Skip to main content

Posts

Showing posts from March, 2022

தொடை நடுங்கி

தொடை நடுங்கி ‘சரியான தொடை நடுங்கி’ என்ற சொல்லை நிச்சயம் நாம் எல்லோரும் கேட்டிருப்போம்.  ’தொடை நிஜமாக நடுங்குமா’ என்ற சந்தேகமே வேண்டாம். தொடை நடுங்கும். எனக்கு நடுங்கியிருக்கிறது.  எப்படி என்று சொல்லுகிறேன். 2004ல் பெங்களூர் வந்த புதிது. அலுவலகம் செல்ல கார் வாங்கினேன்.  பொன்வண்டு போலப் பளப்பாக இருந்தது.  ஓட்டுநர் உரிமம் +12 விடுமுறையில் ஒரு அம்பாசிடர் கார் ஓட்டிக் காண்பித்தபோது ’பிழைத்துப் போ’ என்று கொடுத்தது. புதுக் காரை ஓட்ட தைரியம் இல்லாமல், “நீங்களே வீட்டுல டிராப் செய்துவிடுங்கள்”. கார் வீட்டுக்கு வந்தது. ஒரு வாரம் ஸ்டார்ட் செய்து விடியற்காலை யாரும் இல்லாத சமயம் அடுக்குமாடிக் குடியிருப்பை ஒரு வட்டம் அடித்துவிட்டு பார்க் செய்துவிடுவேன்.  ஒரு நாள் கொஞ்சம் தைரியம் வந்து அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றேன். ஒரு வாரத்துக்குப் பிறகு பெங்களூர் சாலைகள், சிக்னல், எஃப்.எம். வானொலியில் ‘Sakkath Hot Magaa’ எல்லாம் பழக்கப்பட்டது.  எல்லாம் நன்றாகச் சென்று கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் மழை வந்தது. அன்று மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பியபோது லேசான தூறல்தான். ’காரை மழையில் ஓட்டிப் பார்க்கலாம்’ என

திவ்யப் பிரபந்தமும், அநுபந்தமும் - அறிவிப்பு

 ஸ்ரீ  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  திவ்யப் பிரபந்தமும்,  அநுபந்தமும் - அறிவிப்பு கடந்த ஆண்டு ( 2022 ) ’ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம்’  ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடாக வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட  புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கோவிட் இரண்டாம் அலையின் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் பலருக்கு அனுப்பப்பட்டது. ஆழ்வார்கள், ஆசாரியர்கள், தாயார், பெருமாள் அனுக்கிரஹத்துடன் எந்த தடங்கலும் இல்லாமல் சென்றடைந்தது.  கூடிய விரைவில் இரண்டாம் பதிப்பு பிரபந்தம் கூடவே அநுபந்தத்துடன் வரவிருக்கிறது என்பதை இந்தப் பங்குனி உத்திரம் நன்னாளில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.  ‘திவ்யம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘divine’ என்று அர்த்தம் கொள்ளலாம். தமிழில் தெய்வத்தன்மை. ஆழ்வார்களை நாம் திவ்யசூரிகள் என்று அழைக்கிறோம்.  அவர்களுடைய கதைகளை திவ்யசூரி சரித்திரம் என்கிறோம். பாடிய பாசுரங்களை ‘திவ்ய’ பிரபந்தம் என்கிறோம். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தேசங்களை திவ்ய தேசம் என்கிறோம்.  நன்றாக கவனித்தால் ஆழ்வார்கள் சம்பந்தம் இருந்தால் மட்டுமே அது

தி காஷ்மீர் ஃபைல்

 தி காஷ்மீர் ஃபைல்  சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ’தி காஷ்மீர் ஃபைல்’  பார்க்க இன்று திரையரங்கிற்குச் சென்றேன். படத்தைப் பற்றிச் சொல்லும் முன் இன்று பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள்.  சுமார் 700 வருடங்களுக்கு முன் இதே நாளில் பங்குனி உத்ஸவம் ஆரம்பித்து எட்டாம் நாள் பன்றியாழ்வான்(வராகப் பெருமாள்) கோயிலில் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்த சமயம், அங்கே பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுமியிருந்தார்கள்.  அந்தச் சமயத்தில் உலூக்கான் தலைமையில் முகம்மதியர்கள் ஊருக்குள் நுழைந்து,  கூடியிருந்த அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்தில் 12,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை(genocide) “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.  இதைக் குறித்து 2005ல் சுஜாதா விகடனில் கற்றதும் பெற்றதுமில் இப்படி எழுதியிருந்தார்.   ”அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான ‘கோயில் ஒழுகு’ புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன் … ‘கோயில் ஒழுகு’ நூலில், ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் என்று பதினோரு விஷயங்கள் குறிப்பிட

பாகவத திருப்பாவை - 26 ( மாலே! )

