Skip to main content

Posts

Showing posts with the label வேதாந்த தேசிகன்

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்!

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்! கோவிட் வருவதற்கு ஒரு வாரம் முன்  அமெரிக்கா சுற்றுலா விசா வாங்கச் சென்றிருந்தேன். பராக்குப் பார்க்கும் போது ஒன்றைக் கவனித்தேன். எல்லோரும் ஒழுங்கான  உடை, திருத்தப்பட்ட  முகமண்டையுடன், நாற்றம் அடிக்காத ஷூ-சாக்ஸ் கையில் ஒரு ஃபைல் என்று ஒழுங்காக வந்திருந்தார்கள். பெரும்பாலோர் முகத்தில் கனவுகளுடன் பதற்றமாகக் காணப்பட்டார்கள் ( விசா ரிஜக்ட் ஆகிவிடுமோ ?). டோக்கன் நம்பர் கூப்பிட்ட சமயம் சிலர் கை கூப்பி வேண்டிக்கொண்டு சென்றார்கள். அமெரிக்காவிற்குள் போவதற்குத் தடையாக நம்மை அறியாமல் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்று பயந்துகொண்டு, கேட்ட வேள்விகளுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற துடிப்பில் பதில் கூறினார்கள். இவர்களுடைய அடுத்த இலக்கு பச்சை அட்டை வாங்கி அந்தச் சொர்க்கப் பூமியில் நிரந்தரமாக வாசம் செய்வது தான். அமெரிக்காவுக்குப் போவதற்கே இந்த மாதிரி தயார் செய்துகொண்டால், பரமபதம் செல்ல எப்படி எல்லாம் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் ?  ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கரின் அமுத மொழி ஒன்றில் நம்மைத் தனியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ‘இந்த மானிடப் பிறவி...

ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி

  ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதனும் இந்தப் புத்தகப் பொக்கிஷமும் சேர்ந்து இன்று கிடைத்தது. ஸ்ரீமத் ஆசாரியன் என்றால் அது நம் வேதாந்த தேசிகனே. சப்தசதி குழம்ப வேண்டாம் - எழு நூறு (சப்த ஸ்வரங்கள் ; சதம் அடித்தார்) சமூக ஊடக சத்ருக்கள் நிறைந்த இந்த அவசர உலகில் நமக்கு இது போன்ற புத்தகங்களைப் படிக்க நேரமும், கவனமும் இருப்பதில்லை. சமஸ்கிருதத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவை இரண்டு தலைமுறைக்கு முன்பே ‘extinct’ ரகங்களில் சேர்ந்துவிட்டது. ஸ்வாமி தேசிகனின் வாழ்கை வரலாற்றைச் சுமார் 700+ ஸ்லோகங்களில் ‘ஆர்யா சந்தஸ்.’ என்று சமஸ்கிருதக் கவிதைகளில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சந்தஸ் எழுதப்பட்டது. தமிழில் வெண்பா போன்று மன்னார்குடி ஸ்ரீ உவே.கோபாலசாரியார் 118 வருடங்களுக்கு முன் எழுதியுள்ளார். இந்த 700 ஸ்லோகங்களுக்கும் எளிய ஆங்கிலத்தில் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே வே.கண்ணன் ஸ்வாமியும், முனைவர் உ.வே. ஆர். திருநாராயணன் அவர்களும் எழுதியுள்ளார்கள். முதல் ஸ்லோகத்தைப் படித்தேன். I worship Sri-Rama, (i) who is of black-complexion like a fresh water- bearing cloud,...

திரு பாவை துதி -29

திரு பாவை துதி -29 கோதா ஸ்துதி - 29 - நற்பயன் - மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே! இதி விகஸிதபக்தேருத்திதாம் வேங்கடேசாத்          பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய: | ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:          சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யன் ||   .29. எளிய தமிழ் விளக்கம் இக் கோதா ஸ்துதி, கோதையின் திருவடியில் விஸ்தாரமாக  பக்தியின் ஈடுபாட்டால் வேங்கடேசனிடமிருந்து  பக்தி பரவசத்தில் மலர்ந்து, தானாக அவதரித்து,  மனங்கவரும் எல்லா வகையான குணங்களுடைய  அழகிய கோதா ஸ்துதியை யார் சொல்லுகிறார்களோ,  அவர்கள் திருமகளோடு கூடிய ரங்கநாதனின்  முடிவில்லாத திருவடி கைங்கரியத்தைப் பெற்று மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே சற்றே பெரிய விளக்கம்  நேற்றுடன் கோதா ஸ்துதி முடிந்தது. இந்த ஸ்லோகம் ‘பலச்ருதி’ -  ஸ்தோத்ரத்தின் சிறப்பையும்,  பலனைச் சொல்கிறது.  ஸ்ரீ வேங்கடேசன் என்ற நம் ஸ்ரீ வேதாந்த தேசிகன், இந்தக் கோதா ஸ்துதியை நான்...

