Skip to main content

Posts

Showing posts with the label சினிமா

காந்தாரா சாப்டர் 1

காந்தாரா சாப்டர் 1  பள்ளியில் படித்தபோது, மலையாளப் படங்கள் ‘பிட்’டாகவும், தெலுங்குப் படங்கள் வெறும் மசாலாவாகவும் மட்டுமே பார்க்கப்பட்டன. கன்னடப் படங்கள் திரைப்படங்களே இல்லை என்று ஒதுக்கப்பட்டன. அவை தமிழ்நாட்டுக்குள் வந்ததில்லை. மற்ற திராவிடப் பிரதேசங்களில் தமிழ்ப் படங்கள் ’வேற லெவல்’ என்று கோலோச்சிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். சேட்டன்களின் கதைக்களம் எல்லாம் யோசிக்கக்கூட முடியாதவையாக, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதையும் கதைச் சொல்லும் விதத்தையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்கள். தெலுங்குப் படம் ‘பாகுபலி’ வந்த பிறகு ஒரு தனி அந்தஸ்து கிடைத்துவிட்டது. எந்த அந்தஸ்து கிடைத்தாலும், படம் ஆரம்பிக்கும் முன் மங்களகரமான மஞ்சள் எழுத்தில் திருவேங்கடமுடையானுடன் பக்தியுடன் ஆரம்பிக்கிறார்கள். கன்னடப் படங்கள் மெதுவாகத் தவழ்ந்து ‘யூ டர்ன்’ என்ற படம் வந்த போது ‘அட’ என்று சொல்ல வைத்து, ‘காந்தாரா’ வந்த பிறகு ‘அடடா’ என்று சொல்லவைத்தார்கள். இன்று காந்தாராவின் அடுத்த பாகமாக வந்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ பாகுபலிக்கே போட்டி என்று பெயர் வாங்கியிருக...

குழப்பிக் கொட்டின கூழ்

குழப்பிக் கொட்டின கூழ் இது ஒரு அரிய சமையல் குறிப்பு. முதலில் இதை செய்ய தேவையான பொருட்கள் என்ன என்று பார்த்துவிடலாம். சென்னை ஃபில்டர்‌ காபி – தலையில் நுறையுடன், சுண்டி இழுக்கும்‌ நறுமணத்துடன்‌ ஒரு பழைய பாத்திரம்‌ நிறைய‌. ஹைதராபாத்‌ பிரியாணி – தேவையான‌ அளவு‌, அசைவப்‌ பிரியர்களைக்‌ கவரும்‌ வீரியத்துடன்‌ (ரத்தம் சொட்ட சொட்ட) மலபார்‌ பரோட்டா – சில‌ மெல்லிய‌ அடுக்குகளாக‌, சில‌ சமயம்‌ பிரிந்து செல்லும்‌ தன்மையுடன்‌ மைசூர்‌ பாக்‌ – இனிப்புச்‌ சுவைக்கு ஏற்றவாறு‌, கனமான‌ கட்டியாக ஒன்று. வடா பாவ்‌ – ஒரு அசாதாரண‌ தனித்துவமான‌ சுவைக்கு சமையல்‌ கருவிகள்‌: பெரிய‌ அகலமான‌ பாத்திரம்‌(கதிரவன் ஸ்டோர்ஸ்). அனைத்தையும்‌ கலக்க‌ ஒரு பெரிய‌ கரண்டி(LCU பிரண்ட்). மின்சார இண்டக்‌ஷன் அடுப்பு. ஒரு தங்க வாட்ச் ( டைம் பார்க்க). ஒரு பெரிய நாற்காலி (சமையல் முடிந்த உடன் உட்கார ). முழு சமையல் நேரம் - சுமார் 2.50 நிமிடம். செய்முறை. ஃபில்டர் காபியை சற்றே பெரிய பழைய பாத்திரத்தில் ஊற்றவும். நம் சமையலுக்கு ஒரு கிளாசிக்‌ துவக்கத்தைக்‌ கொடுத்து, 'ஆஹா' போட‌ வைக்கும்‌. அடுப்பை மிதமான‌ தீயில்‌ வைத்து, சுமார்‌ 30 நிமி...

குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர்

குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர் பொதுவாக வெப் சீரீஸ் வகையராக்களில் அளவுக்கு அதிகமான வன்முறை, கெட்ட வார்த்தை, கெட்ட காட்சிகள் மலிந்து கிடக்கும். சமீபத்தில் ’சோனி லிவ்’ல் குல்லக் ( உண்டியல் ) என்ற தொடரைப் பார்க்க நேரிட்டது. இதற்கு முன் இப்படி ஒரு நல்ல தொடரைப் பார்த்த நினைவில்லை. கதை என்று எதுவும் இல்லை. அது தான் இதன் USP. வெற்றி. ஓர் உண்டியலில் எப்படி சிறுகச் சிறுக சேமிப்போமோ அது போல அன்றாடம் நடக்கும் சிறு சந்தோஷமோ, பிரச்சனையோ, வருத்தமோ அதைச் சேமிக்கிறது இந்தத் தொடர். ஒரு சராசரி இந்திய மத்தியமர் குடும்பத்தின் அன்றாட வாழ்வை மிக யதார்த்தமாகவும், மனதை நக்காமல் ஜெஸ்ட் தொட்டு விட்டுப் போகும் காட்சிகளைக் கொண்ட தொடர். ஓர் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி என்று நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட மிஷ்ரா குடும்பத்தில் நாமும் இணைந்துவிடுகிறோம். இந்தக் குடும்பத்தில் நிகழும் உரையாடல்கள், சண்டைகள், கேலிகள் என அனைத்தும் நம் வீடுகளில் நடப்பதைப் போலவே இருப்பதால், ஒரு புன்னகையுடன் கூடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது ஹிந்தியில் வந்திருந்தாலும், தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். டப்பிங் என்று தெரியாத வண்ணம் மிக ...

அமரன் - ஒரு மகத்தான படைப்பு

  அமரன் - ஒரு மகத்தான படைப்பு கோடம்பாக்கத்துக்கும் காஷ்மீருக்கு வெகுதூரம். எப்போதுமே அது ஒரு ‘long distance relationship’ பொதுவாக நாற்றுப்பற்று படங்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டுகொள்ளுவதில்லை. இதற்கு முன் வந்த சில நல்ல தேசப்பற்று (ஹிந்தி) படங்களைத் திரையிடக் கூட இல்லை. தமிழ்த் திரையுலகம் செய்த பூர்வ ஜென்மப் புண்ணியம் அமரன் வந்திருக்கிறது. 'பயோபிக்’ எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. இது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு. மொத்தமாக 31 வருடங்களே நாட்டுக்காக வாழ்ந்து நாட்டுக்காகவே தன் உயிரை நீத்த ஒரு துணிவான ராணுவ வீரனின் கதை. கதை சொல்லும்போது பெயர்களை மாற்ற முடியாது, தேவையில்லாத காட்சிகளைப் புகுத்த முடியாது ஒரு கட்டமைப்புக்குள் படத்தை எடுத்தாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தேசிய உணர்வோடு ’ஜெய் ஹிந்த்’ போன்ற வாக்கியங்கள் ஒலிக்கத் தமிழில் கதை சொல்லுவது சவாலான விஷயம். அதைச் செய்திருக்கிறார்கள். இதை எல்லாம் கவனமாகவும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். ”India’s Most Fearless True Stories of Modern Military Heroes” என்ற பென்குயின் புத்தகத்தில் முகுந்த் வரதராஜன் பற்றிய ( ...

