Skip to main content

Posts

Showing posts from August, 2007

சீனி கம்

'சக்கரை இனிக்கிற சக்கரை' என்ற  பதிவை எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. டயாபடீஸ் வந்த ஒரு வருடத்தில் நல்லது என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், நான் நடந்திருக்கிறேன், தினமும் காலையில் 45 நிமிஷம். நான் போகும் வழியில் ஒரே செடியில் ஊதா, மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இது என்ன வகைச் செடி, யாருக்காவது தெரியுமா ? செண்பகப்பூ மரங்கள் நிறைய இருக்கின்றன. எந்தப் பூவையும் இது வரை பறித்ததில்லை (கைக்கு எட்டுவதில்லை ). மற்றபடி, டயாபடீஸ் என்றால் என்ன என்று நிறைய தெரிந்துகொண்டேன். கொஞ்சம் சுயபுராணம் - டயாபடீஸ் வந்த மூன்று மாதத்திற்கு நல்ல கண்ட்ரோலில் இருந்தது. பிறகு 2007 ஆரம்பத்தில் ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு கூடியிருந்தது. டாக்டர் ஒரு கடுகு சைஸ் மாத்திரையை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதன் விளைவு எனக்கு ஒரு நாள் கார் ஓட்டும் போது தெரிந்தது. அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது, கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்தது. டயாபடீஸ் பற்றி படித்திருந்ததால் இது கம்மியான சர்க்கரை அளவு (Hypoglycemia) என்று பட்சி சொன்னது. காரை ஓரமாக நிறு

PAN

நிரந்தர கணக்கு எண்/அட்டை, சிம்பிளாக PAN CARD, பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன் 45 நாள் ஆன குழந்தைக்கு இந்த நிரந்தர கணக்கு அட்டை கிடைத்தது என்று செய்தி படித்தேன். [%image(20070815-pancard_s.jpg|216|144|PAN CARD)%] நான் 1999 ஆம் வருடம் இதற்கு விண்ணப்பித்தேன். பிறகு சோம்பல் காரணமாக ( பிஸி என்றும் தமிழில் சொல்வார்கள் ) கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை தனி நபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில் PAN NO: _____________ என்று பார்த்தவுடன் தான் 'அட, நாம விண்ணப்பித்து ஒரு வருடம் ஆச்சே!' என்று நினைவுக்கு வந்தது. சரி, நாமே வருமானவரி அலுவலகத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று போனேன். வரவேற்பாளர், காப்பி குடித்து முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, "ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை... யாரை பார்ப்பது?" என்றேன். "உங்க அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார். காண்பித்தேன். பார்த்துவிட்டு, "அடுத்த கட்டிடத்தில் இருக்கும் ஏழாம் எண் ரூம் போங்க" என்றார். சென்றேன். ஆனால் யாரும் இல்லை. ஃ

சென்னை விசிட்

இந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்கு, சென்னை செல்ல வேண்டியிருந்தது. அப்படியே வலைப்பதிவு பட்டறைக்கும் சென்றேன். 1993-1994ம் வருடம் கணினியில் தமிழில் தெரிந்தாலே புல்லரிக்கும். ஸ்ரீநிவாசன் 'ஆதாவின்' என்ற மென்பொருளின் தயவால்,  டாஸ் கணினியில் பாரதியார் கவிதைகள், திருக்குறள் எல்லாம் பெரிது பெரிதாகத் தெரியும்.  பிறகு விண்டோஸ் வந்த சமயம் தமிழ் நெட்டில் தங்கலீஷ் மறைந்து, முரசு அஞ்சல் வந்தது. அந்தச் சமயத்தில் தான் தமிழ் நெட்(99 என்று நினைக்கிறேன்) கருத்தரங்குக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. வேடிக்கை பார்க்கத்தான். பெரிய ஆட்கள் எல்லாம் என்கோடிங், கீபோர்ட் லேயவுட் என்று கார சாரமாக விவாதிப்பார்கள்.  வயது வந்த பிறகு தான் அந்த அரசியல் புரிய ஆரம்பித்தது.  TAM, TAB, TSCII எல்லாம் இன்றும் இருப்பதற்கு காரணம் இதுவே. அந்தச் சமயத்தில் நானும் ஒரு ஃபாண்ட் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் என்கோடிங்) உருவாக்கியிருந்தால் இன்று 114 என்கோடிங்குடன் என்னுடைய என்கோடிங்கும் சேர்ந்து 115 வந்திருக்கும் என்று பட்டறையில் காசியிடம் நகைச்சுவையாகச் சொன்னேன். இன்று யூனிகோட் வந்த பிறகு  மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக கூ