திரு பாவை துதி -28

திரு பாவை துதி -28 கோதா ஸ்துதி - 28 - கோதை நம் உள்ளக் கோயிலில் சந்நிதிக் கொள்ளட்டும் சதமகமணிநீலா சாருகல்ஹாரஹஸ்தா          ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: | அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா          விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: ||  .28. எளிய தமிழ் விளக்கம் இந்திர நீலக்கல் ரத்தினம் போன்ற ஜொலிப்பவள்;, அழகிய செங்கழுநீர் மலரை ஏந்தியவள்; பெருத்த திருமார்பின் பக்தி பாரத்தால் வளைந்த வணங்கிய திருமேனி; அடியார்களுக்குத் தாய்ப்பாசக் கருணைக் கடல்; முடிசூடிக் கொடுத்த மலர் மாலையால் ’ரங்க’ நாதனைத் தன்வசமாக்கியவளும்,  விஷ்ணு சித்தர் திருமகளுமான  கோதைப்பிராட்டி நம் எல்லோருடைய  சித்தத்திலும் என்றும் விளங்கி அருளட்டும்! சற்றே பெரிய விளக்கம்  இந்த ஸ்லோகம் தியான ஸ்லோகம்.  ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் கோதை நாச்சியாரை நம் தேசிகன் வேறாக ஆவாகனம் செய்து இந்த ஸ்லோகத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்.  ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று கோதை நாச்சியாரை சேவிக்க முடியவில்லை என்றால் இந்த ...

திரு பாவை துதி -27

திரு பாவை துதி -27 கோதா ஸ்துதி - 27- கோதாய் - கோ’தாய்’ ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா: | வாத்ஸல்ய நிர்பரதயா ஜநநீ குமாரம் ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்டபயோதராபி || 27 எளிய தமிழ் விளக்கம் கோதையே! அறிந்தோ அறியாமலோ தவறுகள் செய்திருந்தாலும் என்னிடம் கருணையுடன் இரங்கி ரக்ஷிப்பது உனக்குத் தகுமே ஏனென்றால் தாய்ப்பால் அருந்தும் போது முலையைக் கடித்த கைக்குழந்தையை மிகுதியான வாத்ஸலத்துடன் தன் பாலினால் காப்பாற்றுவாள் அல்லவா ?  சற்றே பெரிய விளக்கம்  மதுரகவியாழ்வார் கண்ணிநுண்சிறுத்தாம்பில் பாசுரம் நம் எல்லோருக்கும் தெரிந்தது.  அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே அம்மையப்ப தன்மையுடன் சடகோபன் அடியேனைக் ஆட்கொண்டர் அவரே நம்பி அவரே எனக்கு அழியாத உறவு என்கிறார்.  இதில் ‘அன்னையாய் அத்தனாய்’ என்று மதுரகவிகள் சொல்ல, திருமழிசைபிரானோ திருச்சந்த விருத்தத்தில் சற்று மாற்றி  ‘அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரான்’ என்கிறார். எம்பெருமான் நன்மை செய்வதற்காக முதலில் தந்தை போலத் தண்டனை அளித்து, திருத்தி, பிறகு தாய்போல விரும்பியதைக் கொடு...

திரு பாவை துதி -26

திரு பாவை துதி -26 கோதா ஸ்துதி - 26- கோதையே நம் சம்சார தாபங்களை போக்கும் ஆசாரியன் ரங்கே தடித்குணவதோ ரமையைவ கோதே          க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸுவ்ருஷ்ட்யா | தௌர்கத்யதுர்விஷவிநாச ஸுதாஅந்தீம் த்வாம்          ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் ||    .26. எளிய தமிழ் விளக்கம் கோதா தேவியே! திருவரங்கத்தில் மின்னற்கொடியான பெரிய பிராட்டியுடன் கூடிய கரு மா முகிலனான அரங்கன் கருணை மழையாகப் பொழிய, கோதா என்ற அமுத வெள்ளத்தில் உன்னைச் சரணடைந்து,  உன்னில் நீராடுவதால்  சம்சாரத் துஷ்ட விஷம்  அடித்துச் செல்லப்படுகிறது! சற்றே சிறிய விளக்கம்  இதில் ஸ்வாமி தேசிகன் கோதையே நமக்கு ஆசாரியை என்கிறார். திருப்பாவைக் கொண்டே இந்த ஸ்துதிக்குச் சிறு விளக்கம் கொடுக்கலாம்.  ஸ்ரீரங்கத்தில்  மெய் கறுத்த ஆழி மழைக் கண்ணா! ஆழி போல் மின்னும் திருமகளுடன் சார்ங்கம் உதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திட நாங்களும் அதில் நீராட   போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்!...