இந்தியன் - 2 - (பார்க்க ) ஜீரோ டாலரன்ஸ் தேவை

இந்தியன் - 2 - (பார்க்க ) ஜீரோ டாலரன்ஸ் தேவை இந்தியன் - 2 டிரைலர் பார்க்கும் போதே நிச்சயம் ஊத்திக்கும் என்று தெரிந்தது. எப்படி ஊத்த போகிறது என்று பார்க்க இன்று காலை சென்றிருந்தேன்.  படம் ஆரம்பிக்கும் போது பரவாயில்லையே என்று தோன்ற ஆரம்பிக்கும் போது சொதப்பல் ஆரம்பிக்கிறது. பார்த்த காட்சியையே பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டு கைக்கடிகாரத்தைப் பார்க்க ஆரம்பிக்க, பெங்களூர் சென்னை ரயில் பேசின் பிரிட்ஜ் முதல் செண்ட்ரல் ஸ்டேஷன் வரை ஊர்ந்து செல்வது போலப் படமும் செல்கிறது. திரைக்கதை என்ற ஒன்று படத்தில் இல்லவே இல்லை. பலர் காட்சிக்குக் காட்சி நடித்துவிட்டுச் செல்கிறார்கள். ஒரு காட்சியுடன் இன்னொரு காட்சி ஒட்டவே இல்லை.  சங்கர் போன்றவர்களுக்கு சுஜாதா இல்லாதது ஒரு ஹேண்டிகேப் என்று இப்படத்தில் மீண்டும் இன்னொரு நிரூபணம் ஆகிறது. படம் முழுவதும் பிராஸ்தடிக் மேக்கப் உள்ளேயே கமல் நடிப்பதால் அவருடைய அரசியல் நிலைப்பாடு போல நமக்கு வெளியே தெரிவதில்லை. படம் ஆரம்பிக்கும் முன் ஆகஸ்ட் வெளியீடு என்று பிரஷாந்த் நடித்த அந்தகன் டிரைலர் போட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் படம், அதே போல நீ...

ராக்கெட்ரி சமாசாரம்

ராக்கெட்ரி சமாசாரம்  2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. இந்தப் படத்தை குறித்து கல்கி கடைசிப் பக்கத்தில் 2022ல் எழுதியது.  நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்ரி’ படத்தை நானும் என் பையனும் சென்றோம். எப்படிப் பட்ட படம் என்பதைப் பலர் விமர்சனம் செய்துவிட்டார்கள். கல்யாணச் சத்திரத்திலிருந்து தாம்பூலப் பையுடன் வெளியே வருவது மாதிரிப் படத்தின் முதல் பகுதி ‘ஒரே டெக்னிக்கல்’ விஷயம் என்று பலரும் விமர்சித்துவிட்டார்கள்.  படத்தின் முதல் பகுதியில் ராக்கெட் என்ஜின் பற்றி கிட்டத்தட்ட ஓர் ஐஐடி மாணவர் போல  நடிகர் மாதவன் பொறியாளர் வகுப்பு எடுத்துவிட்டார். இடைவெளியின் போது டெஸ்ட் வைத்து அதில் பாஸ் செய்தால் தான் அடுத்த பகுதி படம் பார்க்கலாம் என்று சொல்லிவிடுவாரோ என்று பலரும் பாப்கார்ன் கூடச் சாப்பிடாமல் இருந்தார்கள்.  எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் படத்தில் தன் பங்களிப்பைக் கொடுத்து கடினமான விஷயத்தைச் சாதாரண சோளப்பொரி ரசிகரும் புரிந்துகொள்ளும் விதமாக சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.  ராக்கெட்ரி படத்...

காந்தாராவும் காப்பியும்

 காந்தாராவும் காப்பியும்  பல வருடங்கள் முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த பத்தாவது நாள் கொரியாவிற்கு அனுப்பினார்கள். போகும் போது என் பாஸ் பெரிய நிறுவனம் புதிதாக ஒன்றைத் தயாரிக்க போகிறார்கள். அதன் விவரக்குறிப்புகளை ஒழுங்காக எழுதிக்கொண்டு வா என்று அறிவுரையுடன் பெட்டிப் படுக்கையுடன் கிளம்பினேன். கொ(பெ)ரிய மேலதிகாரியைச் சந்தித்தேன். ”உங்களுடைய தயாரிப்பு எப்படி வேண்டும் அதைக் குறித்து சொல்லுங்கள்” என்று குறிப்பை எழுத புத்தகத்தை திறந்தேன். அவர் என் கையில் டேபிள் மீது இருந்த ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து, இதே மாதிரி ’ஈயடிச்சான் காப்பி’ செய்து கொடுங்கள் என்று ஐந்து நிமிடத்தில் மீட்டிங்கை முடித்துக்கொண்டார். அவர் கொடுத்தப் புத்தகம் பெரிய அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்பு.  ”இதை அப்படியே கா.அடித்தால் பிரச்சனைகள் வராதா ?” போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன். நீங்கள் செய்து கொடுங்கள் பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். செய்து கொடுத்தோம். அதில் அவர்கள் சிற்சில மாற்றங்கள் செய்து சில புதிய அம்சங்கள் சேர்த்து ப...

