Skip to main content

Posts

Showing posts with the label வேதாளம்

தமிழ் மாயக் கட்டம்

விக்கிரமாதித்தன் 'சிம்ரன் சின்னத் திரையை' பார்த்து அழுதுகொண்டு இருந்தான். "சீரியல் பார்க்காதேன்னு எவ்வளவு முறை சொல்றது?" என்று எட்டிப்பார்த்தது வேதாளம் "சீரியல் பார்த்தாலும் வாத்தியார் நினைவு வருது என்ன செய்ய" வேதாளம் பச்சையாக ஏதோ காண்பித்தது. அதை விக்கிரமாதித்தன் பார்த்த போது,  இப்படி தெரிந்தது. 5 22 18 28 15 2 12 8 25     "இந்த மாதிரி பழைய விஷயத்தை எல்லாம் தூசு தட்டாதே, தும்மல் வருது" என்று விக்கிரமாதித்தன் சலித்துக்கொண்டான்.  வேதாளம் விடுவதாக இல்லை இது மாயக் கட்டம் இல்லை, மாயாஜால கட்டம் "மேல  உள்ள மாய கட்டங்களில் உள்ள எண்களின் ஆங்கில வார்த்தைகள் கொண்டு இந்த மாயா சதுரம் இங்கே இருக்கு பாரு" விக்கிரமாதித்தன் பார்த்தான் five (4) twenty-two (9) eighteen ( 8 ) ...

பார்பர் ஷாப்பில் வேதாளம்

மொட்டை தலையுடன் வேதாளம் வந்தது. "என்ன திருப்பதியா ?" என்றான் விக்கிரமாத்தித்தன். "அதை ஏன் கேட்கற, நேத்திக்கு 'ஹெட் போனில் கேட்கவும்' னு ஒரு ஈ-மெயில் வந்தது.  சரி என்ன பெரிசா இருக்க போகிறது என்று...கேட்டேன்,  இப்படி ஆயிடுத்து" "என்ன!?" என்றான் விக்கிராமாதித்தன். வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு ஹெட் போனை மாட்டிவிட்டு, கண்ணை மூடிக்கோ" என்றது. விக்கிரமாதித்தன் கேட்க ஆரம்பித்தான் புன்னைகையுடன்.. . நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு ஹெட் போனில் கேட்டு பாருங்கள். மேலே உள்ள சுட்டி வேலை செய்யவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியில் கேட்கவும். இங்கே முயன்று பாருங்கள் இந்த மாதிரி ஒலிப்பதிவுக்கு  Binaural Recording  என்று பெயர். டம்மி தலையை வைத்துக்கொண்டு ஒலிப்பதிவை செய்கிறார்கள். மேல் விவரங்கள் மேலே உள்ள சுட்டியில் இருக்கிறது. முதல் முறை கேட்பவர்களுக்கு நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும்.

குட்டீஸ் புதிர்

வேதாளம் அவசரமாக வந்து ஒரு படத்தை விக்கிரமாதித்தனுக்கு தந்தது. "இது என்ன படம் ?" "இதுவா ? இது ஒரு விதமான புதிர்" "குழந்தைத்தனமா இருக்கு?" "ஆமாம். இது குழந்தைகளுக்கான புதிர் தான். இதில் நிறைய மிருகங்கள் பெயர் இருக்கிறது. அதை கண்டுபிடி பார்க்கலாம்" "விக்கிரமாதித்தன் ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்தான்" "இரு, செஸ் போர்டில் ராஜா எப்படி நகரும்?" "ஒவ்வொரு கட்டமாக" "அதே போல நகர்ந்து பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு 75, 65, 56 கட்டங்களை கடந்தால் வரும் மிருகத்தின் பெயர் - 'DOG'. அதேபோல்  33, 43, 35, 45, 54, 63, 62, 70 & 71 கடந்தால் 'PORCUIPINE' வரும். சரி மத்த மிருகங்களின் பெயர்களை கண்டுபிடி" என்று வேதாளம் அவசரமாக எங்கோ போனது. [%popup(20070316-animalpuzzle.jpg|446|289|குட்டீஸ் புதிர்)%] விக்கிரமாதித்தன் யோசிக்க ஆரம்பித்தான். நீங்களும் விக்கிரமாதித்தனுக்கு உதவலாம்...   

