Skip to main content

Posts

Showing posts from June, 2017

நான் செய்த பாவம் என்னோடு போகும்...

இளையராஜா பிறந்த நாள் பதிவு ஒன்றில் இந்த வீடியோ துண்டு கிடைத்தது. எல்லோருக்கும் தெரிந்த பாடல் “பூவே செம்பூவே…” நடுவில் வயலின் மழை நிற்கும் முன்பே ஜேசுதாஸ் சரணத்தை எடுத்துவிடுகிறார். கடைசியில் அவர் தான் தப்பாகப் பாடியதை நினைத்து “நான் செய்த பாவம் என்னோடு போகும்” என்று பாடும் இடமும் பாடலும் இனிமை. சந்தேகம் இல்லை. இது பாவம் என்பதற்குப் பெரிய அகராதியே இருக்கிறது. சென்ற வருடம் திருப்புல்லாணி திவ்யதேசம் சென்று சேது சமுத்திரத்தில் குளித்த போது அங்கே மிதக்கும் அழுக்கு துணிகளை பார்த்த போது, இவ்வளவு பாவமா ? என்று மலைத்துப் போனேன். நம்மாழ்வார் ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலை சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது. ஓர் யாத்திரையில் திருவனந்தபுரம் சென்ற போது அங்கே “நானும் ஒரு தொழிலாளி” என்பது போல கோயிலைச் சுத்தம் செய்யும் பணியாளர்களிடமிருந்து தற்காலிகமாகத் துடைப்பத்தை வாங்கி சுத்தமாக இருந்த தரையை சுத்தம் செய்தோம். பாவம் போகும் என்ற நம்பிக்கையில்.

இரண்டு சொட்டு.. இரண்டு குழந்தைகள்

சென்ற வருடம் ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமியுடன் யாத்திரை சென்ற போது மதுரா, கோகுலம், பிருந்தாவன், நந்த கிராமம் என்று சுற்றிய போது என் பக்கம் இருந்த மாமியின் தோளில் இருந்த கைப்பை என்னை கவர்ந்தது. அதன் வாரில் சின்ன குஞ்சலம் மாதிரி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. என்னவாக இருக்கும் என்ற மண்டைக் குடைச்சல் ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன் அவர் சட்டென்று “ஏதாவது வேண்டுதலாக இருக்கும்.. மறந்துவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு” என்றார். “எனக்கு அப்படி தெரியலை...” “அப்ப திருமண் பெட்டியாக இருக்கலாம்” “மாமி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு...” மாமி அசந்த சமயம் உற்றுப் பார்த்தேன்... குஞ்சலத்தின் உள்ளே சின்ன பாட்டில் மாதிரி ஒரு வஸ்து இருப்பது தெரிந்தது. மீண்டும் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன். “நிறையப் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்கிறோம்.. அதை எல்லாம் சேகரித்து வைத்துள்ளார் மாமி” என்றார். லாஜிக் உதைத்தது. உதைப்பட்டாலும் பரவாயில்லை, மாமியையே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். சட்டென்று கேட்டால் வேளுக்குடி ஸ்வாமியிடம் புகார் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் “எங்கிருந்து வருகிறீர்கள் ?”