்டத் தலைவரோ செயலாளரோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் சென்னையிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அவன் வீட்டில் தான் தங்கி பிரியாணி சாப்பிடுவார்கள். சமிபத்தில்தினத்தந்தியில் அவன் அப்பா படம் முதல் பக்கத்தில் ஏதோ ஒரு விழாவிற்குத் தலைமை தாங்கினார் என்று வந்திருந்தது. அப்பாவின் செல்வாக்கினால்தான் அவனுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். தினமும் கல்லூரிக்கு வருவான்; வந்தவுடன் நேராக கேண்டினுக்குப் போய் டீ, சமோசா, சிகரேட் முடித்துவிட்டு காலேஜ் மணி அடித்தவுடன் கல்லூரியை விட்டுப் போய்விடுவான். ஒரு காதில் வளையம் போட்டிருப்பான். ரஜினி படம் ரிலீஸ் அன்றைக்கு எல்லோருக்கும் சாக்லேட் தருவான். கல்லூரி வாசலில் இருக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கெல்லாம் இவன் 'அண்ணா' தான். அன்று வெள்ளி

மூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை

 அப்பாடா ஒரு வழியாக இன்று முடித்துவிட்டேன்!. IIM இந்தோர் (Indore) தங்கள் ஆண்டு விழா (IRIS 2005) கொண்டாட்டமாக ஒரு puzzle விளையாட்டு போட்டியை இந்த ஆண்டு வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரம் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் முயன்று ( சில சமயம் நண்பர்களிடம் கேட்டு ) இன்று காலைதான் முடிக்க முடிந்தது. ( மொத்தம் 29 நிலை(level) ).  [%image(20051219-KluelessFinal.jpg|507|250|Final Page of KlueLess)%] முடித்த பின் மூளையை வாட்டர் வாஷ் சர்விஸ் செய்த உணர்வு :-) . நீங்களும் முயன்று பாருங்களேன். விளையாட்டுக்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும் (   http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/   ) தயவு செய்து விடை தெரிந்தவர்கள் விடைகளை இங்கு பின்னூட்டமிடாதீர்கள். மற்றவர்களும் முயன்று பார்த்து அனுபவிக்கட்டுமே!. (Clue, மறைமுக குறிப்பு கொடுப்பதற்கு தடையில்லை) கேம் ரூல்ஸ் - http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/game.asp

இந்த மார்கழி

இன்று மார்கழி ஆரம்பம். போன வருடம் தினமும் அந்தந்த திருப்பாவை பாடலுக்கு, படம், தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு விளக்கம், கோலம் என்று பதிவுகள் போட்டேன். இந்த வருடம் வேறு மாதிரி செய்யலாம் என்று யோசித்தேன். ஏனோ முடியவில்லை. போன வருடம் செய்ததை பார்பதற்கு வலது பக்கத்தில் 'இன்றைய திருப்பாவை'  படத்தை கிளிக் செய்யவும்  

E=ஹிஹி2

சுஹாசினி, குஷ்பு விவகாரத்தை படித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனை எரிச்சலாக பார்த்தது வேதாளம். "எவ்வளவு நாள் தான் இந்த விஷயத்தை படித்துக்கொண்டிருப்ப?"  என்றது வேதாளம். "உன்னோடு பெரிய தொந்தரவு, கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடு" என்று விக்கிரமாதித்தன் திரும்பவும் படிக்க ஆரம்பித்தான். வேதாளம் விடுவதாக இல்லை "இன்னிக்கு உன்னை எங்க வேதாள உலகத்திற்கு அழைத்து போகலாம் என்று இருக்கேன்" "உன்னோட தொந்தரவே தாங்கல..வேதாள உலகம் வேறயா?" "சீக்கிரம் கிளம்பு, வெங்கட் நாராயணா ரோட்டில் ரத்தனா புதுசா கபே திரந்திருக்காங்க, ஒரு சாம்பார் இட்லி சாப்பிட்டு போகலாம்" என்றது. விக்கிரமாதித்தனும், வேதாளமும் சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு வேதாள உலகத்திற்கு கிளம்பினார்கள். இந்த முறை வேதாளம் விக்கிரமாதித்தனை தோளில் தூக்கிக்கொண்டு வேகமாக பறந்தது. "இவ்வளவு வேகமாக பறக்காதே எனக்கு பயமாக இருக்கிறது" "பயமா? என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு ? " என்றது வேதாளம் வடிவேலு ஸ்டைலில். "இன்னும் கொஞ்சம் வேகமா போனா என் வேஷ்டி அவுந்துடும் அப்புறம் நீ பயந்துட

