Skip to main content

Posts

Showing posts from February, 2021

மணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் !

மணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் ! சிறுவயதில் ஒரு நாள் கொள்ளிடக்கரை கல்லணை வழியாக கோயிலடி என்று அழைக்கப்படும் அப்பகுடத்தானை சேவிக்கச் சென்றேன். சந்நிதி பூட்டியிருந்தது. விசாரித்ததில் அர்ச்சகர் வீட்டைக் காண்பித்தார்கள். அர்ச்சகரிடம் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அவரும் அதற்குச் செவிசாய்த்து சந்நிதியின் கதவைத் திறந்தார். ஆனால் அகத்தில் எதையோ மறந்துவிட்டார். இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றார். கியூரியாசிட்டியினால் ஒரு  காரியம் செய்தேன் ( கவனிக்கவும் - விவரம் தெரியாத சின்ன பையனாக இருந்த போது ) கருவரை உள்ளே சென்று பெருமாள் பக்கம் இருக்கும் அப்பகுடத்தையும் பெருமாளையும் தொட்டுச் சேவித்துவிட்டு வெளியே வந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்த அர்ச்சகர் “நம்மாழ்வார் இங்கிருந்து தான் தன் கடைசிப் பாசுரத்தைப் பாடி மோட்சமடைந்தார்” என்றார்.  சில வருடங்கள் முன்  மணல் லாரிகள் ‘சைடு’ கொடுக்காமல் ஓரம்கட்டிய போது மணக்கால் என்ற ஊர் பலகை வர “இங்கே தான் ஆளவந்தாருக்கு ஆசாரியரான மணக்கால் நம்பிகள் பிறந்த இடம்” என்று பெயர்ப் பலகையை கை கூப்பிச் சேவித்துவிட்டு ஒரு கிமீ தூரம் செண்டிருப்பேன்

பதம் பிரித்த பிரபந்தம் வெளியீடு - அறிவிப்பு

. ஸ்ரீ ஸ்ரீமதே ராமானுஜாய நம: சென்ற வருடம் ‘பதம் பிரித்த பிரபந்தம்’ புத்தகம் குறித்து எழுதியதும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் உங்களுக்கு நினைவு இருக்கலாம். பலர் அந்தப் புத்தகம் வேண்டும் என்று  நேற்று மத்தியானம் வரை ‘புத்தகம் எப்போது வரும்’ என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.  கடந்த சில மாதங்களாகப் புத்தகத்தைச் செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈட்டுப்பட்டு 90% வேலைகள் நேற்றுடன் முடிந்தது. மொத்தமாக ’பிரிண்டவுட்’ எடுத்து இன்று காலை அதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தகம் பற்றிய விபரம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை கீழே தந்துள்ளேன்.  என்னிடம் ஏற்கனவே பிரபந்தம் புத்தகம் இருக்கிறதே ? இது பதம் பிரித்த பிரபந்தம்.  பதம் பிரித்த பிரபந்தமா ? அதில் என்ன உபயோகம் ?  சுமாராகத் தமிழ் படிக்கத் தெரிந்தால் பயப்படாமல் படிக்கலாம். பொருள் எளிதில் விளங்க ஆரம்பிக்கும். உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றைப் பதம் பிரித்து/பிரிக்காமல் கொடுத்திருக்கிறேன். வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.  ஒரு படத்தில் 460 - 8 என்று இருக்கிறது இன்னொன்றில் 460/5.3.8 என்று இருக்கிறதே ?   460 என்