வேதாள உலகம்

இந்த முறை வேதாளம் வித்தியாசமாக வந்திருக்கிறது. ஆமாம், நீங்களும் வேதாளத்துடன் பயணம் செய்ய இருக்கிறீர்கள். ஜாக்கிரதை. இது மாயச் சுழல், விடை தெரிந்தால் தான் அடுத்த லெவலுக்குப் போக முடியும். உங்களுக்கு கடைசி வாய்ப்பு. சீக்கிரம் கிளம்புங்க. இப்போதே நீங்கள் மற்ற உபயோகமான வலைப்பதிவைப் படிக்க போகலாம். சரி 1, 2, 3 எண்ணுகிறேன்,  அதற்குள் கிளம்பிவிடுங்கள்.  1, 2, 3,...  என்ன இன்னுமா இருக்கிறீர்கள். பிறகு உங்க இஷ்டம், நான் என்ன செய்ய முடியும்?  ஆல் தி பெஸ்ட்!! [ விடைகளை கொடுக்க வேண்டிய வழிமுறைகள் - If the answer is a word, give it in english -lowercase. If it is a fraction, give it with a 0 before the decimal point eg., .1 is wrong, give it as 0.1 ]

ஆடித் தள்ளுபடியில் வேதாளம்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஆடி மாசத்தில் தோசை வார்க்க ஆரம்பித்தான். அப்போது எக்ஸ்சாஸ்ட் ஃபேன் வழியாக வேதாளம் வந்தது. "என்ன விக்ரமா, வைஃப் வீட்ல இல்லையா, நீ தோசை வார்க்கற ?" "ரொம்ப நாளா உன்னைத்தான் ஆளக் காணோமேன்னு பாத்தேன், வந்துட்டியா ?" விக்கிரமாதித்தன் அலுத்துக்கொண்டான். "நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாதே. சரி சரி எனக்கும் ஒரு ஸ்பெஷல் நெய் ரோஸ்ட் போடு, சாப்டுட்டுப் போறேன்."   "தோடாஆஆ.. இதுல ஒன்னும் குறைச்சலில்லை!" பேசிக்கொண்டே தோசைக்கல்லில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கல் சூடாகிவிட்டதா என்று பார்த்தான் விக்கிரமாதித்தன். தோசைக்கல்லில் பட்ட தண்ணீர் "ஸ்ஸ்ஸ்.." என்ற சத்தத்தோடு அதில் குதித்தது. வேதாளம், "தண்ணி ஏன் குதிக்றது தெரியுமா ?" கேட்டது. "கல் சூடா இருக்கில்ல, அதனால!" "இது சரியான பதில் இல்லையே!" "ஆரம்பிச்சுட்டயா உன் வேலையை? சரி, சொல்லித் தொலை!" வேதாளம் தொடர்ந்தது. "நீ தோசைக்கல்லுல தெளிக்கற தண்ணி இந்த அறையோட தட்ப வெப்ப நிலையில இருக்கும். ( 30 டி...

