Skip to main content

Posts

Showing posts from June, 2021

ஆயிரம் !

ஆயிரம் ! மதுரகவி ஆழ்வார் ’கண்ணி நுண் சிறு தாம்பு’ என்று தன் பிரபந்தத்தை ஆரம்பிக்கிறார்.  இதை சின்னஞ்சிறு முடிகளையுடைய 'கண்ணி' தாம்பு உடலில் அழுந்தும்படியான 'நுண்' தாம்பு நீட்டமில்லாத 'சிறு' தாம்பு கயிறு இப்படிப் புரிந்துகொள்ளலாம். ஒரு சாதாரணக் கயிறு அதற்கு இவ்வளவு முக்கியத்துவமா ? என்ற எண்ணம் எழலாம். கண்ணன் திருமேனி மீது அழுந்தி அவனுக்கு தாமோதரன் என்ற திருநாமம் பெற்றுக்கொடுத்து, அவன் சம்பந்தம் பெற்று, அதனால் அந்த ஏற்றம் பெற்றது.  பொதுவாக இந்த பிரபந்தத்தைப் படிக்கும் போது இதைக் கவனிக்க மாட்டோம்.  இதே போல இன்னொரு வார்த்தை ஆயிரம். ஆயிரம் என்ற வார்த்தை நம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக மிக முக்கியமான வார்த்தை. ஏன் என்று சொல்லுகிறேன். உங்களுக்குத் தெரிந்த கதை தான்.  ஒரு சமயம் வீர நாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாட,  அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்&qu

பெரியாழ்வார் ஒற்றிக்கொண்ட, பொறித்துக்கொண்ட சின்னங்கள்

பெரியாழ்வார் ஒற்றிக்கொண்ட, பொறித்துக்கொண்ட சின்னங்கள்  பெரியாழ்வார்,  ‘பெரிய’ ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்றால் கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சி அளிக்கிறார்.  பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது  பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை ஆண்டாளின் தகப்பனார்.  பல்லாண்டு பாடிய ஆழ்வார்  விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல்  இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம்.   திருப்பாணாழ்வார் அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருகமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே” என்று மலையேறி சென்ற ஆழ்வார் சட்டென்று உடனே கீழே இறங்கி அந்த வேங்கடவன் தான் அரங்கத்தில் இருக்கிறான் என்கிறார்.   பெரியாழ்வாரும் இதையே தான் சொல்லுகிறார். எப்படி என்று கண்டுபிடிக்கக் கீழே உள்ள இந்தப் பாசுரத்தைப் பாருங்கள்   சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு  தன்னை வாழ நின்ற நம்பி தாமோதரா சதிரா  என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொ

கடைசியாக வந்த ‘க்ரேஸி’

கடைசியாக வந்த ‘க்ரேஸி’ 47  நாட்கள் முன் ( மே-1 அன்று) சென்னையில் இருந்தேன். மதியம் வெயிலில் வெளியே போக முடியாமல் பேப்பரை பார்த்துக்கொண்டு இருந்தபோது “CPL” Crazy Premeir League என்று நண்பர் க்ரேஸி மோகனின் நாடகம் கிருஷ்ண கான சபாவில் மாலை 7 மணிக்கென்று அறிவிப்பு இருந்தது.  க்ரேஸி மோகனிடம்  பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று அவருக்குப் போன் செய்தேன். பதில் இல்லை. பள்ளி படிக்கும்போது எங்கள் வீட்டில் தினமும் க்ரேஸிமோகன், எஸ்.வி.சேகர் நாடகத்தைத் தினமும் இரவு தூங்க போகும்போது கேட்போம். ”க்ரேஸிதீவ்ஸ் இன் பாலவாக்கம்”, அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மேரேஜ் மேட் இன் சலூன்,மாது பிளஸ் டூ, மீசை ஆனாலும் மனைவி என்ற நாடகன்களின் வசனம் எல்லாம் மன்ப்பாடம். இரவு தூங்க போகும் முன் மிகுந்த மன நிறைவு தந்தது. நானும் அமுதனும் கிளம்பிகொண்டு இருந்தபோது க்ரேஸிஅழைத்தார் “தேசிகன்.. எப்படி இருக்கீங்க… சொல்லுங்க” என்றார். “சார் இன்னிக்கு உங்க டிராமா பார்க்க வருகிறேன்..” “என் சீன் எல்லாம் லேட்டாகத் தான் வருது.. அதனால் நான் கொஞ்ச லேட்டா வருவேன்.. அங்கே பார்க்கலாம்” என்றார். டிராமாவில் இரண்டு இடத்தில் பலத்த கைத்தட்டல் கேட்

