Skip to main content

Posts

Showing posts from December, 2022

2022

2022  கடைசியில் திருஷ்டி சுற்றிப் போடுதல் போல ’இந்த வருடம் என்ன செய்தேன்’ என்று ஒரு பதிவை வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் எழுதுவது மரபு.  கொரோனாவிற்குப் பின்  பயணம் அதிகரித்து, இந்த வருடம் 194 நகரங்கள், 22K கிமீ பயணம் செய்திருக்கிறேன் என்று கூகிள் செப்பியது.   உருப்படியாக செய்த விஷயம் இரண்டரை.  1)பதம் பிரித்த பிரபந்தம் இரண்டாம் பதிப்பு; அதை ஸ்ரீ உ.வே கிருஷ்ண பிரேமி ஸ்வாமி, ஸ்ரீ உ.வே பட்டண்ணா ஸ்வாமி, ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமி, ஸ்ரீ உ.வே வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற பல பெரியோர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றது. ஸ்ரீ உ.வே டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் எழுதிக்கொடுத்த பாராட்டுரை மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எண்பது வயத் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்கள் உங்கள் புத்தகத்தை மேலும் செம்மைப் படுத்த வேண்டும் என்று இரண்டு மணி நேரம் தொலைப்பேசியில் புத்தகத்தில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டி தமிழ் வகுப்பு எடுத்தார்.  அடுத்து,  2) ஸ்ரீராமர் சென்ற பாதையில் யாத்திரை சென்று வந்தது.  0.5)கல்கியில் ’கடைசிப் பக்கம்’ இரண்டு வருடம் தொடர்ந்து எழுதி முடித்தது ( அதைப் படித்திருந்தால் நீங்கள் செய்த உருப்படாத காரியம் அது).

ஆனைச்சாத்தன்

திருப்பாவையில் ஆண்டாள் கூறும் ஆனைச்சாத்தன் என்ற பறவை எது ? இப்போது அதை பார்க்க முடியுமா ? சென்ற வருடம் மதுரை தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் அடியேனிடம் ஆண்டாள் கூறும் ‘ஆனைச்சாத்தன்’ என்ற பறவையைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள் என்றார். ஆனை - யானை, யானைக்கு மேல் பறக்கும் பறவையின் பெயர் என்று ஒரு கருத்தும், ‘ஆ’ என்றால் மாடுகள். மாடுகளுக்கு மேல் உட்கார்ந்து இருக்கும் பறவை என்ற இன்னொரு கருத்தும் உண்டு. கொஞ்சம் தேடிய போது, வைணவ உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் (காலம் கிபி 1230) ‘ஆனைச்சாத்தன்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய காலத்தில் அந்தப் பறவையின் பெயர் வழக்கில் இருந்திருக்கிறது அதனால் வேறு பெயர்களை அவர்கள் உபயோகிக்கவில்லை என்று தெரிகிறது. திருப்பாவை அரும்பத உரையில் ’ஆனைச்சாத்தன் - வலியன் என்னும் பாரத்வாஜபக்ஷிகள்’ என்று ஒரு குறிப்பு வருகிறது. ’பாரத்வாஜ்’ என்று வடமொழியிலும் தமிழிலும் ’’வலியன்' என்ற ஒரே பொருள் தருகிறது. திரு பி எல் சாமி ’சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்’ என்ற புத்தகத்தில் பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் அலி தன் ஆங்கிலப் புத்தகத்தில் வரும் குறிப்

கோதை கீதை - 1

கோதை கீதை - 1   திருப்பாவை - 1 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன் ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்! பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் எல்லா திருப்பாவை புத்தகங்களிலும், உபன்யாசங்களிலும் ’மாதங்களில் நான் மார்கழி மதமாக இருக்கிறேன்’ என்று கண்ணன் கீதையில் சொன்ன ‘மாஸாநாம் மார்க்க சீர்ஷோ ஹம்’ என்ற கீதையின் ( 10.35 ) வரியை மேற்கோள் காட்டி ஆரம்பிப்பது மரபு. நாமும் அப்படியே ஆரம்பித்து ‘நன்னாள்’ என்ற அடுத்த வார்த்தைக்குத் தாவிடலாம். மார்கழி மாதம், முழு நிலவுடன் கூடிய பௌர்ணமி! நோன்பைத் தொடங்க ஒரு சுபமுகூர்த்தம் வாய்த்தது என்கிறாள் ஆண்டாள். ஆண்டாள் பஞ்சாகம் பார்த்து ஆரம்பிக்கவில்லை, இது தற்செயல். சுபமுகூர்த்தம் என்ற கரடுமுரடான சொல்லுக்கு அழகிய தமிழ் சொல் ’நன்னாள்’. சுபமுகூர்த்தம் என்பது மாதம், பக்ஷம், காலம் என்று பஞ்சாங்கத்தை வாத்தியார் ஸ்வாமி அலசக் கொடுக்க வேண்டும். ஆண்டாள