முழு வீச்சில் வேதாளம்

விக்கிரமாதித்தன் பத்தாவது மாடியில் ஒரு புது ஃபிளாட் வாங்கியிருந்தான். பால்கனியில் பக்கோடா, டீ சாப்பிட்டுக்கொண்டு குமுதம் நடுப்பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தான், பார்த்துக்கொண்டிருந்தான் என்பது தான் சரியான வார்த்தை பிரயோகமாக இருக்கும். வேதாளம் எட்டிப் பார்த்தது. "ஐயோ! இங்கேயும் வந்துட்டையா?" என்று அதிர்ச்சியில் விக்கிரமாதித்தன் கத்தினான்.   "புது வீடு நன்றாகத் தான் இருக்கிறது!" "இருக்காதா பின்ன, எல்லாம் மார்பிள், கிரானைட்" "தமிழில் பேசு, மார்பிள் - சலவைக் கல், கிரானைட் - கருங்கல்" "ஐயோ!" "உனக்குத் தெரியுமா ? இந்த மார்பிள், கிரானைட்டில் கதிர் வீச்சு இருக்கிறது!" "ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை" என்று விக்கிரமாதித்தன் கடுப்பானான். வேதாளம் வழக்கம் போல் தொடந்தது... "மார்பிள் ( சலவைக் கல் ), கிரானைட் ( கருங்கல் ) ஆகியவற்றில் கொஞ்சம் கதிரியக்கமுள்ள மூலப் பொருட்கள் (Radioactive elements) வெவ்வேறு விகிதத்தில் இருக்கின்றன.  "யுரேனியம்(uranium), தோரியம்(Thorium) இவற்றில் தான் இருக்குன்னு நினைச்சேன்" ...

E=ஹிஹி2

சுஹாசினி, குஷ்பு விவகாரத்தை படித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனை எரிச்சலாக பார்த்தது வேதாளம். "எவ்வளவு நாள் தான் இந்த விஷயத்தை படித்துக்கொண்டிருப்ப?"  என்றது வேதாளம். "உன்னோடு பெரிய தொந்தரவு, கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடு" என்று விக்கிரமாதித்தன் திரும்பவும் படிக்க ஆரம்பித்தான். வேதாளம் விடுவதாக இல்லை "இன்னிக்கு உன்னை எங்க வேதாள உலகத்திற்கு அழைத்து போகலாம் என்று இருக்கேன்" "உன்னோட தொந்தரவே தாங்கல..வேதாள உலகம் வேறயா?" "சீக்கிரம் கிளம்பு, வெங்கட் நாராயணா ரோட்டில் ரத்தனா புதுசா கபே திரந்திருக்காங்க, ஒரு சாம்பார் இட்லி சாப்பிட்டு போகலாம்" என்றது. விக்கிரமாதித்தனும், வேதாளமும் சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு வேதாள உலகத்திற்கு கிளம்பினார்கள். இந்த முறை வேதாளம் விக்கிரமாதித்தனை தோளில் தூக்கிக்கொண்டு வேகமாக பறந்தது. "இவ்வளவு வேகமாக பறக்காதே எனக்கு பயமாக இருக்கிறது" "பயமா? என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு ? " என்றது வேதாளம் வடிவேலு ஸ்டைலில். "இன்னும் கொஞ்சம் வேகமா போனா என் வேஷ்டி அவுந்துடும் அப்புறம் நீ பயந...

லொட்டு லொஸ்கு

"இந்த வாரம் நான் எதாவது சொல்லட்டுமா?" என்றது வேதாளம். "நீ என்ன பெரிசா சொல்லப்போற" என்றான் விக்கிரமாதித்தன். " ஒண்ணுமில்லாததை  பத்தி பெரிசா நீ சொல்லறப்போ நானும் எதாவது சொல்லலாம், தப்பில்லை". "சரி, முதல்ல தோள்லேர்ந்து இறங்கு, மூவ் தடவியே நான் ஏழையாயிடுவேன்" தோளிலிருந்து இறங்கிய வேதாளம் "எங்கே ஒரு பெரிய நம்பர் சொல்லு பார்க்கலாம்" என்று விக்கிரமாதித்தனை பார்த்து கேட்டது. "இது என்ன அசட்டுத்தனமான கேள்வி"  "சரி இந்த கதையை கேளு" என்று வேதாளம் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தது.... "முன்னொரு காலத்தில் ஹங்கேரி நாட்டில் இரண்டு பிரபுக்கள் இருந்தார்கள். ஒரு நாள் வாக்கிங் போகும் போது ஒரு வினோத விளையாட்டு விளையாடினார்கள். யார் பெரிய நம்பர் சொல்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். முதலாமவர் ஆட்டத்தை ஆரம்பித்தார். இரண்டாவது பிரபுவை பார்த்து "எங்கே ஒரு பெரிய எண் சொல் பார்க்கலாம்" என்றார். ஒரு முக்கால் மணி யோசித்துவிட்டு "மூன்று" என்றார். "இப்போது நீ சொல் பார்க்கலாம்" என்று கேள்வி கேட்டார் இரண்ட...