ஸ்ரீ உறங்காவில்லியின் உள்ளம்

 ஸ்ரீ உறங்காவில்லியின் உள்ளம்  ‘பேலன்ஸ் ஷீட்’(balance sheet) போன்ற’ கணக்கு வழக்குகளைப் பார்க்கும்போது அடிக்குறிப்பில்(footnotes) பல ரகசியங்கள் அடங்கியிருக்கும். அதுபோலச் சமீபத்தில் புத்தகம் ஒன்றைப் படித்தபோது அதில் ஒரு அடிக்குறிப்பில்  ”குருபரம்பரை புத்தகங்களில் இவர்களைப் பற்றி தகவல் இருப்பதில்லை. ’இவர்கள்’ என்பது  ‘மாறநேரி நம்பி, உறங்காவில்லி தாஸர் போன்ற ’சாத்தாத’ ஸ்ரீ வைஷ்ணவர்கள்.  இந்த அடிக்குறிப்பு ஒருவரின் கண்ணோட்டம். உண்மையாக இருக்கலாம் அல்லது அவர் பார்த்த புத்தகங்களில் அப்படி இருந்திருக்கலாம். இந்த கட்டுரை இதைப் பற்றியதில்லை. ஸ்ரீ உறங்காவில்லி தாஸரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.  ஒரு முறை ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ ராமானுஜரின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து ஒரு கேள்வியைக் கேட்டார் “அடியேனுக்கு வெகுநாட்களாக  ஒரு சந்தேகம்”   உடையவர் ”என்ன ?” என்று கேட்க முதலியாண்டான் கேட்கக் கேள்வி இது   “பூணூல் தரித்து வேதம் சொல்லும் நம்மில் சிலர் ஆசாரியனாகக் கூட இருக்கிறோம்  பிள்ளை உறங்காவில்லி தாஸர் போன்ற ‘சாத்தாத’ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?” என்றார்  (

குலசேகர பெருமாள்

குலசேகர ஆழ்வாருக்கு ஸ்ரீராமரிடம் உள்ள பக்தி எல்லோருக்கும் தெரிந்தது. குலசேகர ஆழ்வாருக்குப் பெருமாளின் கல்யாண குணங்களில் மிகுந்த ஈடுபாடு குறிப்பாக ஸ்ரீராமர் மீது. இராமாயண கதை கேட்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம்.  கதை கேட்கும் போது அளவுக்கு அதிகமான ஈடுபாடு காரணமாக  அன்று தான் ராமாயண நிகழ்ச்சிகள் நடப்பதாகப் பாவித்து தாம் யார் என்பதையும் மறந்து, ராமர் போர் செய்யக் கஷ்டப்படுகிறார் என்று ராமருக்கு உதவ தன் படையுடன் புறப்பட்டார். அதனால் அவர் குலசேகர பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.  ஆனால் அவருக்கு அரங்கன் மீது அளவுகடந்த மோகம். அவருக்குச் சயனித்த பெருமாள் தான் வேண்டும் என்றால் மலை ( கேரளா ) நாட்டு திவ்ய தேசத்திலேயே திருவாட்டாற்று, அனந்தபத்மநாப பெருமாள் என்று இரண்டு பெருமாள் இருக்க அவர் திருவரங்கம் வர துடித்தற்கு காரணம் திருவாய் மொழி படித்தது தான்.  குலசேகர ஆழ்வார் எங்கே திருவாய் மொழி பற்றி அவர் பாசுரங்களில் சொல்லியுள்ளார் ?  அந் தமிழின் இன்பப்பாவினை அவ் வடமொழியைப் பற்று-அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கோவினை, நா உற வழுத்தி என்தன் கைகள். கொய்ம்மலர் தூய் என்று கொலோ கூப்பும்

ஸ்ரீ திருக்கச்சி நம்பியின் திருமாளிகை

ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் எம்பெருமானார் சீடர்களுடன் இருந்த சமயம் அவருக்கு தன் அபினான ஆசாரியரான திருக்கச்சி நம்பிகளின் நினைவு வருகிறது.  “காஞ்சிபுரத்துக்கு சென்று திருக்கச்சி நம்பிகள் எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டு வருவார் யாரேனும் உண்டோ ?” என்று கேட்கிறார்.  ஸ்ரீராமானுஜரை விட்டு பிரிய மனம் இல்லாமல், ஒருவரும் “நான் போகிறேன்” என்று கூறவில்லை.  மறுநாள் விடியற்காலை பெரியநம்பிகள் எம்பெருமானார் மடத்துக்கு சென்று வழக்கமாக பேசுவது போல  “நான் பெருமாள் கோயிலுக்குச் சென்று(காஞ்சிபுரம்)  பெருமாளை சேவித்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்” என்றார்.  “அடியேனுடைய அசாரியர் நீங்கள் ! என்னிடம் நீங்கள் அனுமதி கேட்க தேவை இல்லை, உங்களுக்கு அடியேன் தடை செய்ய முடியுமோ ? தாராளமாக சென்று வாருங்கள்” என்றார் உடையவர் வழி அனுப்பிவைக்கிறார்.  காஞ்சிபுரத்துக்கு சென்ற பெரியநம்பிகள், திருக்கச்சிநம்பிகளின் நலத்தை விசாரித்துக்கொண்டு புறப்பட்ட போது திருக்கச்சி நம்பிகள்  “இன்னும் சில நாள்களில் இங்கு உத்ஸவம் இருந்து சேவித்துவிட்டு போகலாமே ?” என்றார்  அதற்கு பெரிய நம்பி “நான் வந்த காரியம் முடிந்துவிட்டது. இனியும் உத

