Skip to main content

Posts

Showing posts with the label திருநட்சத்திர

தான் உகந்த திருமேனி

தான் உகந்த திருமேனி எம்பெருமானார் ஸ்ரீரங்கத்துல் கத்ய த்ரயம் சாதித்து, கோயிலில் பல மாறுதல்களை செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு அவர் இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அஸுயை அவர்களை கொலை செய்யவும் தூண்டியது. அவரது பிக்ஷையில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தை திருக்காவிரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதை கேள்விப்பட்ட திருகோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார். கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்ஷணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடி பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்மை போல் அவர் திருமே...

திருக்கோட்டியூர் செல்வ நம்பி

திருக்கோட்டியூர் செல்வ நம்பி ’திருக்கோட்டியூர்’ என்றால் உடனே ஸ்ரீராமானுஜர் பதினெட்டு முறை நடந்து சென்ற விஷயமும்,  திருக்கோட்டியூர் நம்பியும் நம் நினைவுக்கு வருவார்கள்.  திருக்கோட்டியூர் செல்வ நம்பி என்ற ஒருவர் நம் நினைவுக்கு வருவதில்லை. அவரைப் பற்றித் தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.  பெரியாழ்வாருக்கு கண்ணன் மீது அளவு கடந்த பிரியம். அது போல திருக்கோட்டியூர் மீதும்! பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிவிட்டு, பெரியாழ்வார் என்ற பட்டம் பெற்று, பெரியாழ்வார் திருமொழியை எப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள்.  வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே கண்ணன் பிறந்த இடம் திருக்கோட்டியூர் என்று கொண்டாடுகிறார். ஏதோ விஷயம் இருக்க வேண்டும், சற்று ஆராயலாம்.  ஒருமுறை பெரியாழ்வார் திருக்கோட்டியூருக்கு அவருடைய தோழர் செல்வ நம்பியைப் பார்க்க வருகிறார். அங்கே சௌமிய நாராயணப் பெருமாளைச் சேவித்தபோது பெருமாள் கண்ணனாகக் காட்சி கொடுத்தார். அது மட்டுமல்லாமல், திருக்கோயில் நந்தகோபன் மாளிகையாகவும், அந்...