பொன்னியின் செல்வன் - 1 - சில எண்ணங்கள்

 பொன்னியின் செல்வன்  - 1 - சில எண்ணங்கள்  ’கல்கியின்’ பொன்னியின் செல்வனை மணியன் ஓவியங்களுடன் படித்திருக்கிறேன். பிறகு ம.செ அழகான ஓவியங்களுடன்,  அடுத்து பத்ம வாசன் ஓவியங்களுடன், . கடைசியாக விகடன் பிரசுரம் செய்த அழகான புத்தகத்தை வாங்கி படித்திருக்கிறேன். இதைத் தவிர காமிக்ஸ் புத்தகம் போல் வந்தவற்றையும் விட்டுவைக்கவில்லை.  பொன்னியின் செல்வன் நாடகமாக 2014ல் வந்த போது மியூசிக் அகடமியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன். பாம்பே கண்ணன் அவர்கள் ஒலிச் சித்திரமாக வந்த போது முழுவதையும் அலுவலகம் செல்லும் போது, வாக்கிங் போது கேட்டு மகிழ்ந்தேன்.  மணிரத்தினம் இதைப் படமாக எடுக்கிறார் என்ற போது அதையும் விட்டு வைக்காமல் முதல் நாள் பார்க்க வேண்டும் என்று இன்று காலை சென்று வந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படம் எடுக்கிறேன் என்று கிளம்பியவர்களில் மணிரத்தினம் மட்டும் அதைச் செய்து முடித்திருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு வாழ்த்துகள்.   பொன்னியின் செல்வனைப் படம் எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.  - சில/பல இளம் பாட்டிகள் நான் இன்னும் பொ.செ படிக்கவில்...

தி காஷ்மீர் ஃபைல்

 தி காஷ்மீர் ஃபைல்  சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ’தி காஷ்மீர் ஃபைல்’  பார்க்க இன்று திரையரங்கிற்குச் சென்றேன். படத்தைப் பற்றிச் சொல்லும் முன் இன்று பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள்.  சுமார் 700 வருடங்களுக்கு முன் இதே நாளில் பங்குனி உத்ஸவம் ஆரம்பித்து எட்டாம் நாள் பன்றியாழ்வான்(வராகப் பெருமாள்) கோயிலில் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்த சமயம், அங்கே பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுமியிருந்தார்கள்.  அந்தச் சமயத்தில் உலூக்கான் தலைமையில் முகம்மதியர்கள் ஊருக்குள் நுழைந்து,  கூடியிருந்த அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்தில் 12,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை(genocide) “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.  இதைக் குறித்து 2005ல் சுஜாதா விகடனில் கற்றதும் பெற்றதுமில் இப்படி எழுதியிருந்தார்.   ”அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான ‘கோயில் ஒழுகு’ புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன் … ‘கோயில் ஒழுகு’ நூலில், ஆராய்ச்சிக்குரிய...

பயாஸ்கோப்பில் ‘பதேர் பாஞ்சாலி’ !

