Skip to main content

Posts

Showing posts from January, 2022

இஞ்சிமேடு என்ற படித்துறை !

இஞ்சி மேடு என்ற படித்துறை !  ஒரு நாள் ’அவர்’ கையில் உபகாரத்துடன் (பெருமாளுக்குச் சமர்ப்பிக்கும் பூமாலை. பழங்கள்) மதுராங்கத்தில் சக்கரவர்த்தி திருமகனை மங்களாசாசனம் செய்வதற்காகச் சென்றார். பெருமாள் புறப்பாடு, அதனால் கையில் உபகாரத்துடன் காத்துக்கொண்டு இருக்க வேண்டியிருந்தது.  “சமர்பிக்க தாமதம் ஆகிறதே! உபகாரத்தைச் சுத்தமான இடத்தில் வைத்துவிடலாமே” என்றார் கூட இருந்தவர்.  அதற்கு அவர் “சுமப்பதும் சம்பர்ப்பிப்பது இரண்டும் கைங்கரியமே! சுமந்து மாமலர் நீர் சுடர்தூபங்கொண்டு’ என்றும் ‘புனைந்த கண்ணி நீர் சாந்தம்  புகையோடு ஏந்தி வணங்கினால்’ என்று ஆழ்வார் ‘சுமப்பது, ஏந்தி’ இருப்பதைக் கைங்கரியமாகவே சொல்லுகிறார்” என்றார் அன்று ’பயிலுஞ்சுடரொளி’  ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழி  சொல்லுகின்ற அர்த்தத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ‘அவர்’ 42ஆம் பட்டம் இஞ்சிமேடு அழகிய சிங்கர்(1)  அர்ச்சையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் ஸ்ரீ மாலோலனுக்கு உபகாரமாகப் பழம் முதலியவற்றைக் குறைந்தது பத்து நிமிடங்களாவது தட்டை ஏந்திக்கொண்டு  தட்டைக் கீழே வைக்காமல் நிற்பார். உள்ளன்போடு அவன் திருவடிகளில் இடும்போது

பாகவத திருப்பாவை - 23 ( ஆராய்ந்து )

 பாகவத திருப்பாவை - 23 ( ஆராய்ந்து ) மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் *  சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து *  வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி * மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் **  போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! * உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளி * கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்  மழைக் காலத்தில் மலைக் குகையில் படுத்துத் தூங்கும்  வீரமுள்ள சிங்கம் தூக்கம் தெளிந்து எழும்பொழுது  நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து  உடம்பை நாலு பக்கமும் அசைத்து, சோம்பல் முறித்து, கர்ஜனை செய்து வெளியில் வருவது போல  காயாம்பூ போன்ற நீல நிறமுடையவனே, நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிம்மாசனத்தில்  அமர்ந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும் இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.  இரண்யகசிபு பிரகலாதனைப் பார்த்து “அசடே! விட்டால் புகழ்ந்துகொண்டே போகிறாய். உன் உயிரைவிடத் துணித்துவிட்டாயா ? இறக்க போகிறவர்கள் வாய் குழறிப் பேசுவார

கூரத்தாழ்வான் என்ற பெரியார்

கூரத்தாழ்வான் என்ற பெரியார் பல வருடங்கள் முன் கூரத்தாழ்வானின் திருநட்சத்திரத்துக்கு கூரம் சென்று ஆழ்வானைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்  சில காரணங்களால் அது  முடியாமல் போனது. அந்த சமயம் வார்த்த மாலை திருப்பிய பொழுது ஆழ்வான் குறித்த ஒரு விஷயம் கண்ணில் பட்டு மன அமைதியைக் கொடுத்தது.   அது என்ன என்பதைப் பற்றிக் கட்டுரையின் கடைசியில் சொல்லுகிறேன்.  அதற்கு முன் கூரத்தாழ்வான் எப்பேர்பட்ட பெரியார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா ?  ஸ்ரீ வைஷ்ணவத்தில் யாரை ’ரோல் மாடலாக’ கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு கூரத்தாழ்வான் என்று பதில் சொல்லலாம்.  பெரியாழ்வார் திருமொழியில் வரும் 'பலசுருதி' (பலன்) சொல்லும் பாசுரம் இது  ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் மாயன் மணிவண்ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.  இந்தப் பாசுரங்களைச் சொன்னால் மாயனான மணிவண்ணன் திருவடிகளை வணங்க வல்லப் பிள்ளையை மகனாக பெறுவார்கள் என்கிறார்.  இந்த மாதிரி ஒரு மகனைத் தான் பெற்றார

பாகவத திருப்பாவை - 22 ( கண் )

