Skip to main content

Posts

Showing posts from November, 2020

19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள்

 19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள் உய்யக்கொண்டார் சற்று நேர மௌனத்துக்குப் பின் “மணக்கால் நம்பியே ! அந்த மஹாநுபாவரின் சம்பந்தம் கிடைத்தால் நிச்சயம் உம் ஆசை ஈடேறும்” என்றார்.  இதைக் கேட்ட மணக்கால் நம்பி “நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் சம்பந்தமும், உங்களுக்கு நாதமுனிகளின் சம்பந்தமும், அடியேனுக்குத் தேவரீர் சம்பந்தம்  கிடைத்திருக்கிறது! அதனால் அந்த மஹாநுபாவரின் சம்பந்தம் நிச்சயம் சித்திக்கும் என்று நம்புகிறேன்!” என்று உய்யக்கொண்டாரின் திருவடியில் விழுந்து வணங்கினார்.  உய்யக்கொண்டார் ”நாதமுனிகளால் நமக்கு ஆழ்வார்களின் சம்பந்தமும் கிடைத்திருக்கிறது! அவர் திருவரங்கத்தில் நிகழ்த்திய அறியச் செயல்களை கூறுகிறேன்” என்று கூற ஆரம்பிக்கச் சிஷ்யர்கள் ஆர்வமாகக் கேட்க ஆயத்தமானார்கள். நம் நேயர்களையும் உய்யக்கொண்டார் கூறிவதை கேட்க அழைக்கிறோம்.  ”ஆழ்வார்களில் கடைக் குட்டியானவர் திருமங்கை மன்னன். ஆடல்மா என்ற குதிரையில் சென்று எல்லா திவ்ய தேச பெருமாளையும் மங்களாசாசனம் செய்துவிட்டு, தம்முடைய கடைசிப் பிரபந்தமான திருநெடுந்தாண்டகத்தைப் பாடத் தொடங்கினார். அதன் முடிவில் “புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே”

பரதனும் நம்பாடுவானும்

பரதனும் நம்பாடுவானும் திருப்பாவையின் முக்கியமான பாசுரம் நடுவில் இருக்கும் ‘எல்லே இளங்கிளியே’ என்ற இந்த பாசுரம் தான். திருப்பாவையில் மொத்தம் 30 பாசுரம் என்றால் இந்தப் பாசுரம் எப்படி நடுவில் வரும் என்ற கேள்வி எழும். மார்கழித் திங்கள் தொடங்கி சிற்றங் சிறுகாலை முடிய ஆண்டாள் கோபிமார்கள் பாவனையில் பாடுகிறாள். முப்பதாம் பாசுரமாகிய ”‘வங்கக் கடல் கடைந்த” என்ற பாசுரம் ”பட்டர்பிரான் கோதை சொன்ன” என்று கை எழுத்திட்டு ஆண்டாளாகவே பாடுகிறாள். அதனால் இதைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஆக 29 பாசுரத்தில் பதினான்கு பாசுரங்களை இப்படியும் அப்படியும் பதினான்கு பாசுரங்களை ஒதிக்கிவிட்டால் நடுவில் இருக்கும் பாசுரம் ’எல்லே இளங்கிளியே’. இதில் என்ன விஷேச அர்த்தம் ? ஸ்ரீ வைஷ்ணவத்தின் மிக உயர்ந்த லக்ஷனம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. அடியேன், தாசன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது மற்றவர்களின் அபராதங்கள் ( தவறுகளை) தங்கள் மீது போட்டுக் கொண்டு பரஸ்பர நீச பாவத்துடன் இருக்க வேண்டும். இந்த மிக உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவ ‌லக்ஷணத்தை ஆண்டாள் ‘நானே தான் ஆயிடுக’ என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டாள். ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம

18. இராமானுசன் அடிப் பூமன்னவே - வண்டு

18. இராமானுசன் அடிப் பூமன்னவே - வண்டு நாதமுனிகள் பரமபதம் அடைந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து செல்வோமாக.  காவிரி தீரம் அமைதிகொண்டு எல்லா இடங்களுக்கும் கதிரவனை ஆபரணமாக அணிந்துகொண்டு விரைவாக  வாய்க்கால் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று தன் ஈரத்தால் பயிர்களைச் செழிக்கச் செய்வதைப் போல் உய்யக்கொண்டார் ஆழ்வார்களின் ஈரத் தமிழ் பாசுரங்களைக் கொண்டு சென்ற இடங்களில் எல்லாம் பக்தி மரம் துளிர்விட்டுக் கூடுகட்டி நிற்கும் இடமானது(1)  இளங்காற்று தவழ்ந்த ஒரு நாள், சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோடு ஒன்று மோதி விளையாட, மீன்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டு இருந்த பொன்னி என்ற புண்ணிய நதியான காவிரியிலிருந்து  பிரிந்த  கொள்ளிட ஆற்றின் வடகரையில் திருவரங்கத்துக்கு அருகில் அன்பில் என்ற திவ்யதேச கோயிலுக்கு வெளியே ஓர் ஆலமரத்து நிழலில் உய்யக்கொண்டார் இராமனின் குணங்களை எடுத்துரைத்துக்கொண்டு இருந்தார்.  ”இராமனின் குணங்களைப் பட்டியலிட முடியாது. கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்று ஆழ்வார் இராமனைக் கொண்டாடுகிறார்!” என்று கூறிய போது அவர் கண்களிலிருந்து நீர் விழுந்தது. சற்று நேரம் மௌனமாகக் கண்களை மூடிக்கொண்

43ஆம் பட்டம் ஸ்ரீமத அழகிய சிங்கர்

43ஆம் பட்டம் ஸ்ரீமத அழகிய சிங்கர் -  ஸ்ரீவீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் 1901 ஆம் ஆண்டு தேவனார்விளாகத்தில் ஸ்ரீ உ.வே வித்துவான் பருத்திப்பட்டு வங்கீபுரம் திருவேங்கடாசர்யார் அவர்களுக்கு ப்லவ வருஷம் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஸ்வாமி.   செல்வச்சிறப்படைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், “இந்த வீடு, தோட்டம், செல்வம் எல்லாம் தம்முடையது கிடையாது, எல்லாம் கண்ணனுடையது, இவற்றுக்கு டிரஸ்டியாக அடியேனை நியமித்துள்ளான், இதை கவனத்தில் கொண்டே காரியங்களைச் செய்து வருகிறேன்” என்று தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல், மிக்க எளிமையுடனும், வைராக்கியத்துடனும் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் மற்ற சிறுவர்களுடன் பெருமாள் விக்ரகங்களுடன் விளையாடிக்கொண்டு பொழுதைக் கழித்து சாஸ்திரங்களையும் ஆழ்வார் அருளிச்செயல்களையும் கற்று, சிறுவயது முதலே பலருக்குக் காலட்சேபம் சாதித்து, அவருடைய திருமாளிகை சின்ன மடமாகக் காட்சியளித்தது.  40 ஆம் பட்டம் ஸ்ரீமத அழகிய சிங்கரிடம் ஸ்ரீபாஷ்யம் காலட்சேபம், 41ஆம் ஸ்ரீமத அழகிய சிங்கரிடம் மற்ற கிரந்தங்கள் காலட்சேபம் ஆனது. 41ஆம் அழகியசிங்கர் க

17. இராமானுசன் அடிப் பூமன்னவே - வெட்டிவேர் !

17. இராமானுசன் அடிப் பூமன்னவே -  வெட்டிவேர் ! நாதமுனிகள் காட்டுமன்னார் முன் அமர்ந்து நம்மாழ்வாரின் பாசுரமான உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’  என்ற பாசுரத்தைத் தாளத்துடன் இசைத்த போது அவருடைய சிஷ்யர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.  உய்யக்கொண்டார் நாதமுனிகளை நோக்கி “ஆசாரியனே! ஆழ்வார் பாசுரங்களைக் கற்றுணர்ந்தால், எது எது பெருமாளை மறக்கடிக்குமோ அது அது பெருமாளை நினைக்க வைக்கும் பிரேம நிஷ்டை நமக்கு வந்துவிடுகிறது!” என்றார் ”முற்றிலும் சரி உய்யக்கொண்டாரே! நம்மாழ்வாருக்கு எல்லாம் கண்ணன் தான். அடியேனுக்கு அந்த உணர்வு என்று வரப்போகிறதோ!” என்று நாதமுனிகள் கூறிய அச்சமயத்தில் கோயிலுக்கு நுழைந்த ஒருவர் “ஐயா!  நீங்கள் இங்கே இருக்கிறீர்களா ? சற்று முன் உங்களைத் தேடிக்கொண்டு சிலர் உங்கள் இல்லத்துக்கு வந்தார்கள்!” என்றார்  “ஓ அப்படியா ?” என்று நாதமுனிகள் எழுந்துகொள்ள, கூடவே சிஷ்யர்களும் எழுந்துகொள்ள எத்தனித்த போது, நாதமுனிகள் அமருங்கள் என்ற சைகை காண்பித்துவிட்டு “நீங்களும் என்னுடன் வந்துவிட்டால், ஆழ்வார் பாசுரங்கள் கேட்க முடியாமல், மன்னாரின் முகம் வாடிவிடும் அல

