Skip to main content

Posts

Showing posts with the label எழுத்தாளர்கள்

அவுட்லைன்

அவுட்லைன்  ஒரு வண்ண ஓவியம் தீட்டும் போது அதற்கு அவுட்லைன் மிக முக்கியம். அது சரியாக வந்தால் தான் அதற்கு மேல் வாட்டர், ஆயில், ஏன் பென்சில் என்று எதைக் கொண்டு வண்ணம் தீட்டினாலும் அது அழகாக அமையும். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவுட்லைன் சரியில்லை என்றால் எந்த மாதிரி உயர்ந்த வண்ணத்தைக் கொண்டு தீட்டினாலும் அது எடுபடாது. ’எல்லாம் நல்லா இருக்கு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ என்ற விமர்சனத்தை நான் எதிர்கொண்டுள்ளேன். பள்ளியில் படிக்கும் போது ஓர் ஓவியரைச் சந்தித்து, என்னிடம் உள்ள விலை உயர்ந்த வாட்டர் கலர் வண்ணங்களைக் காண்பித்து, இது எல்லாம் என்னிடம் இருக்கிறது, எனக்கு வாட்டர் கலர் அடிக்கச் சொல்லிக் கொடுங்கள் என்றேன். அவர் குழந்தைகள் வைத்திருக்கும் பல்லாங்குழி போன்ற பத்து ரூபாய் சமாசாரத்தை வாங்கி வரச் சொன்னார். அதை வைத்துக் கொண்டு ஒரு மிக அருமையான ரோஜா பூ படத்தை வரைந்து முடித்தார். அவர் என்னிடம் சொன்னது, விலை உயர்ந்த கலர் முக்கியம் இல்லை, படத்தின் அவுட்லைன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது தான். நான் வரைந்த சில படங்களை அவரிடம் காண்பித்த போது மூக்குக்குக் கீழே ஒரு கோடோ...

சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது !

சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு அனுப்பிய பதில் கீழே... சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது ! ஒரு நடிகரிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார் என்ற கேள்விகளை எப்போது கேட்டாலும் அவர்களுடன் சம காலத்தில் இருக்கும் நடிகர்களைக் கூறமாட்டார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி போன்றவர்களைக் குறிப்பிடுவார்கள். இது ஒரு விதமான டெம்பிளேட் பதில். இது இசையமைப்பாளர்கள், கர்நாடகப் பாடகர்கள் முதல் எழுத்தாளர்களுக்கும் இது பொருந்தும். தமிழ் எழுத்தாளர்கள் கூறும் ‘டெம்பிளெட்’ பதில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, கி.ஜா, நா.பா … இதைத் தவிர இலக்கியம் படைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் எழுத்தாளர்கள் பக்கத்து மாநிலங்களில் உள்ள குஞ்சனையோ குட்டனையோ எக்ஸ்டராவாக குறிப்பிடுவார்கள். இன்றைய பெரும்பாலான எழுத்தார்கள் சுஜாதாவை ஞாபகமாக மறந்துவிடுவார்கள். இதில் உள்ள உளவியல் காரணங்களை யோசித்தால் அசூயை கலந்த போட்டி தான் காரணம் என்று கூறலாம். ’அசூயை’ என்றால...

புத்தகமாக லைட்ஸ் ஆன்

ரா.கி.ரங்கராஜனை ஒரு மழை நாளில் சந்தித்த போது குமுதத்தில் தான் எழுதிய 'லைட்ஸ் ஆன்' தொகுப்பு புத்தகமாக வர வேண்டும் என்று விருப்பட்டார். "உங்களுக்கு தெரிந்த பதிப்பகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்" என்றார் கிட்டதட்ட ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதற்கு பிறகு அவருடன் நடந்த சம்பாஷனை என்னை மேலும் சங்கடப்படுத்தியது. "நானே போடுகிறேன்" என்று ஒரு வீராப்பில் அவர் வைத்திருந்த 'லைட்ஸ்-ஆன்' பத்திரிக்கை தொகுப்பை பெங்களூருக்கு எடுத்து வந்தேன். 6 மாதம் கழித்து முடியாமல் திருப்பி அனுப்பினேன். போன வருஷம் எழுத்தாளர் 'சுபா' போடுவதாக தகவல் தெரிந்து சந்தோஷப்பட்டேன். ஆனால் புத்தகம் வரும் போது திரு.ரா.கி.ர நம்முடன் இல்லை. போன வாரம் எழுத்தாளர் சுபா அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார். லேசான புத்தகம், உள்ளே லைட்டான விஷயம்...  ஆனால் குற்ற உணர்ச்சியால் மனசு கனத்தது. லைட்ஸ் ஆன்' வினோத் ( ரா.கி.ரங்கராஜன் ) தங்கத் தாமரைப் பதிப்பகம், 37 கால்வாய்க் கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை 600020 போன்:24414441. பக்கம்: 160 விலை:ரூ 70. மற...

‘லைட்ஸ் ஆப்’ - ரா.கி.ரங்கராஜன்

அஞ்சலி கட்டுரை ( நன்றி: சொல்வனம் )

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

ஆட்டோவில் போன அசோகமித்திரன் சுஜாதாவின் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில் என் கல்லூரி நண்பன் மார்டின், “‘ராஜாஜி சினிமாவுக்குப் போனார்’ என்ற அசோகமித்திரன் கட்டுரையை படிச்சு பாருங்க தேசிகன், நகைச்சுவையா இருக்கும்,” என்றார். ‘எந்தப் புத்தகத்தில் அந்தக் கட்டுரை இருக்கிறது என்ற கேள்விக்கு மார்டினால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. “கலைஞன் பதிப்பகத்தில் எதோ ஒரு கட்டுரை தொகுப்பு” என்று மட்டும் க்ளூ கொடுத்தார்.  அந்தக் கட்டுரையை எப்படியாவது தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த சமயம் அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். (அந்தக் காலத்தில் கூகிள் கிடையாது ). கலைஞன் பதிப்பகத்தில் அந்தப் புத்தகத்தைத் தேடி அலைந்து, கடைசியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் வாசலில் கண்ணதாசன் குடும்பத்தார் செய்யும் செட்டியார் ஸ்பெஷல் உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு வந்தேன். சில வருடங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்’ முழுத் தொகுதியை கொண்டுவந்த போது அந்தக் கட்டுரைக்காகவே புத்தகத்தை வாங்கி முதலில் அந்தக் கட்டுரையைத் தேட...