பயாஸ்கோப்பில்  ‘பதேர் பாஞ்சாலி’ ! இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன் என் சிறுவயது சினிமா ஆர்வம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளிக்கூட வாசலில் ‘பயாஸ்கோப்’பில் படம் பார்க்கும்போது,  ‘அது எப்படி வேலை செய்கிறது’ என்று ஆர்வமாகப் பார்த்திருக்கிறேன். வேலைக்குச் சென்றவுடன் முதல் சம்பளத்தில் பயாஸ்கோப் ஒன்றை வீட்டுக்கு வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஒரு பொருட்காட்சியில் ’வீட்டிலே சினிமா’ என்று ஒரு சின்ன புரெஜக்டர் வாங்கி கதவு எல்லாம் அடைத்து, தாத்தாவின் 9×5 வேட்டியைத் தொங்கவிட்டு,  100 வாட் பல்ப் சூடாகி நெருப்பு வரும் வரை படம் ஓட்டியிருக்கிறேன். எட்டாவது படிக்கும்போது, பள்ளி மைதானத்தில் ‘உத்தம புத்திரன்’ ஏற்பாடு செய்திருந்தார்கள். படத்தை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிவாஜி ஜன்னல் வழியாக ஒரு செடியின் கொடியைப் பிடித்துத் தாவிப் போனபோது, படச்சுருள் எரிந்து சிவாஜிக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமலேயே கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு உத்தம புத்திரன் சிடி வாங்கி, ’குதித்த சிவாஜி என்ன செய்தார்’ என்று தெரிந்துகொண்டேன். சமீபத்தில் வந்த ’மாநாடு’ படத்தைக் கூட வீட்டில் ...

ஷெர்ஷா(Shershaah) சில எண்ணங்கள்...

ஷெர்ஷா(Shershaah) சில எண்ணங்கள்...  சமீபத்தில் ’ஷெர்ஷா’ என்ற ஹிந்தி படத்தைப் பார்த்தேன். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையைச் சொல்லும் படம்.  தமிழ் நாட்டில்  வழக்கம் போல இந்தப் படம் அதிக கவனம் பெறவில்லை.  பிக் பாஸ், சமையல் நிகழ்ச்சி, லேடி சூப்பர் ஸ்டார் நடித்த படங்களைக் கழுவி ஊற்றுபவர்கள் இந்தப் படத்தைக் கண்டுகொள்ளாத தமிழ் சமூகம் குறித்து ஆச்சரியப் பட எதுவும் இல்லை,. தொன்று தொட்டு, இந்த மாதிரிப்  படங்களுக்குத் தமிழ்நாட்டில் ஒருவித அன்னியத் தன்மையே இருந்து வருகிறது.  (அங்கோ தூரத்தில் நடக்கிறது, ஒன்றிய அரசு பார்த்துக்கொள்ளும்) கர்நாடகாவில் அப்படி இல்லை, 2019  ஜனவரி 26 அன்று URI Surgical Strikes என்ற படத்தைத் தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்தேன்.  இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். ”யூரிக்கும் பேட்டைக்கும் என்ன வித்தியாசம் ?”  ”பேட்டை ஆரம்பிக்கும் போது எல்லோரும் கைதட்டினார்கள், யூரி படம் முடிந்த பின் எல்லோரும் கைதட்டினார்கள்” . இந்தப் படம் தொடர்ந்து பல வாரங்கள்  அவுஸ் ஃபுல்லாக ...

சிவாஜி – சில உண்மைத் தகவல்கள்

'சிவாஜி' திரைப்படத்தைப் பற்றிய ஆரவாரமான மிகையான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஓர் 'இன்சைடர்' என்ற தகுதியில் இதன் மிகை தவிர்த்த உண்மைகளை அம்பலம் வாசகர்களுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அடிக்கடி இதைப் புதுப்பிக்கவும் செய்கிறேன். சிவாஜி படத்தை ஏ.வி.எம் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்க ஷங்கர் இயக்க, ஏ,ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் கதையின் முதல் வரைவு முடிந்துள்ளது. பாடல்களை கம்போஸ் செய்ய ஷங்கர், ரஹ்மானுடன் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர்கள் யார் யார் என்பதெல்லாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஸ்க்ரிப்டை முடித்ததும் தான் இதெல்லாம் தீர்மானிக்கப்படும். இதனிடையே படம் எத்தனையோ கோடிக்கு வியாபாரமாகிவிட்டது என்னும் வதந்திகள் எல்லாம் தவறானவை. ஏ.வி.எம். போன்ற அனுபவமிக்க நிறுவனங்கள் அவ்வளவு அவசரப்படத் தேவையில்லை. படத்தின் கதையைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளும் தவறானவை. கதை மெல்ல மெல்ல இப்போதுதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஷங்கர் எந்தப் படம் எடுத்தாலும் நிதானமாக கதையை அணுஅணுவாக யோசித்துச் செய்வார். கதையை ரஜினிகாந்த...