பாகவத திருப்பாவை - 22 ( கண் ) அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே  சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்  கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே  செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?  திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்  அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்  எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து  உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல  நாங்களும் நெருங்கி வந்துள்ளோம். சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ போல்  உன் கண்கள் சிறிது சிறிதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ? சந்திரனும் சூரியனும் உதித்தது போல  அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால்  எங்கள் சாபங்கள் தொலைந்து விடும். ’அபிமானம்’ எங்கே இருக்க வேண்டும் எங்கே இருக்கக் கூடாது என்று புரிந்துகொண்டாலே நமக்குத்  தெளிவு கிடைத்துவிடும்.  ஆண்டாள் அபிமானங்கள் ’பங்கமாக’ வேண்டும் என்கிறாள்.  பெரியாழ்வார் ’அபிமானதுங்கன் செல்வனைப்போல’ உனக்கு அபிமானத்துடன் இருக்க வேண்டும் என்கிறார்.  நம்மிடம் நமக்கே அபிமானம் கூடக் கூடச் செரு

தான் உகந்த திருமேனி

தான் உகந்த திருமேனி எம்பெருமானார் ஸ்ரீரங்கத்துல் கத்ய த்ரயம் சாதித்து, கோயிலில் பல மாறுதல்களை செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு அவர் இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அஸுயை அவர்களை கொலை செய்யவும் தூண்டியது. அவரது பிக்ஷையில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தை திருக்காவிரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதை கேள்விப்பட்ட திருகோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார். கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்ஷணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடி பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்மை போல் அவர் திருமே

பாகவத திருப்பாவை - 21 ( வள்ளல் பெரும் பசுக்கள் )

பாகவத திருப்பாவை - 21 ( வள்ளல் பெரும் பசுக்கள் ) ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் *வள்ளல் பெரும் பசுக்கள்* ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழிய, தங்கு தடையில்லாமல் பாலைக் கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை  அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் பிள்ளையே விழித்துக் கொள் ! சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில்  அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு. எதிரிகள் உன்னிடம் வலிமையிழந்து உன் வாசலில்  கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல  நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்! நம் பாரத பூமி பசுக்களை மதிக்கும் பூமி. பசுவின் பால் மட்டும் அல்லாமல் சாணம், சிறுநீரும்(கோமியம்) மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. பசுவிலிருந்து கிடைக்கும் எல்லாமே புனிதம் தான்.  பாகவதத்தில் பல இடங்களில் பசுக்களைப் பற்றிக் குறிப்புகள் வருகிறது. அதிலிருந்து சில ப

பாகவத திருப்பாவை - 20 (கப்பம் தவிர்க்கும் )

 பாகவத திருப்பாவை - 20 (கப்பம் தவிர்க்கும் )  முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று* கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்* செப்பம் உடையாய்! திறல் உடையாய்!* செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்** செப்பு அன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்* நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்* உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை* இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் 493/20 முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும் முன்பாகவே  சென்று  அவர்களின் நடுக்கத்தைப் போக்கும் வீரனே எழுந்திரு! கருணையுள்ளவனே! வல்லமையானவனே! பகைவருக்குப்  பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு! தங்கக் கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை  உடைய நப்பின்னையே! திருமகளே எழுந்திரு. விசிறியும், கண்ணாடியும், உன் கணவனையும் கொடுத்து  எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக. முப்பத்து முக்கோடி தேவர்களுக்குக் கஷ்டம் வரும்போது முந்திரிக்கொட்டை மாதிரி முன் சென்று உதவும் விமலா என்று ஆண்டாள் பாடுகிறாள் என்பது பொதுவாக இந்தப் பாசுரத்துக்குச் சொல்லும் பொருள்.  பெருமாளின் எல்லா அவதாரங்களையும் இதற்கு உதாரணமாகக்

பாகவத திருப்பாவை - 19 ( ஆற்றகில்லாயால் )

பாகவத திருப்பாவை - 19 ( ஆற்றகில்லாயால் ) குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் கட்டில் மேல்* மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்* கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்* வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;** மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை* எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்* எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்* தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் 492/19 நிலை விளக்குகள் ஒளி வீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில்  மெத்தென்ற பஞ்சுப் படுக்கை மீது  கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களைச் சூட்டிய கூந்தலுடைய  நப்பின்னையின் மார்பில் தலையை வைத்துக் கொள்பவனே, வாய் திறந்து பேசு! மைக் கண்ணுடைய நப்பினையே! நீ உன் கணவனைச் சிறுபொழுதும்  படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை. கணமாகிலும், நீ அவன் பிரிவைச் சகிக்க மாட்டாய். ஆ! நீ இப்படி (எதிராக) இருப்பது நியாயமும் ஆகாது; குணமும் ஆகாது. முதலில் ஒரு புதிருடன் ஆரம்பிக்கலாம். நீங்கள் பார்க்கும் இரண்டு சேர்த்தி படங்களில் என்ன வித்தியாசம் ?  விடை கடைசியில்.  ஆழ்வார் பாசுரங்களில் இந்த ‘கில்’ பல இடங்களில் வருகிறது. நம் எல்லோருக்கும் தெரிந்த நம்மாழ்வ

