Skip to main content

Posts

Showing posts from April, 2023

திருப்பாவை ஜீயர் வெளியிட்ட ’தித்திக்கும்’ திருப்பாவை

 திருப்பாவை ஜீயர் வெளியிட்ட ’தித்திக்கும்’ திருப்பாவை  ஸ்ரீ  ராமானுஜரின் 1006ஆம் திருநட்சத்திரம் (சித்திரை திருவாதிரை,25.4.2023) அன்று ’அணிபுதுவை’ என்று ஆண்டாள் போற்றும்  ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘ராமானுஜ தேசிக முனிகள்’  அறக்கட்டளை வெளியீடான  ‘தித்திக்கும் திருப்பாவை’  ‘திருப்பாவை ஜீயர்’  திருக்கரங்களால் ’ஒரு மகள்‌ தன்னையுடைய’ என்று பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீதனமாகக்‌ கொடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர்‌ என்ற ’நாச்சியார்‌ மாளிகை’யில்  வெளியிட, முதல் பிரதியைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான கோதை நாச்சியார் பெற்றுக்கொண்டாள். இதுவரை நீங்கள் படித்தது அலங்காரமாக எழுதியது போலத் தோன்றும். ஆனால் அன்று இது  நிஜமாகவே நடந்தது. சுருக்கமாகச் சொல்லுகிறேன். சில மாதங்கள் முன் ’தித்திக்கும் திருப்பாவை’ புத்தகம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்த போது ’அதற்கென்ன கொண்டு வந்துவிடலாம்’ என்று வழக்கம் போல ஆர்.என்.ஆர் (ரங்கநாதன் & ரங்கநாயகி ) பிரிண்டர்ஸ் ராஜன் நம்பிக்கை தர,  ’மணக்கால் நம்பி’ திருநட்சத்திரம் அன்று ஆரம்பிக்கப்பட்டு பங்குனி உத்திரத்தின் போது நிறைவு பெற்றது.   ஸ்ரீ உ.வே பட்டணா ஸ்வாமிகள் வாழ்

சோலைக் கிளி

  சோலைக் கிளி  சோலைக் கிளி  ஸ்ரீ வைஷ்ணவத்தில் கிளிக்குத் தனி இடம் உண்டு. திருப்பாவையில் ஆண்டாள் ‘இளம்’கிளியே என்று தன் தோழியைக் கூப்பிடுகிறாள்.  திருப்பாவையில்  ’பொல்லா அரக்கன்’( இராவணன்) என்றால் ’நல்ல அரக்கன்’ ( விபீஷணன் ) என்று ஒருவன் மறைமுகமாக இருப்பது போல, ’இளம் கிளி’ என்றால் மூத்த கிளி ஒன்று மறைந்து கொண்டு இருக்கிறது. அதை கடைசியில் சொல்லுகிறேன். நம் ஆசாரியர்களை ‘பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்’ என்பார்கள். நம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமே அது தான். ’சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ மாதிரி புதிதாக எதையும் பேச மாட்டார்கள் நம் பூர்வாசாரியர்கள் என்ன சொன்னார்களோ அதையே தான் திருப்பித் திருப்பிச் சொல்லுவார்கள்.  கிளிக்கு பேச எப்படிப் பேசக் கற்றுக்கொடுக்கிறார்கள் ?   கிளியைக் கண்ணாடிக்கு முன் நிறுத்தி,  தன்னைத் தானே கிளி கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும். அப்போது பேசப் பயிற்சி கொடுப்பவர் சில வார்த்தைகளைப் பேசுவார். கண்ணாடியில் தெரியும் இன்னொரு கிளி தான் பேசுகிறது என்று நினைத்து பதிலுக்குக் கிளி பேசத் தொடங்கும்.  நாளடைவில், கிளியின் மூளையில் நம்முடைய குரல் இன்னொரு கிளியின் குரல் என்று பதிவாகி, நாம் என

'தித்திக்கும் திருப்பாவை' புத்தகம் வெளியீடு - அறிவிப்பு

 ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம: 'தித்திக்கும் திருப்பாவை' புத்தகம் வெளியீடு - அறிவிப்பு புத்தகம் குறித்த சிறு குறிப்பு? சென்ற மார்கழி மாதம் ‘தமிழ் இந்து’ல் அடியேன் திருப்பாவைக்கு எளிய விளக்கம், இதையும் அறிவோம் என்ற பகுதியுடன் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அத்துடன் 1871ல் வந்த 19ஆம் நூற்றாண்டு திருப்பாவை படங்கள், அதற்குச் சிறு குறிப்பு, ஒவ்வொரு பாசுரத்துக்கும் சில சொற்களுக்கு அருஞ்சொல் பொருள், திருப்பாவை தனியன்களுக்கு எளிய விளக்கம், திருப்பாவையின் சிறப்பு என்ற தலைப்பில் ஆசாரியர்கள் புகழ்ந்த ஆண்டாள் என்ற பகுதிகளுடன், இந்த வருடம் உடையவர் திருநட்சத்திரம் (25.04.2023) அன்று ’தித்திக்கும் திருப்பாவை’ என்ற தலைப்பில் புத்தகம் வெளிவர இருக்கிறது. வேறு என்ன சிறப்பு ? புத்தகத்துக்கு ஸ்ரீ உ.வே திருநாகை வீரராகவாசார்யர் (பட்டண்ணா ஸ்வாமிகள்) , திருக்குடந்தை டாக்டர். ஸ்ரீ.உ.வே. வேங்கடேஷ் ஸ்வாமிகள் வாழ்த்துரையும், அணிந்துரையும் வழங்கியிருக்கிறார்கள். சரி புத்தகம் எப்படி இருக்கும் ? 80 பக்கங்கள், 150gm எடை, ‘maplitho yellow book printing paper'ல் 14cm x 24cm அளவில் இருக்கும், . விலை... ?