Skip to main content

Posts

Showing posts from February, 2014

கையெழுத்து

தினமும் பல ஆச்சரியங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. அவற்றை கவனிப்பதில்லை.சலூனில் இத்துணூண்டு க்ரீமைக் கொண்டு ஷேவிங் பிரஷ்ஷால் தேய்க்கத் தேய்க்க அட்ஷயப் பாத்திரத்திலிருந்து வருவது போல நுரை வருவது; நூலில் சுற்றப்பட்ட சமோசா கோபுரத்தை கீழே விழாமல் எலக்டரிக் ரயிலில் கூட்டத்தின் மத்தியில் விற்கும் அந்தச் சின்னப் பையன்; எப்போது போனாலும் சரவணபவன் சாம்பார் ஒரே மாதிரி இருப்பது; பர்வீன் சுல்தானா எல்லா ஆக்டேவிலும் ஸ்ருதி பிசகாமல் பாடுவது... புத்தகக் கண்காட்சிக்குப் போன போது இதே மாதிரி இன்னொரு ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது.