Skip to main content

Posts

Showing posts from 2011

போராட்டமே வாழ்க்கை

எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் சிகப்பு நிற கிளோட்டன் செடியின் நுனிக்குருத்தை சில வாரங்களுக்கு முன் குரங்கு ஒன்று வந்து பிய்த்துப் போட்டது. இத்தனைக்கும் எங்கள் வீடு 15-ஆவது மாடியில் இருக்கிறது. செடியில் குருத்து என்பது மிக முக்கியமானது. சில செடிகளுக்கு நுனிக்குருத்து மிக முக்கியம். தேங்காய், பனை போன்றவற்றில் நுனிக்குருத்தை வெட்டிவிட்டால் செடி வளராது. முளைக்கருவிலிருந்து (embryo) புறப்படும் இந்த நுனிக்குருத்து செடிக்கு மிக இன்றியமையாதது. ஆங்லத்தில் Terminal Bud என்பார்கள். செடி எப்படி வளரவேண்டும் எங்கே இலைவிட வேண்டும் என்ற எல்லாமே அங்கேதான் இருக்கிறது. 100 வருடம் வாழ்ந்துகொண்டு இருக்கும் மரத்தையும், மண்ணிலிருந்து உலகத்தை எட்டிபார்க்கும் சின்ன செடியையும் பெரிதாக வளரவைப்பது இந்த நுனிக்குருத்துதான். செடிகளில் குறிப்பிட்ட அளவில் கணுக்களைக் காணலாம் (axil). செடிகளில் தோன்றும் கணு, செடி வளர்வதற்கு ஏற்ற சக்தியை அங்கே சேகரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன். வேர்களிலிருந்து வளரும் கீழ்நோக்கி நீளும் கிளைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும். ஆனால் செடிகளில் மேல்வளரும் கிளைகள் இந்தக் கண

வீடு வாங்கிய கதை

கடைசிக்காலம் வரை என் அப்பா வாடகை வீட்டில் இருந்தாலோ என்னவோ எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. திருமணம் ஆன பிறகு “மாப்பிள்ளை, எப்போது குழந்தை?” என்ற கேள்விக்கு விடைகிடைத்தபின்பு வீட்டுக்கு வருபவர்கள் “எப்போது சொந்த வீடு?” கேள்விக்கு மாறிவிட்டார்கள். “வேளச்சேரில என் ஃப்ரெண்டோட ஃபிளாட் ஒண்ணு ஒருக்கு, மழை வந்தால் அந்த வீட்டைச் சுத்தி மட்டும் தண்ணி வராது”

மல்லையா மருத்துவமனையின் முரண்

ஷூ ஃபிளவர் என்ற செம்பருத்தியை ஷூவில் தேய்த்தால் பளபளவென்று ஆகும் என்று சின்ன வயதில் நம்பி தேய்த்திருக்கிறேன். அதில் உள்ள ஈரத்துக்கு கொஞ்சம் நேரம் ஷூ பளபளக்கும். மாமியார் வீட்டில், முடிகொட்டாமல் இருக்க இந்தப் பூவை வெய்யிலில் காய வைத்து சீயக்காயுடன் அரைக்க உபயோகப்படுத்துவார்கள். ஒரு சமயம் இந்தப் பூவைச் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்; கொழகொழவென்று இருக்கும். ஆர்கானிக் டீ செய்கிறார்கள். சாமிக்குப் போடுகிறார்கள். தலையில் மட்டும் யாரும் வைத்துக்கொள்ளுவதில்லை!. செம்பருத்தி, சிவப்பு நிறத்தில் பார்த்திருக்கிறோம், பெங்களூரில் பல வண்ணங்களில் பூக்கிறது- ஆரஞ்ச், பிங்க், வெள்ளை, மஞ்சள்... ஒரே வண்ணமாகவும், இரண்டு வண்ணமாகக் கலந்தும்கூட இருக்கும். எந்த வண்ணமாக இருந்தாலும் எண்ணி 5 இதழ்கள்தான் இருக்கும். (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு பால்கனி செம்பருத்தி!, பெங்களூருக்கு ஏற்றார் பொல மஞ்சள், சிகப்பு !)

