Skip to main content

Posts

Showing posts from April, 2024

உங்கள் ஓட்டு யாருக்கு ?

உங்கள் ஓட்டு யாருக்கு ? தமிழகத்தில் நாற்பது தொகுதிக்குத் தேர்தல் என்பதை மறந்து, கோவையில் அண்ணாமலை என்ற ஒற்றை மனிதரின் தேர்தலாகி கோவை இன்று பேசும் பொருளாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடுவதாக இருந்தது. அவர் அங்கே போட்டியிட்டால் கூட இந்த மாதிரி ஓர் எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. மக்கள் மீது நம்பிக்கை வைத்து பணம் கொடுக்க மாட்டேன் என்று தைரியமாக அடித்துச் சொல்லுகிறார் அண்ணாமலை. அவருடைய அந்த நம்பிக்கையைக் கோவை மக்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். கோவை மக்கள் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பிரதிநிதியாகவிட்டார்கள். நாளைய தமிழகம் நன்றாக விடிய இந்தியாவோ கோவையை எதிர்நோக்கியுள்ளார்கள். கோவையில் பாஜக என்ன நிகழ்த்துகிறதோ அதே தான் தமிழகம் முழுக்க 2026ல் புரட்சியாக வெடிக்கப் போகிறது. அந்த மாற்றத்தின் அலை கோவையிலிருந்து உருவாகக் காத்துக்கொண்டு இருக்கிறது. கோவை மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைக் கேட்டு ஓட்டுப் போட்டாலே போதும் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடுவார். சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் ஒரு ”ஆட்டோ ஓட்டுநரிடம் உங்கள் ஓட்டு யாருக்கு?” என்

வழிகாட்டும் ஸ்ரீராமர்

வழிகாட்டும் ஸ்ரீராமர் காட்டிக்கொடுத்த காட்டுமன்னார் என்ற பதிவைப் படித்திருப்பீர்கள். அதற்குக் காரணம் ஸ்ரீரங்கம் கோதண்ட ராமர் தான்! ஸ்ரீராம நவமி அன்று இதை மீண்டும் சொல்லுவதில் மகிழ்ச்சி. ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதல் பிரதியை உடையவர் திருநட்சத்திரம் அன்று அதை வெளியிடுவதற்கு முன் உறையூர் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீரங்கம் தாயார், நம்பெருமாள் ஆசீர்வாதங்களைப் பெற்றுவிடலாம் என்று காரில் புறப்பட்டேன். உறையூரில் அர்ச்சகரிடம் “நாச்சியார் திருவடியில் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்ற போது அவர் ஆசையுடன் புத்தகங்களை நாச்சியார் திருவடியில் வைத்து தாயாரின் புஷ்பம், மஞ்சள் காப்பு பிரசாதங்களைப் புத்தகம் மீது அள்ளிக் கொடுத்தார். பிறகு அவதார ஸ்தலத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ திருப்பாணாழ்வார் சந்நிதி மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ உடையவர் மற்றும் நாச்சியார் வீற்றிருக்கும் மண்டபத்தில் புத்தகங்களை வைத்து வணங்கிவிட்டு வெளியே வந்த போது கோவிட் காலத்தில் வெளியே வரவே பயப்பட்டுக் கொண்டு இருந்த காலத்திலும் வெய்யிலில் பூக்களை விற்றுக்கொண்டு இருந்த பெண்மணியிடம் புத்தகங்களைக் கொடுத்து

காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்

காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்  பதம் பிரித்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதல் பதிப்பு முதல் பிரதியை காட்டுமன்னார் கோயில் ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியில் வைத்து ஆசீர்வாதம் பெறச் சென்றிந்த போது ஓர் அனுபவம் ஏற்பட்டது. சுருக்கமாகச் சொல்லுகிறேன். கோவிட் இரண்டாம் அலை எங்கும் பரவியிருந்த  அன்று காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்தத்தையும் பூரிப்பையும் கொடுத்தது. காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார்.  அங்கே இருந்த ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி (தீர்த்தம் ஸ்தானிகர் )  “உங்களுக்கு பெங்களூர் செல்லுவதற்கு நேரம் ஆகி

பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள்

 பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள் (1)  எங்கள் வீட்டில் ஏற்கனவே நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம் இருக்கிறதே ? இது பதம் பிரித்த பிரபந்தம்.  பதம் பிரித்த பிரபந்தமா ?  சுமாராகத் தமிழ் படிக்கத் தெரிந்தால் பயப்படாமல் படிக்கலாம். முயன்றால் பொருள் எளிதில் விளங்க ஆரம்பிக்கும். உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றைப் பதம் பிரித்து/பிரிக்காமல் கொடுத்திருக்கிறேன். வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.  சரி இதனால் என்ன பயன் ?  சுஜாதா கல்கியில் எழுதியதைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். (கீழே கொடுத்திருக்கிறேன்) ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள். இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண்டமேகங்களே. தலைகால் புரியவில்

ஒரு ஸ்பூன் போதுமே!

 ஒரு ஸ்பூன் போதுமே!  நான் ப்ளஸ்-2 படிக்கும் போது ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ புதிதாக அறிமுகமானது. முதல் பாடமே ROM, RAM என்று படித்து சொளையா மார்க் வாங்கியது நினைவு இருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரு குட்டி மாட்டுப் பொம்மையின் வாலை தட்டிவிட்டால்  “Old MacDonald had a farm - eieio! ” என்று அலறும். இந்தப் பொம்மையில் உள்ளே இருப்பது ROM சமாசாரம் என்பது அதன் வாலை ஆட்டிவிடும் போது எனக்குத் தெரியாது.  RAM - Random Access Memory ; ROM - Read-Only Memory சுருக்கம். இரண்டும் மைக்ரோசிப் மெமரி சமாசாரம். RAM  தற்காலிக நினைவகம்.  ROM நிரந்தர நினைவகம். இதை உதாரணத்துடன் புரிந்துகொள்ள முயலலாம்.  நீங்கள் படித்த பள்ளி வகுப்பு கரும்பலகையில் உங்கள் ஆசிரியர் என்றோ சாக்பீஸில் எழுதியதை இன்று படிக்க முடியாது. ஆனால் என்றோ ராஜராஜ சோழன் எழுதிய கல்வெட்டை இன்றும் படித்து ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். உங்கள் வகுப்பாசிரியர் எழுதியது RAM. சோழன் எழுதியது ROM.  மாட்டுப் பொம்மையின் உள்ளே சின்ன சிலிக்கான் சில்லில் நிரந்திர நினைவகத்தில் அந்தப் பாடல் சேமிக்கப்பட்டு  எப்போது வாலைத் தட்டிவிட்டாலும் அதிலிருந்து அது அந்தப் பாடல் ஒலிக்கிற