புலன் விசாரணை

புலன் விசாரணை  ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கும்போது ஆழ்வார்கள் என்ன ‘கான்டெக்ஸ்ட்’ல் சொல்லியிருக்கிறார்கள் என்று படிப்பது மிக அவசியம். பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரையாசிரியர்களின் உதவியுடன் பாசுரங்கள் தொடர்பான ஐதீகங்களைப் படித்தால் மைக்ரோ ஃபைபர் கொண்டு  கண்ணாடியைத் துடைத்த மாதிரி பளிச்சென்று புரியும். தப்பான அர்த்தங்களை இடது கையால் ஒதுக்கிவிடலாம்.  நமக்குத் தெரிந்த திருக்குறள் இது  அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் இதற்குப் பலர் உரை எழுதியிருக்கிறார்கள். தப்பில்லை, ஆனால் அத்தாரிட்டி பரிமேலழகர் உரை தான். ஏன் என்று கூறுகிறேன்.  ‘அடக்கம்’ என்று படிக்கும் போது பணிவு ( humility ) என்ற அர்த்தம் நமக்கு உடனே தோன்றும். அடக்கமாக இருப்பது நல்ல குணம் தான், ஆனால் அடக்கம் என்பதின் பொருள் அதிகாரத்தின் ஆரம்பத்தில் பரிமேலழகர் ‘அடக்கம் உடைமை - அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன்’ - அதாவது சுயக்கட்டுப்பாடு ( self control ) என்கிறார். இதை மனதில் கொண்டு படித்தால். சுயக்கட்டுப்பாடு உள்ளவன் தேவர்களுக்குச் சமமானவன். அப்படி இல்லை என்றால் அவனுக்கு நரகம் தான்

தினமும் கொஞ்சம் தேசிகன் - 14

 தினமும் கொஞ்சம் தேசிகன் - 14 ஸ்வாமி தேசிகனின் வாழி திருநாமத்தின்(1) கடைசி வரியான  ’ செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே ’ என்பதைப் படிக்கும்போது, வழக்கமான வாக்கியமாகத் தோன்றும்.  அதில்  ‘தூப்புல் திருவேங்கடவன் வாழியே’  என்பதை ஸ்வாமி தேசிகனின் இயற்பெயர் திருவேங்கடவன், தூப்புல் அவர் ஊர்,  அதனால் தூப்புல் திருவேங்கடவன் என்றும், திருவேங்கடவனுடைய ( மணியின் ) அவதாரம்  ஸ்வாமி தேசிகன் என்றும் கூறலாம். இங்கே எதற்கு ’ செந்தமிழ் ’ என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என்று கொஞ்சம் ஆராயலாம்.  ஸ்வாமி தேசிகன் ’ செய்ய தமிழ் மலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம்’ என்று வடமொழி வேதாந்தங்களை ஆழ்வார் அருளிச்செயல்களைக்  கொண்டு தெளிவு பெற்றேன் என்று கூறியதை, பல உபன்யாசங்களிலும், புத்தகங்களிலும் எல்லோரும் பயன்படுத்தும் மேற்கோள்.  இதே கருத்துடைய இன்னொரு இடம் இராமானுச நூற்றந்தாதியில் வருகிறது. அமுதனார் திருப்பாணாழ்வாரைக் குறிப்பிடும் இடத்தில் ‘சீரிய நான்மறை செம்பொருள் செந்தமிழால் அளித்த பார் இயலும் புகழ் பாண்பெருமாள்’ என்கிறார்.  பிள்ளை அந்தாதி தனியனில்  சீரார் தூப்புல் பிள்ளை அந்தாதி என்