நம் கூரத்தாழ்வான்

நம் கூரத்தாழ்வான் ஸ்ரீராமானுஜரைக் காக்க ஆழ்வான் உடையவர் மாதிரி காவி உடை தரிக்கக் கோபம் கொண்ட சோழ அரசனால் ஆழ்வான், பெரிய நம்பிகளின் கண்கள் பறிபோனது.   ஆழ்வான், பெரிய நம்பிகளை வழி நடத்திக்கொண்டு பெரிய நம்பிகளின் குமாரத்தி அத்துழாய் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தார்கள். பெரிய நம்பிகள் மிகவும் சோர்ந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தார்.  அப்போது அத்துழாய் “கோயில்(திருவரங்கம்) இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும். அதுவரை அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.  பெரிய நம்பிகள் உடனே அந்த இடத்திலேயே ஆழ்வானின் மடியில் பரமபதித்தார்.  அவர் பரமபதிக்கும் முன் கூறிய வார்த்தை “ஒரு ஸ்ரீவைஷ்ணவன் மடியைக் காட்டிலும் கோயில் சிறந்தது கிடையாது, அடியேனுக்கு நம் ஆழ்வானின் மடியே சித்தித்துள்ளது!” என்று தன் ஆசாரியனான ஆளவந்தார் திருவடிகளைத் தியானித்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.  ’நம்’ என்ற அடைமொழி சில ஆழ்வார், ஆசாரியர்களுக்கும், பெருமாளுக்கும் உண்டு. உபதேச ரத்தினமாலையில் மாமுனிகள்  நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே! ஏத்த

திருவரங்கப் பெருமாள் அரையர்

திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்ரீராமானுஜர் அவதரித்த அதே வருடம் ( 1017 ) வைகாசிக் கேட்டையில் ஆளவந்தாரின் புத்திரனாகத் திருவரங்கப் பெருமாள் அரையர் அவதரித்தார். ஆளவந்தார் இவரைத் தன் ஆசாரியன் மணக்கால் நம்பியை ஆச்ரயிக்கச் செய்தார். ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளும் சமயம் அவருடைய சீடர்கள் ஆளவந்தார் திருவடிகளை வணங்கி “எங்களுக்கு ஒரு நல்வார்த்தை அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். இதற்கு ஆளவந்தார் “பெரிய பெருமாள் கீழே எப்போதும் சேவித்து நிற்கும் திருப்பாணாழ்வாரே நம் ஸ்ரீ வைஷ்ணவத்தின் ரகசியம். பெரிய பெருமாளே உபாயமும், உபேயமும் என்று நமக்கு உணர்த்தியவர். பெரிய பெருமாள், திருப்பாணாழ்வாரிடம் மிகுந்த பக்தியுடைய திருவரங்கப் பெருமாள் அரையரை அண்டி இருங்கள்” என்று உபதேசித்தார். நம் ராமானுஜரைத் திருவரங்கம் அழைத்து வந்ததில் பெரும் பங்கு அரையரையே சாரும். ஆளவந்தார் பரமபதம் அடைந்த பின் எம்பெருமானார் சன்னியாசம் பெற்றார். காஞ்சி தேப்பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வந்தார். ராமானுஜரைத் திருவரங்கம் அழைத்துவர வேண்டும் என்று அடியார்கள் பெரிய பெருமாளிடம் வேண்டினார்கள். அரங்கன் மேற்பார்வையில் திருவரங்கத்த