Skip to main content

Posts

Showing posts from September, 2022

பொன்னியின் செல்வன் - 1 - சில எண்ணங்கள்

 பொன்னியின் செல்வன்  - 1 - சில எண்ணங்கள்  ’கல்கியின்’ பொன்னியின் செல்வனை மணியன் ஓவியங்களுடன் படித்திருக்கிறேன். பிறகு ம.செ அழகான ஓவியங்களுடன்,  அடுத்து பத்ம வாசன் ஓவியங்களுடன், . கடைசியாக விகடன் பிரசுரம் செய்த அழகான புத்தகத்தை வாங்கி படித்திருக்கிறேன். இதைத் தவிர காமிக்ஸ் புத்தகம் போல் வந்தவற்றையும் விட்டுவைக்கவில்லை.  பொன்னியின் செல்வன் நாடகமாக 2014ல் வந்த போது மியூசிக் அகடமியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன். பாம்பே கண்ணன் அவர்கள் ஒலிச் சித்திரமாக வந்த போது முழுவதையும் அலுவலகம் செல்லும் போது, வாக்கிங் போது கேட்டு மகிழ்ந்தேன்.  மணிரத்தினம் இதைப் படமாக எடுக்கிறார் என்ற போது அதையும் விட்டு வைக்காமல் முதல் நாள் பார்க்க வேண்டும் என்று இன்று காலை சென்று வந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படம் எடுக்கிறேன் என்று கிளம்பியவர்களில் மணிரத்தினம் மட்டும் அதைச் செய்து முடித்திருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு வாழ்த்துகள்.   பொன்னியின் செல்வனைப் படம் எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.  - சில/பல இளம் பாட்டிகள் நான் இன்னும் பொ.செ படிக்கவில்லை என்று ஸ்டைலாக சொல்லுவதிலிருந்து சிக்கல்கள

கொங்கில் பிராட்டி மற்றும் கொங்கில் ஆச்சான் கதைகள்

கொங்கில் பிராட்டி கதை ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தினால் தம்முடைய திரிதண்டம் காஷாயங்களை ஆழ்வானுக்கு கொடுத்துத் தாம் வெள்ளை சாற்றிக்கொண்டு திருநாராயணத்துக்கு போகும் வழியில் என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள வாசகர்களை ஸ்ரீராமானுஜருடன் பயணம் செய்ய அழைக்கிறேன். கூரத்தாழ்வான், பெரிய நம்பிக்கு என்ன ஆனதோ என்று மனம் கலங்கிய ராமானுஜர், அரங்கனே துணையாக நீலகிரித் தொடரை சிஷ்யர்களுடன் வந்தடைந்தார். அன்று ஏழாம் நாள் உபவாசம், மாலை இருட்டு சூழ்ந்துகொண்டது நல்ல மழை வேறு. தூரத்தே கொஞ்சம் வெளிச்சம் தெரிய சீடர்கள் அதை நோக்கி வழி கேட்க சென்றார்கள். விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் “வழி எங்கே?” என்றார்கள். சீடர்களைப் பார்த்த வேடுவர்கள் “நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் ?”என்று கேட்க “கோயிலிலிருந்து(ஸ்ரீரங்கத்திலிருந்து) வருகிறோம்” என்று பதில் சொல்ல “அங்கு எம்பெருமானார் நலமா ?” என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று “எம்பெருமானாரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?” அதற்கு வேடுவரின் தலைவன் “நாங்கள் நல்லான் சீடர்கள் எங்களுக்கு நல்லான் உபதேசிக்கும் போது த்வயத்தை உப