Skip to main content

Posts

Showing posts from May, 2017

பிக் டேட்டா

அலுவலகத்தில் இருந்தேன். என் பத்து வயது மகன் தொலைப்பேசினான். “சுப்பாண்டி காமிக்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடு” என்றான். “இப்ப மீட்டிங்கில் இருக்கேன்... அப்பறம்.” ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தொலைப்பேசி அழைப்பு. “என்ன ஆர்டர் செஞ்சாச்சா?” “ஃபிளிப் கார்ட்டில் இல்லையே...” ”ஐயோ அப்பா... கூகிளில் சுப்பாண்டி என்று தேடு... அமேசான், ஸ்னாப் டீல்... நிறைய வரும் விலையுடன்... எது சீப்போ அதை வாங்கு...” இந்தச் சம்பவத்துக்கும் ‘பிக் டேட்டா’வுக்கும் தொடர்பு இருக்கிறது. கோயில் கல்வெட்டு பார்த்திருப்பீர்கள். அது ஒரு விதமான தகவல். நம் கணினியில், தாத்தாவின் டைரியில் இருப்பது எல்லாம் தகவல்களே. உதாரணத்துக்கு உங்கள் தாத்தாவின் டைரியில் நான்கு என்ற குறிப்பைப் பார்க்கிறீர்கள். அது வெறும் எண். அது தகவல் ஆகாது. ஆனால் அதே தகவலுக்கு முன் வேஷ்டி என்று இருந்தால், அது சலவைக் கணக்கு என்று சுலபமாகப் புரிந்துவிடும். டைரியை மேலும் திருப்பினால் மீண்டும் நான்கு வேஷ்டி என்று வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் மாதம், தேதி, கிழமையைப் பாருங்கள். அதிலிருந்து எதாவது தகவல் கிடைக்கலாம். உதாரணமாக உங்கள் தாத்தா மா

பாடம் கற்றுக்கொடுத்த பத்து நூறு கண்ட பாஷ்யகாரர்

மேல்கோட்டை, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்  கடந்த ஒருவருட காலமாக உற்சவங்கள்,உபன்யாசங்கள், பஜனைகள், கருத்தரங்கங்கள், பட்டி மன்றங்கள், புத்தகங்கள், காலண்டர்கள், ஸ்டிகர்கள் சிறிய/பெரிய சிலைகள் என்று எங்கு பார்த்தாலும் ’ஸ்ரீராமானுஜர்-1000’ கொண்டாட்டமாக இருந்துக்கொண்டு இருக்கிறது. ராமானுஜர் சம்பந்தமாக எதையாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எல்லோரிடமும் இருப்பதை காணமுடிந்தது. கோயிலுக்கு முன் போஸ்டர் ஒட்டினார்கள் முடியாதாவர்கள் ’வாட்ஸ் ஆப்’, ஃபேஸ்புக்கில்; தீபாவளி மலர் மாதிரி ராமானுஜர் மலர் கொண்டு வந்தார்கள், தில்லியில் ஸ்டாம்ப் ரிலீஸ்.. எல்லோரும் எதையோ ஆசையுடன் செய்துகொண்டு இருக்கிறார்கள். அடியேனுக்கு ஒரே ஆசை. அவர் அவதரித்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் கால் பதித்து ‘தான் உகந்த’ திருமேனியை தூரத்திலிருந்தாவது சேவித்துவிட்டு வர வேண்டும் என்று. ஸ்ரீபெரும்புதூரில் நண்பர்களிடம் (மே-1) சித்திரை திருவாதிரைக்கு வரலாம் என்று இருக்கிறேன் என்று பேச்சுக்கொடுத்த போது “ஸ்வாமி தயவு செய்து வந்துவிடாதீர்கள்…” “கிட்டதட்ட இரண்டு லட்சத்துக்கு மேல் கூட்டம் வரப்போகிறது.. நிற்கக் கூட இ

சுஜாதா என்ற வாத்தியார்

'வாத்தியார்’ என்று அன்போடு அழைக்கப்படும் என் அபினான எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பிறந்த தினம் இன்று. படித்துவிட்டு ராக்கெட் விடலாம், பெரிய வேலையில் இருக்கலாம் அல்லது மேதாவியாக கூட ஆகியிருக்கலாம். காரணம் அவர்களுடைய பள்ளி வாத்தியார் அதே போல தான் சுஜாதா என்ற வாத்தியாரும்! பிப் 27 அவரைப் பிரிந்த நாளில் கலைஞர் முதல் பல பிரபலங்கள் வந்தார்கள் வருத்தப்பட்டார்கள் அஞ்சலி செலுத்தினார்கள். என்னைப் போல பலர் அழுதார்கள். ஆனால் நான் வியந்த விஷயம் மயானத்தில் வேலை செய்யும் சிப்பந்தி அழுதுகொண்டு இருந்தார். அழுததற்குக் காரணம் அவரும் சுஜாதா ரசிகர் ! கலைஞர் முதல் மயானத்தில் வேலை செய்யும் ஒரு கடை நிலை ஊழியன் முதல் வசிகரித்தவர் சுஜாதா அதனாலேயே அவர் எழுத்துலக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். நான் சுஜாதாவை படித்ததே இல்லை என்று என் தலைமுறையில் யாராவது சொன்னால் அவருக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று அர்த்தம். இன்றும் யாராவது சுஜாதா பற்றி நல்லதோ கெட்டதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வாலி வதம் செய்தது சரியா ? தப்பா ? சீதையை ராமன் அனுப்பியது சரியா ? தப்பா ? போன்ற தலைப்புகளுடன் சுஜாதா வணிக எழுத்தாளரா