Skip to main content

Posts

Showing posts from 2024

திருக்குடந்தை சென்று வந்தேன்

திருக்குடந்தை சென்று வந்தேன்  ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் மூன்று பதிப்புகள் கண்டு, பல திவ்ய தேச எம்பெருமான்கள், ஆழ்வார் ஆசாரியர்கள் ஆசீர்வாதம் பெற்றது குறித்த அவ்வப்போது பதிவிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  ஆனால்  ’ஆராவமுதே’ என்ற பாசுரத்தால் நமக்கு மொத்த நாலாயிரத்தையும் பெற்றுத்தந்த ’திராவிட வேதம் காட்டிய பெருமாளே ’ என்று போற்றப்படும் திருக்குடந்தை ஆராவமுத ஆழ்வானின் திருவடிக்கு இதுவரை செல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது. சில நாள் முன் அது நிறைவேறியது.  ஒப்பிலியப்பன் ஸந்நிதி வங்கீபுரம் நவநீதம் கோபால தேசிகாசாரியர் ஸ்வாமிகளைச் சனிக்கிழமை அவருடைய திருமாளிகையில் சென்று சேவித்தேன். ரயில்வேயில் மிக உயர்ந்த பதவிகள் வகித்து ஓய்வு பெற்ற பின் திருவிண்ணகர் என்று ஒப்பிலியப்பன் ஸந்நிதியில் சந்நியாசி போல இருந்துகொண்டு, ஸம்ப்ரதாய கைங்கர்யமும், ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் கௌரவ அத்யாபக கைங்கர்யமும் செய்து வருகிறார்.வடமொழி, தென்மொழியில் பெரும் புலமை உடையவர்.  இந்த 91 வயதிலும் பலருக்குப் பஞ்சசமஸ்காரம் செய்து வைக்கும் ஆசாரி

திவ்யப் பிரபந்த(த்துக்கு) இசை

திவ்யப் பிரபந்த(த்துக்கு)  இசை  ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவயப் பிரபந்தத்துக்குச் சமீபத்தில் ‘திவ்ய பாசுரங்கள்’ என்று இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டு அதை இந்நேரம் கேட்டிருப்பீர்கள்.  நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு 1200 வருடங்கள் முன் இசை கூட்டிய  ‘இசைக்காரர் ஸ்ரீமந் நாதமுனிகள். நாதமுனிகள் பண்ணிசையிலும் தமிழிசையிலும் வல்லவராக விளங்கினார். திருவாய்மொழி பாசுர ஈட்டு உரையில் இசைக்காரர்  - இயலுக்கு இசையிட வல்லவர்கள் ஸ்ரீ மதுரகவிகளையும், நாதமுனிகளையும் போல இருக்குமவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆழ்வார்களும் இசையை அதன் சுவையை நன்கு அறிந்துள்ளார்கள். திருமங்கை ஆழ்வார் திருக்கோவலூரில் ‘வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்’ என்கிறார்.  எம்பெருமானையே ‘ஏழிசையின் சுவைதன்னை!” என்று இசையைச் சுவைத்துமுள்ளார் நம் திருமங்கை மன்னன். பட்டர் அருளிச் செய்த தனியனில் நம்மாழ்வார்  அருளிச்செய்த திருவாய்மொழிப் பாசுரங்கள் ‘யாழின் இசை வேதத்தியல்’ என்கிறார்.  ஆழ்வார்கள் இசைக் கருவிகள் பற்றியும் பாடியுள்ளார்கள். குலசேகர

இந்தியன் - 2 - (பார்க்க ) ஜீரோ டாலரன்ஸ் தேவை

இந்தியன் - 2 - (பார்க்க ) ஜீரோ டாலரன்ஸ் தேவை இந்தியன் - 2 டிரைலர் பார்க்கும் போதே நிச்சயம் ஊத்திக்கும் என்று தெரிந்தது. எப்படி ஊத்த போகிறது என்று பார்க்க இன்று காலை சென்றிருந்தேன்.  படம் ஆரம்பிக்கும் போது பரவாயில்லையே என்று தோன்ற ஆரம்பிக்கும் போது சொதப்பல் ஆரம்பிக்கிறது. பார்த்த காட்சியையே பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டு கைக்கடிகாரத்தைப் பார்க்க ஆரம்பிக்க, பெங்களூர் சென்னை ரயில் பேசின் பிரிட்ஜ் முதல் செண்ட்ரல் ஸ்டேஷன் வரை ஊர்ந்து செல்வது போலப் படமும் செல்கிறது. திரைக்கதை என்ற ஒன்று படத்தில் இல்லவே இல்லை. பலர் காட்சிக்குக் காட்சி நடித்துவிட்டுச் செல்கிறார்கள். ஒரு காட்சியுடன் இன்னொரு காட்சி ஒட்டவே இல்லை.  சங்கர் போன்றவர்களுக்கு சுஜாதா இல்லாதது ஒரு ஹேண்டிகேப் என்று இப்படத்தில் மீண்டும் இன்னொரு நிரூபணம் ஆகிறது. படம் முழுவதும் பிராஸ்தடிக் மேக்கப் உள்ளேயே கமல் நடிப்பதால் அவருடைய அரசியல் நிலைப்பாடு போல நமக்கு வெளியே தெரிவதில்லை. படம் ஆரம்பிக்கும் முன் ஆகஸ்ட் வெளியீடு என்று பிரஷாந்த் நடித்த அந்தகன் டிரைலர் போட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் படம், அதே போல நீண்ட இடைவெ

மணி சொல்லும் கதை

மணி சொல்லும் கதை   ஸ்ரீரங்கம் கிளி மண்டபத்தில் இந்தப் பெரிய மணியைப் பார்த்திருப்பீர்கள். இந்த மணிக்கு ‘அரவணை மணி’ என்று பெயர். எப்போதும் ரங்க விமானம் என்னும் ப்ரணவாகார விமானத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘இருக்கிறது’ என்று தான் எழுத வேண்டும் ஆனால் ’இருக்கிறார்கள்’ என்று எழுதியதற்கு ஒரு கதை இருக்கிறது. என் சிறுவயதில், நம்மாழ்வார் பற்றியும், ஆழ்வர் திருநகரியில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நாலாயிரம் கிடைத்த கதை, நம்மாழ்வார் அர்ச்சா மூர்த்தி, பதினாறு வருடம் நம்மாழ்வார் தவம் செய்த புளியமரம் (உறங்காப் புளி ) போன்ற விஷயங்களை என் தகப்பனார் சொன்னார். “அதே விக்ரகமும், புளியமரமும் இன்றும் ஆழ்வார்திருநகரியில் இருக்கிறது” என்றார். ஆர்வத்துடன் “அப்படியா ?” என்றேன். “சரி வா ஆழ்வார்திருநகரிக்கு போய் நம்மாழ்வாரைச் சேவித்துவிட்டு வந்துவிடலாம்” என்று உடனே புறப்பட்டோம். நாங்கள் ஆழ்வார்திருநகரிக்கு சென்றிருந்த சமயம், அன்று ஏதோ சிறப்புத் திருமஞ்சனம் முடிந்து, நடை சாத்தியிருந்தார்கள் ”இனிமே நாளைக்கு தான் சேவை... ” என்றபோது “என்னப்பா இப்படி ஆயிடுத்து” என்றேன் ஏமாற்றத்துடன். “இருடா நம்மாழ்வார் ஏத