Skip to main content

Posts

Showing posts from June, 2023

ஸ்ரீமதழகிய சிங்கருடன் ஒரு நாள்

 ஸ்ரீமதழகிய சிங்கருடன் ஒரு நாள்  நமக்கு நல்வழி காட்டுபவர்கள், ஞானத்தை அளிப்பவர்களை ஆசாரியர்கள் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் ஆசாரியர் என்னும் சொல் மிக ஆழமான பொருளைக் குறிக்கும். ஆசாரியனுக்கான முதல் தகுதி அரும்பாடுபட்டு அருமறைகளையும், சாஸ்திரங்களையும் கற்று அவற்றின் நுணுக்கங்களில் தெளிவு பெற்று, ‘ஊருக்கு உபதேசம்’ என்று இல்லாமல், தான் அடைந்த ஞானத்தை அனுஷ்டானத்தினால் ஸ்திரப்படுத்தி, . இதைத் தகுதியுடையோருக்கு உபதேசித்து, பலருக்கு ஒளி தரும் கைவிளக்காக இருக்க வேண்டும். .நம்மைப் போன்றவர்களை ‘செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளத் இப்படிப் பட்ட ஆசாரியர்களை பெருமாள் தேர்ந்தெடுக்கிறான். 21.10.91ல் 45ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கராக ஸ்நயாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தார். 18 வருடம் பாரத தேசம் முழுவதும் ஸ்ரீமாலோலனுடன் சஞ்சாரம் பல கைங்கரியம், மங்களாசாசனம் செய்தார். பிறகு இந்த உயர்ந்த சம்பிரதாயத் தீபத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற சிந்தனையுடனே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியபோது அவருக்குத் திருமேனி நோவு சாற்றிக்கொண்டது. ( உடம்பு முடியாமல் போய்விட்டது ) ஒரு நாள் இரவு அவருக்கு ஒரு ஸ்வாமியின் திருநாமம் தோன்றியது. யோசிக்க

தேநீர் என்ற சாய்

 தேநீர் என்ற சாய் தேநீர் என்றால் ஏதோ தேன் போன்ற இனிய நீர் கிடையாது, தேயிலை+நீர் - தேநீர். ’வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பது தேநீருக்குக் கச்சிதமாகப் பொருந்தும். தமிழக (அல்லது தமிழ்நாட்டு ) மக்கள் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்திருந்தாலும் சுவைக்காக டீயை குடிக்காமல் காலையில் கக்கா மருந்தாக மட்டும் டீ குடித்துப் பழகி, நல்ல தேநீரை சோழர் காலத்திலிருந்து ருசித்ததே இல்லை என்பது கல்வெட்டு செய்தி. திருச்சி ’கோர்ட்’ அருகில் ‘மும்தாஜ்’ ஹோட்டலை ஷாஜகான் போல் ஒட்டிக்கொண்டு இருக்கும் டீ ஸ்டாலில். சிறுகாலையிலேயே பளபளப்பான பாய்லரின் பொந்தில் கோவண வடிகட்டியில் டீ தண்ணீரை கிளாஸில் ஒழுகவிட்டு, பேசினிலிருந்து சீனியை அள்ளி இறைத்து, கைக்குழந்தைக்குப் பாலாடையில் பாலை ஊட்டுவது போலக் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி, காது வைத்த டம்ளரில் இரண்டு ஆற்று ஆத்தி அதற்கு மேல் மீண்டும் கோவண எசன்ஸை தெளித்துக் கொடுப்பார்கள். ஒரு நாள் பாட்டியிடம் டீக்கு பைசா கேட்ட போது மும்தாஜ்ல முட்டை போண்டா விற்கிறார்கள் என்று நிராகரித்தார். குங்ஃபூ மாஸ்டர் போல, டீ கடைகளில் டீ போடுபவர்களை ‘மாஸ்டர்’ என்று அழைப்பது மரபு. எந்த மாஸ்ட

நம்மாழ்வாரின் திருவாசிரியம் - திருஆச்சரியம் !

 நம்மாழ்வாரின் திருவாசிரியம் - திருஆச்சரியம் ! 3D திரைப்படம் பார்க்க ஒரு கண்ணாடி தேவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கண்ணாடி இல்லாமல் பார்த்தால் படம் மங்கலாகத் தெரியும். கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்தால் படம் உங்கள் கண்முன்னே வந்து விளையாடும். நாம் தினமும் இந்த உலகத்தை 3Dல் தான் பார்க்கிறோம். கண்களை மாறி மாறி மூடி மூடித் திறந்து பாருங்கள் ஒரே பொருள் வேறு வேறு கோணத்தில் தெரியும் ஆனால் திரைப்படத்தில் பார்க்கும் 3D போலப் பரவசம் ஏற்படுவதில்லை. அதுவும் முதன் முதலாக 3டி படம் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. 3D கண்ணாடி எப்படி வேலை செய்கிறது ? ஆனந்த விகடனில் முன்பு கண்ணாடியுடன் ஒரு 3D படம் ஒன்றைக் கொடுப்பார்கள். நீல, சிகப்பு வண்ணம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அச்சு அடித்திருக்கும். கண்ணாடி உதவியுடன் பார்த்தால் கிட்டத்தட்ட 3D மாதிரி தெரியும். விஷயம் இது தான். நீல நிறத்தில் இருக்கும் படம் நீல கண்ணாடி வழியாகவும், சிகப்பு நிறத்தில் இருக்கும் படம் சிகப்பு கண்ணாடி வழியாக உங்கள் கண்கள் வழியாக மூளைக்கு சென்று முப்பரிமாணமாக மாற்றிக் காட்டி வித்தையைச் செய்கின்றன. இன்று திரைப்படத்தி

த்வய போகம்

த்வய போகம் படத்தில் உள்ள பெரிய பெருமாளை சேவித்துவிட்டு கீழே உள்ள ஸ்லோகத்தை ஒரு முறை படித்துவிடுங்கள். காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம் ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்! விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம் ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக: || பல தடவை கேட்ட ஸ்லோகத்தின் பொருள் : ஸ்ரீரங்க விமானமே வைகுந்தம் வைகுண்டத்தில் ஓடுகிற விரஜை தான் ஸ்ரீரங்கத்தில் காவிரி ; ஸ்ரீரங்க விமானமே வைகுந்தம் ; (அதில் இருக்கும்) வாசுதேவனே அரங்கன். விமானத்தின் பெயர் ப்ரணவாகாரம் ( விமானத்தில் உள்ள நான்கு கலசங்கள் வேதத்தின் பொருளான ப்ரணவத்தை குறிக்கிறது ) சயனத்தில் அரங்கனே ப்ரணவத்தால் விவரிக்கப்படும் பரம்பொருள் - ப்ரணவமே அரங்கன் ! பெரிய பெருமாள் ப்ரணவம் என்றால் அவன் திருவடிகள் த்வயம் ! எப்படி என்று பார்க்கலாம். த்வயம் என்பது இரண்டு வரி: ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம : ”லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுடைய சந்தோஷமே என் சந்தோஷம் என்ற கைங்கர்யத்தை பிராத்திக்கிறேன்” அதாவது “”பெரியபிராட்டியை