Skip to main content

Posts

Showing posts from 2023

இரட்டை ஆசாரியர்கள்

 இரட்டை ஆசாரியர்கள் கண்ணன் பிறந்த இடம் எது ? என்றால் உடனே மதுரா என்று பதில் சொல்லுவீர்கள். ஆனால் பெரியாழ்வாருக்கு கண்ணன் பிறந்த இடம் திருக்கோட்டியூர் ! தான் ! வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே. என்கிறார். ஆண்டாள் துளசி தோட்டத்தில் பிறந்து ஆயர்பாடியில் பெண்ணாக தன்னைப் பாவித்துக்கொண்டு ’சங்கத்தமிழ் மாலை’ என்ற திருப்பாவையை நமக்கு தந்தாள். திருப்பாவை தனியனான ”நீளாதுங்கஸ்தன கிரிதடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்” என்ற தனியனுக்கும் மேலே சொன்ன திருக்கோட்டியூருக்கும் சம்பந்தம் உண்டு. இந்தத் தனியன் எப்படி அவதரித்தது என்று பார்க்கலாம். திருக்கோட்டியூருக்கு ஸ்ரீராமானுஜர் பதினெட்டு முறை நடந்தார் என்ற சரித்திரம் பிரசித்தம் ஆனால் ஸ்ரீராமானுஜருக்கு பிறகும் அங்கே நடந்த சில சரித்திர நிகழ்வுகள் பற்றி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். வாருங்கள் கிபி 1122க்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். கூரத்தாழ்வான் திருகுமாரரான பட்டர் காலம் கிபி 1122 முதல் கிபி 1174. இந்தக் காலத்தில் விக்கிரம சோழன் ஆட்சி புரிந்தான் ( மு

பதம் பிரித்த பிரபந்தமும், பெருமாள் பாதம் பிடித்த பி.எஸ்.ஆரும்

பதம் பிரித்த பிரபந்தமும், பெருமாள் பாதம் பிடித்த பி.எஸ்.ஆரும்  உலக புத்தகத் தினம் அன்று எனக்கு ஸ்ரீ பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள் தயாரித்த ‘பதம் பிரித்த பிரபந்தம்’ புத்தகம் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுத உலகமே அந்தப் புத்தகம் வேண்டும் என்று கேட்டு எனக்கும் கடுகுக்கும் கடிதமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டார்கள். . எழுத்தாளர் கடுகு எனக்குச் சுஜாதா ஆசாரியன் திருவடியை அடைந்த பின் தான் அறிமுகம். 2008ல் ஒரு மெயில் அனுப்பியிருந்தார் உங்களை அன்று சுஜாதாவின் வீட்டில் அடையாளம் தெரிந்துகொள்ளவில்லை என்று எழுதிக் கூடவே அவருடைய போன் நம்பரையும் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவருடன் பல உரையாடல்கள். மெயில் மூலமாக, நேரில், தொலைப்பேசியில் நிகழ்ந்தது. . முதல் முறை அவரைச் சந்தித்தபோது அவரைச் சேவித்து பதம் பிரித்த புத்தகம் ஒன்று வாங்கிக்கொண்டேன். ஒரு சமயம் என் கதையைப் படித்துவிட்டு “அடுத்த நாள்” என்று எழுதியிருக்கிறீர்கள் அது “மறுநாள்” என்று எழுத வேண்டும் என்று கதையைச் செதுக்கி கொடுத்தார். எப்போது வீட்டுக்குச் சென்றாலும் “பஜ்ஜி இல்லை போண்டா சாப்பிடுகிறீர்களா ?” வேண்டும் என்றால் எனக்கு