அமலன் உவந்த மந்தி

 அமலன் உவந்த மந்தி அமலன் ஆதி பிரான் என்ற பாசுரத்தில் முதல் மூன்று பாசுரங்களின் முதல் மூன்று எழுத்துகள் பிரணவத்தை குறிக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.  அதே போல் முதல் மூன்று வார்த்தைகளை சேர்த்தால்  ”அமலன் உவந்த மந்தி”   என்று வரும்.  இதுவும் மிக அருமையான பொருளை கொடுக்கிறது !   முதலில் திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். வாத மா மகன், மர்க்கடம், விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை* உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று* கோது இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! அனுமானை ஒரு விலங்கு என்று பாராமல் அவனிடம் கடல் போலக் காதல் அன்பையும் பொழிந்தாய். ”உன் உதவிக்கு என்ன கைமாறு செய்வேன் என்று எண்ணி “உன்னுடன் உடனிருந்து யான் உண்பேன்” என்று அனுமானைக் குறித்து கூறிய மாதிரி அடியேனுக்கும் அமைதல் வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார். இராவண வதம் முடிந்த பின் சுக்ரீவன் முதலிய வானரங்களோடும், விபீஷணன், லக்ஷ்மணர், சீதா பிராட்டியு

திருவாய்மொழி கூறும் உட்பொருள்

 திருவாய்மொழி கூறும் உட்பொருள்  ‘Coloring base’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓவியத்தில் வண்ணங்களைத் தீட்ட அதனுடன் கலந்து அடிப்பார்கள். வாட்டர் கலருக்கு தண்ணீர் தான் பேஸ்.  அதுபோல ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு ‘பேஸ்’ திருவாய்மொழி.  ஸ்ரீவைஷ்ணவத்தில் தத்துவங்களை ஐந்து விதமாகப் பிரிக்கலாம் தமிழ்மொழியில்  1) இறைநிலை  2) உயிர்நிலை  3) நெறிநிலை  4) தடைநிலை 5) வாழ்வுநிலை  இதையே வடமொழியில்  1) பரமாத்ம சொரூபம் 2) ஜீவாத்ம சொரூபம்  3) உபாய சொரூபம் 4) விரோதி சொரூபம் 5) புருஷார்த்த சொரூபம்  ஸ்ரீபிள்ளை லோகாசார்யர் அவர்கள் பதினெட்டு ரகஸ்யகளில் அர்த்த பஞ்சகம் ஒன்று. அதே போல் ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஶ்ரீரஹஸ்யத்ரயஸாரத்தில் அர்த்தபஞ்சாதிகாரம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. இவை எல்லாம் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து விஷயங்களை விவரிக்கிறது.  இந்த ஐந்து விஷயங்களும் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் கூறுகிறார் அதனால் தான் திருவாய்மொழி ஸ்ரீவைஷ்ணவத்துக்கு அடிப்படை என்று எல்லா ஆசாரியர்களும் கொண்டாடுகிறார்கள்.  பட்டர் அருளிய திருவாய்மொழி தனியன் இது  மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்* தக்க நெறியும் தடையாகித்-தொ

