Skip to main content

Posts

Showing posts from October, 2020

வெண்ணெய் தோசை vs பென்னே தோசை

 வெண்ணெய்  தோசை vs பென்னே தோசை  திருச்சி ஆண்டார் தெருவில் 'ராமா கபே'  பலருக்குத் தெரிந்திருக்கும். ‘வெண்ணெய் மாவு’  ( தோசை) என்று ஆடர் செய்துவிட்டு பெண் பார்க்கும் வீட்டில் பெண் வரும் வரை அங்கே இருக்கும் பாட்டிகளை பார்ப்பது போல  இலையில் இருக்கும் இட்லி சாப்பிட்டுக்கொண்டு பெண் மன்னிக்கவும்,  தோசை வருகிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போது... ‘அடுத்தது ஒரு வெண்ணெய் மாவு’ என்ற அந்த சத்தம் செவிக்கு சென்று செவிக்கு உணவாகி,  சிறிது நேரத்தில் வயிற்றுக்கும் ஈயப் படும் என்று அறிவிப்பாக இருக்கும்.  சத்தம் போட்ட ஒரு நிமிஷத்துக்குள்  ஒருவர் வெளியே ஓடி பக்கத்து ‘பழநி விலாஸ் நெய் கடையில்’ பட்டர் பேப்பரில் வெண்ணெய் வாங்கிக்கொண்டு உள்ளே செல்வார்.  சரியாக இட்லியை முடித்துவிட்டு இலையில் மீதம் இருக்கும் சட்னி, சாம்பாரை நக்கி ருசிக்கும் போது வெண்ணெய் தோசை உங்கள் முன் வந்து மடிக்கப்பட்டு இலையில் விழும். கூடவே ‘கெட்டி’ சட்னி, தனியா (கொத்தமல்லி) தூக்கலான சாம்பார் என்று ’சேர்த்தி சேவை’ திருப்தி ஏற்படும்.  அப்பறம் சொல்ல மறந்துவிட்டேனே,,, தோசை சாப்பிடும் போது வெளியே வங்கிய  வெண்ணெய் உள்ளே இருப்பதற்க

மிளகாழ்வான், சோம்நாத்பூர் - சில குறிப்புகள்

மிளகாழ்வான், சோம்நாத்பூர் - சில குறிப்புகள் தீபாவளிக்கு(2019) மேல்கோட்டை, சோம்நாத்பூர் போன்ற இடங்களுக்குச் சென்றிருந்தேன்.  சோம்நாத்பூருக்கு பத்து வருடம் முன் சென்றிருக்கிறேன். இந்த முறை மேல்கோட்டைக்கு சென்றபோது மிளகாழ்வான் எந்தத் தூணில் இருக்கிறார் என்று தேடி கண்டுபிடித்தேன்.   ஈட்டில் "மிளகாழ்வான் வார்த்தை" என்று நம்மாழ்வார் பாசுரம் ஒன்றுக்கு ஒரு ஐதீகம் வருகிறது.  என்ன பாசுரம் என்று பார்க்கலாம்.  வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப்படுவாரே பொருள்: தண்ணீர் பொழிகின்ற அருவிகள் மிகுந்துள்ள அழகிய காட்சி தரும் குளிர்ந்த திருவேங்கட மலையில் என் தந்தையான திருவேங்கடவன் உள்ளான் அவன் திருபெயர்களைப் பல பரவசமாகப் பாடும்போது பிறர் பைத்தியக்காரரோ என்று கூறும் அளவுக்குப் பக்தி மேலிட்டு ஊர்கள் தோறும் திரிந்தவாறு உலகத்தார் சிரிக்கும்படியாக ஆடிப்பாடி அன்பு மீதூரப் பெறுகிறவர்கள் தேவர்களால் வணங்கப்படுவார்கள்.  இங்கே பரவசத்துடன் ஆடிப் பாடி என்று வரும் இ

கவிஞர் வாலி கற்றதும் பெற்றது

கவிஞர் வாலி கற்றதும் பெற்றது கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாதா இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது. ‘ரங்கராஜன்; என்ற பெயர்; ஸ்ரீரங்கத்தில் பிறக்கவில்லை என்றாலும், வளந்தது ஸ்ரீரங்கம்; ஆழ்வார் பாசுரங்களின் மீது காதல். ஸ்ரீரங்கத்தில் கையெழுத்து பத்திரிக்கையில் எழுதித் தமிழ் பத்திரிக்கையில் தொடர்ந்தார்கள்… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னொரு ஒற்றுமை இருவரும் ஆசாரியன் திருவடியை அடைவதற்கு முன் ஆசாரியனை சேவித்தார்கள். சுஜாதாவின் எழுத்தின் மீது இன்றும் தீராத ஈர்ப்பு இருப்பதற்குக் காரணம் முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடிப்பு இருப்பது தான் காரணம். சுஜாதா போல வாலி தன் வசன கவிதைகளில் அடுத்த வரி ஆச்சரிய சொடக்கைக் கொடுத்தார். சுஜாதா பற்றி வாலி இப்படி எழுதியிருந்தார். அவன் ‘கணையாழி’யில் தோன்றிய கதையாழி; அவனோர் இணையாழி இல்லாத இசையாழி ! பெற்ற தாய், தமிழ்த் தாய் இருவருக்கும் என் வணக்கம் என்பதை வாலி எனக்கு இரண்டு தாய்; இந்த இரண்டு தாய் இல்லையேல் இருந்திருக்கும் என் வாழ்வு இருண்டதாய் என்றார். சுஜாதா, வாலி இருவரும் கதை, கவிதை, சினிமா என்று கடைசிவரை பிஸியாக இருந்தார்கள். அடியேன் சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் செ

பரம காருணிகரான பின்பழகிய பெருமாள் ஜீயர்

பரம காருணிகரான பின்பழகிய பெருமாள் ஜீயர் இந்தப் படம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் நம்பிள்ளை. அவருடைய திருவடிக்குக் கீழே ஒரு ஜீயர் இருக்கிறார் அவர் யார் என்று தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.  ’ வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி ' என்ற திருவரங்க பாசுரம் மிகப் பிரபலம்.  ஏன் தன் பின் பகுதியை பெருமாள் வடதிசையை நோக்கிக் காண்பிக்கிறார் என்ற கேள்விக்கு நம் பூர்வர்கள் பதில் கூறியிருக்கிறார்கள்.  அழகிய மணவாளன் என்ற திருநாமம் ஆண்டாள் காலத்திலிருந்து  நம்பெருமாளுக்கு உண்டு. ஆனால் அவருடைய ’ முன் அழகை’க் காட்டிலும் பின் அழகு இன்னும் அழகாக இருக்குமாம். அதனால் ‘ முன்னிலும் பின்னழகிய பெருமாள ’ என்று நம்பெருமாளுக்கு இன்னொரு ஸ்பெஷல் திருநாமமும் உண்டு. வடக்கே இருக்கும் கூட்டத்தை தெற்குப் பக்கம் ஈர்க்க அவர் பின்னழகைக் காட்டினார் என்பார்கள். இந்த ‘பின் அழகு’ என்ற பெயர் கொண்ட ஜீயர் தான் 'பின்பழகிய பெருமாள் ஜீயர்’. திருபுட்குழியில் அவதரித்த இவர் நம்பிள்ளையின் அர்மார்த்தமான சிஷ்யராக இருந்தார்.    பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தார். கூட இருந்தவர்க

14. இராமானுசன் அடிப் பூமன்னவே - இசைகாரர்

14. இராமானுசன் அடிப் பூமன்னவே - இசைகாரர்  நாதமுனிகளின் மருமக்களான மேலையகத்தாழ்வானையும், கீழையகத்தாவானையும் அன்புடன் நோக்கி “மருமக்களே! அடியேன் திருக்குருகூரில் நடந்த விசேஷ நிகழ்வுகளை இப்போது உங்களுக்குக் கூறுகிறேன்” என்று தான் ஆழ்வார் பாசுரங்களைத் தேடிப் புறப்பட்டதிலிருந்து, பராங்குச தாசரை கண்டு கண்ணிநுண் சிறுத்தாம்பு பன்னிரண்டாயிரம் தடவை உருச்சொன்னதை அடுத்து, சடகோபர் திருவாக்கில் ஆழ்வார்  வைபவங்களுடன் அவர்கள் அருளிய பாசுரங்கள், திருவாய்மொழி முதலியவை கிடைத்த விபரங்கள், ’பொலிக பொலிக’ என்ற பாசுரத்தின் அர்த்த விசேஷங்களைக் கூறி,  கலியின் கொட்டத்தை அடக்க ஓர் ஆசாரியர் அவதரிக்கப் போகிறார் என்று ஆழ்வார் கனவில் காட்சி கொடுத்தது கூறிய விருத்தாந்தங்களை கூறினார்.  எல்லாவற்றையும் கூறிய நாதமுனிகள் தமக்கு ஆழ்வார் பிரசாதித்த பவிஷ்யதாசாரியர் விக்கிரகம் பற்றியும் அது தன்னிடம் இருப்பதையும்  அவர்களிடம் கூறாமல் ரகசியமாக வைத்துக்கொண்டார்.    மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த மருமக்கள் கண்ணீருடன் “உத்தமோத்தமரே! மகானுபாவனுடைய உங்களின் சம்பந்தம் கிடைக்கச் செய்தற்கரிய பெரும் புண்ணியம் என்ன செ