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் தமிழில் ஆழ்ந்த புலமையைக் கொண்டு புறநானூறு படிப்பது போல ஆழ்வார் பாசுரங்களைப் படித்தால் ஆழ்வார்கள் கூறிய பொருளை அறிந்துகொள்ள முடியாது. புரிந்து கொள்ள மூன்று விஷயங்கள் செய்ய வேண்டும். - முதலில் ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கும் போது மன்னிக்கவும், சேவிக்கும் போது அது ஆழ்வார்களின் நாவில் பெருமாள் அமர்ந்து உதிர்த்த ஈரச் சொற்கள் என்று நம்ப வேண்டும். - நம் பூர்வர்களின் உரைகள், அதற்கு அவர்கள் கூறும் ஐதீகங்கள்(உதாரணம்) என்ன என்று மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையாக சுவைக்க தொடங்கினால், மைக்ரோ ஃபைபர் துணியில் துடைத்த மூக்குக்கண்ணாடி போல பளிச்சென்று தெரிய ஆரம்பிக்கும். - ஸ்வாமி தேசிகன், ஸ்ரீ மணவாள மாமுனிகள் போன்ற ஆசாரியர்கள் அருளிய கிரந்தங்களை வைத்துக்கொண்டால் அக்கார அடிசலுக்கு மேல் நெய் போல மணம் வீசும். ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு ஒவ்வொரு பாசுரத்துக்கும் அதன் சாரத்தைப் பிடித்து பாசுரங்களின் எளிய உரையை ஸ்வாமி தேசிகன் அருளிய அதிகாரசங்கிரகம் கொண்டு படிக்கும் போது தண்டவாளத்தில் போகும் ரயில் போல ஒரே பாதை தப்பாமல் செல்ல முடிந்தது. ஓர் உதாரணம் நான்காம் பா

குதிகால் சிற்பம்

 குதிகால் சிற்பம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒவ்வொரு கல்லும், சிற்பமும் பல நூற்றாண்டுச் சுவடுகள். எல்லா ஆழ்வார்களும் ஆசாரியர்களும் கொண்டாடிய ஸ்ரீ வைஷ்ணவத் தலைமைச் செயலகம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. அதன் அருகில் நாம் இருக்கிறோம் என்று தினமும் பெருமைப் பட வேண்டும். ஒவ்வொரு சிற்பத்தின் வழவழப்பும், பல தாக்குதல்களையும், இயற்கைச் சீற்றங்களையும் கடந்து வந்தவை. அவை இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பெரிய பெருமாளும், நம் ஆசாரியர்களுமே காரணம். ஸ்ரீரங்கம் கார்த்திகை கோபுர வாசல் படியில் பல அடியார்களைக் காலடி பட்டு இருவர் சேவிக்கும் சிற்பம் ஒன்றைப் பதிவிட்டிருந்தேன்.அதற்கு வேதம் படித்த வாத்தியார் இப்படியொரு கருத்தைப் பின்னூட்டமாக எழுதியிருந்தார். ”கார்த்திகை கோபுர வாசலில் இருப்பதாக ஓர் ஆணும் பெண்ணும் நமஸ்காரம் செய்யும் படம் இடம் பெற்றுள்ளது. இதில் பெண் நமஸ்காரம் செய்யும் முறை தவறாக உள்ளதே! ஒருக்கால், வைஷ்ணவச் சம்பிரதாயம் அதுவா... தயவு செய்து விளக்கவும்” இதைப் பற்றி எல்லாம் அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அதனால் நகைச்சுவையாக இப்படிப் பதில் சொல்லியிருந்தேன். . ”இன்றைய ஸ்ரீ வைஷ்ணவரின் செல்ஃபியை ஆயிரம்

கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை கோயில் என்றால் அது திருவரங்கம் தான். இன்றும் நாராயணா என்று சொல்லுவதைக் காட்டிலும், திருவரங்கம் என்றால் மனதில் ஒரு கிளர்ச்சி ஏற்படுகிறது. அடுக்குமாடிக்குடியிருப்பு வாங்கும் போது சின்ன அளவில் ’மினியேச்சர் மாடல்’ ஒன்று வைத்திருப்பார்கள். குட்டியாக பார்க்க அழகாக இருக்கும். திருவரங்கம் வைகுண்டத்தின் மினியேச்சர் மாதிரி. அதனால் தான் பூலோக வைகுண்டம் என்கிறோம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்யச்* செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்* மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா* கருவிலே திரு இலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே. அதாவது ஸ்ரீராமருக்கு ஏற்ற இடம் திருவரங்கம் ‘பெரிய’ கோயில். திருவரங்கம் என்று சொல்லவில்லை என்றால் நீங்க பிறந்ததே வேஸ்ட் என்று சொல்லிவிட்டார். திருவரங்கம் என்ற சொல் எப்படி நம் மனதை வசீகரிக்குமோ அதைவிட வசீகரிப்பவர் நம்பெருமாள். அந்த நம்பெருமாளை அரையர் ”மந்தாரம் கண்டால் மறையும் பெருமாள்” என்பார். அதாவது நம்பெருமாள் புறப்பாட்டின் போது ’மப்பும் மந்தாரமாக’ மழை வருவது மாதிரி இருந்தால் உடனே நம்பெருமாள் கோ