Skip to main content

Posts

Showing posts from April, 2011

தலையில் தேங்காய் விழாது...

திருச்சியில் எங்கள் வீட்டு சமையல் அறை பக்கம் இருக்கும் அறைக்கு பெயர் 'இருட்டு ரூம்'. லைட் போட்டாலும் அந்த அறை இருட்டாக தான் இருக்கும். ஒட்டடை படிந்த அந்த ரூமில் அரிசி, பருப்பு என்று எல்லா மளிகை சாமான்களும் இருக்கும். விட்டலாச்சாரியார் பார்த்திருந்தால் நிச்சயம் வாடகைக்கு கேட்டிருப்பார். நாங்கள் குறும்பு செய்தால் அப்பா அந்த ரூமில் போட்டுவிடுவேன் என்று பயம் காமிப்பார். சில சமயம் போடவும் செய்வார். அந்த அறைக்கு போனால் கிடைக்கும் ஒரே சந்தோஷம் அங்கே இருக்கும் வெல்லம், சக்கரை போன்றவற்றை சாப்பிடலாம். ஒரு முறை அந்த ரூமில் போட்ட போது அங்கே இருந்த ஒரு தேங்காய் முளைவிட்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது. வீட்டு புழக்கடைத் தோட்டத்தில் அதை புதைத்து தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தேன். சில வருஷம் கழித்து என் உசரத்துக்கு வந்தது. இன்னும் சில வருஷத்தில் 90 அடி உயரத்துக்கு வளர்ந்து காய் எல்லாம் காய்க்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த போது, நாங்கள் இருந்த வாடகை வீடு விற்கப்பட்டு பிளாட் கட்ட பட்டது. நான் வைத்த தென்னை மரம் இந்த இடத்தில் இருந்தது என்று கூட கண்டுபிடிக்க கஷ்டப்பட்டேன்.