பாகவத திருப்பாவை - 26 ( மாலே! ) மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே, கொடியே, விதானமே ஆலின் இலையாய்! அருள் ஏலோர் எம்பாவாய். “திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்” என்கிறார் பெரியாழ்வார். ஆண்டாளோ ‘மாலே!’ என்கிறாள். மால் என்றால் என்ன பொருள் என்று தெரிந்துகொள்ளலாம்.  மால் என்றால் “வ்யாமோஹம்” என்ற வார்த்தையைக் குறிக்கிறது. எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா ? நாம் தினமும் சேவிக்கும் எம்பெருமானார் தனியனில் வரும் அந்த வார்த்தையைக் கீழே தேடுங்கள்.  யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம  வ்யாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேநே  அஸ்மத்குரோர் பகவதோsஸ்ய தயைகஸிந்தோ:  ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே. ஸ்ரீராம பாரதி ஆங்கிலத்தில் இரண்டு வரி அர்த்தம் தந்திருக்கிறார்.  “I surrender to Sri Ramanuja  the ocean of ’compassion’ who strove for the lord's feet as the only worthwhile possession and discarded all else as lightly a

ஜே.எஸ்.ராகவன் - அஞ்சலி

ஜே.எஸ்.ராகவன் - அஞ்சலி  எழுத்தாளர் சுஜாதா மறைந்தபோது எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.  அதில்  ‘தமாஷா வரிகள் (304)’ – ’வைகுண்டம் டைம்ஸில்’ சுஜாதாவின் ‘கேள்வி பதில்கள்’ என்று ஒரு நகைச்சுவை பகுதி இணைக்கப்பட்டிருந்தது. கடைசியில் விகடனில் உங்கள் சுஜாதா கட்டுரை படித்தேன், ‘டச்சிங்’ – ஜே.எஸ்.ராகவன் என்று இருந்தது. அதற்குப் பிறகு அவருடன் சில மின்னஞ்சல் பரிமாற்றங்களுடன் எங்கள் தொடர்பு மங்கிப் போய், நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூர் குளிரில் துளிர் விட்டது. ஒரு நாள் காலை தொலைப்பேசியில் “நான் ஜே.எஸ்.ராகவன் பேசுகிறேன். நினைவிருக்கிறதா?  என் பையன் பெங்களூரில் இருக்கிறான். வந்திருக்கிறேன். சந்திக்கலாமா?” என்றார். “நல்லா நினைவு இருக்கிறது சார். பெங்களூரில் எங்கே?” விவரமாக விலாசத்தை சொல்லிவிட்டு “நீங்க எங்கே இருக்கேள் ? வரமுடியுமா?” என்றார். “உங்க ஃபிளாட்டை விட்டு கீழே இறங்கி வந்தால் வாசலில் ஒரு ஃபௌண்டன் இருக்கிறதா?” “ஆமாம்” “பத்து நிமிஷத்தில் நான் அங்கே இருப்பேன். நீங்க ‘C’ பிளாக் நான் ‘A’ பிளாக்” என்றேன். “நான் தமாஷா வரிகள் எழுதி மாம்பலம் டைம்ஸுக்கு அனுப்ப வேண்டும். அதனால் ஒரு மணி நேரம் க

உய்யும் ஆறு எண்ணி ...

 உய்யும் ஆறு எண்ணி ... திருப்பாவை இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் ‘உய்யும் ஆறு எண்ணி’ என்று கூறுகிறாள். இதற்குப் பொருள் ‘உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து’... இதை ஆண்டாள் திருக்கச்சி ‘நம்பி’ சொன்ன ஆறு வார்த்தைகளை மனதில் வைத்துச் சொன்னாளோ என்று நினைத்ததுண்டு. நம்பிகள் ராமானுஜருக்கு அவர் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டுத் தீர்த்துவைத்த கதை பிரசித்தம். அப்போது பெருமாள் திருக்கச்சி வாயிலாகச் சொன்ன அந்த ஆறு வார்த்தைகள் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பொதுவாக நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் நமக்குப் பல சந்தேகங்கள் தோன்றும். அப்போது எல்லாம் பக்தி, சக்தி என்ற பத்திரிக்கைகளைப் படிக்காமல்,  இந்த ஆறு வார்த்தைகளைப் படித்தால் நிச்சயம் குழப்பம் இல்லாத விடை கிடைக்கும்.   இந்த ஆறு வார்த்தைகளில் ஸ்ரீபாஷ்யசாரம், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய சாரம் என்று எல்லாம் அடங்கியிருக்கிறது.  திருக்கச்சிகள் சொன்ன அந்த ‘உய்யும் ஆறு’ வார்த்தைகள் என்ன என்று பார்க்கலாம்.  1. அஹமேவ பரம் தத்வம் - எல்லா தத்துவங்களுக்கும் காரணமான பரத்துவம் நானே.  2. தர்சனம் பேத ஏவ - சித் ( ஜீவாத்மா ),

