Skip to main content

Posts

Showing posts from August, 2021

பிள்ளைகளின் திருநட்சத்திரம்

பிள்ளைகளின் திருநட்சத்திரம் ஆவணி ரோகிணி. ஸ்ரீஜெயந்தி. கண்ணன் அவதாரத் திருநாள். கண்ணனைக் குறித்து உங்களுக்குப் பல விஷயங்கள் தெரியும், அதனால் இதே நட்சத்திரத்தில் அவதரித்த பிள்ளைகளைப் பற்றி சில விஷயங்களை இன்று பார்க்கலாம்.  முதல் பிள்ளை - ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை  நம்பிள்ளையின் சிஷ்யரான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில் சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்) உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் இடத்தில் 1167ஆம் ஆண்டு அவதரித்தார்.  ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார்.  கிருஷ்ணர் என்னும் திருநாமத்தையும் பெற்றார். குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில்  தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள். இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும். பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தான் நாம் பெரியவாச்சான் பி

ஆழ்வார்கள் வரிசை

 ஆழ்வார்கள் வரிசை  சுஜாதா ஒரு முறை ’கற்றதும், பெற்றதும்’ல் போகிற போக்கில் ஓரத்தில்   ”சிறு தொழில் சேவை நிறுவனங்கள் (SISI) திரு.வி.எஸ்.கருணாகரன் அவர்களைச் சந்தித்த போது  ஆழ்வார் பொம்மை ஒன்று தனக்கு கிடைத்தது” என்று எழுதியிருந்தார்.   சுஜாதாவை சந்தித்த போது “ஆழ்வார் பொம்மை.. “ குறித்து விசாரித்தேன்.  கிண்டியில் SISI விசாரித்து பாருங்க என்றார்.  கூகிள் இல்லாத காலத்தில் சிலரிடம் விசாரித்தேன் கிண்டியில் நேராக, ரைட், லெப்ட் என்று வழி சொன்னார்கள். சென்றேன்.  காக்கி உடை அணிந்த ஒருவரிடம் “சார் இங்கே கருணாகரன் சாரை பார்க்க வேண்டும்” என்றவுடன் மேலும் கீழும் பார்த்து  ”நீங்க யாரு ?” என்ற கேள்விக்கு பதில் சொல்லும்வரை காத்திராமல் ”அப்பாயின்மெண்ட் இருக்கா ?” என்று சினிமா  இயக்குநர் வீட்டு செக்யூரிட்டி போல கேட்டார்.  ”இல்லையே” என்றேன் பரிதாபமாக ”அப்ப முடியாது... ஐயா ரொம்ப பிஸி” என்று நடந்து செல்லும் போது கூடவே சென்று ”எங்கே இருக்கார் ?”  என்றேன்.  “இருக்காரு .. அங்கே ” என்றார்.  ‘அங்கே’ பார்த்த போது ஒரு அறையின் வாயிலில்  சிகப்பு கலர் பல்ப் ’பிஸி’ என்றது.  இது போன்ற சிகப  கிளினிக் வாசலில் ஒளிருவதைப் பா

ஷெர்ஷா(Shershaah) சில எண்ணங்கள்...