மதுரை திவ்வியதேசங்கள் மூன்று

நவதிருப்பதிக்கு அடுத்த நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்விய தேசங்களுக்கு செல்வதாக திட்டம். முன்னாள் இரவு சாப்பிட்ட மதுரை பரோட்டாவின் உதவியால் காலை சீக்கிரம் எழ முடிந்தது. மதுரையிலிருந்து 21 கீமீ தூரத்தில் இருக்கும் அழகர் கோயிலுக்கு புறப்பட்டோம். [%image(20051206-small_azhgar_kovil_front_vi.jpg|250|172|அழகர் கோயில் முகப்பு தோற்றம்)%] இக்கோயிலுக்கு மற்றொரு அருமையான பெயர் இருக்கிறது - திருமாலிருஞ்சோலை . கிழக்கு மேற்காக 10 மையில் தூரம் 1000 அடி உயரமும் உள்ள இந்த மலை சுனைகளும், அரிய மூலிகைகளைகளும் நிறைந்ததாக திகழ்கிறது என்று கூட வந்தவர் சொன்னார். பெயருக்கு ஏற்றவாறு எழிலார்ந்த பசுமையான மலையடிவாரத்தில் அமைந்த அமைதியான இடம். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார் என்று 6 ஆழ்வார்கள் 123 பாடல்களில் பாடப் பெற்ற இடம். பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் குறிப்பு இருக்கிறது. மகாவிஷ்ணுவிற்கு இராம, கிருஷ்ண அவர்தாரங்களுக்கு அழகர் என்னும் சொல் சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெருமாளுக்கு கூடலழகர், கள்ளழகர் என்று திருநாமங்கள் உண்டு. ஆண்டா

பூக்குட்டி !

[%image(20051124-pookutti_cover.jpg|407|300|பூக்குட்டி அட்டைபடம்)%] அக்டோபர் மாதம் கற்றது பெற்றதுமில் சுஜாதா எழுதியது. ...  'தமிழில் குழந்தைகளுக்காக ஆங்கிலப் புத்தகங்களின் வடிவமைப்புத் தரத்தில் புத்தகங்கள் இல்லை' என்று குறை சொல்வதைப் பலரிடம் அடிக்கடி கேட்டபின், குழந்தைகளுக்காக அவ்வகையில் ஒரு புத்தகம் நானே சொந்தமாகப் போடு வது என்று தீர்மானித்தேன். சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு கொண்டாடினார்களே... அப்போது 'பூக்குட்டி' என்ற தொடர்கதை விகடனில் வந்தது. அதற்கு மணியம் செல்வன் அழகழகான சித்திரங்கள் வரைந்திருந்தார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையை விட்டு டைட்டில் எழுதச் சொல்லி, அந்தக் குழந்தையின் பெயரையும் போட்டு, அட்டகாசமாக வெளியிட்டார்கள். பிறகு, அது புத்தக வடிவிலும் வந்தது. ஆனால், உலகத் தரத்தில் அல்ல! தற்போது புத்தக வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் காகிதத் தரத்திலும் தமிழகத்தில் மேல்நாட்டுத் தரத்தை எட்டிவிட்டார்கள். பதிப்புத் திறமைகள் பன்மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், 'லேடி பேர்ட்' புத்தகங்களைப் போல ஒல்லியாக, கெட்டி அட்டையுடன், நல்ல காகிதத்தில் பெரிதாக அச்சிட்டு,

நவதிருப்பதி

கடந்த வாரம் திருநெல்வேலி , மதுரையை சுற்றியுள்ள பாண்டிய நாட்டு திவ்வியதேசங்களுக்கு சென்றிருந்தேன் . முதல் நாள் திருநெல்வேலியில் நவ திருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது திவ்வியதேசங்கள் , மறு நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்வியதேசங்கள் என மொத்தம் பன்னிரெண்டு . சனிக்கிழமை மதுரையிலிருந்து புறப்பட்டு போகும் வழியில் திருநெல்வேலி 146 கீமீ என்ற போர்டை பார்த்த போது காலை மணி 11:30; கயத்தாறு என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம் . இந்த இடத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்டதாக சொல்கிறார்கள் . இப்போது இந்த இடத்தில் ஏர்டெல் டவர் இருக்கிறது . திருநெல்வேலி வருவதற்குள் அதை பற்றிய ஒரு சிறு குறிப்பு ... மதுரைக்கு முன் பாண்டியர்களுக்கு தலைநகராக திருநெல்வேலி இருந்திருக்கிறது . ஊர் சுற்றிவர நெல் பயிர்கள் வேலி போல சூழ்ந்திருந்த காரணத்தினால் திருநெல்வேலி என்ற பெயர் பெற்றது . தாமிரபரணிக்கு மேற்கு பக்கத்தில் திருநெல்வேலியும் கிழக்கு பக்க்கத்தில் பாளயங்கோட்டையும் அமைந்துள்ளது . கிபி 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர்கள் இந்த ஊரை ஆண்டிருக்கிறார்கள்

