Skip to main content

Posts

Showing posts with the label வைணவம்

ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமியும் நானும்

சென்ற ஞாயிறு ஸ்ரீ உ.வே. அரங்கராஜன் ஸ்வாமியின் 90-ஆம் ஆண்டு விழாவில் அடியேனையும் பேச அழைத்திருந்தார்கள். நேரம் குறைவாக இருந்ததால் ஐந்து நிமிடத்திற்கு வாய்க்கு வந்ததை உளறிவிட்டு வந்தேன். நான் பேச நினைத்து, எழுதி எடுத்துக்கொண்டு சென்ற உரை வடிவம் இது. ./சுஜாதா தேசிகன் ------o0o-o0o-o0o------ ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமியும் நானும் அடியேனுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் என் ஆசாரியர், 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடிகளை வணங்கி, இந்த ஆன்றோர் சபையில் குழுமியிருக்கும் ஆசாரியர்கள், பெரியோர்களை வணங்கி, என்னையும் புவியில் ஒரு பொருளாக்கி இன்று இங்கு பேச அழைத்ததற்கு நன்றி கூறி, மதுரைப் பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமியுடனான என் அனுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆங்கிலத்தில் ‘Odd man out’ என்பார்கள். இன்று அந்த ‘Odd man’ நான் தான்! என் முகத்தைப் பார்த்தாலே அது உங்களுக்குத் தெரிந்துவிடும். நெற்றியில் இருக்கும் திருமண்ணைச் சொல்லவில்லை—இங்கே இருக்கும் சபையில் எல்லோரும் நூல்களை நன்கு படித்தவர்கள்; நானோ முகநூல் (Facebook) படிக்கும் ஆசாமி! பொதுவாக, கடைசியில் பேச வருபவர்கள், "நான் ...