அந்நியன்

வேதாளத்திற்கு மூடவுட் + தலைவலி. "என்ன ஆச்சு நேத்திக்கு ரொம்ப நேரம் மரத்தில தொங்கினியா ?" என்று விக்கிரமாதித்தன் பேச்சு கொடுத்தான். "அந்நியன் நைட் ஷோ படம் பார்த்துட்டு வரும் போதே மணி இரண்டு, அப்புறம் எப்படி மரத்திலே தொங்குவது" என்று வேதாளம் அலுத்துக்கொண்டது. "அதற்கு என்ன படம் நல்லாதானே இருந்தது" அமிர்தாஞ்சன் பாட்டிலை தேடியவாரே "ஏன் சொல்லமாட்டே, உங்க ஆள் படமாச்சே" என்றது வேதாளம். "படத்தில விக்கிரம் ஆக்டிங் எவ்வளவு சூப்பராக இருந்தது, அதுவும் மூணு வேஷத்தில என்னாமா நடிச்சிரிக்கார்" என்றான் விக்கிரமாதித்தன். "விக்கிரம் நல்லாதான் செய்திருக்கார், என்ன தன் பங்க் தலையை முடிந்து குடுமி போட்டுக்கொண்டு வாயை இழுத்து இழுத்து பேசினால் ரூல்ஸ் ராமானுஜம் என்ற அம்பி, செம்பட்டை டை அடித்துக்கொண்டு நுனிநாக்கு ஆங்கிலம்(c'mon nandy ...let's go yo-yo) பேசினால் ரெமோ, சனல் கயிறு போல் தலை மயிரை முகத்தின் (அல்லது காமிரா லென்ஸ் முன்) முன்னாடி போட்டுக்கொண்டு கண்ணை உருட்டினால் அந்நியன். இது ஆக்டிங் இல்லை மேக்கப். ஆக்டிங் என்றால் கடைசியில் அம்பியாகவும், அந்...

மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி

இது காதல் படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. காதல் படத்தின் விமர்சனங்களை பற்றிய விமர்சனம். சமீபத்தில் 'காதல்' படத்தை பார்தேன். பார்க்க தூண்டியது இரண்டு விமர்சனங்கள். அதற்கு முன் படம் பார்க்காதவர்களுக்கு சின்னக் கதை சுருக்கம். மதுரை. பணக்கார வீட்டுப் பெண். சந்தியா.அப்பா ஒயின் ஷாப் ஓனர். +2 படிக்கிறாள். மதுரை. பரத். தெருவோர வொர்க் ஷாப் மெக்கானிக் பையன். இருவரும் காதலிக்கிறார்கள். சென்னைக்கு ஓடிப்போகிறார்கள். கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். பெண்ணின் அப்பாவால் பரத் அடித்துத் துவைத்துக் கிழிக்கப்படுகிறார். அவனை சந்தியா தாலியைக் கழட்டி பரத்தை காப்பாத்துகிறார். சிலவருடம் கழித்து சந்தியா பரத்தை பையித்தியமாக பார்க்கிறாள் .கதறுகிறாள். இதைப் பார்த்த சந்தியாவின் இரண்டாவது கணவன். இருவரையும் அழைத்துச் செல்கிறான். அங்கே ஒரு பெரியார் சிலை லாங் ஷாட்டில் வருகிறது. படம் ஆரம்பித்த உடனேயே கிளைமாக்ஸ் காட்சிக்கு காத்திருந்தேன். காரணம் இரண்டு விமர்சனங்கள்...அதுவும் கடைசி காட்சியில் லாங்ஷாட்டில் தெரிந்த அந்தப் பெரியாரின் சிலையை பற்றி ... 1. புதிய பார்வை(ஜனவரி 2005) இதழில் வந்த 'மண்ணின் கதை' என்ற தலை...