தி கிரேட் எஸ்கேப்

"ஐயோ!. இது என்ன சத்தம் ?" ஏதோ உடைந்தது போல்... கடவுளே... மழையா ? வெள்ளமா? சுனாமியா ? இவ்வளவு வேகமான நீரோட்டமாக இருக்கிறதே.. வானிலை அறிக்கையில் கூட ஒன்றும் சொல்லவில்லையே...? எங்கு பார்த்தாலும் தண்ணீர். இந்த சின்ன இடத்தில்... மாட்டிக்கொண்டுவிட்டேனே...முழுகிவிடுவேனா ? கடல் அலை போல் மேலும் கீழுமாக... 'பளக்' ...'பளக்'... வாய்க்குள் தண்ணீர்... இந்த சத்தம்... இவ்வளவு நாள் வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம் என்று அமைதியாக சிக்கிகொண்ட உணர்வே இல்லாமல்....  இன்று ஏன் எனக்கு இந்த சோதனை ? இப்படி குலுக்கிபோடுகிறதே..இந்த சுவற்றில் இடித்து இடித்து தூள் தூளாகிவிடுவேனா ?  கடவுளே... அட என்னது இது ஒரு சின்ன சுரங்க பாதையா ? கடவுள் அதற்குள் என் பிராத்தனைக்கு கண்ணை திறந்துவிட்டாரா ? ஆச்சரியமாக இருக்கிறதே! இந்த தண்ணீர் தான் இதை திறந்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் எனக்கு இது கண்ணில் படவில்லையே...ஏதோ ஒன்று வெளியே போனால் போதும். இவ்வளவு சின்ன வழியில் போகமுடியுமா? இதன் வழியாக வெளியே வந்தால் உயிருடன் இருப்பேனா ?எனக்கு இதை தவிற வேறு வழியில்லை. கூனிக்குறுகி ஒரு சரியான நிலையில் போனால் முடியும்

ஐஸூக்கு வந்த மவுஸ்!

ஐஸூக்கு வந்த மவுஸ்! - எஸ்.வி. ராமகிருஷ்ணன்   [%image(20051103-ice_svr1.jpg|226|150|Ice)%] 1944. ஐரோப்பாவில் மட்டுமல்லாது இந்தியாவில் இம்பால் முனையிலும் (மணிப்பூர் சமஸ்தானம் - இந்திய பர்மா எல்லை) உலக யுத்தம் உக்கிரமாக நடந்த காலம். தாராபுரத்தில் பார்க் ரோட்டில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு காம்பவுண்டுகள் தள்ளி இருந்த ஒரு பங்களாவை (காம்பவுண்டு வைத்த தனி வீடுகளை அப்படித்தான் சொன்னார்கள். தனி வீடு என்று தனியாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஏனெனில் திறீணீt என்ற கூடுகளை, பம்பாய் போய் வந்தவர்களைத் தவிர யாரும் பார்த்ததுகூட இல்லை) ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு இருந்தனர். அங்கே எப்போதும் சீருடை அணிந்த துருப்புகள் ஜீப்பிலும் மிலிட்டரி லாரியிலும் வருவதும் போவதுமாக இருக்கும். அவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் தொடர்பே இருக்கவில்லை. அது ஒரு தனி உலகம். ஒரு நாள் பார்க் ரோட்டில் ஒரு பரபரப்பு. ராணுவத்தினரின் உபயோகத்துக்காக வந்த ஐஸ் கட்டிகள் உபரியாக இருந் திருக்க வேண்டும். பாறை போன்ற ஒரு பெரிய ஐஸ் கட்டியை அவர்கள் வீட்டுக்கு வெளியே சாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எல்லோரும் காணாதது கண்ட

சென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.

