Skip to main content

Posts

Showing posts from November, 2004

மேல்kind சர்வே!

மேல்kind என்று ஒரு வலைப்பதிவை மீனாக்ஸ், க்ருபா, ஷங்கர் ஆகியோர் நடத்திவருகிறார்கள். அதில் ஒரு புதிய பகுதி மேல்Kind சர்வே! சில சுவாரஸ்யமான கேள்விகளை முன் வைத்து அதன் பதில்களை வெளியிடுகிறார்கள். என்னிடமும் "அந்த" கேள்வியை போன வாரம் கேட்டார்கள். கேள்வி இது தான்: 1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது? நான் ஐந்து வருடம் முன் எழுதிய ஒரு பகுதியை கொஞ்சம் தூசுதட்டி அனுப்பினேன் அவர்களும் பெரிய மனம் கொண்டு , மதித்து பிரசுரித்தார்கள். அதை இங்கு தந்துள்ளேன். பெண் பார்க்க போனதைப் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி... நான் சென்னை வாசி. 1 1/2 வருடங்களாக பஸ் ஸ்டண்ட், பீச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டு இருந்தேன் - எல்லாம் ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கலாம் என்ற ஆசையுடன் (கொஞ்சம் அதிகமாக சினிமா பார்க்கும் ஆசாமி நான்). இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோயிலில் ஒரு பெண்ணை பார்த்து நான் அசடு வழிய..... அதை பற்றி அப்புறம் சொல்கிறேன். இதல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து, என் அம்மாவுடன் பெண் ப

ஸ்ரீரங்கத்தில் சொக்கப்பானை

இந்த வாரம் விருந்தினர் ஸ்ரீரங்கத்து பெண் லக்ஷ்மியை அறிமுகப் படுத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. லக்ஷ்மி தற்போது ஹைதராபாதில் ஒரு software கம்பெனியில் பணிபுரிகிறார். போன வாரம் "ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதம் நடைபெறும் சொக்கப்பானை பற்றி எழுதுங்களேன்" என்றார். "எனக்கு நேரம் இல்லை நிங்கள் எழுதுங்களேன்" என்று ஜகாவாங்கினே. உடனே பேப்பர் பேனாவை எடுத்து, ராமஜெயம் போட்டு, எழுதி, ஸ்கேன் செய்து, ஈ-மெயிலில் எனக்கு அனுப்பிவிட்டார்! எதையும் மாற்றாமல் ( மாற்ற முடியாது என்பது வேறு விஷயம்!) அப்படியே போடுவதில் ஒரு விதமான அழகு கலந்த nativity இருக்கு என்பதால் அவர் எழுதியதை அப்படியே போட்டுள்ளேன். அன்புடன் தேசிகன் [%popup(20050809-lakshmi_letter_1.jpg|750|1031|Lakshmi Letter ( Page 1 ))%] [%popup(20050809-lakshmi_letter_2.jpg|750|1031|Lakshmi Letter ( Page 2 ))%]      Old Comments from my previous blog. எங்க ஊர்லயும் இந்த சொக்கப்பனை கொளுத்துறது, டயர் கொளுத்துறது உண்டு. ஆனால் சாமியை முன்வைத்தல்ல, (இன்றுவரை, ஏனென்றே தெரியாமல் - அல்லது இவங்க கடிதத்தை படிக்கும்வரை, கார்த்திகைனாலே அது மா

அப்பாவின் ரேடியோ

இப்போது வால்வ் ரேடியோ என்றால் பலருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் நிச்சயமாக ட்ரான்சிஸ்டர்க்கு பின் பிறந்தவர்கள். வால்வ் ரேடியோ ஒரு விசித்திரமான ரேடியோ. ஒரு பெரிய மரப்பெட்டி. அதில் மூன்று பீங்கான் குமிழ்கள் - ஒன்று வால்யூமிற்கு, ஒன்று முள்திருப்புவதற்கு, மற்றொன்று பாண்ட் திருப்புவதற்கு. பாண்ட் குமிழை திருகினால் ஒரு வித 'கடக் கடக்' சத்தம் வரும். முள்திருப்பும் குமிழை பார்த்து திருக வேண்டும், அதிகம் திருகினால் முள் திருப்புவதற்கு பயன்படும் 'ட்வைன்'(twine) நூல் அறுந்துவிடும். இடது ஓரத்தில் 'மர்ஃபி' என்று எழுதியிருக்கும். ஒரு குழந்தை (ஆணா, பெண்ணா என்று தெரியாது) வாயில் ஒரு விரல் வைத்துக் கொண்டிருக்கும். வலது ஓரத்தில் 'மாஜிக் ஐ' இருக்கும். அதைப் பார்த்துக்கொண்டு முள்ளை திருப்ப வேண்டும்.'மாஜிக் ஐ'யில் சின்னதாக ஒரு கோடு வந்தால் நன்றாகப்பாடும். சுவிட்ச் போட்டவுடன் பாடாது. உள்ளேயிருக்கும் வால்வ் சூடானவுடன் தான் பாடும். ஏழுமணிக்கு செய்திகள் என்றால், ஆறு ஐம்பத்தைந்துக்கு ரேடியோவை ஆன் செய்ய வேண்டும், இல்லை என்றால் தலைப்புச்செய்திகள் முடிந்திருக்கும். துண