லொஸ்கு

" Nothing is real " என்ற Beatles பாடலை விக்கிரமாதித்தன் பாடிக்கொண்டு வந்தான். "என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு" என்றது வேதாளம். "ஒண்ணுமில்லை, சும்மா தான்" "ஒண்ணுமில்லையா?" "ஒண்ணுமில்லைதான் ஆனா ஒண்ணுமில்லையிலே ஏகப்பட்டது இருக்கு" "சரி ஒரு முடிவோட வந்துட்டே சொல்லிதொலை" என்றது வேதாளம். ஆங்கிலத்தில் 'நத்திங்'(Nothing), 'நாட் எனிதிங்(not anything) என்று பொருள். தமிழில் ஒன்றுமில்லை. இந்த 'ஒன்றுமில்லாத'தற்கு நிறைய சொற்கள் இருக்குறது - காலியான, பூச்சியம், வெறுமை, அவாந்தரம், சூனியம், சுத்தசூனியம், ஒன்றுமில்லை, பூரை, லொஸ்கு , ஆகாசமயம்.. பார்க்கப் போனால் எல்லா துறைகளிலும் இந்த 'நத்திங்' இருக்கிறது. ஆங்கில அகராதியில் இதற்கு என்ன பொருள் என்று பார்த்தால் - nil, none, nulliform, nullity, noughts... என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. சுருக்கமாக ஒன்றுமில்லாததில் எல்லாம் இருக்கிறது - பூச்சியம்/ஸைபர்(Zero/Chiper), ஸீரோ பாய்ண்ட்ஸ்(Zero points), ஸீரோ ஹார்(Zero Hour), வெற்றிடம்(vacuous), காலியான(void), சூனியப்பிரதேசம்(v...

வேதாளம்'s Day Out

காலை பத்து மணிக்கு , வேதாளம் விக்கிரமாதித்தனை எழுப்பியது. "நானும் உன்னோட இன்னிக்கு ஆபிஸ் வரேன்" என்றது. அதிர்ச்சியில் விக்கிரமாதித்தனுக்கு தூக்கம் கலைந்தது "என்ன நீயா ? No way" என்றன். "நான் வ-ரே-ன்" என்று அழுத்தமாக சொல்லியது வேதாளம். ஜீன்ஸ்-T-Shirt- Nike ஷூவுடன், காலை பதினோறு மணிக்கு தூக்கக்கலகத்துடன் விக்கிரமாதித்தன் வேதாளதுடன் ஆபிஸுக்கு சென்றான். கதவிற்கு பக்கத்தில் தன் ஐடி கார்டை தேய்த்து, "குவிக்" சத்தத்திற்கு பிறகு உள்ளே சென்றான். ஏசி காற்று மேல் அடித்தது. வேதாளம் சினிங்கியது. "இது என்ன நாய் செயின் மாதிரி" என்றது வேதாளம். "நக்கலா ? இது தான் ஐடி கார்ட்" என்றான் விக்கிரமாதித்தன். வேதாளம் "என்ன எவ்வளவு லேட்டா ஆபிஸ் போறேயே" என்றது .விக்கிரமாதித்தன் பெருமையாக "you know we have flexi-timings" என்றான். விக்கிரமாதித்தன் தன் இருக்கையில் உட்கார்ந்தான். அவன் தோளின் மேல் வேதாளம் உட்கார்ந்தது. பக்கத்து இருக்கைகள் காலியாக இருந்தது. தூரத்தில் யாரோ இரண்டு மூன்று பேர் கண்ணுக்கு தெரிந்தார்கள்... பிசிக்கு இடது பக்கத்தி...