Skip to main content

Posts

Showing posts from February, 2011

ஜாகரண்ட பூக்கள்

17.11.2006 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து) "நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவை தட்டி ஒரு கதையை கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க... நீங்க எழுதற குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது" என்றார். அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை. "எந்த காலேஜ்?" என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னான். "சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?" "என்ன... உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்" "சரி அந்த மரத்துக்கு பேர் என்ன ?" "அதெல்லாம் தெரியணுமுங்களா ?" "ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்த Detail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?" "ஏங்க நீங்க கூட நிறைய கொலை கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க?" என்றார். என்னால பதிலே சொல்ல முடியலை.

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

ப ள்ளியில் படிக்கும் காலத்தில் கோடை விடுமுறைக்கு வருஷா வருஷம் பாட்டி தாத்தா வீட்டிற்கு ஹைதராபாதுக்குச் செல்வது வழக்கம். குதூகலத்துடன் ரயிலில் பயணம் செய்வோம். போகும்போது பத்து பைசா நாணயங்கள் சிலவற்றை எடுத்துவைத்துக் கொள்வோம். நடுராத்திரி, நல்ல தூக்கத்தில், கிருஷ்ணா நதிக்குமேல் போகும்போது அம்மா எங்களை எழுப்பிவிட, ஜன்னல் கதவைத் திறந்து பாலம் கடக்கும் ஓசையில் பத்து பைசாக்களை வெளியே போட, கிருஷ்ணா நதி முழுங்கிக்கொள்ளும். வியாழன் அன்று ராஜ்தானி ஹோட்டலில் சின்னச் சின்னக் கிண்ணங்களில் பரிமாறிய உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது சேது அனுப்பிய குறுஞ்செய்தியில் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் இறைவனடி சேர்ந்தார் என்று இருந்தது. ஐந்து நிமிட இடைவெளியில் சுக துக்கம் இரண்டும் எப்படி வருகிறது என்று நினைத்துக்கொண்டேன்.

ஆடாதோடையும், அப்பாவின் ஆசையும்!

திருச்சியில் இருந்த போது எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் வேலிகளை சுற்றி கரும் பச்சை இலைகளுடன் செடிகள் இருக்கும். ஒரு முறை பாட்டி "இந்தத் தழைகளை ஆடு சாப்பிடாது அதனால் இதற்கு 'ஆடு தொடா இலை' என்று பெயர்" என்றாள். சின்ன வயதில் இதை நம்பாமல் "என்ன ஆடு சாப்பிடாத தழைகளா?" என்று சில தழைகளை பறித்துக்கொண்டு ஆடுகளைத் தேடித் "சாப்பிடு" என்று சொன்ன போது ஆடுகள் முகர்ந்துவிட்டு சாப்பிடாமல் போய்விட்டது. "ஆட்டுக்கு அதைச் சாப்பிடக்கூடாது என்று யார் சொல்லித்தந்தது" என்று பாட்டியிடம் கேட்ட அந்த கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. எந்த ஊர் ஆடுகளாக இருந்தாலும் அந்தத் தழைகளைச் சாப்பிடாமல் போய்விடும். இயற்கை. தாவரவியல் பெயர் Adhatoda vasica Nees. நீட்டமான இலைகளும், வெள்ளை நிறப் பூக்களையும் உடைய புதர்ச்செடி ( Shrub ) வகையைச் சார்ந்தது. எல்லா இடங்களிலும் இருந்த இந்தச் செடி இப்போது கிராமங்களில் மட்டும் தான் இருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். சில வாரங்களுக்கு முன் கும்பகோணத்தில் திருக்கண்ணமங்கை கோவிலுக்கு ஏதோ ஒரு கிராமம் வழியாகப்