கோதை கீதை - அவதாரிகை

 கோதை கீதை - அவதாரிகை திருமழிசைப்பிரான் பாசுரம் இது சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் அன்று தேர்த்தட்டில் கண்ணன் ஓதிய கீதையை( சரம ஸ்லோகம்) அறியாதவர்கள் உலகத்தில் எதற்கும் தகுதியில்லாதவர்கள் என்கிறார் வேதப்பிரான் பட்டர் திருப்பாவை குறித்து இப்படிச் சொல்லுகிறார். பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ் ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு. வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழ் திருப்பாவை முப்பதும் தெரியவில்லை என்றால் உங்களை இந்த பூமி சுமப்பதே வீண் என்கிறார். ஆக, கீதை, திருப்பாவை இரண்டும் தெரியவில்லை என்றால் நீங்கள் வேஸ்ட் என்று சொல்லி விட்டார்கள் கீதையையும் திருப்பாவையையும் சேர்த்து ’கோதை கீதை’ என்ற தலைப்பில் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன். ’ஸர்வோபநிஷதோ காவோ’ என்று ஆரம்பிக்கும் கீதையின் தியான ஸ்லோகத்தின் பொருள் - உபநிஷதங்கள் என்னும் பசுக்களிலிருந்து கோபாலன் என்ற பால்காரன் அர்ஜுனன் என்ற கன்றுக்கு கறந்த பாலாகிய கீதை

தொண்டரடிப்பொடி ‘ஃபார்முலா’

 தொண்டரடிப்பொடி ‘ஃபார்முலா’  கணக்கு போடுவதற்கு எப்படி ’ஃபார்முலா’ அவசியமோ அது போல ஸ்ரீ வைஷ்ணவத்தைக் கற்றுக்கொள்ள மிக முக்கியமான ஃபார்முலா ’தொண்டரடிப்பொடி’யாக இருப்பது.  பல கோயில்களுக்கு சென்று பெருமாளை வழிபடுகிறோம். ஸ்ரீரங்கத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறான், திருமலையில் நின்றுகொண்டு இருக்கிறான். ஆனால் அந்தப் பெருமாள்களுக்கு மிகவும் உகந்த இடம் எது தெரியுமா ? அது அடியவனின் நெஞ்சம்.  சதா சர்வ காலமும் பெருமாளை நினைத்துக்கொண்டு இருக்கும் ஆசாரியனே தனக்குத் தெய்வம் என்றும் நான் அவருடைய உடமை என்று எண்ணுவதால் அந்த அடியவனின் தூய நெஞ்சில் உறைந்து போய் பெருமாளுக்கு  விரும்பிய உறையுமிடமாகிறது.  கோயில் முற்றத்தில் அடியார்களின் திருவடிகளால் ஏற்படும் சேறு என உடம்புக்கு அணிகலன் என்றும் அகன்ற மூவுலகங்களைப் பெறுவதைக் காட்டிலும் பாகவதர்களுக்கு ஆட்படுவதே எல்லாவற்றையும் விடப் பெரியது என்பதை அறிகிறோன். அடியார்களுக்கு ஆட்படுவதே எனக்கு வேண்டுவது. இதை விடப் பெரிய பேறு வேறில்லை என்கிறார் நம்மாழ்வார்.  அவருடைய  சிஷ்யரான மதுரகவி ஆழ்வார் “தேவ மற்றறியேன்” ”அவன் பொன்னடி மெய்ம்மையே” என்று நம்மாழ்வாரே எல்லாம் என்று இர