பனியன் அண்டர்வேருடன்...

 முதலில் கொஞ்சம் பழைய மேட்டர்...  1995ல் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த மின்னஞ்சல்களை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த மின்னஞ்சல்கள் தான் அதிகம்.  பின்னர் பிளாகர் வந்த புதிதில் அதற்கு மாறினேன். வலைப்பதிவுக்கு கலர் அடிப்பது, லேயவுட்டை மாற்றுவதை கொஞ்சம் நாள் செய்துக்கொண்டு இருந்தேன். புது மனைவிக்கு அழகு பார்ப்பது அலுத்து போன பிறகு கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணம் வந்த சமயம், அப்போது பிரபு ராமநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி என் பேரில் domain வாங்கி தந்தார். காசியின் உதவிக்கொண்டு Blogcms நிறுவினேன். அடுத்த புது மனைவிக்கு அழகு பார்த்த பின்னர், டிவி ரிமோட்டில் அடுத

பேட்மேன் பேல்பூரி

பள்ளிக்கூடத்திற்கு வெளியே முன்பு மாதிரி இப்போது தின்பண்டங்கள் எதுவும் விற்பதில்லை. ஹைஜீன் என்று நம் புராக்டர் அண்ட் கேம்பில் குழந்தைகளுக்கு வெளியே எதையும் வாங்கித் தர பயப்படுகிறோம். நான் படிக்கும்காலத்தில் ஸாண்ட்விச், பீட்சா, பர்கர் வகையறாக்களைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆறாம் கிளாஸ் படிக்கும்போது ‘பாக்கெட் மணி’ 25பைசாவுக்கு, இரண்டு தேன் மிட்டாய்; கூட மூன்று ஜவ்வு மிட்டாய் கிடைக்கும். தேன் மிட்டாயில் தேன் இருக்காது. ஆரஞ்ச் கலரில் (மைதா மாவு என்று நினைக்கிறேன்.) உருண்டை; உள்ளே உடைத்தால் சக்கரைப் பாகு இரண்டு சொட்டு இருக்கும்; அது தான் தேன். அந்த டேஸ்ட் அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்நாக்ஸ் என்பதெல்லாம் தேடினாலும் கிடைக்காது. அதை விற்கும் பாட்டியை என்னால் மறக்க முடியாது.

துப்பாக்கி நண்பர்கள்

தேசிகன்’ என்ற என் பெயர் கடைசியில் ‘Gun’ இருப்பதாலோ என்னவோ எனக்கும் துப்பாக்கிக்கும் கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது நான் கண்டெடுத்த துப்பாக்கி பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். திருச்சியில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புரத்தில் இருக்கும் புதருக்கு இன்னொரு பெயர் ‘காடு’. நிறைய மரம், செடி கொடிகள் என்று வருடம் முழுக்க பச்சையாகத்தான் இருக்கும். சில சமயம் நரிக்குறவர்கள் வந்து வலை விரித்துக் கிளி பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். பொழுதுபோகாத சமயம் காட்டை சும்மா சுற்றுவது எங்களுக்குப் பொழுதுபோக்கு. காட்டுக்கு நடுவில் ஒரு பழைய காலத்து நீச்சல்குளம் போல் ஒரு பெரிய தொட்டி இருக்கும்; நிறைய படிகளுடன். உள்ளே ஒரு பாம்புப் புத்து இருப்பதால், இறங்க மாட்டோம். அதற்கு மேல் ஒரேயோர் உதய மரம் மட்டும் செப்டம்பர் மாதம் இலைகளை எல்லாம் இழந்து நிர்வாணமாக நிற்கும். தொட்டி முழுக்க அதன் இலைகள்தான்.