இடைகழி மெய் விளக்கு

இடைகழி மெய் விளக்கு பல விஷயங்கள் சொல்லும்போது  ‘கடைசியில் என்னதான் சொல்லவர  ?’ என்ற கேட்போம்.    முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்களின் திருவந்தாதிகள் முதல்/இரண்டாம்/மூன்றாம் திருவந்தாதி என்ற வரிசையில் வருகிறது.  ஆழ்வார் பாசுரங்களைப் படித்தால் ஆழ்வார்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது போல இருக்கும். அவற்றை redundant/repetative போன்று நமக்குத் தோன்றும். ஆழ்வார்கள் ஆழங்காற்பட்டு நமக்குச் சொன்ன உண்மைப் பொருள் என்று நாம் உணர வேண்டும்.  ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் முதலாழ்வார்கள் பிரபந்தங்கள் (இயற்பா) கிட்டதட்ட கடைசியில் தான் வருகிறது.   ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் கடைசியில் (ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம்) நமக்கு இந்தப் பாசுரத்தைத் தமிழில் அருளியிருக்கிறார் ( ஞான தமிழ் புரிந்த நான் என்று சொல்லும் ஆழ்வார்களுக்குத் தமிழில் தானே எழுத வேண்டும் ? )  பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால் மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால் நாட்டுக்கு இருள் செக நான்மறை யந்தாதி நடை விளங்க வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே மருளற்ற தேசிக

மெய் கறுத்த கருத்து

மெய் கறுத்த கருத்து  ஆண்டாள் வருண தேவனைப் பார்த்து மழை வேண்டும் என்று கேட்கும் பாசுரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 'ஆழி மழைக் கண்ணா’ என்று ஆரம்பித்து, ’ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து’ என்று கூறுகிறாள்.   ஊழி முதல்வன் போல் கறுத்து என்று சொன்னாலே போதுமே எதற்கு ’மெய்’ என்ற extra fitting ? ஆழ்வார் பாடல்களில் எங்கு எல்லாம் கருமை நிறம் வருகிறதோ அங்கே எல்லாம் அவனுடைய கருணையை ஆழ்வார்கள் கூற தவறுவதில்லை. எம்பெருமானுடைய நிறத்தை மேகங்கள் கொள்ளலாமே தவிர அவனுடைய கருணையைக் கொள்ள முடியாது. அதனால் ஆண்டாள் ’மெய்’ கறுத்து என்று கூறுகிறாள். ( மெய்யாலும் கறுக்க வேண்டும் என்கிறாள்) கருமேகங்கள் மழைக்குப் பிறகு வெளுத்துவிடும், ஆனால் கண்ணனின் திருவுள்ளம் நமக்கு அநுக்ரஹம் செய்ய வேண்டும் என்று எப்போதும் கறுத்து இருக்குமாம். அந்த வாத்ஸல்யம் வேண்டும் என்று உணர்த்தத் தான் ஆண்டாள் ‘மெய்’ கறுத்து என்று அழுத்தி தன் கருத்தைக் கூறுகிறாள்.  நாச்சியார் திருமொழியில் ஒரு பாசுரத்தைப் பார்க்கலாம்.  பொருத்தம் உடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மா முகிலைக் கண்டீரே? அருத்தி