ஷெர்ஷா(Shershaah) சில எண்ணங்கள்...  சமீபத்தில் ’ஷெர்ஷா’ என்ற ஹிந்தி படத்தைப் பார்த்தேன். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையைச் சொல்லும் படம்.  தமிழ் நாட்டில்  வழக்கம் போல இந்தப் படம் அதிக கவனம் பெறவில்லை.  பிக் பாஸ், சமையல் நிகழ்ச்சி, லேடி சூப்பர் ஸ்டார் நடித்த படங்களைக் கழுவி ஊற்றுபவர்கள் இந்தப் படத்தைக் கண்டுகொள்ளாத தமிழ் சமூகம் குறித்து ஆச்சரியப் பட எதுவும் இல்லை,. தொன்று தொட்டு, இந்த மாதிரிப்  படங்களுக்குத் தமிழ்நாட்டில் ஒருவித அன்னியத் தன்மையே இருந்து வருகிறது.  (அங்கோ தூரத்தில் நடக்கிறது, ஒன்றிய அரசு பார்த்துக்கொள்ளும்) கர்நாடகாவில் அப்படி இல்லை, 2019  ஜனவரி 26 அன்று URI Surgical Strikes என்ற படத்தைத் தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்தேன்.  இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். ”யூரிக்கும் பேட்டைக்கும் என்ன வித்தியாசம் ?”  ”பேட்டை ஆரம்பிக்கும் போது எல்லோரும் கைதட்டினார்கள், யூரி படம் முடிந்த பின் எல்லோரும் கைதட்டினார்கள்” . இந்தப் படம் தொடர்ந்து பல வாரங்கள்  அவுஸ் ஃபுல்லாக இங்கே ஓடியது.  இன்று ஓ.டி.டியின் உதவியால் பல படங்

தினமும் கொஞ்சம் தேசிகன் - 15 - நாச்சியார் ஆசாரியர்

 தினமும் கொஞ்சம் தேசிகன் - 15 - நாச்சியார் ஆசாரியர்  கீதை கோவிந்தத்தில் ராதை கண்ணனை அடைய வேண்டும் என்று மன்மதனை வேண்டிக்கொள்கிறாள். சுகந்தமான குங்குமம் போன்ற பொடியில் மன்மதனை ஓவியமாக வரைகிறாள். ( வண்ணப் பொடியில் நாம் ரங்கோலி கோலம் போடுவது போல )  பின்புலத்தில் (background) மீனை வரைகிறாள்( மன்மதனுக்கு கொடி மீன் ), கிரீடம், கையில் கரும்பு வில், மாந்தளிர் புஷ்பங்களில்  அம்புகள் என்று மன்மதனை வரைகிறாள்.  அவள் வரைந்த ஓவியத்தைப் பார்த்த தோழிகள். வியப்படைகிறார்கள். ஓவியத்தில்  கிரீடத்துக்குப் பதில் மயில் பீலி, கரும்பு வில்லுக்குப் பதில் புல்லாங்குழல், பின்புலத்தில் மீனுக்கு பதில் மாடுகள் என்று அது மன்மதன் மாதிரி இல்லாமல், மன்மதனுக்கு மன்மதன் என்று பாகவதம் வர்ணித்த கண்ணனாக அந்த ஓவியம் இருக்கிறது! தப்பித் தவறி தேவதாந்திர பூஜை செய்தால் கூட எண்ணம் எல்லாம் கண்ணனிடம் இருக்கிறது ராதைக்கு !  ஸ்ரீ வேதாந்த தேசிகன் பரமதபங்கத்தில் 'நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்றும், ’எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் மற்றை நம் காமங்கள் மாற்று’ என்றும் திருப்பாவையில் கூறிய நாச்சியார், கிருஷ்ணனை

வதரி வணங்குதுமே !

  வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன் இன்று பத்ரி, பதரிகாசிரமம் என்பதைத்தான் ஆழ்வார்கள் வதரி என்று தூய தமிழில் சொல்லுகிறார்கள். வதரி என்றால் இலந்தையைக் குறிக்கும். இங்கே இருக்கும் பெருமாள் பதரிவிஷால். இலந்தை மரத்துக்குக் கீழே தியானம் செய்யும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அதனால் இந்தப் பெயர்.  எல்லோருக்கும் குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தன் வாழ்நாள் முடிவதற்குள் பத்ரிக்கு ஒருமுறை சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுடன் திருமங்கை ஆழ்வார்  ‘ வதரி வணங்குதுமே ’  என்று அருளிய பாசுரங்களுடன், ஸ்ரீ ராமானுஜர் சென்று வந்த பாதையில் பத்து நாள் யாத்திரையாகப் பத்ரிக்குச் சென்று அங்கு நான்கு நாட்கள் தங்கியது வாழ்நாளில் மறக்க முடியாத இனிய அனுபவம்.  தன்னுடைய பத்ரி பயணம் பற்றி சுஜாதா எழுதிய ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு ’  என்ற கட்டுரையைப் படித்தபோது கொஞ்சம் வெலவெலத்தது.  “ குளிருமாமே? ” ,  “ ஜட்டி கூட தெர்மல் வேரில் கிடைக்கிறது, ரிஸ்க் எடுக்காதீர்கள், வாங்கிக் கொண்டு போய்விடுங்கள் ”  என்ற அறிவுரைகளையும் “போன வாரம் நல்ல மழையாம், நேற்று நல்ல குளிர்… நாங்கள் போனபோது ந