16. இராமானுசன் அடிப் பூமன்னவே - வாய்க்கால்

 16.  இராமானுசன் அடிப் பூமன்னவே - வாய்க்கால்  திருக்கண்ணமங்கை ஆண்டான் ’பொலிக பொலிக’  என்ற பாசுரத்தின் அர்த்தத்தைப் பற்றிக் கேட்டவுடன், நாதமுனிகள் கண்களை மூடிக்கொண்டு யோகத்தில் சற்று நேரம் இருந்தார்.  அவரின் பதில்களுக்காக  திருக்கண்ணமங்கை ஆண்டான், புண்டரீகாக்ஷர், குருகை காவலப்பன் மற்றும் ஈஸ்வர முனிகள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.  நாதமுனிகள் கண்களை மெதுவாகத் திறந்து அவர்களை அருகில் அழைத்து, "கலியை விரட்டி வையம் வாழ,  ஜகதாச்சார்யர் ஒருவர் தோன்றப் போகிறார்" என்று சொப்பனத்தில் நம்மாழ்வார் கூறிய விஷயங்கள் அனைத்தையும் கூறிய நாதமுனிகள், ஆழ்வார் தமக்கு பிரசாதித்த பவிஷ்யதாசார்ய விக்கிரகம்  தன்னிடம் உள்ளது என்பதை மட்டும் கூறாமல், ரகசியமாக வைத்துக்கொண்டார்.  ”அப்படியா?” என்ற ஆச்சரியத்துடன் இவர் முழுமுதற் பொருளோ என்னுபடி மனமுருகிக் கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் நாதமுனிகளின் திருவடியைப் பற்றி “ஒப்பற்ற ஞானியே! குருகூர் சடகோபனை சாக்ஷாத்தாக தரிசித்த தங்களைத் தரிசித்து ,  முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனால் உங்கள் சம்பந்தம் கிடைத்தது” என்று அவர் திருவடியில் விழுந்தார்கள்.  நாதமுனிகளின் புத

15. இராமானுசன் அடிப் பூமன்னவே - பெரியமுதலியார்

15. இராமானுசன் அடிப் பூமன்னவே - பெரியமுதலியார் திருவரங்கத்திலிருந்து  வடக்கே இரண்டு காத தூரத்தில் வெள்ளைநிறப் பாறைகளால் ஆன சிறுகுன்றின் மீது ஓர் அழகிய கோயில் ஒன்று இருந்தது. அக்கோயிலில்  கிழக்கு நோக்கி  புண்டரீகாக்ஷப் பெருமாள் பக்தர்களுக்காக எப்போதும் காத்துக்கொண்டு இருக்கும் இத்தலம் திருவெள்ளறை என்று  பெயர்பெற்றது. ஆதிகாலத்தில் ஏற்பட்ட இத்தளத்தை ஆதி திருவெள்ளறை என்றும் அழைப்பார்கள். நிலமகள், திருமகள், கதிரவன், சந்திரன், ஆதிசேஷன் முதலியோர் தங்கள் தெய்வ வடிவைத் துறந்து மனித வடிவில் பெருமானுக்குப் பணிவிடைகள் செய்வதை இன்றும் அங்கே காணலாம்.  முன்பு ஒரு காலத்தில் தெற்கு தேசம் முழுவதும் காடுகளாக இருந்தது. இஷ்வாகு வம்சத்தில் இராமனுக்கு முன்னால் வாழ்ந்து, புறாவுக்காக உடலைத் தியாகம் செய்யத் துணிந்தவனாகப் பிரசித்திபெற்ற சிபிசக்கரவர்த்தி இந்த இடத்துக்கு வந்த போது பெருமாள் மீது ஈர்க்கப்பட்டு, தொண்டு புரிய வேண்டும் என்று நினைத்தான்.  கங்கை யமுனை நதிகளின் மத்தியப் பகுதியிலிருந்து மூவாயிரத்து எழுநூறு பூர்வசிக வைணவ பிராமணக் குடும்பங்களை இப்பெருமாளுக்கு தொண்டு செய்வதற்காக  திருவெள்ளறைக்கு அழைத்து வந்து