விஷ்வக்சேனர்

விஷ்வக்சேனர் பல வருடங்கள் முன் ‘விஷ்வக்சேனர்’ என்ற பெயர் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. சென்னையில் ”Vishwak” என்று கம்பெனி கண்ணாடி பலகை கண்ணில் பட்டது.  வித்தியாசமான பெயராக இருந்தது. ஆனால் அர்த்தம் தெரியவில்லை. சில வருஷம் கழித்து அதன் உரிமையாளர் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் என்று தெரிந்துகொண்டேன். ஆனால்  இந்தப் பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது.  ஒரு முறை கோயிலில் சந்நிதிகளை சேவிக்கும் போது, விஷ்வக்சேனர்  பற்றி தெரிந்துக்கொண்டேன். ’விஷ்வக்’  என்று முன்பு பார்த்த பெயருக்கும் இதற்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு தெரிந்துகொண்டேன்.  விஷ்வக்சேனர் வாழி திருநாமம் இப்படி இருக்கிறது.  ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே மேலே உள்ள வரிகளுக்கு என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள மேலும் படிக்

மாமுனிகள் என்ற மழைச்சாமி !

மாமுனிகள் என்ற மழைச்சாமி !  ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் கடைக்குட்டியாக விளங்குபவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் (காலம் 1370 - 1443 முதல் ).  ஐப்பசி மூலத்தில் ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடையபிரான் தாசருக்கு திருக்குமாரராய் அவதரித்தவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள். இயற்பெயர் ஸ்ரீ அழகிய மணவாளன் ( அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) சிக்கில் என்ற ஊரில் அவருடைய தாய் மாமாவுடைய இல்லத்தில் வேத பாடங்கள் படித்து வந்த அதே காலத்தில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை எம்பெருமானார் தரிசனம் என்ற ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பிரகாசிக்க செய்ய ஒருவரைத் தேடிக்கொண்டு இருந்தார்.  சிக்கிலில் படித்துக்கொண்டு இருந்த ஸ்ரீ அழகிய மணவாளன் திருவாய்மொழிப் பிள்ளையின் ஞானத்தை அறிந்து சிக்கிலிலிருந்து கிளம்பி தன் பிறந்த இடமான ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டு அங்கே திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைப் பற்றினார்.  அவருடைய வாழ்கை வரலாற்றில் பல சுவாரசியமான சம்பவங்கள் இருக்கிறது. அதிலிருந்து சிலவற்றை இங்கே தருகிறேன். முதலில் எப்படிச் சந்நியாசம் மேற்கொண்டார் என்று பார்த்துவிடலாம். மணவாள மாமுனிகளின் குடும்பம் பெரியது, அடிக

13. இராமானுசன் அடிப் பூமன்னவே - துதிக்கப்பெறுகை

 13. இராமானுசன் அடிப் பூமன்னவே - துதிக்கப்பெறுகை சடகோபன் திருவடிகளை விட்டுப் பிரியாமல் திருக்குருகூரில் நிரந்தர நித்திய வாசம் செய்துகொண்டு இருந்தார் நாதமுனிகள் என்று நேயர்களுக்குச் சிறிது நினைவுபடுத்திவிட்டு கதையில் மேலும் பயணிக்கலாம்.  சூரியன் மறைந்து எல்லாத் திக்கிலும் இருள் சூழ்ந்த ஓர் இரவு நாதமுனிகளுக்குக் கனவு ஒன்று வந்தது. முன் அத்தியாயங்களில் சந்தித்து பிறகு நாம் மறந்தே போன நமக்கும் மிகவும் பரிச்சயமான வீராணாராயண பெருமாள் தான் அவர்! “நாதமுனிகளே! இவ்வளவு காலம் எம்மை பிரிந்து வாழ்வது உமக்குத் தகுமோ ? இந்தத் தமிழ் பிரபந்தங்கள் அனைத்தும் உம் இசையில் கேட்க விருப்பம் விரைவில் வீரநாராயணபுரம்  வந்து சேரும்!” என்றார்.  “அடியேனை ஆட்கொண்ட ஒப்பற்ற வீரநாராயணபுரத்து எம்பெருமானே!”  என்று நாதமுனிகள் கண்விழித்துப் பார்த்த போது எங்கும் நிசப்தமாக மெல்லிய காற்று வீசிக்கொண்டு இருந்த அந்த வேளையில் சந்திரன் மேகக் கடலில் மறைந்து, சூரியன் மெதுவே தலைகாட்ட,  அந்தக் காலை நாதமுனிகள் ஆழ்வாரையும், பொலிந்து நின்ற பிரானையும் வணங்கி நின்றார்.  கோயில் அர்ச்சகர் “நாதமுனிகளே நீர் மன்னார் சொல்படி வீரநாராயணபுரத்துக்கு