பாகவத திருப்பாவை - 18 ( நப்பின்னாய் )

பாகவத திருப்பாவை - 18 ( நப்பின்னாய் ) உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்* நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!* கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்* வந்துஎங்கும் கோழி அழைத்தன காண்*மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்* பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்* செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப* வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.  மத யானையை வீழ்த்தும் வலிமையும், போரில் பின்வாங்காத  தோளைப் படைத்த நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னையே! மணம் வீசும் கூந்தலை உடையவளே! கதவைத்திற! கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக் கேள்! குருக்கத்தி கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன. பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம். உன் தாமரை கையால் வளையல்கள் ஒலிக்க  மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறக்க வேண்டும்! பிரணவத்தில் (ஓம்) அ, உ, ம அடங்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். இதில் ’அ’ என்ற பரமாத்மாவை,  ’உ’ என்ற பிராட்டியைப் புருஷாகாரமாக ‘ம’ என்ற ஜீவாத்மா பற்ற வேண்டும் என்பது இதன் உட்பொருள்.  ’உ’ பிராட்டியை குறிக்கும். புருஷாகாரம் = சிபாரிசு என்று தெரிந்துகொண்டால் போதும்.  இப்

பாகவத திருப்பாவை - 17 ( அறஞ்செய்யும் கொழுந்தே! )

பாகவத திருப்பாவை - 17 ( அறஞ்செய்யும் கொழுந்தே! ) அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்* எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;* கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!* எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்** அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த* உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்* செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!* உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் 490/17 உடையே, தண்ணீரே, சோறேயெனத் தானம் செய்யும்  எஜமானனான நந்தகோபாலரே எழுந்திருக்க வேண்டும். வஞ்சிக் கொடிக்குக் கொழுந்து போல் முதன்மையானவளே! எங்கள் குலவிளக்கே! எஜமானியான யசோதையே விழித்துக்கொள்! வானளாவிய ஓங்கி வளர்ந்த அனைத்துலகங்களையும்  அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே எழுந்திரு. பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த  பலராமா நீயும் உன் தம்பியான கண்ணனும் எழுந்திருக்க வேண்டும் அம்பாரமே! கண்ணன் அவதாரம் முடிந்து வைகுண்டத்துக்குப் புறப்பட்டுச் சென்று பின் பாண்டவர்களுக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. அப்போது அர்ஜுனன் தன் உற்ற தோழன் பிரிவால் மனம் கலங்கினான். பாண்டவர்கள்மீது கண்ணன் கொண்டிருந்த அன்பை நினைத்து நினைத்து அர்ஜுனனின் கண்கள் கலங்கிய

பாகவத திருப்பாவை - 16 ( ஆயர் சிறுமியரோமுக்கு)

 பாகவத திருப்பாவை - 16 ( ஆயர் சிறுமியரோமுக்கு) நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!* கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே!* மணிக்கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு** அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்* தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்* வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!* நீ நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் 489/16 எங்களுக்குத் தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே ! கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே ! அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு ! ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான் நேற்றே விரும்பியதைத் தருகிறேனென்று வாக்களித்துள்ளான் எனவே, அவனைத் துயிலெழுப்ப (திருப்பள்ளியெழுச்சி) தூய்மையாக வந்துள்ளோம் முதன் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள கதவைத் திறந்து எங்களை உள்ளேவிடு! பாகவதத்திலிருந்து ஜயவிஜயர்களின்  கதையைப் பார்க்கலாம் ( 7.2.35-40) பிரம்மாவின் மானசீகப் புத்திரர்களான சநகாதி  முனிவர்கள் பார்க்க ஐந்து வயதுக் குழந்தைகள்போல  உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் இருப்பார்கள்.  ஒரு சமயம்  மூவுலகங்களையும்

பாகவத திருப்பாவை - 15 ( நானேதான் ஆயிடுக )