லால்பாக், சதாப்தி, சென்னை எக்ஸ்பிரஸ் - ரத்து செய்யபட்டுள்ளது. பெங்களூர் மெயில் - ஐந்து மணி நேரம் தாமதம். மைசூர் சென்னை - காவேரி எக்ஸ்பிரஸ் - ரத்துதானது என்று செய்தித்தாளில் போடப்பட்டுள்ளது ஆனால் ரயிவே தகவல் மையத்தில் ரத்தாகவில்லை என்கிறார்கள். சென்னை - பெங்களூர் இடையே பழுதுப்பட்ட இனைப்பு இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள் . சென்னை பெங்களூர் மழையை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது. ரயில்வே தகவல் அறிய : 139 மேலும் தொலைபேசி எண்கள்: 22874670,22200971,22200972 தென்னக ரயில்வே தகவல் தளம் : http://www.indianrail.gov.in/temp.htm புயல் பற்றிய செயற்கைகோள் படங்கள் : http://www.imd.gov.in/section/satmet/img/sa.htm [ Update 1 27/05/05] [%image(20051027-chennai_rain.jpg|360|197|Chennai Rain)%]  சென்னை மழை படம் உதவி தமிழ் முரசு [ Update 2 27/10/05] மேலும் சென்னை படங்கள் : தினமணியில். [ Update 3 - 28/10/05 11:30am ] சென்னை மழை நிலவரம் : அருள் ,   நாராயணன் , பத்ரி சன் டிவி நிலவரம்: உயிர்மை   [ Update 4 - 28/10/05 11:50am ] சென்னை - பெங்களூர் KSRTC and TNSTC பேருந்துக

ஜோ ஜோ - தீபாவளி

[%image(20051026-jothika_7.jpg|200|149|Jothika_7)%] நேற்று காலையிலிருந்து பெங்களூரில் 'ஜோ ஜோ'ன்னு நல்ல மழை. சென்னைக்கு போகும் பல ரயில்கள் ரத்தாகியுள்ளது என்று NDTV வில் சொன்னார்கள். தீபாவளிக்கு சென்னைக்கு போக முடியுமா என்று தெரியவில்லை. ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போவதே கஷ்டமாகயிருக்கிறது. பார்க்கலாம்.     தீபாவளி என்று சொன்னால் நினைவிற்கு வருவது, பட்டாசு, புது துணி மற்றும் திபாவளி ரிலீஸ் படங்கள். ஆனால் இன்று ? [%image(20051026-jothika_1.jpg|172|216|Jothika_1)%] தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு. போன வாரம் சென்னைக்கு போன போது தி.நகரில் எப்போதும் போல் இந்த வருடமும் மக்கள் கூட்டம். ஒரு மாறுதலுக்கு இந்த முறை போலிஸ் போக்குவரத்தை அருமையாக கட்டுப்படுத்தியிருந்தார்கள். பனகல் பார்க் அருகில் இரண்டு புதிய கடைகள் வந்திருக்கிறது - சரவணா ஸ்டோர்ஸ் 'பிரமாண்டமாய்' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலெக்ஷன்ஸ். இந்த கடைகளில் நிஜமான 'தள்ளு'படியை காணமுடிந்தது.

உடைந்த கையை ஒட்டின கதை

உடைந்த கையை ஒட்டின கதை (1943) எஸ்.வி. ராமகிருஷ்ணன் [%image(20051019-svr_hand_small.gif|142|200|SVR Hand Image)%] என் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள். சிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள

கண்கலங்க வைக்கும் கடிதங்கள்

நேற்றைய அசோகமித்திரன் கட்டுரையை தொடர்ந்து இன்று ரா.கி.ரங்கராஜன் அவர்களுடையது. சமிபத்தில் எனக்கு பிறந்த நாள் வந்தது. (எத்தனையாவது பிறந்த நாள் என்று கேட்க நினைப்பவர்கள் 'எத்தனையாவது' என்பதற்கு சரியான இங்கலிஷ் வார்த்தையை கண்டுபிடித்துச் சொல்லுங்கள். பார்க்கலாம் ரொம்பப் பேரிடம் கேட்டு வருகிறேன். மகாமகா இங்கிலீஷ் பேராசிரியர்கள்கூட முழிக்கிறார்கள்) பிறந்த நாள் என்றால், வாழ்த்து வராமலா இருக்கும் ?. வந்தன தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலர் எழுதியிருந்தார்கள், இருந்தாலும்.. "என் அன்புள்ள அப்பாவுக்கு உங்களுடைய இந்தப் பிறந்த நாளன்று நீங்கள் என்னை எப்படியெல்லாம் வளர்த்து மனிதனாக்கினீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, சின்ன பையனாயிருந்தபோது காலில் ஏதோ புண் ஏற்பட்டிருந்தது. தூங்கும் போது என்னை அறியாமல் அதை சொறிந்து சொறிந்து ரத்தக் களரியாக்கிக் கொண்டிருந்தேன். அதற்காகவே முரட்டுக் கதர்த்துணையில் க்ளவுஸ் மாதிரி உறை தைத்துப் போட்டு அது கழன்றுவிழுந்து விடாமலிருக்க முடிச்சுப் போட்டு வைத்தீர்கள். தினம் ராத்திரி உங்களுடைய கடைசி வேலை அது. அந்த நாளில்

