Skip to main content

Posts

Showing posts from December, 2023

திரு பாவை துதி -15

திரு பாவை துதி -15 கோதா ஸ்துதி - 15 - சூடிக்கொடுத்த மாலைக்கே ஏற்றம்.  ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி | மௌளிஸ்ரஜா தவ முகுந்தா கிரீடபாஜா கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ || (15) எளிய தமிழ் விளக்கம் - 1 (வனமாலை என்ற பெண்) ஹே கோதா தேவியே வனமாலையானவள் எப்போதும் பெருமாளின் எப்போதும் திருமார்பில் ஆனந்தப் புன்சிரிப்பு முகமுடையவளாக,  விரும்பட்டவளாக, நினைக்கப்பட்டவளாக,  ஆசையுடையவளாக, இனிய தன்மையான குணவதியாயினும்,  பெருமாளின் திருமுடியை அடைந்திருக்கிற  ஒரு பெண்ணால்  கீழே தள்ளப்பட்டது!  எளிய தமிழ் விளக்கம் - 2 (வனமாலை என்ற மாலை) ஹே கோதா தேவியே வனமாலை  எப்போதும் திருமார்பை விட்டு அகலாமல் வாசனையுடையதாக,  செந்நிறமுடைய இளந்தளிர்களுடையதாகவும்,  மென்மையாகவும், நன்றாகத் தொடுக்கப்பட்டிருந்தாலும்,  பெருமாளின் திருமுடியை அடைந்திருக்கிற  நீ சூடிக்கொடுத்த மாலையால் கீழே தள்ளப்பட்டது!  சற்றே பெரிய விளக்கம் இந்த ஸ்லோகத்தில் ஸ்வாமி தேசிகன் சிலேடையாக வனமாலையை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி அருளியுள்ளார். இந்த ஸ்லோகத்தை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று வனமாலை என்ற பெண், இன்னொன்று வனமால

திரு பாவை துதி - 14

திரு பாவை துதி - 14 கோதா ஸ்துதி - 14 - மார்பில் சூடிய வனமாலையை விட கோதை சூடிய மாலைக்கு சிறப்பு த்வத்புக்த மால்யஸுரபீக்ருத சாருமௌளே: த்யக்த்வா புஜாந்தரகதாமபி வைஜயந்தீம்| பத்யுஸ்தவேஶ்வரி மித:ப்ரதிகாதலோலா: பர்ஹாதபத்ர ருசிமாரசயந்தி ப்ருங்கா:|| .14. எளிய தமிழ் விளக்கம் உலக நாயகியே ! நீ முடிசூடி நன்கு அனுபவித்த தனி மணம் மிக்க மாலையை  உன் நாயகனின் திருமுடியை அலங்கரிக்க, அதனால் ஈர்க்கப்பட்ட  வண்டுகள் அவன் மார்பில் சூடிய வனமாலை விட்டு விட்டு  இறக்கைகளை அடித்துக்கொண்டு  ஒன்றுக்கொன்று தள்ளிக்கொண்டு  திருமுடிக்கு மேல் வட்டமிடுவது மயில் தோகை குடை போலக் காட்சி அளிக்கிறது சற்றே பெரிய விளக்கம் சென்ற ஸ்லோகத்தில் திருமணத்தின் போடு கோதையை அவளுடைய தோழிகள் கேலி செய்வதாக அமைந்திருந்தது. இந்த ஸ்லோகம் திருமணத்தின் போது காசி யாத்திரைக்கு மணமகன் குடையுடன் புறப்படுவதாக அமைந்தது அந்தக் குடையை ஆண்டாள் எப்படிப் பரிசளித்தாள் என்று சொல்லுகிறார் ஸ்வாமி தேசிகன்  திருமங்கை ஆழ்வார் பெரியதிருமொழியில் “வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்” என்கிறார். (அதாவது  "வண்டுகள் படிந்த திருத்துழாய் மாலை ரத்னக் கிரீடத்தி

திரு பாவை துதி - 13

திரு பாவை துதி - 13 கோதா ஸ்துதி - 13 - பரிஹாசங்களும் உண்மை பொருளும்.  நாகேஶயஸ் ஸுதநு பக்ஷிரத: கதம் தே          ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண: | ஏவம்விதாஸ்ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:          ஸந்தர்ஶயந்தி பரிஹாஸகிரஸ் ஸகீனாம் ||   .13. எளிய தமிழ் விளக்கம் “அழகிய மெல்லிய மேனி படைத்த கோதையே! உன் அழகிற்கு, நீ போயும் போயும் படுக்கப் பாம்பும், பறக்கப் பறவையும் வைத்திருக்கும்  ஒரு கிழவனையா உன் காதல் மணாளனாகத் தேர்ந்தெடுத்தாய் ?” என்று உன் தோழிகளின் கேலிப் பேச்சுக்களை  நீ கேட்டு பூரிப்பாயாமே?  சற்றே பெரிய விளக்கம் இந்த ஸ்துதி வஞ்சப்புகழ்ச்சியில் எழுதப்பட்டது.  சில தலைமுறைக்கு முன் முன்பு திருமணங்களில் தோழிகள் மணமகளைப் பார்த்து ஏசப்பாட்டுப் பாடுவது தமிழ்நாட்டுத் திருமணங்களின் வழக்கம். (இன்று இருக்கிறதா?) தோழிகள் கேலி பேசுவதற்கு கோதை எப்படிப் பதில் கூறுகிறாள் என்று பார்க்கலாம்.  தோழிகள் : பாம்பு படிக்கையில் படுத்துக்கொண்டு இருப்பவனையா காதலித்தாய் ?  கோதை :  பொய்கையாழ்வார் “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்..” என்றும் ஸ்ரீ ஆளவந்தார் தனது ஸ்தோத்திர ரத்தினத்தில்   “நீ திருவனந்தாழ்வானின் திருமே