 பாகவத திருப்பாவை - 15 ( நானேதான் ஆயிடுக )  எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!* சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்* வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்* வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!** ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?* எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்* வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க* வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய் 488/15 எழுப்ப வந்தவர்கள்: இளங்கிளி போன்றவளே! என்ன, இன்னுமா தூங்குகிறாய்? உறங்குபவள்:  பெண்களே! இதோ வருகிறேன். 'சில்' என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள். எழுப்ப வந்தவர்கள்: நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே! உறங்குபவள்: நீங்கள் தான் வாயாடிகள்; பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருந்துவிட்டுப் போகிறேன். எழுப்ப வந்தவர்கள்: நீ உடனே புறப்பட்டு வா; வேறு என்ன வேலை இருக்கிறது? உறங்குபவள்: எல்லாப் பெண்களும் வந்து விட்டார்களா? எழுப்ப வந்தவர்கள்:  எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிப்பார். குவலயாபீட யானையையும் கம்சன்  முதலிய பகைவர்களையும் அழித்த கண்ணன் புகழ் பாட

பாகவத திருப்பாவை - 14 ( சங்கோடு சக்கரம் )

 பாகவத திருப்பாவை - 14 ( சங்கோடு சக்கரம் ) உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்* செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்* செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்* தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்** எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்* நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!* சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானைப் பாட ஏலோர் எம்பாவாய் 487/14 உங்கள் புழக்கடைத் தோட்டத்தில் உள்ளக் குளத்தில்  செந்தாமரைகள் மலர்ந்து விட்டன. அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு விட்டன. காவி உடை அணிந்த வெண்மை பற்களுடைய துறவிகள்  தங்கள் கோயில்களுக்குச் சங்கு ஊதித் திறக்கப் போகிறார்கள். எங்களை முன்னதாக எழுப்புவதாக வீண் பெருமை பேசிய பெண்ணே! வெட்கமில்லாதவளே! பேச்சை மட்டும் இனிமையாகப் பேசுபவளே! சங்கு சக்கரம் தரித்த விசாலமான கைகளையுடைய  கமலக்கண்ணனைப் பாட வேண்டும்; எழுந்திரு. ஸ்ரீ கிஷ்ணா அவதாரத்தில் பெருமாள் சங்கு சக்கரத்துடன் காட்சி கொடுக்கத் தயங்குவதே இல்லை. அவதரித்த உடனேயே தேவகி வசுதேவருக்குச் சங்கு சக்கரத்துடன் காட்சி கொடுத்தார்.  ஸ்ரீகிருஷ்ணர் திருவவதாரம் பாகவதத்தில் (

தொண்டரடிப் பொடி ஆசாரியர்கள்

 தொண்டரடிப் பொடி ஆசாரியர்கள்  இது என்ன மாதிரி தலைப்பு என்று உங்களுக்கு யோசிக்கத் தோன்றும். காரணம் இருக்கிறது.  1. அனந்தாழ்வான் : திருமலை அனந்தான்வான் பிறந்த ஊர் கர்நாடகாவில் மைசூர் போகும் வழியில் ஸ்ரீரங்கபட்டனம் பக்கம் இருக்கும் கிரங்கனுர் என்றால் பலருக்கு தெரியாது.  (படம் : கிரங்குரு - அனந்தாழ்வான் அவதார ஸ்தலம்) அடியேனுக்கு  சில வருடங்கள் முன் தான் இந்த விஷயம் தெரிந்தது.  உடனே சேவித்துவிட்டு வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு போன வருடம் நவம்பர் மாதம் தான் போக முடிந்தது.  மாண்டயா வந்த போது கோயில் அர்ச்சகரைச் செல் பேசியில் அழைத்தேன்.  “வாங்கோ… வாங்கோ…இப்ப எங்கே இருக்கேள்…  நேரா பெட்ரோல் பங்க் வரும்… எதிரே ரைட் எடுக்க வேண்டும்.. நான் ஸ்கூட்டரில் வந்து கதவை திறக்கிறேன்” “உங்களுக்கு எதற்குச் சிரமம்… இடம் சொல்லுங்கோ காரில் வரும் போது உங்களை அழைத்துச்செல்கிறேன் “  “வேண்டாம் வேண்டாம்..நானே வந்துவிடுவேன்..வாங்கோ” என்றார்.  வழியைத் தேடி கோயிலுக்குச் சென்ற போது மிக அமைதியான இடமாக அது இருந்தது. கோயிலுக்குப் பக்கம் வாய்க்கா..ஜிலு ஜிலு என்று காவிரி, கரும்பு பூக்கள், துளசி, வெற்றிலை, மல்லிகை… பசுமை,