சம்பிரதாயத்தை வளர்க்க…

சம்பிரதாயத்தை வளர்க்க…  சமீபத்தில் சம்பிரதாய வைணவ இதழ் ஒன்றைப் படித்துக்கொண்டு இருந்தேன். அதில் வடகலை தென்கலை என்ற எந்தப் பேதமும் இல்லாமல்  மணமகள்/மகன் தேவை என்ற விளம்பங்களில் பல ஒற்றுமைகளைப் பார்க்க முடிந்தது.  பெரும்பாலும் எல்லாமே  'Kalai no bar’, ‘subsets no bar'  என்று கேட்பதில் ஒரு  ‘desperation’ பார்க்க முடிந்தது. நரசிம்மராவ் பிரமராக இருந்த சமயம் வெளிநாட்டுக்குச் சென்ற என் வயது ஐயங்கார்களின் குழந்தைகளுக்கு  ‘MS USA seeking US settled..' 'seeking at Toronto', 'H1B visa holder seeks employed/employable girl in USA' ' seeks bride willing to relocate in Bay area' ... என்று பல வண்ணத்துப் பூச்சிகளின் வேட்டை கண்ணில் பட்டது.  விளம்பரங்களில் கலை பேதம் மறைந்து வெளிநாடு, உள்நாடு என்ற பேதத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.  வெளிநாட்டில் இருப்பவர்கள் வெளிநாட்டில் தேடுகிறார்கள். உள்நாட்டில் இருப்பவர்கள் இங்கேயே ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறார்கள்.  இன்று  ’ஆமாவா’ என்று தமிழ் பேசும் 'மைசூர் ஐயங்கார்’ பிரிவு இருப்பது போல நாளை வெளிநாட்டு ஐயங்கார் என்ற பிரிவு

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம்

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம்  சுஜாதாவின் ’ ‘ஸ்ரீரங்கத்து கதைகள்’ தொகுத்துக்கொண்டு இருந்தேன். அதில் அப்பாவின் ‘ஆஸ்டின்’ என்ற சிறுகதையை அதில் சேர்க்க வேண்டுமா? என்ற சந்தேகம் வர, ஒரு மாலை சுஜாதா அவர்களின் இல்லத்துக்குச் சென்று பேசியபொழுது அந்தக் கதை கிட்டத்தட்ட முழுவதும் உண்மை என்று தன் அப்பாவைப் பற்றி பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ‘அப்பாவின் ஆஸ்டின்’ என்ற சுஜாதாவின் சிறுகதையைப் படித்திருப்பீர்கள். கதை இதுதான். சுஜாதாவின் தந்தை அழுக்கு நிறத்தில் ஓர் ஆஸ்டின் கார் வாங்குவார். குடும்பத்தில் எல்லோரும் அதன் கலரை மாற்றச் சொல்லியும் மாற்றாமல் இருப்பார். பிறகு ரிடையர் ஆன பிறகு அதை விற்றுவிடுவார். அவர் ஏன் நாங்கள் எல்லோரும் பல முறை சொல்லியும் வண்ணத்தை மாற்றவில்லை என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் பிறகு “He had a message for us” என்றார். இதே போல நாங்கள் திருச்சியில் வாடகை வீட்டில்தான் இருந்தோம். ரொம்ப பழைய வீடு. நாங்கள் எவ்வளவு செல்லியும் என் அப்பா கடைசி வரை அந்த வீட்டை மாற்றவில்லை. என் அப்பா காலமான பிறகு வீட்டை மாற்றினோம். “ஒரு நாள் அம்மா போனில்… நாம் இருந்த வீட்டை இடிக்க ஆரம்பிச

பகல் வேஷம்

போன வருடம் கல்கி கடைசிப் பக்கத்தில் ‘பகல் வேஷம்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதினேன்.  அதை கீழே படிக்கலாம். அதில் அனுமார் வேஷம் போட்டுக்கொண்டு பாடுபவர் பற்றி எழுதியிருந்தேன்.  சற்று முன் அவரை மீண்டும் சந்தித்தேன். ஒரு வீடியோ எடுக்க முடிந்தது. அதை நீங்களும் அனுபவிக்கலாம்.  பகல் வேஷம்  “கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற அந்தக் கால சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுக்கவில்லை” என்று போன வாரம் வரை நினைத்துக்கொண்டு இருந்தேன். யூடியூப்பில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்த போது கே.பி. இயக்கிய ’எதிரொலி’ படத்தில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார் என்று அறிந்து அதைத் தேடிக் கண்டுகளித்தேன். அதில் சிவாஜி மிக நேர்மையானவர். தன் குழந்தை பிறந்த நாள் பரிசாக ஆத்திச்சூடி போல ஏழு கட்டளைகள் அடங்கிய படத்தைக் கொடுப்பார். அதில் பொய் சொல்லாதே, திருடாதே… என்று ஒரு பட்டியல். சந்தர்ப்பச் சூழ்நிலைக் காரணமாக சிவாஜி ஒரு தப்பு செய்ய, அதை மறைக்க பல பொய்கள் என்று முன்பு அவர் கொடுத்த அறிவுரை ஒவ்வொன்றாக மீறிக்கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் வீட்டைச் சோதனை போட வேண்டும் என்று காவலர்கள் வந்து நிற்பார்கள். சிவாஜி கதிகலங்கிகலங்கிகலங்கிய (அ