ஸ்ரீ ராமானுஜரின் ரகசிய புரட்சி

 ஸ்ரீ ராமானுஜரின் ரகசிய புரட்சி  ”மதப் புரட்சி செய்த மகான்” என்று ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிப் பல புத்தகங்கள் வருகிறது. ஆத்திகர்களும் நாத்திகர்களும் புகழ்கிறார்கள். முன்பு எழுதப்பட்ட ரூல்ஸ் & ரெகுலேஷன் எல்லாவற்றையும் ராமானுஜர் மாற்றிப் புரட்சி செய்தார் என்று புத்தகங்களில் வருகிறது. ஒன்று அல்ல இரண்டு அல்ல பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு  ‘நடையாக நடந்து’  கஷ்டப்பட்டு எட்டு எழுத்து மந்திரமாம் திருமந்திரத்தை நம்பிகளிடம் பெற்று கோபுரத்தின் மீது ஏறி எல்லோரும்  சத்தமாக உபதேசித்தார் என்று புத்தகங்களிலும் மேடைப் பேச்சிலும் பேசுகிறார்கள். இதைப் பலர் சொல்லுவதால் இது தான் உண்மை என்பது போன்ற பிரமை இன்று உண்டாகிவிட்டது. ராமானுஜர் பதினெட்டு முறை நடந்தார். நம்பிகளிடம் உபதேசம் பெற்றார். அதை எல்லோருக்கும் வினியோகித்தார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அவர் ஏன் பதினெட்டு முறை சென்றார், நம்பிகளிடம் என்ன உபதேசம் பெற்றார் எப்படி எல்லோருக்கும் வினியோகித்தார் என்ற விவரம் தான் இந்தக் கட்டுரை. ராமானுஜர் பதினெட்டு முறை நடந்து பெற்ற விஷயத்தை ஆழ்ந்து படிக்க வாசகர்களை அழைக்கிறேன். கீழே உள்ள மூன்று வி

25. இராமானுசன் அடிப் பூமன்னவே - யோக ரகசியம்

25. இராமானுசன் அடிப் பூமன்னவே - யோக ரகசியம்  மணக்கால் நம்பி “ஆளவந்தாரே ! உம் பாட்டனார் நாதமுனிகள் என் ஆசாரியனுக்கு ஒரு ரகசியத்தைக் கூறியுள்ளார் அதையும் உமக்குச் சொல்லுகிறேன்!” என்றார் நம்பி என்ன கூறப் போகிறார் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தார் ஆளவந்தார்.   ”ஆளவந்தாரே! இப்போது நாம் கூறப் போகிற விஷயங்கள் பல காலமாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீரும் அதை பாதுகாப்பீர்!” என்று நாதமுனிகளுக்கு ஆழ்வார்திருநகரியில் சொப்பனத்தில் நம்மாழ்வார் கூறிய விஷயங்கள் அனைத்தையும்  விரிவாக கூறி, “நம் தரிசனத்தை நெடுங்காலம் திருவரங்கத்தில் பலருக்குச் சென்றடையுமாறு செய்வீராக” என்று ஆசி வழங்கினார்.  ஆளவந்தார் “நம்பியே! இந்த மஹா அனுபவத்தை என்னவென்று கூறுவது! அன்று மடுக்கரையிலே கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றிய பெருமாள் போல் எம்மை இந்த அற்பமான ராஜபோக வாழ்க்கையிலிருந்து இன்று காத்தீர்!“ என்றார்.  மணக்கால் நம்பி தன்னை சந்தித்து தூதுவளை கீரையை கொடுத்த நாள் முதல் திருவரங்கம் வரை அழைத்து வந்து திருவரங்கனைக் காட்டிக் கொடுத்து, நாதமுனிகள் அவருக்குக் கூறிய சொப்பன விஷயங்கள் யாவையும் ஒவ்வொன்றாக நினைக்கும்