தலையில் தேங்காய் விழாது...

திருச்சியில் எங்கள் வீட்டு சமையல் அறை பக்கம் இருக்கும் அறைக்கு பெயர் 'இருட்டு ரூம்'. லைட் போட்டாலும் அந்த அறை இருட்டாக தான் இருக்கும். ஒட்டடை படிந்த அந்த ரூமில் அரிசி, பருப்பு என்று எல்லா மளிகை சாமான்களும் இருக்கும். விட்டலாச்சாரியார் பார்த்திருந்தால் நிச்சயம் வாடகைக்கு கேட்டிருப்பார். நாங்கள் குறும்பு செய்தால் அப்பா அந்த ரூமில் போட்டுவிடுவேன் என்று பயம் காமிப்பார். சில சமயம் போடவும் செய்வார். அந்த அறைக்கு போனால் கிடைக்கும் ஒரே சந்தோஷம் அங்கே இருக்கும் வெல்லம், சக்கரை போன்றவற்றை சாப்பிடலாம். ஒரு முறை அந்த ரூமில் போட்ட போது அங்கே இருந்த ஒரு தேங்காய் முளைவிட்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது. வீட்டு புழக்கடைத் தோட்டத்தில் அதை புதைத்து தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தேன். சில வருஷம் கழித்து என் உசரத்துக்கு வந்தது. இன்னும் சில வருஷத்தில் 90 அடி உயரத்துக்கு வளர்ந்து காய் எல்லாம் காய்க்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த போது, நாங்கள் இருந்த வாடகை வீடு விற்கப்பட்டு பிளாட் கட்ட பட்டது. நான் வைத்த தென்னை மரம் இந்த இடத்தில் இருந்தது என்று கூட கண்டுபிடிக்க கஷ்டப்பட்டேன்.

என்னே இந்த சமூகத்தின் கொடுமை!

திருச்சியில் என் அறைக்கு எதிரில் குடை மாதிரி மரம் ஒன்று என்னை வருடம் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கும். முழுவதும் பச்சையாக இலைகளுடன், முருங்கைக்காய் போன்ற காய்களுடன். சில மாதங்களில் மரம் முழுவதும் மொட்டுவிட்டு ஒரு நாள் இலைகளே இல்லாமல் முழுவதும் திராட்சை கொத்து போன்ற மஞ்சள் பூக்களுடன்... ஒரு வாரத்தில் உன்னால் முடியும் தம்பி படத்தில் பூக்கள் உதிர்வது போல உதிர்ந்து கீழே இருக்கும் பெரிய கற்களுக்கு ஸ்டென்ஸில் போட்டுவிடும். பிறகு முழு மரமும் மொட்டையாகி திரும்ப இலைகள் வரும். படிக்கும் காலத்தில் அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. ஒரு முறை ஒரு கோயில் அர்ச்சகர் சைக்கிள் கேரியர் மீது ஏறி சில பூக்களை பறித்துக்கொண்டு இருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த மரம் இருந்த இடம் அண்ணன் தம்பிக்கு பங்கு போடப்பட்டு சில நாட்களில், இரண்டு பேர் சில மணி நேரத்தில் மரத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு போனார்கள்.

