Skip to main content

Posts

Showing posts from April, 2018

ஸ்ரீராமானுஜர் 1001 - பரமனடிக்கு அழைத்து செல்லும் ஸ்ரீராமானுஜரின் அடிச்சுவடுகள்..

உடையவர் திருவல்லிக்கேணி (படம் : சப்மத் குமார் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி) இராமானுச நூற்றந்தாதியில் ”செழுந்திரைப் பாற்கடல் கண்டு துயில்மாயன் திருவடிக்கீழ்” என்பது அமுதனாரின் அமுத மொழி. ஆண்டாள் அருளிய திருப்பாவையில் ”பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி ” என்ற இந்த வரியும் கிட்டதட்ட அதே மாதிரி இருப்பதைக் கவனிக்கலாம் நூற்றந்தாதி பாசுரத்தை இரண்டு முறை சேவிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பதம் பிரித்த முழு பாசுரம் கீழே. மெதுவாகப் படித்தால் அர்த்தம் சுலபமாக புரியும். செழுந்திரைப் பாற்கடல் கண்டு துயில்மாயன் - திருவடிக்கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி - நல் வேதியர்கள் தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்து,இரைத்து, ஆடும் இடம் -அடியேனுக்கு இருப்பிடமே. புரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்தக் கட்டுரையின் ‘அடிக்கீழ்’ இந்தப் பாசுரத்தின் அர்த்தத்தை சொல்கிறேன். ஸ்ரீவைஷ்ணவத்தில் எம்.ஏ, டாக்டரேட், வேதம்,, கீதை, திவ்ய பிரபந்தம் என்று பல விஷயங்கள் படிக்கலாம், படித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் ’அடிக்கீழ்’ என்ற ஒரு வார்த்தையில் பாம்பை சுருட்டி கூடையில் அட

Ramanuja Desika Munigal

Ramanuja Desika Munigal Charitable Trust "ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை" ஊட்டத்தூர் ராமர் பற்றி அடியேன் எழுதியது உங்களுக்கு நினைவு இருக்கும். ஸ்ரீராமரே நடத்திக்கொள்வார் என்பதற்கு அடியேன் கீழே சொல்லும் விஷயங்களே அத்தாட்சி மனதுக்கு இனியான் பற்றி எழுதிக்கொண்டு இருந்த போது ஸ்ரீநிவாசன் என்பவர் ( அவரை நான் இதற்கு முன் பார்த்தது, பேசியது இல்லை ) எனக்குத் தொலைப்பேசியில் ”’ஊட்டத்தூர் ராமர்’ கோயிலுக்குச் சென்று அதைப் பற்றி எழுதுங்களேன்” என்றார். ஜனவரி மாதம் என் அனுபவங்களை எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் பிரமிப்பூட்டுபவை. பலர் கோயிலை தேடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். தொழிலதிபர் ஒருவர் தினமும் பிரசாதம், மாலைக்கு ஏற்பாடு செய்தார். வெளிநாட்டில் வாழும் வயதானவர்கள் சிலர் எனக்குப் போன் செய்து அழுதுவிட்டார்கள். ஒரு பெண்மணி எனக்கு இரவு முழுவதும் மனசு கஷ்டமாக இருந்தது என்று அடுத்த நாள் விடியற்காலையில் தனியாக பேருந்து பிடித்து கோயிலுக்குச் சென்று எனக்கு வாட்ஸ் ஆப்பில் கோயிலின் படங்களை அனுப்பினார். ஒருவர் ராமர் பெயருக்கு DD எடுத்து அனுப்பியிருக்கிறார். ஸ்ரீராம நவமிக