அபலையின் அஞ்ஞானம் !

 அபலையின் அஞ்ஞானம்  “வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க…” என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனும், “இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்…” என்று ஸ்ரீ மணவாள மாமுனிகளும் “திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே!...” என்று வாழி திரு நாமத்திலும்  திருவாடிப் பூரத்தை கொண்டாடுகிறார்கள்.  இன்றைய திருவாடிப்பூரத்தில் ஆண்டாளின் துணையுடன் ‘தினம் ஒரு பாசுரத்தில்’ நாச்சியார் திருமொழியை அனுபவிக்கலாம்.  நாச்சியார் திருமொழியை அனுபவிப்பதற்கு முன் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக அவசியம்.  எம்பெருமான் ஒருவனே புருஷன் -  ‘புருஷோத்தமன்’. மற்ற எல்லா ஜீவாத்மாக்கள் அவனுக்கு நாயகியே என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம்.  ஸ்ரீமத் ராமாயணத்தில் புலன்களை அடக்கிய ரிஷிகளும், முனிவர்களுமே ஸ்ரீராமர் மீதும் காதல் கொண்டார்கள். வால்மீகி ஸ்ரீராமர் அழகில் மோகித்து பேச முடியாமல் தவித்தார்.  ஸ்ரீராமருக்கே இப்படி என்றால் கண்ணன் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  மேகம், ஆறு,செடி, கொடி. மரங்கள் கூட கண்ணனிடம் மோகித்தது என்கிறது ஸ்ரீமத் பாகவதம். .  பக்தி

அ, ஆ - அனுபவம் !

அ, ஆ - அனுபவம்      மேலே உள்ள இந்தப் படத்தில் அத்திவரதர் திருக்கை, சில நாள் முன் பத்திரிக்கையிலும், முகநூல்களிலும் வலம் வந்தது. மா.சு.ச என்றால் என்ன என்று பலர் அதைப் பற்றி எழுதினார்கள்.    அதன் அர்த்ததுக்கு பிறகு வரலாம்.  அதற்கு முன் திருக்கையில் இருக்கும் கிளியைக் கொஞ்சம் கவனிக்கலாம்.      தொண்டரடிப்பொடி ஆழ்வார் “கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை” என்று திருமாலையில் ”கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடையனான கண்ணபிரானை” என்று சொல்லுகிறார்.  இந்தக் கிளியும் அதே போலக் காட்சியளிக்கிறது.  கிளியை வணங்கிவிட்டு மேலே படிக்கலாம்.   பெருமாளை வணங்கும் நாம் கிளியை என்றாவது வணங்கியிருக்கிறோமா ?      முளைக் கதிரை, குறுங்குடியுள் முகிலை, மூவா            மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற*  அளப்பு அரிய ஆர்-அமுதை, அரங்கம் மேய            அந்தணனை, அந்தணர் தம் சிந்தையானை*  விளக்கு ஒளியை, மரதகத்தை, திருத்தண்காவில்            வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*  வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக; என்று            மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே.       இது திருமங்கை ஆழ்வார் பாசுரம். இதில் கிளியைக் கைகூப்பி வணங்