திரு பாவை துதி - 12

திரு பாவை துதி - 12 கோதா ஸ்துதி - 12 - கோதை என்ற பெயருக்கே ஏற்றம் ப்ராயேண தேவி பவதீவ்யபதேசயோகாத் கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே| யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத் பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12. எளிய தமிழ் விளக்கம் ஹே கோதா தேவியே! ‘கோதா’வரி நதியானவள் தன் பெயரில் ‘கோதா’வை இணைத்துக்கொண்டதால் இந்த உலகத்தவர்களைத் தன் தீர்த்ததால் பரிசுத்தமாக்குகிறாள். கங்கை முதலான நதிகளும் அந்தந்த புண்ணியகாலங்களில்  கோதாவரியில் தங்கி நீராடி பாவனமாக்கிக்கொள்கின்றன! சற்றே பெரிய விளக்கம் திருப்பாவையில் ஆண்டாள் யமுனையை ‘தூய பெருநீர் யமுனை’ என்கிறாள். காரணம் உங்களுக்குத் தெரிந்த கதை தான் சுருக்கமாகக் கூறுகிறேன்.  கம்சனின் அரண்மனைக்குப் பின்புறம் யமுனை ஓடுகிறது. வசுதேவர் கண்ணனை தலையில் தூக்கிக்கொண்டு போகும் போது கம்சனிடம் அச்சம் கொள்ளாமல் வழிவிட்டு ஸ்ரீகிருஷ்ண கைங்கரியம் பெற்றாள்.  ஆனால், சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போகும் போது சீதை கோதாவரியிடம் என் ‘என் இராமன் இங்கே அழுதுகொண்டு வரும் போது இராவணன் தூக்கிக்கொண்டு போகிறான் என்பதைச் சொல்’ என்று  பிராத்திக்கிறாள். ஸ்ரீராமரும் லக்ஷ்மணனும் அங்கே வரும் போத

திரு பாவை துதி - 11

  திரு பாவை துதி - 11 கோதா ஸ்துதி - 11 - கோதையின் அவதாரத்தால் தென் திசைக்குக் கிடைத்த ஏற்றம்  திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்          ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் | யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்          நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:||  (11) எளிய தமிழ் விளக்கம் ஹே கோதா தேவியே! நீ அவதரித்தது தென்திசையாக  இருப்பினும்  பல அரிய புண்ணியத்தால் ஏற்பட்ட உன் அவதாரத்தின் பலனாகத்  தெற்கு வடக்கானது! அது மட்டுமின்றி,  எப்போதும் யோக நித்திரையிலேயே  இருக்கும், ரங்கராஜனின் கடைக்கண்ணோ தன் அன்பு காதலி அவதரித்த திசையையே நோக்கியே இருக்கிறது! சற்றே பெரிய விளக்கம் (கேள்வி பதில்காளாக இன்று ) மேலே ‘தென் திசையாக இருப்பினும்’ என்று தெற்கு திசைக்கு ஏற்றம் குறைவாக ஏன் எழுதியிருக்கிறீர்கள் ?  தெற்கு திசை எமனின் திசை என்பார்கள். ( மேல் விவரங்களுக்கு வாஸ்து வல்லுநர்களை அணுகவும். வாசுதேவன் இருக்க வாஸ்து கிடையாது).  வரைபடத்திலும்  வடக்கு உயரத்தில் இருக்க, தெற்கு கீழ் நோக்கி இருக்கிறது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது ஒரு பழமொழியாகவே ஆகிவிட்டது.  உத்திரத் திசை என்பதற்குச் சிறந்தது என்று பொர

திரு பாவை துதி - 10

திரு பாவை துதி - 10 கோதா ஸ்துதி - 10 - கோதையால் பட்டர்பிரானுக்குக் கிடைத்த பெருமை தாதஸ்து தே மதுபித: ஸ்துதிலேசவச்யாத்          கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் | த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்          லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் ||    (10) எளிய தமிழ் விளக்கம் கோதையே! உன்னுடைய தந்தை துணுக்கு பாசுரம் பாடினால் கூட உடனே வசப்படக்கூடிய மதுசூதனன், செவிக்கினிய பல பல செஞ்சொல் மாலையால் மகிழ்ந்து இதுவரை அளிக்காத அதி மேன்மையான   ‘பெரிய ஆழ்வார்’  என்ற பட்டத்தை  நீ முடிசூடிய வாச நறும் குழல் பூமாலையை சம்ப்பித்த  உடனே பிரசாதமாகப் பெற்றார்! சற்றே 'சிறிய’ விளக்கம், மற்றும் ஓர் ‘பெரிய’ அனுபவம் மற்ற ஆழ்வார்கள் பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்தாலும், பெருமாளுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி அவருக்குப் பல்லாண்டு பாடியதால் ’ ‘பெரியாழ்வார்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அது இருக்கட்டும், ‘பெரிய ஆழ்வார்’ என்ற பட்டத்தை அவர் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் மாலையை சமர்ப்பித்ததால் தான் கிடைத்தது என்கிறார் ஸ்வாமி தேசிகன்.  நல்ல செய்தி கொண்டு வரும் தூதனுக்கு அரசன் உடனே தன் முத்து மாலையைக் கழ