இரண்டு கட்டுரைகள்

சமிபத்தில் இரண்டு கட்டுரைகளை இரண்டு முறை படித்தேன். ஒன்று அசோகமித்திரன், மற்றொன்று ர.கி.ரங்கராஜன். யோசித்து பார்த்தால் இரண்டிலும் உள்ள நகைச்சுவைதான் காரணம் என்பது புலப்படும். முதலில் அசோகமித்திரன். இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலமான தினம், யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்தவேண்டியவர்கள் திண்டாடிப் போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கில் யாரும் முன்கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்கமாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச் சின்னங்கள். எம்.ஜி.ஆர். இறந்த தினம் இந்தத் துக்கச் சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது. தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால் பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச் சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது. ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது. வண்டி கிடைத்தாலும் தெருவில் திரண்டிருக்கும் ஜனத்திலிருந்து அதைக் கொண்ட

சென்ற வாரம் சென்ற இடம்!

கல்யாணத்திற்கு முன் வாராவாரம் பைக் எடுத்துக்கொண்டு ஒரு திவ்விய தேசம் சென்று வந்துக்கொண்டிருந்தேன். வந்த பிறகு அந்த கோயிலை பற்றி ஒரு சிறு குறிப்பை ஒரு நோட்டு புத்தகத்தில் "சென்ற வாரம் சென்ற இடம்" என்ற தலைப்பில் எழுதியும் வைப்பேன். அவ்வாறு எழுதியதில் இரண்டை இங்கு தந்துள்ளேன். திருநீர் மலை ! இந்த ஞாயிற்றுகிழமை சினிமாவிற்கு சென்று ஷெரன் ஸ்டோனை(sharon stone) பார்ப்பதற்கு பதில். திருநீர் மலைக்குச் சென்று திருமங்கை ஆழ்வார் வர்ணித்த "அன்றயர்குலக்கொடியோடு அமாமலர்மங்கையொடுஅன்பளவி அவுணர் எந்தானும்இரக்கமிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும்பொழில்சூழ் நன்றயபுனல்நறையூர்திருவாலிகுடந்தை தடம்திகழ்கோவல்நகர் நின்றான்இருந்தன்கிடந்தான்நடந்தாற்குஇடம் மாமலையாவதுநீர்மலையே." [%image(20051007-THIRUNEER-MALAI--A.jpg|192|144|ThiruneerMalai)%] இந்த நான்கு கோலங்களை கொண்ட நீலவண்ணனை பார்ப்பது என்று முடிவு செய்தேன்!. திருநீர் மலை சென்னை தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் "ponds" தொழிற்சாலை நறுமணம் கமவழ அமைந்த அமைதியான இடம். இந்த மலையை நீர்சூழ்ந்திருந

சொடக்கு

[%image(20051003-stretching.jpg|144|99|stretching)%] தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனை அடிக்கும் முன் கழுத்தை 180 டிகிரி சுழட்டி, பின் இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து மடக்கி ' Warm-up' செய்யும் போது பின்னனியில் DTS எப்பெக்டில் 'படக் படக்' என்று சொடுக்கும் சத்தம் வரும். இந்த சொடுக்கும் சத்தம் சிலருக்கு கை, கால் மடக்கினால் வரும். சிலருக்கு மாடிப்படி ஏறி இறங்கினால்; சலூனில் முடி திருத்துபவர் கழுத்தை திருப்பி காதை இழுத்து மசாஜ் செய்யும் போது; என் பாட்டிக்கு கொட்டாவி விட்டால் வரும்.   இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசுவதால் வருகிறது என்று நேற்று காலை டிபன் சாப்பிடும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இல்லை என்று கூகிளில் தேடிப் படித்ததில் புரிந்து கொண்டேன். சரி சத்தம் எப்படி வருகிறது என்று தெரிந்துக்கொள்ள நம்முடைய எலும்புகள், மூட்டு, கணுக்களின் அமைப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். [%image(20051003-knuckles.jpg|222|216|Knuckles)%] படத்தில் ( படம் உபயம் howstuffworks ) மஞ்சள் கலரில் பார்ப்பது தசைநார்/நரம்பு( ligament). நீல கலரில் பார்ப்பது 'சைனோவியுல் திரவம்