பிப்ரவரி மழை

"An unexpected but welcome shower caught the dry city by surprise on Monday late evening. There were reports of unscheduled power cuts in Koramangala, Viveknagar, Bannerghatta and MG Road for 6 to 8 hours. In some areas, power wasn’t restored till late at night"  -- டைம்ஸ் ஆப் இந்தியா, சென்ற வார செவ்வாய்கிழமை செய்தி..  பிப்ரவரி மாதம் பெங்களூரில் மழை பெய்யாது. ஆனால் போன திங்கட்கிழமை யாருக்கும் சொல்லாமல் மழை வந்துவிட்டது. அன்றிரவுதான் திவ்யா அலுவலகத்திலிருந்து புறப்பட்டாள். இரவு இல்லை; விடியற்காலை 2:35. அமெரிக்க இன்ஷூரன்ஸ் கம்பெனி பேக் ஆபிஸ் வேலை. ஹெப்பால் பக்கம் ஒரே மாதிரி இருக்கும் பல கட்டிடங்களில் ஏதோ ஒரு கட்டிடத்தில் இருக்கிறது அவளது அலுவலகம். வெளியே வந்து பார்த்தபோது,  டாட்டா சூமோ அணிவகுப்பு வெளிச்சத்தில் மழை மத்தாப்பு மாதிரி பெய்துகொண்டு இருந்தது. தன்னுடைய வண்டியைக் கண்டுபிடித்து, கைப்பையை தற்காலிகக் குடையாக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக வண்டியில் ஏறிக்கொண்டாள். காலை செய்த அலங்காரம் கொஞ்சம் மீதி இருந்தது. கதர் மாதிரி துணியில் வெள்ளை நிற குர்த்தா. கணுக்கால் தெரியும் அளவ

ஜாகரண்ட பூக்கள்

17.11.2006 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து) "நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவை தட்டி ஒரு கதையை கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க... நீங்க எழுதற குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது" என்றார். அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை. "எந்த காலேஜ்?" என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னான். "சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?" "என்ன... உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்" "சரி அந்த மரத்துக்கு பேர் என்ன ?" "அதெல்லாம் தெரியணுமுங்களா ?" "ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்த Detail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?" "ஏங்க நீங்க கூட நிறைய கொலை கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க?" என்றார். என்னால பதிலே சொல்ல முடியலை.

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

ப ள்ளியில் படிக்கும் காலத்தில் கோடை விடுமுறைக்கு வருஷா வருஷம் பாட்டி தாத்தா வீட்டிற்கு ஹைதராபாதுக்குச் செல்வது வழக்கம். குதூகலத்துடன் ரயிலில் பயணம் செய்வோம். போகும்போது பத்து பைசா நாணயங்கள் சிலவற்றை எடுத்துவைத்துக் கொள்வோம். நடுராத்திரி, நல்ல தூக்கத்தில், கிருஷ்ணா நதிக்குமேல் போகும்போது அம்மா எங்களை எழுப்பிவிட, ஜன்னல் கதவைத் திறந்து பாலம் கடக்கும் ஓசையில் பத்து பைசாக்களை வெளியே போட, கிருஷ்ணா நதி முழுங்கிக்கொள்ளும். வியாழன் அன்று ராஜ்தானி ஹோட்டலில் சின்னச் சின்னக் கிண்ணங்களில் பரிமாறிய உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது சேது அனுப்பிய குறுஞ்செய்தியில் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் இறைவனடி சேர்ந்தார் என்று இருந்தது. ஐந்து நிமிட இடைவெளியில் சுக துக்கம் இரண்டும் எப்படி வருகிறது என்று நினைத்துக்கொண்டேன்.

ஆடாதோடையும், அப்பாவின் ஆசையும்!

திருச்சியில் இருந்த போது எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் வேலிகளை சுற்றி கரும் பச்சை இலைகளுடன் செடிகள் இருக்கும். ஒரு முறை பாட்டி "இந்தத் தழைகளை ஆடு சாப்பிடாது அதனால் இதற்கு 'ஆடு தொடா இலை' என்று பெயர்" என்றாள். சின்ன வயதில் இதை நம்பாமல் "என்ன ஆடு சாப்பிடாத தழைகளா?" என்று சில தழைகளை பறித்துக்கொண்டு ஆடுகளைத் தேடித் "சாப்பிடு" என்று சொன்ன போது ஆடுகள் முகர்ந்துவிட்டு சாப்பிடாமல் போய்விட்டது. "ஆட்டுக்கு அதைச் சாப்பிடக்கூடாது என்று யார் சொல்லித்தந்தது" என்று பாட்டியிடம் கேட்ட அந்த கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. எந்த ஊர் ஆடுகளாக இருந்தாலும் அந்தத் தழைகளைச் சாப்பிடாமல் போய்விடும். இயற்கை. தாவரவியல் பெயர் Adhatoda vasica Nees. நீட்டமான இலைகளும், வெள்ளை நிறப் பூக்களையும் உடைய புதர்ச்செடி ( Shrub ) வகையைச் சார்ந்தது. எல்லா இடங்களிலும் இருந்த இந்தச் செடி இப்போது கிராமங்களில் மட்டும் தான் இருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். சில வாரங்களுக்கு முன் கும்பகோணத்தில் திருக்கண்ணமங்கை கோவிலுக்கு ஏதோ ஒரு கிராமம் வழியாகப்

வில்வ மரமும், விஷ்ணு பக்தனும்

தமிழ் ஸ்டுடியோ, கூடு இதழில் எழுதுவதற்கு நீங்க பெரிசா ஒன்றும் செய்ய வேண்டாம், சும்மா உங்க வீட்டை சுற்றி ஒரு ரவுண்ட் போய் செடி கொடிகளை படம் எடுத்தால் போதும் என்று சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கமெண்ட் அடித்தார். அதனால் இந்த வாரம் ஒரு மாறுதலுக்கு வீட்டை சுற்றாமல் கும்பகோணத்தை சுற்றி வந்தேன். அங்கே வில்வ மரம் ஒன்றை பார்த்தேன். வில்வ மரம் இருந்த இடம் சக்கரபாணி திருக்கோயிலில். பொதுவாக வில்வமரம் சிவன் கோயிலில் தான் இருக்கும். சின்ன வயதில் எங்கள் பாட்டி வீட்டு பக்கம் இருக்கும் சிவன் கோயிலில் பெரிய வில்வ மரத்தை பார்த்திருக்கிறேன். பிறகு சென்னையில் திருமதி ராதா விஸ்வநாதன் ( எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியின் மகள்) வீட்டில் என் மனைவி பாட்டு கற்றுக்கொள்ளும் போது திரு விஸ்வநாதனுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டு இருந்த போது அவர் வீட்டில் இருந்த வில்வமரத்திலிருந்து ஒரு பழுத்த வில்வப் பழம் கீழே விழுந்தது. உடனே அவர் அதை எடுத்து என்னிடம் கொடுத்து ஜூஸ் செய்து சாப்பிடு நன்றாக இருக்கும் என்றார். சரி என்று அதை வாங்கிக்கொண்டேன். எப்படி ஜூஸ் செய்வது, நல்லா இருக்குமா ? எவ்வளவு சக்கரை போடணும

வீட்டுக்கு பின் பிருந்தாவனம்

இந்த வாரம் கூடு இதழில் எழுதியது. எங்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுடன் குளம் ஒன்று இருக்கிறது. குளத்துப் பக்கம் ஒரு முறை போன போது குறுக்கே ஒரு பாம்பு ஓடியது. அதற்குப் பிறகு அந்தப் பக்கம் கால் வத்து வைத்துப் படுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் பெங்களூர் அரசுக்கு என்ன தோன்றியதோ அந்தக் குளத்தைச் சுத்தம் செய்து, அதைச் சுற்றி நடைபாதை அமைத்து வேலி எல்லாம் போட்டு அமர்களப்படுத்திவிட்டார்கள். குளத்தில் வாத்துக் கூட்டம், வேடந்தாங்கல் மாதிரி பறவைக் கூட்டமுடன் மக்கள் கூட்டமும் சேர்ந்தது. பக்கத்தில் இருக்கும் கம்பு தோட்டத்தில் காலை எழறை மணிக்கு கிட்டத்தட்ட 100 கிளிகளை ஒன்றாகப் பார்க்கலாம். ஒரு முறை கருடன் ஒன்று ஒரு கிளியை 'லபக்' என்று தூக்கிகொண்டு போனது.